Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிரோடு இருக்கிறரா க.வே.பாலகுமாரன்?

Featured Replies

குமாரசாமி அண்ணை "இனியொரு"இல் வந்திருக்கும் அருள் எழிலனின்" பேய்கள்,பிசாசுகள்,வேட்டை நாய்கள்" கட்டுரையின் கடைசி பந்தியை படியுங்கள் அதில் உங்கள் கேள்விக்கு பதில் உள்ளது .

Edited by arjun

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அண்ணை "இனியொரு"இல் வந்திருக்கும் அருள் எழிலனின்" பேய்கள்,பிசாசுகள்,வேட்டை நாய்கள்" கட்டுரையின் கடைசி பந்தியை படியுங்கள் அதில் உங்கள் கேள்விக்கு பதில் உள்ளது .

நல்லா சொல்லுறாங்கையா டீடெயிலு :)

இப்படித்தான் ஒரு பேராசிரியர் (பெயருக்குத் தான் பேராசிரியர். மண்டைக்குள் ஒரு இழவும் கிடையாது) ... யாராவது ஒரு மாணவன் கொஞ்சம் சிக்கலான கேள்வியை கேட்டுவிட்டால், உடனே வகுப்பிலுள்ள எல்லோரையும் பார்த்து கேட்பார் யாருக்காவது இந்தக் கேள்விக்கு விடை தெரியுமாவென (does anybody know the answer?) ... எவனாவது ஒருத்தன் எழும்பி எதையோ உளறுவான். உடனே இவர் ... பார்த்தாயா அவன் சொன்னது தான் சரியான பதில் (you see .. that's the answer). சத்தியமாய் வாத்திக்கும் ஒண்டும் விளங்கியிராது கேள்வி கேட்டவனுக்கும் சொன்ன பதிலில் ஒரு அறுப்பும் புரிந்திருக்காது. ஆனால் கில்லாடி வாத்தி தப்பிவிடும். :D

  • கருத்துக்கள உறவுகள்

:)அர்ஜு ன் போன்ற **** பலரை நான் இங்கும் பார்த்திருக்கிறேன். அவர்களது சொல்லிலோ அல்லது செயலிலோ எந்த விதமான பிரயோசனமோ அல்லது வினைத்திறனோ இருப்பதில்லை. அடிக்கொருதரரம், "இவ்வளவு நாளும் எங்களைக் கதைக்க விடாமல் வாயைக் கட்டி வைத்திருந்தீர்கள், இப்போது உங்கட ஆட்களைச் சிங்களவன் அழிச்சுட்டான், இனி எங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியாது, மேடை போட்டெண்டாலும் நாங்கள் உங்கட ஆட்கள் பற்றிப் பேசுவோம்".

இந்த **** தாம் என்ன செய்வதென்கிற நினைவேயில்லை. முடிந்தவரை, போகுமிடமெல்லாம் புலிகளையும், அவர்களது ஆதரவாளர்களையும் திட்டுவது. திட்டுவதற்குக் காரணம் கூட வேண்டாம், உதாரணத்துக்கு, இங்கே முன்னர் புளொட் அமைப்பிலே புதிதாக இணைபவர்களுக்கு அரசியல் பாடம் எடுத்த "மாஸ்டர்" என்றழைக்கப்படும் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் இருக்கிறார். அவர் புலிகளியக்கத்தால் பாதிக்கப்படாமல் புளொட் உள்வீட்டுச் சண்டையால் வெளியேறியவர். எப்ப பார்த்தாலும் உங்கட புலிகள் அழியவேணும் எண்டு சொல்லிக்கொண்டிருப்பார், முள்ளீவாய்க்கால் உச்ச கட்டத்தில் வீதியில் நின்று போவோர் வருவோரிடமெல்லாம் சண்டித்தனம் பேசிக்கொண்டிருந்தவர். ஒருநாள் ஒரு சாமத்திய வீட்டில் அவரைப் பார்த்தேன், பேசலாமா விடலாமா என்று யோசித்திக்கொண்டிருந்துவிட்டு, சாப்பாடு எடுக்குமிடத்தில் நேரே முகத்துக்குக் கிட்ட வந்ததால், "எப்பிடி இருக்கிறியள் மாஸ்டர்?" என்று சும்மா கேட்டேன். உடனே வந்ததே மனுசனுக்குக் கோபம், " இங்க இருக்கிறதால உயிரோடு இருக்கிறாம், இல்லாட்டி உங்கட ஆட்கள் எங்களைப் போட்டிருப்பாங்கள்" என்றார். சனத்துக்கு முன்னால மனுசன் சத்தம் போடத் தொடங்கீட்டுது. பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று வந்துவிட்டேன்.

இந்த **** புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர் என்பதை யாராவது சொல்லுங்கள். அல்லது, வருடக்கணக்கில் இந்தப் புலிகாய்ச்சல் வாந்தியை எடுத்துக்கொண்டிருப்பார்கள். புலிகளைத் திட்டுவதைத்தவிர வேறு எதுவும் இவர்களுக்குத் தெரியாது.புலிகள் இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன இவர்கள் அதைச் செய்வார்கள். நாம் செய்ய வேண்டிய ஒரே வேலை, இவர்களைக் கண்டால் ஒதுக்குவது அல்லது ஒதுங்குவது. சிலவேளைகளில் உதைக்க வேண்டும் போல வரும், ஆனால் என்ன செய்வது ஒன்றா இரண்டா உதைத்து நிறுத்துவதற்கு?

Edited by மோகன்
**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கருத்தெழுதும் பலர் வெளியில் இருந்து இயக்கங்களை பார்த்து பரவசமடைந்தவர்கள்.சும்மா வன்னியில் இருந்து வெளியில் போய்வருபவர்களுக்கு ஒரு பிடி வைத்துதான் பாஸ் கொடுப்பார்கள்.வெளிநாட்டிற்கு அனுப்பிய பாலகுமாரனை என்ன சும்மாவா விட்டிருப்பார்கள்.வெளிநாடுகளில் பல்ர் வாய்மூடி மவுனமாக இருந்ததற்கு காரணம் நாட்டில் உள்ள உறவினர்களின் உயிரை நினைத்தே.கனடாவில் பிரபலமான ஒரு தொழில் செய்பவர் புளொட்டில் மத்தியகுழுவில் இருந்து சந்ததியாருடன் வெளிக்கிட்டவர் அவருக்கு இப்பவும் வாய் திறக்க பயம்.

பல தமிழிணயத்தளங்கள் இருக்கின்றன இயக்கங்கள் செய்த அடாவடிகளை புட்டு புட்டு வைக்கின்றன.உண்மையை எழுதும் அவர்களை நாட்டுகாக போரடப் போன தாங்கள் பட்ட பாடுகளை வெளிகொண்டுவரும் அவர்களை துரோகியென்றும் அரசாங்க எடுபிடிகளென்றூம்,ரோ என்றும் எதிலுமே பங்கு பற்றாமல் நாட்டைவிட்டு ஓடிவந்த இவர்கள் கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது. உண்மைகள் எல்லாம் வெளிக் கொண்டுவரப் படவேண்டும்.அதைத்தான் உலகும் திரும்ப திரும்ப சொல்லுது .இரண்டு பகுதிகளும் செய்தபோர்க் குற்றங்கள் வெளிக் கொண்டுவரப் படவேண்டும்.

அவர் சொனார் இவர் சொன்னார் என்று தான் எழுதவேண்டும்.போய் சந்தித்தவரின் அனுமதியில்லாமல் அவரின் பெயர் போட்டு என்னால் எழுத முடியாது.திரும்ப திரும எழுதுகின்றேன் நான் வெளியில் இருந்து வேலை செய்ததால் பலரை சந்திக்க முடிந்தது.இயக்கத்தில் இருந்த பலர் ஒரு முகாமில் இருந்துவிட்டு வந்திருப்பார்கள்.எல்லா இயக்கங்களுடனும் தொடர்பில் இருந்தேன்.எனது இயக்காத்தின் தலைவரின் நேரடித் கட்டுபாட்டுடன் எனது வேலை.அதற்கான கடிதம் கூட அவர் கைப்பட எழுதித்தந்தார்.

பூனை கண்ணை மூடிகொண்டு பாலை குடிக்குமாம்................. அதற்கு ஐந்தறிவு?

உலகம் தாம் கண்ணை கூடுவதால் இருண்டுபோய் உள்ளது என்று நினைக்கும் இவர்களுக்கு................. எத்தனை அறிவு?

சிலருக்கு எழுதபடிக்க தெரிவதால் பலருக்கும் நன்மை. சிலரால்............ நாம் படும் வேதனை.......

உண்மையிலேயே தாங்க முடியவில்லை!

எதாவது ஒரு வழி செய்யுங்கள் முடிந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

.திரும்ப திரும எழுதுகின்றேன் நான் வெளியில் இருந்து வேலை செய்ததால் பலரை சந்திக்க முடிந்தது

.இயக்கத்தில் இருந்த பலர் ஒரு முகாமில் இருந்துவிட்டு வந்திருப்பார்கள்.

எல்லா இயக்கங்களுடனும் தொடர்பில் இருந்தேன்.

எனது இயக்காத்தின் தலைவரின் நேரடித் கட்டுபாட்டுடன் எனது வேலை.அதற்கான கடிதம் கூட அவர் கைப்பட எழுதித்தந்தார்.

நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும்

மற்றதை மறுக்குதே அர்ஜீன்

  • கருத்துக்கள உறவுகள்

ரகு நாதன்,

உங்கள் சொல்லாடல் ஒருவரை மட்டும் அல்ல பல வாசகர்களின் மனதையும் புண்படுத்தும்

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கருத்தெழுதும் பலர் வெளியில் இருந்து இயக்கங்களை பார்த்து பரவசமடைந்தவர்கள்.சும்மா வன்னியில் இருந்து வெளியில் போய்வருபவர்களுக்கு ஒரு பிடி வைத்துதான் பாஸ் கொடுப்பார்கள்.வெளிநாட்டிற்கு அனுப்பிய பாலகுமாரனை என்ன சும்மாவா விட்டிருப்பார்கள்.

ச்சே.. வில்லங்கமே இல்லாத பாலகுமாரன் அண்ணனுக்கே பிடி வைத்த புலிகள் ஆனானப்பட்ட கருணாவுக்கு ஒரு பிடி வைக்காமல் விட்டுவிட்டார்களே..! :D:)

  • கருத்துக்கள உறவுகள்

:D நான் எழுதும் கருத்துக்கள் சிலரின் மனதைப் புண்படுத்துமா?? அது எப்படி?? மற்றவர்கள் புண்பட வேண்டும் என்கிற நோக்கில் புலியெதிர்புப் புராணம் பாடும் நபர்களைத்தான் நான் கண்டித்திருந்தேன். எல்லாரையும் அல்லவே?

இவர்கள் எழுதும் கருத்துக்களை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்குப் புரியும். மக்கள் மேல் அக்கறையுள்ளவர்கள் என்று காட்டிக்கொள்ளும் இந்தப் புல்லுருவிகள் உண்மையிலேயே புலியெதிர்புக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குஷ்ட்டரோகக் காரர்கள். புலிகள் அழிந்தாலும் இவர்களது நோய் குறையப்போவதில்லை. மாவீரர்கள், தியாகிகள் என்று தோண்டியெடுத்துத் தங்கள் வன்மத்தைக் காட்டுவார்கள். அதிலொரு முடிவில்லாத் திருப்தி காணும் அற்ப மனிதர்கள் இவர்கள். இவர்கள் போன்றவர்களை நிறையப் பார்த்தாயிற்று, வெறும் வாய்மூடி மவுனமாயிருந்தால் தமது பக்க நியாயம் சரியென்கிற முடிவுக்கு அவர்கள் வந்துவிடுவார்கள். அது நடக்க விடக்கூடாது.

இதில் அவர்கள் கவலைப்பட எதுவுமேயில்லை, அவர்கள் செய்வதைத்தான் நான் சொல்லியிருந்தேன். இதைவிட கீழ்த்தரமாக எழுத என்னால் முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

:D நான் எழுதும் கருத்துக்கள் சிலரின் மனதைப் புண்படுத்துமா?? அது எப்படி?? மற்றவர்கள் புண்பட வேண்டும் என்கிற நோக்கில் புலியெதிர்புப் புராணம் பாடும் நபர்களைத்தான் நான் கண்டித்திருந்தேன். எல்லாரையும் அல்லவே?

இவர்கள் எழுதும் கருத்துக்களை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்குப் புரியும். மக்கள் மேல் அக்கறையுள்ளவர்கள் என்று காட்டிக்கொள்ளும் இந்தப் புல்லுருவிகள் உண்மையிலேயே புலியெதிர்புக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குஷ்ட்டரோகக் காரர்கள். புலிகள் அழிந்தாலும் இவர்களது நோய் குறையப்போவதில்லை. மாவீரர்கள், தியாகிகள் என்று தோண்டியெடுத்துத் தங்கள் வன்மத்தைக் காட்டுவார்கள். அதிலொரு முடிவில்லாத் திருப்தி காணும் அற்ப மனிதர்கள் இவர்கள். இவர்கள் போன்றவர்களை நிறையப் பார்த்தாயிற்று, வெறும் வாய்மூடி மவுனமாயிருந்தால் தமது பக்க நியாயம் சரியென்கிற முடிவுக்கு அவர்கள் வந்துவிடுவார்கள். அது நடக்க விடக்கூடாது.

இதில் அவர்கள் கவலைப்பட எதுவுமேயில்லை, அவர்கள் செய்வதைத்தான் நான் சொல்லியிருந்தேன். இதைவிட கீழ்த்தரமாக எழுத என்னால் முடியவில்லை.

ரகு நாதன்

உங்கள் கருத்தை நான் பிழை என்று சொல்லவில்லை.

ஒருவரின் கருத்தைக் கண்டிக்கும் போது நீங்கள் பாவித்த ஒரு சில சொற்களையே நான் கண்டித்தேன்.

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

:D வாத்தியார், அந்தச் சொற்களைத்தான் மோகன் நீக்கிவிட்டாரே??

முதலில் தவறாகத்தான் இருந்தது, ஒத்துக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும்

மற்றதை மறுக்குதே அர்ஜீன்

வாந்தி என்று எடுத்துவிட்டால் பலதும் இருந்துதான் ஆகும்.

அதை பொறுக்கி தின்னும் தேவை ஏதாவது காகங்களுக்கு இருப்பின்.......... தேடி தெரிந்தெடுத்து தின்னலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சீழுக்கும் வாந்திக்கும் ஒரே நிறமாக இருப்பதனால் பிரச்சினையில்லை :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.