Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்; பொதுமக்கள் முன்னிலையில் கொடூரம்

Featured Replies

கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்; பொதுமக்கள் முன்னிலையில் கொடூரம்

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செயல்பட்டாலும் இவர்கள் தனியாக சட்ட திட்டங்களை செயல்படுத்தி தனி சாம்ராஜ்யமே நடத்தி வருகின்றனர். திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்ணின் மூக்கையும், காதையும் அறுத்து மானபங்கம் செய்தனர்.

இச்செய்தி படத்துடன் வெளியானதால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது கர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொன்று அராஜகம் செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் வட மேற்கு பகுதியில் உள்ள பாட்கீஸ் மாகாணத்தில் குவாடேஸ் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 48 வயது விதவை பெண்ணுக்கு ஒரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பெண் கர்ப்பிணி ஆனார்.

இதை அறிந்த தலிபான்கள் அப்பெண்ணை இழுத்து வந்து பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்தினர். பின்னர் அவரை சாட்டையால் அடித்து கொடுமைப்படுத்தினர். அத்துடன் விட வில்லை. அவரது தலையில் 3 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். ஆனால் அப்பெண்ணின் கள்ளக்காதலன் தப்பி ஓடி விட்டார்.

இந்த தகவலை பாட்கீஸ் மாகாண மூத்த அதிகாரி அப்துல்ஜாபர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து பொது மக்கள் யாரும் புகார் செய்யவில்லை. இருந்தும் அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தலிபான்கள் ஆட்சி நடைபெற்றது. அப்போது கள்ளக்காதலில் ஈடுபட்டவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்தும், சாட்டையால் அடித்தும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

மாலைமலர்

விதவைபெண்கள் மறுமணம் செய்ய முஸ்லீம்கள் சட்டத்தில் இடம்கொடுக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்ச நாளைக்கு முன் தான்.. சென்னையில் கள்ளக் காதல் கொலைகள் அதிகரிச்சிட்டு என்று அழுதீங்களேடா...??!

வரதட்சணை கேட்டு பெண்களையே தீமூட்டி கொல்லுற.. பெண் குழந்தை என்றால் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லுற.. பாலியல் வல்லுறவை தினம் தினம் செய்து பெண்களைக் கொல்லுறதை செய்தியாக்கி பிழைக்கிற... நீங்களாடா...

தலிபான்களைப் பற்றி இப்படி தலைப்பும் போடுறது. கொடுமைடா சாமி..! :wub::huh:

  • கருத்துக்கள உறவுகள்

.

மாலை மலருக்கு, வேறை வேலை இல்லை.

ஆகா..... பத்திக்கிச்சே... பக்கிரி. Laie_28.gifLaie_28.gifLaie_28.gif

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

விதவை ஒருத்தி ஆண் ஒருவனை விரும்பினாள் என்பதை "கள்ளக் காதல்" என்று தலைப்பு எழுதும் பத்திரிகையின் நடுவுநிலைமையை என்னவென்பது!

  • கருத்துக்கள உறவுகள்

விதவை ஒருத்தி ஆண் ஒருவனை விரும்பினாள் என்பதை "கள்ளக் காதல்" என்று தலைப்பு எழுதும் பத்திரிகையின் நடுவுநிலைமையை என்னவென்பது!

இது அவர்களது மனைவிமாருக்கு இவர்கள் இப்பவே போடும் விலங்கு

கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்; பொதுமக்கள் முன்னிலையில் கொடூரம்

...

விதவைபெண்கள் மறுமணம் செய்ய முஸ்லீம்கள் சட்டத்தில் இடம்கொடுக்கவேண்டும்

இஸ்லாமிய மதத்தின் படி ஒரு ஆண் (எல்லோரையும் சமமாக பார்க்கும் பட்சத்தில்) ஏழு திருமணங்களை செய்யலாம் என்று நினைக்கிறன், ஆனால் ஒரு பெண் விதவை ஆனால் அப்பெண்ணுக்கு மறுவாழ்வு அவர்களின் மதப் படி இல்லை என்பது பெண்களை எவ்வளவுக்கு அடிமட்டத்தில் வைத்து இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

அது சரி... :wub: மற்ற மதங்களில மட்டும் என்ன வாழுதாம்??? தெரிஞ்சால் அதையும் எழுத்துக்கோ.... :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய மதத்தின் படி ஒரு ஆண் (எல்லோரையும் சமமாக பார்க்கும் பட்சத்தில்) ஏழு திருமணங்களை செய்யலாம் என்று நினைக்கிறன், ஆனால் ஒரு பெண் விதவை ஆனால் அப்பெண்ணுக்கு மறுவாழ்வு அவர்களின் மதப் படி இல்லை என்பது பெண்களை எவ்வளவுக்கு அடிமட்டத்தில் வைத்து இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

அது சரி... :wub: மற்ற மதங்களில மட்டும் என்ன வாழுதாம்??? தெரிஞ்சால் அதையும் எழுத்துக்கோ.... :huh:

மற்ற மதங்களைப்பற்றி தெரியாது.ஆனால் எமது இனத்தைப்பற்றி சொன்னால் விதைவகள் மறு மணம் செய்யலாம் என்று சொன்னால்....ஏன் எமக்கு தனிய வாழ ஏலாதோ என்னுவினம்.சரி விதைவகள் மறு மணம் செய்யக்கூடாது என்று சொன்னால் ஆனாதிக்கம் :o .இது தேவையா ஆளை விடுங்கோ சாமி :)

மற்ற மதங்களைப்பற்றி தெரியாது.ஆனால் எமது இனத்தைப்பற்றி சொன்னால் விதைவகள் மறு மணம் செய்யலாம் என்று சொன்னால்....ஏன் எமக்கு தனிய வாழ ஏலாதோ என்னுவினம்.சரி விதைவகள் மறு மணம் செய்யக்கூடாது என்று சொன்னால் ஆனாதிக்கம் :huh: .இது தேவையா ஆளை விடுங்கோ சாமி :wub:

ரொம்ப்ப தான் நொந்து போய் இருக்கிறபோல?

குர்ஆனில் சொன்னது போல் மற்றைய மதங்களில் விதவைகள் மறுமணம் செய்யக்கூட்டாது என்று எங்கும் சொன்னதாக தெரியவில்லை.

விதவைகள் மறுமணம் செய்யக்கூடாது என்பது சமூக வழக்கம் ஒழிய மத வழக்கம் என்று நான் அறியவில்லை. தெரிந்தால் எந்த நூலில் உள்ளது என்று கூறுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.