Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவனோ,மனைவியோ எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு உங்களி டம் இருந்ததா...

Featured Replies

குட்டி எதிப்பார்ப்போட போனால் வாழ முடியாது என சொல்கிறீர்கள் ஆனால் நான் எதிர் பார்க்கா விட்டாலும் இந்த உலகம் எதிர் பார்க்குதே. :)

இளைஞர்கள்,யுவதிகளாய் இருக்கும் போது தனித்து வாழ்வது இலகுவாக இருக்கும் ஆனால் வயது போய் வயோதிபர்களாய் ஆன பிறகு தமக்கு ஒரு கணவனோ அல்லது மனைவியோ இல்லை என ஏங்குவதை விட தமக்கு பிள்ளை இல்லை என ஏங்குவது அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்...தற்போதைய தமிழ் பேப்பர்களை எடுத்துப் பார்த்தால் இளம் பிராயத்தினரையும் பார்க்க 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமக்கு துணை தேடுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

உலகத்தைத் திருத்த என்னால ஏலாது... :lol::lol:

நான் நிம்மதியாக இருக்க வேணும் நினைக்கும் போது அதிகம் எதிர் பார்க்க மனம் வராது. (கடந்த காலங்கள் எனக்களித்த பாடங்களாகக் கூட இருக்கலாம்.) சிலருக்கு எதிர் பார்த்ததை விட அதிகம் கிடைத்து சந்தோசமாக இருப்பார்கள்.

ரதி பெற்றால் தான் பிள்ளையா? ஊரில் எத்தனையோ பிஞ்சுகள் ஒரு துளி அன்புக்கு ஏங்குகிறார்கள்... ஒரு நேர உணவும் கல்வியறிவும் அவர்களுக்குக் கொடுக்கக் கூடிய நிலையில் எத்தனை இளம் தம்பதியினர் இங்கே பிள்ளைகள் இல்லாமல் இருக்கிறார்கள்? வாழ்க்கைத் துணை வேண்டும் என்று விளம்பரம் கொடுக்கும் பலர், ஏன் ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்கு அக்கறை காட்டுவதில்லை?? அதில் பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பது உண்மை, ஆனால் குழந்தை இல்லை என்று மனம் ஏங்குவதை விட வரும் சிரமங்களை சந்தித்து தாக்கென ஒரு குழந்தையை தத்தெடுத்து தமது ஏக்கத்தை குறைத்துக் கொள்ளலாமே?

அந்த மன நிலையை இன்னும் பலர் அடையவில்லை என்றே நினைக்கிறன்.

  • Replies 58
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் குழந்தைகள் இல்லாத தம்பதிகள் தத்தெடுக்க விரும்பாதற்கு காரணம் என்ன தான் பாசம் காட்டி வளர்த்தாலும் அவர்கள் தம் சொந்த இரத்தம் இல்லையே என்ட காரணம் அவர்கள் அடி மனதிலே இருக்கும்...பிறகு அவர்களுக்கு எண்டு குழந்தை பிறந்தால் வளர்த்த குழந்தையை கை விட்டு விடுவோமோ என்பதால் கூட தத்தெடுக்க விரும்புவதில்லை என நினைக்கிறேன்.

நானும் இந்த உலகத்தில் நிறைய அடிபட்டு இருக்கேன் குட்டி...அடி பட்டதால் இப்படியான சமூக கருத்துகளை வைத்தே அதிகம் எழுதுகிறேன் :)

நான் நினைக்கிறேன் குழந்தைகள் இல்லாத தம்பதிகள் தத்தெடுக்க விரும்பாதற்கு காரணம் என்ன தான் பாசம் காட்டி வளர்த்தாலும் அவர்கள் தம் சொந்த இரத்தம் இல்லையே என்ட காரணம் அவர்கள் அடி மனதிலே இருக்கும்...பிறகு அவர்களுக்கு எண்டு குழந்தை பிறந்தால் வளர்த்த குழந்தையை கை விட்டு விடுவோமோ என்பதால் கூட தத்தெடுக்க விரும்புவதில்லை என நினைக்கிறேன்.

'தம் சொந்த ரத்தம் இல்லையே' இந்த மனநிலை தான் பலரிடம் உள்ளது... உண்மையை மறைக்காமல், அதே நேரம் பிள்ளைக்கு உள்ளதை விளங்கப் படுத்தி, அவர்கள் நல்லது கெட்டதுகளில் அக்கறை எடுத்து, உண்மையான பாசத்தைக் கொடுப்பார்களானால் பிள்ளைகளைப் பிரியவேண்டிய நிலை ஏற்படாது என்று நினைக்கிறன் மரணத்தில் தவிர... ஒருவேளை பிரியும் போது தாங்கள் காட்டிய உண்மையான அன்பும், கொடுத்த கல்வி அறிவும் அந்தப் பிள்ளைக்கு வாழ்கையில் பயன் படும் என்று ஒரு மன திருப்ப்தியுடன் மீதிக் காலத்தை வாழ்ந்தது விட்டு போகலாமே? ('அம்மணத்தேசத்தில் கோமணம் கட்டினவன் பைத்தியக்காரன்' என்று சொன்னாலும் ஆச்சரியப் பட இல்லை... என்ர தலைக்கு சரி எனப் பட்டு, என்ர கொள்கைகளுக்குள் உட்பட்டுத்தான் நான் எழுதினேன். இதை எல்லோரும் கடைப் பிடியுங்க என்று நான் சொல்ல இல்லை... :) )

நானும் இந்த உலகத்தில் நிறைய அடிபட்டு இருக்கேன் குட்டி...அடி பட்டதால் இப்படியான சமூக கருத்துகளை வைத்தே அதிகம் எழுதுகிறேன் :lol:

ரதி, சமூகக் கருத்துகளை ஏன் சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைத்து இருக்கிறீர்கள்? சிலவற்றை நாங்களே சீரியஸாக எடுக்காத போது சமூகத்தில் உள்ள மற்றவர்கள் எப்படி சீரியஸாக எடுப்பார்கள்??

Edited by குட்டி

ரதி பெற்றால் தான் பிள்ளையா? ஊரில் எத்தனையோ பிஞ்சுகள் ஒரு துளி அன்புக்கு ஏங்குகிறார்கள்... ஒரு நேர உணவும் கல்வியறிவும் அவர்களுக்குக் கொடுக்கக் கூடிய நிலையில் எத்தனை இளம் தம்பதியினர் இங்கே பிள்ளைகள் இல்லாமல் இருக்கிறார்கள்? வாழ்க்கைத் துணை வேண்டும் என்று விளம்பரம் கொடுக்கும் பலர், ஏன் ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்கு அக்கறை காட்டுவதில்லை?? அதில் பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பது உண்மை, ஆனால் குழந்தை இல்லை என்று மனம் ஏங்குவதை விட வரும் சிரமங்களை சந்தித்து தாக்கென ஒரு குழந்தையை தத்தெடுத்து தமது ஏக்கத்தை குறைத்துக் கொள்ளலாமே?

அந்த மன நிலையை இன்னும் பலர் அடையவில்லை என்றே நினைக்கிறன்.

பொதுவாக சர்வதேசம் எங்கும் இருக்கும் சட்ட திட்டங்களின் படி, திருமணமாகாதவர்கள் குழந்தைகளை தத்தெடுக்க முடியாது. ஒரு சில நாடுகள் விதிவிலக்காக இருக்கலாம். கனடா, இலங்கை, இந்தியா எங்கும் இந்தச் சட்டம் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் குழந்தைகள் இல்லாத தம்பதிகள் தத்தெடுக்க விரும்பாதற்கு காரணம் என்ன தான் பாசம் காட்டி வளர்த்தாலும் அவர்கள் தம் சொந்த இரத்தம் இல்லையே என்ட காரணம் அவர்கள் அடி மனதிலே இருக்கும்...

அவையள் தங்கட ரத்த வகையைச் சேர்ந்த பிள்ளையைத் தத்து எடுத்தால் பிறகு தங்கட ரத்தத்தை ஏத்தி சொந்த ரத்தம் ஆக்கலாமே..! :(:lol::):lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ..............ஹா.........

  • கருத்துக்கள உறவுகள்

சரி என்று நானும் மாலை ஸ்டேசனுக்கு போனேன்.ஒரு பாலகுமாரரனின் கதைப் புத்தகமும் கையில் கொண்டுபோனதாக ஞாபகம்.பெரிதாக ஒன்றும் கதைக்கவில்லை.தாயாருக்கு மாத்திரம் கவனமாகப் போங்கோ என்று நல்ல பிள்ளையாட்டம் சொல்லி வைத்தேன்.ரெயின் வெளிக்கிடும்போது அந்த கதைபுத்தகத்தை அவாவிடம் கொடுத்து விட்டேன்.பின்னர் இயக்கம் எல்லாம் விட்டு லண்டன் வந்து பட்ட கடன் அடைக்க தும்படித்துக்கொண்டிருந்த போது அவனின் கடிதம். தானும் இயக்கம் விட்டு இலங்கை போய் சேர்ந்து யாழ் பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருப்பதாகவும் விரும்பினால் அக்காவை இனி கட்டலாம் தானே என்று.

மனதில் சென்னை ரெயின் காட்சி ஓடியது. ஓமென எழுதிவிட்டேன்.புத்தகம் போலெழுதிய கொண்டிசனெல்லாம் எங்கே போனது என தெரியவில்லை. இயக்கத்தை விட்டு வந்து அவ்வளவு குழப்பத்தில் நானிருந்தேன்.பின்ன்ர் அவாவை லண்டன் கூப்பிட்டு ஆச்வே கோவிலில் திருமணமும் நடந்தது.

எதிர்பார்ப்புகள் எல்லாம் திருப்தி.பிடிவாதம் என்று ஒன்று அது என்னிடம் அறவே இல்லாதது அவாவிடம் 100% .

மனமொத்த தம்பதியினராக வாழ ஒரே குணங்கள் தேவையில்லை. அனுசரித்து வாழத் தெரிந்தாலே போதும். என்றும் சந்தோசமாகஇருக்க வாழ்த்துக்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப் பதிவை சமூக சாளரம் பகுதிக்கு மாற்றும் படி நிர்வாகத்தினரை தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக சர்வதேசம் எங்கும் இருக்கும் சட்ட திட்டங்களின் படி, திருமணமாகாதவர்கள் குழந்தைகளை தத்தெடுக்க முடியாது. ஒரு சில நாடுகள் விதிவிலக்காக இருக்கலாம். கனடா, இலங்கை, இந்தியா எங்கும் இந்தச் சட்டம் இருக்கு.

(இது ஒரு உதாரணத்துக்கு மட்டுமே

Unmarried couples are encouraged to apply to adopt. Couples can be straight, lesbian or gay.)

http://www.adoption.org.uk/information/could_I_adopt.html

இலங்கையில் என்ன மாதிரியான சட்டங்களை பின் பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. தெரிந்தால் இங்கே இணைத்து விடவும். நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.