Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலையின் விலை

Featured Replies

நாங்கள் விடும்பிழையால் மற்றவர்கள் பாதிக்கபட கூடாது...

இதில் நாங்கள் கண்டிப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்...

உங்கள் கருமங்களை, செயற்றிட்டங்களை செய்யும் போது இவர்கள் எப்பவும் உங்களுக்கு ஞாபகத்துக்கு வரவேண்டும்.

இளம் இராணுவ பொறியியலாலருக்கான அந்த வகுப்பில் தளபதி அறிவுச்செல்வன் பேசிக்கொண்டிருந்தான்.

கடந்த காலங்களில் அவசரம், நிதானமின்மை, வெடிபொருள்களின் காலாவதி, வெடிபொருள் இணைப்புகளின் தவறுகள், போன்ற பல்வேறு காரணங்களால்..

எதிரியின் எல்லைகோட்டுக்கு அருகில், எதிரியின் உள்வரவை தாமதபடுத்தும் நோக்கில், கண்ணிவெடிகளை விதைத்து கொண்டிருக்கும் போது தவறுதலாக வெடித்து கைகள், கால்கள், கண்கள், என முக அழகையும் இழந்து நிற்கும் பொன்னம்மான் கண்ணிவெடி பிரிவு பெண் போராளிகளை காட்டி தான் அந்த வகுப்பு.

எதிரி மிக கொடூரமானவன். கிட்டடியில் நடந்த சம்பவம் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறன்.

எங்களுக்கு இருக்கும் வெடிமருந்து பற்றாகுறையை நன்கு அறிந்த எதிரி வெடிக்காத கிபிர் குண்டுகளை வீசி அதை நாங்கள் மருந்துக்காக அறுத்த போது வெடிக்க செய்து எங்களில் பத்து பேர் வீரச்சாவு அடைந்ததை அறிந்திருப்பீர்கள்.

அதற்கு பதிலடியாக நாங்கள் சிங்களவனுக்கு வைத்த பொறியில் வவுனியாவில் பன்னிரண்டு இராணுவ பொறியியலாளர்களை பறிகொடுத்தான் என்று அவனது விரிவுரை தொடர்ந்துகொண்டிருந்தது.

அறிவுச்செல்வன்..

மிக திறமையான மின்னணு பொறியிலாளன். வெளிநாடு ஒன்றில் முதுநிலை கல்வியை முடித்து கொண்டு தாயகம் திரும்பி நாடுக்காக தன்னை அர்பணித்து கொண்டிருக்கும் உணர்வுள்ள போராளி. அது மட்டுமல்ல போராளி வானதியின் நல்ல காதலன்.

"இஞ்சே ..என்னுடைய வேலைதிட்டத்தின் படி என்னுடைய சாவு என்கையால் தான் இருக்கும்..அது மட்டும் இல்லை..என்னை கட்டி அழ கூட உமக்கு என் முகம் கூட கிடைக்காது"

அடிக்கடி வானதியை கடுப்பேத்த அறிவுச்செல்வன் சொல்லுவான்.

அதே பிரிவில் இருந்த அவளும் அவனை கடுப்பேத்த " எனக்கும் அப்படி தான் நடக்கும் என்றதை ஞாபகம் வைச்சு கொள்ளுங்கள் " என்பாள் பதிலடியாக.

இவர்களது காதலை அறிந்து கொண்ட தலைமை இவர்களுக்கு திருமணம் முடித்துவைத்து ஒரு மாத கால விடுமுறையையும் வழங்கி இருந்தது.

அந்த காலபகுதியில் அனுராதபுர வான்தள தாக்குதலுக்கான தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த விடுதலை புலிகளின் பொறியியல் அணிக்கு, ஒரு விசேட எரிகுண்டு செய்வதில் ஏற்பட்ட சிக்கலை தீர்பதற்காக ஆலோசனை வழங்குமாறு அறிவுச்செல்வன் வேண்டப்படிருந்தான்.

விமானங்களை ஒளித்து வைத்திருக்கும் "கங்கெர்" எனப்படும் இரும்பு கூட்டை உருக்கி உள்ளே சென்று விமானங்களை உருக்கி அழிக்க வல்லமை உடைய ஒரு எரி குண்டை தயாரிப்பதே நோக்கமாக இருந்தது.

அறிவுச்செல்வன் தானே அதை செய்து தருவதாக ஒப்புகொண்டிருந்தான். தலைமை அவனது திருமணத்தையும் விடுமுறையையும் கருத்தில் கொண்டு ஆலோசனை மட்டுமே வழங்குமாறு பணித்தும், இவன் விடாபிடியாக தானே தயாரிப்பதற்கு அனுமதியை பெற்று கொண்டான்.

தயாரிப்பு பணியை ஆவணபடுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் வேண்டிய விளக்கங்களை பெற முடியும் என்ற நோக்கில், அவை காணொளிகளாக காட்சிப்படுத்தபட்டன.

எரிவதற்கான வெடிமருந்து நியம அடிப்படையில் இல்லாமையால் ஒரு முறை செய்யும் போது 2000 பாகை செல்சியஸ் வெப்பநிலையை உருவாக்கும் குண்டு, அடுத்த முறை தயாரிப்பில் அதே வெடிமருந்து அளவுக்கு 1000 இற்கும் குறைவான செல்சியஸ் வெப்பநிலையை காட்டியது.

இந்த முறை கொஞ்சம் கூடிய அளவு வெடிமருந்தை உள் அழுத்தி குண்டை செய்யும் போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. வெடிமருந்து தவறுதலாக வெடிக்கபோவதை சற்று முதலே உணர்ந்த தளபதி அறிவுச்செல்வன், காணொளி காட்சிபடுதுனர்களையும், சக இளம் பொறியிலாலர்களையும் ஓடுமாறு கூறிக்கொண்டே, தான் தாயாரித்த அந்த குண்டின் மேலே படுத்து கொண்டான்.

அந்த தளபதி உருகியதை அங்கிருந்த யாராலும் தடுக்க முடியவில்லை.

திருமணமாகி இருபதே நாளான வானதி, அவன் புகைப்படம் அருகில் கண்ணீர் மல்க காத்திருந்தாள்..

"இஞ்சே ..என்னுடைய வேலைதிட்டத்தின் படி என்னுடைய சாவு என்கையால் தான் இருக்கும்..அது மட்டும் இல்லை..என்னை கட்டி அழ கூட உமக்கு என் முகம் கூட கிடைக்காது"

குறிப்பு :

இந்த செயன்முறையை வைத்து, தளபதி அறிவுச்செல்வனின் வளர்ப்பில் வந்த இளம் போராளிகளின் தாயரிப்பில் உருவான குண்டுகள், அனுதாரபுர வான்தள அழிப்பில் எதிரியே வியக்கும் அளவில் முக்கிய பங்குவகித்தன.( பெயர்கள் மாற்றபட்டுள்ளன)

Edited by அபிராம்

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வை கதையாக்கி தந்த அபிராமுக்கு ... நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes:

நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொல்ல!

  • தொடங்கியவர்

உறவுகளே உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையின் விலை உண்மைக்கதை பகிர்ந்தமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஒன்றை அடைய வேண்டுமானால் இன்னொன்றை இழந்தே ஆகவேண்டும்.

இப்படி எத்தனை இழப்புக்கள் நம் மத்தியில். இது ஒரு வரலாறு.

நன்றி அபிராம்

வாத்தியார்

*********

உங்கள் பதிவிற்கு நன்றி அபிராம்

மெளனம். பதிவிற்கு நன்றி

நாங்கள் விடும்பிழையால் மற்றவர்கள் பாதிக்கபட கூடாது... இதில் நாங்கள் கண்டிப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்...

உங்கள் கருமங்களை, செயற்றிட்டங்களை செய்யும் போது இவர்கள் எப்பவும் உங்களுக்கு ஞாபகத்துக்கு வரவேண்டும்.

குறிப்பாக பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிக கவனம் கொண்டவர்கள் பயங்கரவாதிகள் ஆனதும், ஐந்து மாதங்களில் 50,000 அப்பாவி மக்களை படுகொலை செய்தவர்கள், போலியான ஜனநாயக - அகிம்சை முகங்களுடன் நடமாடிவருவதும் - தலை கீழாக மாற்றப்படவேண்டும்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு அனூராதபுரம் வானூர்தி நிலையத்தாக்குதல்கள் தான் தெரியும். அதன்பின்னால் நடந்தவை தெரியாது. பதிவுக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.