Jump to content

கணவனோ,மனைவியோ எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு உங்களி டம் இருந்ததா...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளத்தில் எழுதும் அனைவரும் எனக்கு கல்யாணம் கட்டி வைக்காமல் ஓய மாட்டார்கள் என நினைக்கிறேன் முக்கியமாக விசுகு அண்ணா...ஆனால் எனக்கு வரப் போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என சில எதிர்பார்ப்புகள் எனக்கு உண்டு தானே எனது எதிர்பார்ப்புகளை எழுதுகிறேன்;

என்னிலும் பார்க்க அழகாய் இருக்க கூடாது[அதற்காக நான் பெரிய அழகு என்று இல்லை...என்னுடைய கண் சிறிதாக இருக்கிறது என சொல்லி ஒருவர் என்னை ரிஜக்ட் பண்ணினார்.] :lol:

என்னிலும் பார்க்க குறைந்தது 2 வயதாவது கூட இருக்க வேண்டும்.

அதிகம் படித்திருக்க கூடாது[முக்கியமாக விஞ்ஞான துறையை சேர்ந்தவராக இருக்க கூடாது]...மெத்தப் படித்த எம் ஆட்களுக்கு கர்வம் அதிகம் என நான் நினைக்கிறேன்.

அன்பு,பாசம் மிக்கவராகவும் என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குபவராகவும் இருக்க வேண்டும்[அதற்காக நான் சொன்னதெல்லாம் சரி என ஆமாம் சாமி போடக் கூடாது]

சுயமாக முடிவு எடுக்க கூடியவராக இருக்க வேண்டும்[என்னையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்]

சோம்பல் அற்ற உழைப்பாளியாக இருக்க வேண்டும்.

கொஞ்சம் பணம் வைத்திருக்க வேண்டும்.

எனக்கு கடவுள் பக்தி அதிகம்...என்னோடு கோயிலுக்கு கட்டாயம் வர வேண்டும்.

இது எனது ஆசை எனது கணவர் எப்படி இருக்க வேண்டும் என...உங்களுடைய கணவன்/மனைவி எப்படி இருக்க வேண்டும் என நினைத்தீர்கள்...உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இருந்தார்களா...எங்கே எதிர்பார்ப்புகளை நீங்களும் எழுதுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

.

மனைவி நிச்சயம் படித்திருக்க வேண்டும்.

கணவனின் உதவியை எதிர்பார்க்காது அலுவலக வேலைகலை தனியே செய்யத் தெரிய வேண்டும்.

பிள்ளைகளுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அதிக அலங்காரம் கூடாது.

நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரிஆள் பிடிப்பது வெகு சுலபம்.சுருக்கமாக சொன்னால் 3 வேலைக்கு போக வேனும்.அது சரி கண் சின்னன் என்டதுக்காகவா ரிஜட் :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் அன்பான்வனாய் இருக்க வேண்டும்..........ஆனால் இடையிடை கோபம் ( கொதி.... சத்தம்)எட்டிபார்கிறது.

அது மனித இயல்பு தானே.

Link to comment
Share on other sites

.

நல்ல அழகாய் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இது தான் நாம் உனக்குப் பார்த்திருக்கும் பெண் என்றார்கள்.படத்தைப் பார்த்ததுமே பிடித்துக் கொண்டது. அவர்கள் காட்டிய முதலும் கடைசியுமான படம்.

இன்று...

அழகு மாத்திரம் போதாது என்று உணர்கிறேன். வாழ்க்கை சவால்கள் நிறைந்தது. குறிப்பாக பிள்ளைகள் பிறந்ததும் வாழ்க்கைச் சக்கரம் மிகவும் விரைவாகச் சுழலத் தொடங்கும். இக்கட்டத்தில் ஆண் தன் தோள் மீதுள்ள சுமையின் ஒரு பங்கையாவது பெண் ஏற்கவேண்டும் என்று எதிர்பார்ப்பான்.

நன்பர்களின் மனைவிமார்களில் சிலர் அழகாகவும் நல்ல‌ திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். இவர்களைப் பார்க்கும் போது நாம் பின்தங்கி விட்டோமோ என்ற எண்ணம் ஏற்படும்.

எல்லாம் சரிவர அமையாது என்று சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியது தான். வேற வழி ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமான எதிர்பார்ப்புக்களுடன் ஆழமான கிணற்றுக்குள் வீழ்ந்து தத்தளிப்பதை விட கிடைத்த வாழ்க்கையை மெருகூட்டி சில விட்டுக் கொடுப்புக்களுடன் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொண்டால் எல்லோர் வாழ்க்கையும் இனிக்கும்.

சந்தர்ப்ப சூழ் நிலையால் நல்லவன் கெட்டவனாகலாம்.

உழைப்பாளி ஊதாரியாகலாம்.

படித்தவன் அறிவிழந்து கொலைகாரனாகலாம்

அந்த நேரத்திலும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் நடந்து கொண்டால் மீண்டும் வாழ்க்கை இனிக்கும்

நினப்பதெல்லாம் நடந்து விட்டால்..........

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரிஆள் பிடிப்பது வெகு சுலபம்.சுருக்கமாக சொன்னால் 3 வேலைக்கு போக வேனும்.அது சரி கண் சின்னன் என்டதுக்காகவா ரிஜட் :blink::lol:

மெத்தப் படித்தவராக இருக்க கூடாது என எழுதினானே தவிர ஒன்றுமே படிக்காதவராய் இருக்க கூடாது என எழுதவில்லை.

கருத்துகளை எழுதியவர்களுக்கு நன்றி...குறிப்பாக ஈசனுக்கு நன்றி...தனது வாழ்க்கையை துணிந்து எழுதியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நெடுக்சை சீண்டத்தான் எழுதினேன்

தங்களை அது பாதித்து தாங்கள் இந்த வில்லங்கமான விளம்பரத்துக்கு தள்ளப்பட்டிருந்தால்....

மன்னிக்கவும்

இனி தங்களது கேள்விகளுக்கு பதில் எழுதமாட்டேன்

நன்றி மகளே...

Link to comment
Share on other sites

... என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குபவராகவும் இருக்க வேண்டும்...

ரதி தெரியாமல் தான் கேட்கிறேன், நீங்கள் என்ன எலுமிச்சைப் பழ சைசிலையா இருகிறீங்கள், உங்களை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவதற்கு?? :D :D :D:blink::lol: இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரிய இல்லையா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரிஆள் பிடிப்பது வெகு சுலபம்.சுருக்கமாக சொன்னால் 3 வேலைக்கு போக வேனும்.அது சரி கண் சின்னன் என்டதுக்காகவா ரிஜட் :blink::lol:

ஐஸ்வர்யா ராய் மாதிரி கண் இருக்கவேண்டுமென்று விரும்பியிருக்கலாம். தப்பில்லைத்தானே :D

Link to comment
Share on other sites

கெமிஸ்ட்ரியின் அடிப்படையில் (இருபக்கமும்) கல்யாணம் கட்டினால்தான் சரிவர வாய்ப்பு அதிகம். அது வேணும் இதுவேணும் எண்டு கணக்குப் பார்த்துக் கட்டினால் களபுளதான்..! :blink:

Link to comment
Share on other sites

நான் முந்தி நல்ல நிறமான பொம்பிளை வேணும் எண்டு சொல்லும் போது அம்மா சொல்லுவா "அழகெல்லாம் சதை ஆழம்" எண்டு. அது எவ்வளவு உண்மை எண்டுறது, இப்ப எனக்கு புரியுது. நீ யாரை விரும்புகிறாய் எண்டுறதை விட உன்னை விரும்புகிறவனை/வளை கட்டினால் வாழ்க்கை இனிக்கும் எண்டுறது என்னுடைய கருத்து :blink: . அதுக்காக சும்மா எல்லாரையும் கட்ட ஏலாது, மற்றது சிலருக்கு இது பொருந்தாது. ன்ன வாழ்க்கையிலேயே ஒரே ஒரு பெண்ணையே விரும்பினேன், இன்று அவளையே கட்டும் நிலைக்கும் வந்துள்ளேன். இடையில் எத்தனையோ சண்டைகள் கோபங்கள் வந்திருக்கும் ஆனாலும் நான் மிக மிக பொறுமையாக இருந்துள்ளேன். (கலியாணம் கட்டின ஆக்களுக்கு விளங்கும் :D , பொம்பிளையல் தேவையில்லாத பல விடயங்களுக்காக சண்டை பிடிப்பினம் ஆனாலும் உள் மனதில எப்பவும் அன்பு இருக்கும்) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி! அந்த பிரமனே வந்து உங்களிடம் நீங்கள் விரும்பியபடி ஒரு ஆளை அழகு, குணத்துடன் படைத்து கட்டிக்கொள் என்று சொன்னாலும் அதுவும் சில நாளில் அலுத்துப் போகும். ஏனெனில் மனமானது அப்படிப் பட்டது. அதை விட இயல்பாக ஒருத்தரை மணந்து ஒருத்தருக் கொருத்தர் சில பல விடயங்களை விட்டுக்கொடுத்து அனுசரித்து அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பின்றி வாழ்த்தால் அது ஆயுள் வரை நீடிக்கும்!

(கலியாணம் கட்டின ஆக்களுக்கு விளங்கும் , பொம்பிளையல் தேவையில்லாத பல விடயங்களுக்காக சண்டை பிடிப்பினம் ஆனாலும் உள் மனதில எப்பவும் அன்பு இருக்கும்)

அது ....... . அதப் புரிந்து கொண்டால் சரி! :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நெடுக்சை சீண்டத்தான் எழுதினேன்

தங்களை அது பாதித்து தாங்கள் இந்த வில்லங்கமான விளம்பரத்துக்கு தள்ளப்பட்டிருந்தால்....

மன்னிக்கவும்

இனி தங்களது கேள்விகளுக்கு பதில் எழுதமாட்டேன்

நன்றி மகளே...

விசுகு அண்ணா நீங்கள் என்ன சின்னப் பிள்ளையா...எதுக்கு இந்த கோபம்...கோபத்தை எல்லாம் விட்டு விட்டு விடுங்கள்...என்னை உங்கள் சகோதரியாக நினைத்தால் உடனே வந்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(கலியாணம் கட்டின ஆக்களுக்கு விளங்கும் , பொம்பிளையல் தேவையில்லாத பல விடயங்களுக்காக சண்டை பிடிப்பினம் ஆனாலும் உள் மனதில எப்பவும் அன்பு இருக்கும்)

அது ....... . அதப் புரிந்து கொண்டால் சரி! :D

எனக்கு நிறைய எதிர்பார்ப்புண்டு. அதையெல்லாம் சொல்லி பிரயோசனம் இல்ல. ஏன்னா அத்தனை தகுதிகளோடும் உள்ளவையை கண்டுபிடிக்கிறது மகா கஸ்டம்..! ஏன் சும்மா எழுதி நேரத்தை வேஸ்ட் பண்ணுவான். :blink::D

உள் மனதில அன்பை வைச்சிருந்து என்னத்தப் பண்ணுறது. வெளியில காட்டாத அன்பும்.. வெளில புழங்காத பணமும் பெறுமதியற்றவை. கறுப்பானவை. (எப்படி இருக்கு நம்ம தத்துவம்).

நாங்க எப்படித்தான் அன்பா இருந்தாலும் சண்டை பிடிப்பினமா...??! அப்படியான விளக்கம் கெட்டதுகளோட வேணாம் வாழ்க்கையில சகவாசம். தனிய வாழ்வது கூடிய சுதந்திரம் என்று நினைக்கிறன். :lol:

Link to comment
Share on other sites

வாத்தியார், இசைக்கலைஞன், சுவி ஆகியோரின் கருத்துக்கள் நிதர்சனமானவை. அப்படி அனுபவப்பட்டவர்களின் கருத்துக்களை கவனத்தில் எடுங்கள். ஆரம்பத்திலேயே ஒருவரை ஒருவர் அறிந்து, புரிந்துகொண்டு நடப்பதே நல்லது. தொடக்கத்திலேயே நிறைய 'பில்ட் அப்' கொடுத்தால், அதை தொடர்வது கஷ்டமாகிவிடும். திருமணம் என்பது வாழ்க்கைத்துணை ஒன்றை தேடிக்கொள்வதாகும்.

உங்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கைத்துணை அமைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நீங்கள் என்ன சின்னப் பிள்ளையா...எதுக்கு இந்த கோபம்...கோபத்தை எல்லாம் விட்டு விட்டு விடுங்கள்...என்னை உங்கள் சகோதரியாக நினைத்தால் உடனே வந்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.

எங்கிருந்தாலும் அந்த இடத்தை கலகலப்பாக வைத்திருப்பது எனது சுபாவம்

அது எல்லை மீறினால் நிறுத்திவிடுவேன்

நன்றி சகோதரி

நேரம் இருக்கும்போது...

தங்களது கேள்விக்கு பதில் எழுதுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அனுபவங்கள் சிலவேளை தங்களுக்கு உதவக்கூடும்

சிறு வயதிலிருந்தே

நடக்கக்கூடியவையையே நினைப்பது எனது பழக்கம்

போட்டியான எந்த பொருளுக்கும் ஆசைப்பட மாட்டேன்

போட்டியில் அது எனக்கு கிடைப்பது கூட எனக்கு ஒவ்வாதது

ஏனெனில் அதுவும்யார் யாரிடமிருந்து எல்லாம்தப்பி வந்திருக்கிறது

இனியும் இது போன்ற போட்டி வரும்

அதிலிருந்தும் நான் ஜெயிக்கவேண்டும் என்பது எனக்கு தெரியும்

உண்மையில் இதை நாம்உணரவேண்டும்

அத்துடன் எமது பெருமைகளையும் திறமைகளையும்அறிந்திருப்பதற்கு அப்பால்

எமது இயலாமைகளையும் குறைகளையும் நாம் அறிந்திருக்கவேண்டும்

சிலர் என்னிடம் சொல்வார்கள்

சுண்டினால் சிவக்கும் பெண் வேண்டும் என்று

நான் அவர்களுக்கு சொல்வேன்

உனது முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு இதைச்சொல் என்று.

உனக்கிருக்கும் ஆசைகளைப்போல்தான் எமக்கு வருபவருக்கும்இருக்கும் என்பதை மறப்பவர்கள் ஒரு நாளும் நிம்மதியாக வாழமுடியாது. அவர்கள் அந்தக்காலத்தில் போல

தமக்கு வருபவர்களை வீட்டில் பூட்டி வைக்கும்மனப்பக்குவத்துடனேயே வாழ்க்கையை தொடங்குகின்றனர்.

ஆனால் காலப்போக்கில் பொருளாதார சிக்கல்களில் மூழ்கி இரண்டும் கெட்டானாகி எல்லாவற்றையும் தொலைத்துவிடுகின்றனர்.

எனது பருவ வயதில் நான் சில விடயங்களில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தேன்

யாரைக்கட்டவேண்டும்

அதனால் எனக்கு ஏற்படும் சாதக பாதக பலன்களை துல்லியமாகவும் ஆற அமரவும் எடைபோடும் நேரமும் காலமும் என்னிடமிருந்தது

அதேநேரம்

எனது வாழ்க்கையின் அடுத்த கட்டமான திருமணம் என்பது

எனது வாழ்க்கைக்கு ஒரு படிக்கட்டாக இருக்கவேண்டுமே தவிர

இறங்குமுகமாக இருக்கக்கூடாது என்று தெளிவாக இருந்தேன்

அழகான பெண்களை நான் ரசித்தேன் அவர்களுடன் நட்பாக பழகினேன்

காதல் என்று அவர்கள் சொல்லுமுன் விலகிவிடுவேன்

அதனால் அவர்களில் பலர் இன்றும் எனக்கு மிகவும்கண்ணியமாக பழகும் நண்பர்களாக இருக்கிறார்கள்.

பாடசாலையில் முதலாவதாக இருந்ததனாலும்

இருக்கும் இடத்தை சந்தோசமாக வைத்திருந்ததனாலும்

கொழும்பில் படித்துக்கொண்டு விடுமுறைக்கு ஊருக்கு வருவதனாலும் எல்லோருக்கும் என்னைப்பிடித்திருந்தது

ஆனால் இது சிறு வயதில்வரும் ஒரு ஈர்ப்பு

இதனை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று தெளிவாக இருந்தேன்

இவ்வளவையும் தாண்டி

தூர இருந்து என்னை விரும்பிய பெண்ணை நான் கட்டிக்கொண்டுள்ளேன்

அதனால் தான் ராஜா போல் இருக்கின்றேன் வீட்டில்.

ஏனெனில் எனது அபிலாசைகளே முக்கியம் அவளுக்கு.

அதுவும்அவளைப்பார்த்தல்ல

அவளது அம்மாவின் வளர்ப்பை பார்த்து.

இன்று எனது மாமியாரும் இங்குதான் இருக்கின்றா

அவாவுக்கு நேரவே நான் சொல்வேன்

தாயைப்பார்த்துத்தான் நான் பெண் எடுத்தேன் என.

அதுதானே உண்மை.

அவாவும் சொல்வார்

தன்னையும் எனது மாமனார்(முன்னைநாள்அதிபர்) வேலியால் எட்டிப்பார்த்து

தான்(பருத்தித்துறையில்);வீட்டில் மாவிடித்துக்கொண்டிருந்ததை பார்த்தபின்தான் கட்ட சம்மதித்தாராம் என்று.

எனவே நீங்கள் எப்படி இருக்கின்றீர்களே

அதற்கு ஏற்ப ஆளைத்தேடுங்கள்

அதையே மற்றவரும்தேடினால் இருவருக்கும் பொருத்தம் ஏற்படும்

இதில் இருவரில் எவரது தராதரத்துக்கான தேடல் பிழைக்குமாயின்...

இருவரது வாழ்க்கையும் அழிவைச்சந்திக்கும்.

Link to comment
Share on other sites

நான் ஒரு அழகான பெண்ணைப் பார்த்து கட்டித் தரும் படி அம்மாவிடம் சொன்ன போது, "எதற்கும் உன் மூஞ்சியை ஒருக்கா கண்ணாடியில் பார்த்துவிட்டு சொல்லு" என்றா..... அதற்கு பிறகு "நீங்கள் யாரைக் காட்டினாலும் சரி" என்று சரணடைந்து விட்டேன். ஏதோ ஏழைக்கு ஏற்ற எள்ளுண்டை என்ற கணக்கில் மனைவி வாய்த்தார்.. கிடைத்ததை வைத்து பெரு வாழ்வு வாழ்வது தான் சரி என்றுவிட்டு நானும் இருக்கின்றன்

அன்பு காட்டுவதற்கும், மனம் ஒத்துப் போவாதட்கும் "இன்ன இன்ன தகுதிகள்" இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை... ஒருவர் மீது மற்றவர் மதிப்பு வைத்தாலே மிச்சம் எல்லாம் சரி வந்து விடும். கொஞ்சம் வெளிப்படையாகச் சொன்னால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான பாலியல் உறவில் தான் மிச்சம் மீதி எல்லாம் தங்கி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொரு பதிவு ...வயசுல பெரியவா எல்லாம் சிறியவாவுக்கு அட்வைசுகளை அள்ளி வீசுங்கோ... :)

Link to comment
Share on other sites

காதலிக்கும்போது நிறைய எதிர்பார்ப்புக்கள் இருந்திச்சிது. நான் விரும்பியவர் வாழ்க்கைத்துணையாக வரமுடியாமல் போனபட்சத்தில் எதிர்பார்ப்புக்கள் எதுவும் எனக்கு இல்லை. திருமணம் செய்கின்ற நோக்கமும் எனக்கு இல்லை. தனியாளாக எனது வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் கொண்டு செல்கின்றேன். ஒருவேளை கஸ்டகாலத்திற்கு திருமணம் செய்தாலும் எனது ஆர்வங்கள், பழக்க வழக்கங்கள், தனித்தன்மையுடன் ஒத்துப் போகக்கூடிய வில்லங்கம் இல்லாத ஒன்று சோடியாய் கிடைச்சால் போதும் என்பதுவே எனது நிலைப்பாடு.

+++

நிழலி, ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்று சொல்லத்தேவையில்லை. உங்கள் குடும்பம் அழகானது, உங்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை, மக்கள், அழகிய வாழ்க்கை கிடைத்து உள்ளது, நீங்கள் பெருவாழ்வை வாழ்ந்து தள்ளிவிட வேண்டியதுதான் மிச்சம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் கட்டுவதற்கு அழகு தேவையில்லை என இங்கு கருத்து எழுதிய பலர் எழுதியிருந்தார்கள்...என்னுடைய கேள்வி என்னவென்டால் இங்கு கருத்தெழுதிய பலரும் பல் வேறுப்பட்ட தகுதியுடன் இருக்கிறீர்கள்...ஒவ்வொருவரும் தங்களது தகுதிக்கேற்ப மணமகள் இருக்க வேண்டும் என[அதாவது அழகாக]தானே நினைப்பார்கள்...வெளியில் கூட்டி செல்லும் போது இது என்னுடைய மனைவி என அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ற மாதிரி இருக்க வேண்டும் அல்லவா...இது என்னுடைய சந்தேகம் தயவு செய்து அழகு தேவையில்லை என சொன்னவர்கள் இதற்கு பதிலளிக்கவும்.

நிழலியின் அம்மா மாதிரி எல்லா அம்மாக்களும் இருந்தால் எப்படி இருக்கும்...உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி தப்பிலி.

எனக்கு நிறைய எதிர்பார்ப்புண்டு. அதையெல்லாம் சொல்லி பிரயோசனம் இல்ல. ஏன்னா அத்தனை தகுதிகளோடும் உள்ளவையை கண்டுபிடிக்கிறது மகா கஸ்டம்..! ஏன் சும்மா எழுதி நேரத்தை வேஸ்ட் பண்ணுவான். :):D

உள் மனதில அன்பை வைச்சிருந்து என்னத்தப் பண்ணுறது. வெளியில காட்டாத அன்பும்.. வெளில புழங்காத பணமும் பெறுமதியற்றவை. கறுப்பானவை. (எப்படி இருக்கு நம்ம தத்துவம்).

நாங்க எப்படித்தான் அன்பா இருந்தாலும் சண்டை பிடிப்பினமா...??! அப்படியான விளக்கம் கெட்டதுகளோட வேணாம் வாழ்க்கையில சகவாசம். தனிய வாழ்வது கூடிய சுதந்திரம் என்று நினைக்கிறன். :lol:

ஏன் தம்பி எப்ப பார்த்தாலும் அன்பை காட்டுகிறார்கள் இல்லை என எழுதுகிறீர்கள்...யாரையாவது ஒரு பெண்ணை தெரிவு செய்து அவர் மீது அன்பை நீங்கள் காட்டுங்கள்...காலப் போக்கில் அவரும் உங்களைப் புரிந்து கொண்டு அன்பு காட்டுவார்...விரைவாக திருமணம் செய்யுங்கள் நீங்கள் ஆசைப்படுகிறீர்களோ இல்லையோ இங்கு யாழில் கணபேர் ஆசைப்படுகிறார்கள். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் நீங்கள் விரும்பினவர் கிடைக்காவிட்டால் அப் பெண்ணுக்கு உங்களோடு வாழ கொடுப்பினை இல்லை என நினைத்து விட்டு உங்களை விரும்பின பெண்ணாய் பார்த்து மணம் முடியுங்கள்...இப்போது உங்களால் தனிய வாழ இயலும் காலம் போகப்,போக தனிய வாழ்வது கஸ்டம் என நினைக்கிறேன்...இது என் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகு வேண்டாம் என்று யாரும் அடம் பிடிப்பதில்லை.ஆனால் கற்பனைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் நிஜத்துக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு.தோலைப்பாத்து மாடு பிடித்தால் தொழிலுக்கு உதவாது என்டு தெரியும் போது காலம் கடந்து விட்டிருக்கும்.மற்றும் ஒருவரை விட மற்றவர் அழகாகவோ அல்லது வேறு திறைமைகள் இருந்தாலு அதுவும் பிரச்சனைதான்.தமது குறைகளை மறைக்க மற்றவர் மீது எதாவது குறைகளை தேடிக்கொண்டே இருப்பார்கள்.(எல்லோரும் இல்லை)ஆக ஒரே விருப்பு உள்ளவர்கள் என்றால் பிரச்சனைகள் குறைவு. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தம்பி எப்ப பார்த்தாலும் அன்பை காட்டுகிறார்கள் இல்லை என எழுதுகிறீர்கள்...யாரையாவது ஒரு பெண்ணை தெரிவு செய்து அவர் மீது அன்பை நீங்கள் காட்டுங்கள்...காலப் போக்கில் அவரும் உங்களைப் புரிந்து கொண்டு அன்பு காட்டுவார்...விரைவாக திருமணம் செய்யுங்கள் நீங்கள் ஆசைப்படுகிறீர்களோ இல்லையோ இங்கு யாழில் கணபேர் ஆசைப்படுகிறார்கள். :(

அக்கா.. காட்டிற அன்பையே பரிசோதிக்கின்ற... சந்தேகின்ற பெண் ஜென்மங்களும் இந்த உலகில் இருக்கினம். அதுவும் இல்லாம அன்பு மட்டுமே போதும் என்ற நிலைக்கு அப்பால் அன்பை விட இன்னொன்று கவர்ச்சியாக அல்லது அவசியமாக தென்பட்டுவிட்டால் அன்பை உதறித்தள்ளிவிட்டு ஓடிவிடும் நிலையில் இருக்கின்றனர் பலர். இந்த நிலையில்.. ஒருவரை தேர்வு செய்து அவர் மீது அன்பு காட்டி.. அவரும் அன்பு காட்டிற மாதிரி காட்டிட்டு.. சந்தர்ப்பம் சூழ்நிலை தனக்கு இன்னும் இன்னும் சாதகமா அமைய உன்னுடைய அன்பு போதும்.. நான் இன்னொருத்தர் கிட்ட காட்டிக்கிறன்.. அல்லது பெற்றுக்கிறேன்.. என்று கழரும் நிலைதான் இன்று உலகில் செல்வாக்குச் செய்து கொண்டிருக்கையில்.. இது விடயமாக ஒரு உறுதியான நம்பிக்கையோடு ஒருவர் மீது அன்பு செலுத்தவே அச்சப்படும் சூழல் தான் இருக்கிறது.

நாங்க காட்டிற அன்பு எங்களுக்கே திருப்பிக் கிடைக்குமோ என்ற உத்தரவாதம் கூட இல்லாத ஒரு சூழலில்.. எப்படி ஒருவரை எழுந்தமானமாக தேர்வு செய்து அவர் மீது அன்பு காட்டிறது. எனக்கென்றால்.. இதெல்லாம் வேலைக்காகாத காரியங்களாகவே படுகின்றன. ஏதோ எங்கள் அன்பு எங்களோடே இருக்கட்டும்.. நாங்கள் எங்கள் வழியில் எமக்குப் பிடித்த வகையில் வாழ்ந்துவிட்டுப் போகலாம்... என்ற நினைக்குத்தான் எம்மை இன்றைய உலகம் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

இது யார் தவறு.. எனதா. அல்லது எனது அன்பை இனங்காணத் தவறும் இந்த உலகா.. சொல்லுங்கோ அக்கா. சும்மா அன்பு அன்பு என்று காலத்தை நேரத்தை வீணடிச்சு ஒருவர் பின்னாடி அலைஞ்சுகிட்டு இருக்கிறதுல எனக்கு அவ்வளவு ஈடுபாடில்ல. அலைஞ்சு போட்டு அவரும்... சேர்ந்து கூத்தடிச்சிட்டு.. இறுதியில் ரா ரா.. பாய் பாய் எண்டுவினம்.. அதுக்குப் பிறகு தனிய இருந்து புலம்பிக் கொண்டிருந்து என்ன பயன். எதையும் வருமுன் காப்பது சிறந்தது என்று நினைக்கிறேன். அதனால்.. இந்த குறிப்பாக பெண்கள் இடத்தில் அன்பு காட்டிறதில் எழுந்தமானப் போக்கை விட நிதானப் போக்கு அதிகம் பாதுகாப்பானது என்று நினைக்கிறேன். மற்றும்படி எதிர்பார்ப்பில்லா அன்பை எவரிடமும் ஏன் இந்த இயற்கை மீது கூடக் காட்டலாம்.. என்பது எனது நிலைப்பாடு. அது மனிதத் தன்மை என்று நினைக்கிறேன். :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு" ஆம் , அது சரி , ஏனென்றால்,     Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding. Neanderthal-Homo sapiens interbreeding Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015).  ............................................................... "சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது" ஆம், அது முற்றிலும் சரியான வாதம்  ................................................................... "மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. " கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது  ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]  "மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது ....  அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ...  love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ...  took her  upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]   "வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back]   என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை  ..................................................................... மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.] Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text. Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”?   ........................................... "சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது' It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala).  There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into  Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. /  பாளி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது]  Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable. Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும்  பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life. ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே? Tradition regarding the Aṭṭhakathā [Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka] The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa  and the Saddhammasaṅgaha.  According to the Dīpavaṃsa  and the Mahāvaṃsa,  the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa,  and Saddhammasaṅgaha  further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.
    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.