Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சிட்டின் காதல் காவியம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

nicebluebird5vg.jpg

கவியல்ல இது ஒரு காவியம்

தேடியும் கிடைத்திடா

தேவதையாய் எண்ணியது

தேய்ந்து கட்டெறும்பான

கதை சொல்லும் ஜீவகாவியம்…!

ஊரின் ஓரத்தில் ஒரு தோப்பு

தோப்பிலே குருவியொன்று

சிங்காரச் சிறகு விரிக்க

சுதந்திர வானம்….!

சுதந்திரமாய்க் குடியிருக்க

சின்னக் கூடு

சுமை தாங்கியாய்

சின்ன மாமரம்…!

சுந்தரக் கானமிசைக்க

தென்றல் போடும்

தக திமி தாளம்..!

இவை சேர

தப்பாமல் தன்பாட்டில்

வாழ்ந்தது மனதோடு

மகிழ்ச்சி பொங்க….!

அன்றொரு வேளை

அந்திசாயும் மாலை நெருங்க

அருமையாய் வசந்தம் பூத்திருக்க

பூமி மகள் அழகு காட்டியிருக்க

கண்ணினைக் காட்சிகள்

காந்தமாய்க் கவர

களம் ஏகியது குருவி….!

கண்கொள்ளாக் காட்சிகள்

விருந்துகள் படைக்க

வாயோடு வந்த கீதம் இசைத்துப்

பறக்குது சிட்டு

குதூகலித்துமே…!

இங்ஙனமாய்

இயற்கையின் நாயகன்

இன்புற்றிருக்க

குறுக்கே வந்த கருவண்டு

கவனம் இழுத்துச் செல்லுது..!

அதன் வழி

செல்லச் சொல்லுது மனம்

பாவம்…விதி வழி அறியாச் சிட்டும்

கூடிப் பறக்குது கருவண்டின் பின்னே…!

காட்சிகள் சிலது கடந்ததும்

வந்தது ஒரு வாசம்

வசந்தத்தின் பரிசாய்

தந்தது ஒரு மலர்…!

பார்வைகள் பரிமாற

மலரின் மாயமறியாது

சிட்டும் மயங்கியது

வந்த பாதை மறந்து

போதையில் வீழ்ந்தது..!

பருவத்து அழகு காட்டி

நயமாய் அழைத்து

வசமாக்கிக் கொண்டது மலர்..!

சிக்காரச் சிட்டும்

சிறைபட்டுப் போனது

தூய மனசும்

பாழ்பட்டுப் போனது….!

காலங்கள் கழிந்தது

மலரின் வேசம் கலையும்

காலமும் வந்தது…

பருவத்துச் சுருதி கூட்டி

பாடாய்ப்படுத்திய மலர்

அரை நொடிப் பொழுதில்

பாரா முகமாய்

அறியா உறவாய்

பத்தினிகள் வேசம் போட்டது…!

பதறிப்போனது சிட்டு

இது என்ன கோலம்…

கலிகாலத்து மங்கைக்கு ஒப்ப

மலரும் மாறிப்போனதோ

இல்ல…

புதிய உலகம் படைக்க

புறப்பட்டுவிட்டதோ மலர்…??!

சிங்காரச் சிட்டுக்கு

புத்தியில் உறைத்தது

சித்தம் தெளிய

சீராய்ச் சொன்னது

நீயாய் தேடாத வரை

“Good Bye…..!”

(யாவும் கற்பனை)

April 2005 (நன்றி யாழ் இணையம்.)

http://kuruvikal.wordpress.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி வீராப்பாய் Good bye சொன்ன சிட்டு மீண்டும் புலம்புவதைப் பாருங்கள்.. :unsure:

இது யார் குற்றம்…?!

birdhouseflowers5xq.gif

மோகித்து

மோட்சம் ஏகவன்றி

அன்புக்காய் ஏங்கி

மலரே உனைத் தேடி வந்தேன்..!

நினைவெனும் நோய் கொடுத்து

தேம்ப வைத்தாய் இன்று…!

தோப்பாகும் என் வாழ்வென்று

மனதோடு மடி வாங்கி

காலமெல்லாம் கவி பாடி

சீராட்டிய மலரின் மெளனம்

சம்மதமல்ல சாமர்த்தியம்

புரிந்து கொண்டேன்…!

குருவி நான் பார்த்திருக்க

வம்பாகி வந்த வண்டுக்காய்

ஏங்கி நீ துரத்திட்டாய்

எனைத் தூரவே….!

கனவு கலைத்து

நிஜம் காட்டினாய் நன்றி..!

ஆனால்…

உன் நினைவு மட்டும்

என்னோடு நிலைக்க

ஏங்குகிறேன் தனிமையில்….!

உன் முடிவு கண்டு…..

வைக்க எனக்குத் தாடியும் இல்ல

கையில் மதுவும் இல்ல

கொள்ள எனக்கு தேவதாஸ் வேடமும் இல்ல

தொங்க ஒரு கயிறும் இல்ல

உண்ண ஒரு நஞ்சுமில்ல

இவை செய்ய ஆறறிவும் எனக்கில்ல…!

குருவி நான் சுதந்திரச் சிட்டு

நினைவுகள் பாரமாக

சிறகுகள் விரிய மறுக்க

கூண்டோடு அடைபட்டு

பரிதவிக்கிறேன்..!

நினைவுச் சிறை உடைத்துப்

பறக்க முயல்கிறேன் முடியவில்லை…!

பார் மலரே…

எந்தன் பரிதாபம்

உன் நினைவுகள்

என் சிங்காரச் சிறகுகள்

சிறை செய்ய

மீண்டும் உன்னிடமே சிறையாகிறேன்…!

இது யார் குற்றம்…??!

என் செய்வேன்…

தவிப்பே வாழ்வாகித்

தவிக்கிறேன்

கருணை காட்டாயோ….!

தாராயோ…

நீ கொண்ட பேரன்பை

குருவி என் சொத்தாக்க…!

———————-

(யாவும் கற்பனை)

ஏப்ரல் 2005 (நன்றி யாழ் இணையம்.)

http://kuruvikal.wordpress.com/

  • கருத்துக்கள உறவுகள்

குருவிக்கு ஞானம் இன்னமும் வந்தமாதிரித் தெரியவில்லை. மலர் தன்னுடைய வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்ற மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அது பூத்துக் குலுங்கி, காய்த்துக் கனியாகும்போதும், ஒற்றைக் குருவி காவியம் பாடி தென்றலைத் தூது விட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்! :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருவிக்கு ஞானம் இன்னமும் வந்தமாதிரித் தெரியவில்லை. மலர் தன்னுடைய வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்ற மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அது பூத்துக் குலுங்கி, காய்த்துக் கனியாகும்போதும், ஒற்றைக் குருவி காவியம் பாடி தென்றலைத் தூது விட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்! :lol:

குருவியின் நேசத்தை புரியாத மலரோடு நேசம் வைத்தது தப்பா.. அதை வைக்க தூண்டிய இயற்கை செய்தது சதியா. எதுவோ விதி என்று குருவி வாழாதிருப்பதும்.. நீங்கள் சொல்வது போல் அறிவிலித்தனமாத்தான் தெரியுது. இருந்தாலும் நேசம் வைத்த மலரை தூக்கி எறி என்று யார் சொல்ல முடியும். குருவியாய் எறிந்தால் அன்றி..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

[என் செய்வேன்…

தவிப்பே வாழ்வாகித்

தவிக்கிறேன்

கருணை காட்டாயோ….!

தாராயோ…

நீ கொண்ட பேரன்பை

குருவி என் சொத்தாக்க…!................................

காலம் ஒரு நாள் மாறும். தவிக்கும் குருவியும் மலரும் இணைந்து வாழ் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[என் செய்வேன்…

தவிப்பே வாழ்வாகித்

தவிக்கிறேன்

கருணை காட்டாயோ….!

தாராயோ…

நீ கொண்ட பேரன்பை

குருவி என் சொத்தாக்க…!................................

காலம் ஒரு நாள் மாறும். தவிக்கும் குருவியும் மலரும் இணைந்து வாழ வாழ்த்துக்கள்.

இப்ப அந்த மலர் எந்த வண்டோடு கூத்தடிச்சு.. காய் காச்சு.. கனிஞ்சிருக்கோ யார் அறிவார். :D :D வாழ்வே மாயம் எனும் போது காதல் மட்டும்.. ??! என்பதைச் சொல்லுது இந்த கற்பனைக் காதல் காவியம் என்று நினைக்கிறன். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அந்த மலர் எந்த வண்டோடு கூத்தடிச்சு.. காய் காச்சு.. கனிஞ்சிருக்கோ யார் அறிவார். :huh::D வாழ்வே மாயம் எனும் போது காதல் மட்டும்.. ??! என்பதைச் சொல்லுது இந்த கற்பனைக் காதல் காவியம் என்று நினைக்கிறன். :D

:D :D :)

வண்டை நஞ்சு வைச்சு கொன்றால் மலர் மீண்டும் குருவியுடன் இணையலாம். குருவிக்கு கொல்ல மனமில்லாவிட்டால், நாங்கள் நஞ்சு தெளிக்கின்றோம். இப்படியான சின்ன உதவிகளைச் செய்யாமல் இருப்போமா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D :D :huh:

வண்டை நஞ்சு வைச்சு கொன்றால் மலர் மீண்டும் குருவியுடன் இணையலாம். குருவிக்கு கொல்ல மனமில்லாவிட்டால், நாங்கள் நஞ்சு தெளிக்கின்றோம். இப்படியான சின்ன உதவிகளைச் செய்யாமல் இருப்போமா!

அற்ப காதலுக்காக உயிர்க்கொலைகளா..??! வண்டு மட்டுமா மலரும் தானே.. தப்புப்பண்ணுது. அப்ப அதையும் ஒடிச்சு போட்டிட வேண்டியதுதானே. அதெல்லாம் வேலைக்காகாத பாதகங்கள்..! அன்பைக் கொன்று வன்பை வலியுறுத்துவது பண்பல்ல..! :D:)

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்த ரஞ்சிதமலர் :D:D:huh:

வாத்தியார்

.........................

குருவி இன்னொரு குருவையை தேடி போகாமல் ஏன் மலரை தேடிப்போனது..? களம் என்று ஒரு சொல் வேற வருகிது எங்கையோ உதைக்கிது. :D சில எழுத்துப்பிழைகள் இருக்கிது.. திருத்தம் செய்து இருக்கலாம். இனியாவது திருத்தம் செய்யலாம். மற்றும்படி.... பொதுப்படையாக கவிதை மிக நன்றாய் ஈர்ப்பு மிக்கதாய் இருக்கிது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவி இன்னொரு குருவையை தேடி போகாமல் ஏன் மலரை தேடிப்போனது..? களம் என்று ஒரு சொல் வேற வருகிது எங்கையோ உதைக்கிது. :D சில எழுத்துப்பிழைகள் இருக்கிது.. திருத்தம் செய்து இருக்கலாம். இனியாவது திருத்தம் செய்யலாம். மற்றும்படி.... பொதுப்படையாக கவிதை மிக நன்றாய் ஈர்ப்பு மிக்கதாய் இருக்கிது.

மலரை பற்றி அறிய இன்னமும் நீங்கள் கொஞ்சம் பின்னால போக வேணும், எல்லாமே சூட்சுமங்கள் நிறைந்த சொற்கள். உது எல்லாம் கண்டு பிடிக்கிறது உங்களுக்கு ஒரு பிரச்சினை இல்லை கொஞ்சம் மினக்கிட வேணும். :D:huh::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப அந்த மலர் எந்த வண்டோடு கூத்தடிச்சு.. காய் காச்சு.. கனிஞ்சிருக்கோ யார் அறிவார். :D :D வாழ்வே மாயம் எனும் போது காதல் மட்டும்.. ??! என்பதைச் சொல்லுது இந்த கற்பனைக் காதல் காவியம் என்று நினைக்கிறன். :D

நீங்கள் நினைக்கலாம் நாங்கள் அப்படி நினைக்க இல்லை :D:D உந்த வண்டு எப்ப வந்தது? வண்டுகளை முதலில ஒழிக்க வேணும். ஒழிக்காட்டி அந்த குருவி எல்லா மலருகளும் உப்பிடித்தான் என்று கூவிகொண்டு திரியும். :D:huh::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருவி இன்னொரு குருவையை தேடி போகாமல் ஏன் மலரை தேடிப்போனது..? களம் என்று ஒரு சொல் வேற வருகிது எங்கையோ உதைக்கிது. :lol: சில எழுத்துப்பிழைகள் இருக்கிது.. திருத்தம் செய்து இருக்கலாம். இனியாவது திருத்தம் செய்யலாம். மற்றும்படி.... பொதுப்படையாக கவிதை மிக நன்றாய் ஈர்ப்பு மிக்கதாய் இருக்கிது.

எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டினீர்கள் என்றால் திருத்திவிடலாம். எனக்கு அவற்றை இனங்காண முடியவில்லை..! :)

கவிதை ஆக்கியவர்களைத் தான் கேட்க வேணும். கவி வரிகளில் அவர்கள் விளையாடும் விளையாட்டுக்கு நான் பொறுப்பாக முடியாது. நீங்கள் சொல்வது போல் இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம். யார் அறிவார். :):lol:

நீங்கள் நினைக்கலாம் நாங்கள் அப்படி நினைக்க இல்லை :D:D உந்த வண்டு எப்ப வந்தது? வண்டுகளை முதலில ஒழிக்க வேணும். ஒழிக்காட்டி அந்த குருவி எல்லா மலருகளும் உப்பிடித்தான் என்று கூவிகொண்டு திரியும். :lol::lol::lol:

குருவி கூவாது கீச்சிடும்..! ஆனால் இந்தக் குருவியைப் பார்த்தா அப்படி கீச்சிடும் போலவே தெரியல்லையே..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவி கூவாது கீச்சிடும்..! ஆனால் இந்தக் குருவியைப் பார்த்தா அப்படி கீச்சிடும் போலவே தெரியல்லையே..! :lol:

யாழ்களத்தில ஒரு குருவி ஒன்று இப்பிடித்தான் கூவி கொண்டு திரியுது மலர்களை நம்பாதே மலர்களை நம்பாதே என்று. :lol::lol::lol::lol:

Edited by சித்தன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில ஒரு குருவி ஒன்று இப்பிடித்தான் கூவி கொண்டு திரியுது மலர்களை நம்பாதே மலர்களை நம்பாதே என்று. :lol::lol::lol::lol:

நீங்க தவறாச் சொல்லுறீங்க. நான் குருவி கிடையாது. நான் சொல்லுறதை குருவி சொன்னதா சொல்லப்படாது. அதுபோக.. நான் சொல்லுறது பெண்களில் அதிகம் கெட்டவங்க இருக்காங்க அவங்களும் கெட்டதுகள் செய்யுறாங்கண்ணு. அதனால அவங்க கூட அவதானமா இருப்பது நல்லமுன்னு. அதை நீங்க தவறா மலர்கள் என்று சொல்லுறீங்க. பெண்கள் மலர்கள் கிடையாது. :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க தவறாச் சொல்லுறீங்க. நான் குருவி கிடையாது. நான் சொல்லுறதை குருவி சொன்னதா சொல்லப்படாது. அதுபோக.. நான் சொல்லுறது பெண்களில் அதிகம் கெட்டவங்க இருக்காங்க அவங்களும் கெட்டதுகள் செய்யுறாங்கண்ணு. அதனால அவங்க கூட அவதானமா இருப்பது நல்லமுன்னு. அதை நீங்க தவறா மலர்கள் என்று சொல்லுறீங்க. பெண்கள் மலர்கள் கிடையாது. :lol: :lol:

நான் நெடுக்கால போவான் சொல்லுறார் என்று சொல்ல வில்லையே, ஒரு குருவி என்றுதானே சொன்னேன், அது எப்படி உங்களை குறிக்கும், ஒருவர் தப்பி விட்டார் என்ரால் குருவி பறந்து போச்சு என்று சொல்வது ஊர்சொல்வடை :lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நெடுக்கால போவான் சொல்லுறார் என்று சொல்ல வில்லையே, ஒரு குருவி என்றுதானே சொன்னேன், அது எப்படி உங்களை குறிக்கும், ஒருவர் தப்பி விட்டார் என்ரால் குருவி பறந்து போச்சு என்று சொல்வது ஊர்சொல்வடை :lol::lol::lol:

இங்க யாரும் குருவின்னு மலர்களை திட்டினதா தெரியல்ல. நான் தான் கெட்ட பெண்களை காட்டிக் கொடுக்கிறன். அதனால அதைத்தான் சொல்லுறீங்களோன்னு நினைச்சுப்போட்டன். அப்படியில்லைன்னா சரி...! :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.