Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரிதகெதியில் அகலமாகிறது யாழ்.- பருத்தித்துறை நெடுஞ்சாலை

Featured Replies

யாழ். பருத்தித்துறை நெடுஞ்சாலை துரிதகெதியில் அகலப்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். வீதியோரக் கட்டடங்களை அகற்றியும் பள்ளங்களைச் சீர்செய்தும் மரங்களை அகற்றியும் மிகவேகமாகப் இப்பணி நடைபெறுவதைக் காண முடிகின்றது.

வீதியோரத்திலுள்ள தனியார் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது சுற்றுமதிலை சிறிது உள்வாங்கிக் கட்டியும் தமது எல்லைகளை இப்பணிக்கு விட்டுக் கொடுத்தும் உதவி செய்வதைக் காண முடிகின்றது.

வீதிக்காகப் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்படும் நிலத்தைச் செவ்வை செய்தும் மண் நிரப்பி வீதிக்குள் உள்வாங்கியும் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருவதையும் காண முடிகின்றது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27603

... நெடுஞ்சாலை!!!!! அங்கு இலட்சக்கணக்கான வாகனங்கள் ... அதுதான் பெருப்பிக்கிறார்களோ?? ... இச்சாலைஅகலமாக்குவது எனும் பெயரில் எத்தனை குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கிறது??? வர்த்தக நிலையங்கள் வெட்டி துண்டாடப்பட்டிருக்கிறது???? வீடுகள் உடக்கப்பட்டிருக்கிறது??? ஆலயங்கள் இடிக்கப்பட்டிருக்கிறது???? .அழகான சிறு ஊர்கள் கூட வெட்டி துண்டாடப்பட்டிருக்கிறது???? .... .. அவ்வீதியோரம் வாழும் மக்கள், வியாபாரம் செய்யும் கடை உரிமையாளர்களை கேளுங்கள், அவர்களின் கருத்துக்களை/எதிர்ப்பை யாரும் கேட்டார்களா என்று!! என்ன அங்க்லு பாதிக்கப்பட்ட மக்களில் பலருக்கு உறவுகள் புலத்தில் ... ஈடு செய்யப்படலாம்!! இல்லாதவர்கள்????

இது தமிழ் பகுதிகளில் அபிவிருத்தி எனும் பெயரில், இன்னொரு பொருளாதார அழிப்பே!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... நெடுஞ்சாலை!!!!! அங்கு இலட்சக்கணக்கான வாகனங்கள் ... அதுதான் பெருப்பிக்கிறார்களோ?? ... இச்சாலைஅகலமாக்குவது எனும் பெயரில் எத்தனை குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கிறது??? வர்த்தக நிலையங்கள் வெட்டி துண்டாடப்பட்டிருக்கிறது???? வீடுகள் உடக்கப்பட்டிருக்கிறது??? ஆலயங்கள் இடிக்கப்பட்டிருக்கிறது???? .அழகான சிறு ஊர்கள் கூட வெட்டி துண்டாடப்பட்டிருக்கிறது???? .... .. அவ்வீதியோரம் வாழும் மக்கள், வியாபாரம் செய்யும் கடை உரிமையாளர்களை கேளுங்கள், அவர்களின் கருத்துக்களை/எதிர்ப்பை யாரும் கேட்டார்களா என்று!! என்ன அங்க்லு பாதிக்கப்பட்ட மக்களில் பலருக்கு உறவுகள் புலத்தில் ... ஈடு செய்யப்படலாம்!! இல்லாதவர்கள்????

இது தமிழ் பகுதிகளில் அபிவிருத்தி எனும் பெயரில், இன்னொரு பொருளாதார அழிப்பே!!

ஐயா உங்கட காலை பிடிச்சு கேக்கிறன்..

அப்ப அபிவிருத்தி என்றால் என்ன?

யாழ்பானத்திர்ற்கும் பருத்தித்துறைக்கும் கேபிள் கார போட வேண்டும்?

என்ன செய்யலாம் என்று சொன்னியள் என்றால் சரி...

ஐயா உங்கட காலை பிடிச்சு கேக்கிறன்..

அப்ப அபிவிருத்தி என்றால் என்ன?

யாழ்பானத்திர்ற்கும் பருத்தித்துறைக்கும் கேபிள் கார போட வேண்டும்?

என்ன செய்யலாம் என்று சொன்னியள் என்றால் சரி...

ஏற்கனவே கட்டி அமைக்க பட்டு இருக்கும் மக்களின் வாழ்வாதாரங்களிலை இருந்து வலுக்கட்டாயமாக அகற்றி அவற்றை இடிச்சு அழித்து பிச்சை காறர் ஆக்கிறதுக்கு பெயர் அபிவிருத்தி இல்லை... !

மக்களின் விருப்பை கேட்டு , நட்டவீடுகள் வழங்கி போதுமான கால அவகாசம் வழங்கி அவர்களை வேறு நிலையெடுப்புக்கள் செய்ய வசதி செய்து கொடுக்க பட வேண்டும் எண்டது மேற்க்கத்திய நாடுகளின் நடை முறை...

நீங்கள் இருக்கும் நாடுகளிலை கூட என்ன நடை முறை எண்டதாவது தெரியுமோ...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

:) இப்போது தேவையானது சிங்களவர்கள் உல்லாசப் பயணம் போகும் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்வதல்ல. மாறாக வன்னியில் அழிந்து கிடக்கும் எமது உறவுகளின் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதுதான். ஆனால் அதைச் செய்யாது , சிங்களப் பயங்கரவாத அரசு தனது கண்காட்சிச் சாலையான யாழ்ப்பாணத்தை மேலும் மேலும் அபிவிருத்தி செய்வதன் நோக்கம் உங்களுக்கு விளங்கவில்லையா? அல்லது நீங்களும் நமோ. நமோ பாட ஆரம்பித்து விட்டீர்களா??

அதெப்படி, வன்னி மக்களின் வாழ்வு வளம்பெற புலம்பெயர்ந்தவர் உதவ வேண்டுமாம், அதுக்கு சிங்களத்திடம் காசில்லையாம், ஆனால் யாழ்ப்பாணத்தில் வீதி அகலமாக்கவும், ஆடம்பர விடுதிகள் கட்டுவதற்கும் சிங்களத்திடம் தராளாமாகக் காசு இருக்குதாம்.

கேக்கிறவன் கேணையன் என்றால் எருமைமாடும் ஏரொப்பிளேன் ஒட்டுமாம்.

  • தொடங்கியவர்

பொதுவாக அபிவிருத்தி என்பது மக்களின் நலன் சார்ந்தும் அவர்களின் பொருளாதாரத்துக்கும் உதவுவதாக அமைய வேண்டும்.

இன்று தமிழ் மக்கள் அல்லது அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் கட்சிகள் சிங்கள அரசை இந்த வீதியை புனருத்தாரணம் செய்யக்கேட்டனவா என்பது ஒரு நியாயமான கேள்வி. அனேகமாக இந்த முயற்சியின் பின்னால் சிங்களத்துக்கு ஒரு நன்மை இருந்தாக வேண்டும்.

இல்லை அவர்கள் அம்பாந்தோட்டை - மாத்தளை வீதியை புனருத்தாரணம் செய்திருப்பார்கள்.

எது எப்படியோ நிச்சயம் யாரவது பணருத்தரணம் செய்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வோல்கனோ,

இந்த இணைப்பையும் படித்துப்பாருங்கள். சிலவேளை உங்களுக்குப் புரிந்தாலும் புரியலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76123

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி, வன்னி மக்களின் வாழ்வு வளம்பெற புலம்பெயர்ந்தவர் உதவ வேண்டுமாம், அதுக்கு சிங்களத்திடம் காசில்லையாம், ஆனால் யாழ்ப்பாணத்தில் வீதி அகலமாக்கவும், ஆடம்பர விடுதிகள் கட்டுவதற்கும் சிங்களத்திடம் தராளாமாகக் காசு இருக்குதாம். .

ரகு,தயா மற்றும் நெல்லையன். ஆடம்பர விடுதிகள் விடையத்தில் நீங்கள் சொல்வது முறிலும் சரி.ஆனால் வீதிகள் அகலப்படுத்துவதும் திருத்துவதும் தேவையான ஒன்றே. ஆனால் இந்த வீதி அகலப்படுத்தும் விடையத்தை புலிகள் செய்திருந்தாலும் மக்கள் எதிர்ப்புத்தான் தெரிவிது இருப்பார்கள்.இதை ஒரு விவாதமாக நோக்கமால் எமது இனத்தின் குணத்தை வைத்துப்பாத்தால் உங்களுக்கே புரியும். :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

"""""ஆனால் வீதிகள் அகலப்படுத்துவதும் திருத்துவதும் தேவையான ஒன்றே. ஆனால் இந்த வீதி அகலப்படுத்தும் விடையத்தை புலிகள் செய்திருந்தாலும் மக்கள் எதிர்ப்புத்தான் தெரிவிது இருப்பார்கள்.இதை ஒரு விவாதமாக நோக்கமால் எமது இனத்தின் குணத்தை வைத்துப்பாத்தால் உங்களுக்கே புரியும்""

இதுதான் எனது பதிலும்..வீதி அகலமாக்குவதையும் நாங்கள் இப்படித்தான் பாப்போம் என்றால் இதன் முடிவுதான் என்ன? வேறு ஓரிடத்தல் வாசித்தேன் எத்தனையோ தொன் வெங்காயம் ஒவ்வொருநாளும் தம்புள்ளைக்கு போகிறது என்று. அது எப்படி உந்த தோட்டக்காணிகளில் இருந்து நடந்தோ போகிறது. அப்படி தம்புள்ளைக்கு அனுப்பவதும் பிழை என்று சொல்லவும் ஆக்கள் இருப்பினம். அவைகளுக்கு என்னத்த சொல்ல?

மற்றது யாழ்ப்பாணத்தில வாகனம் கூடின பற்றி..இஞ்ச ஆரோ எழுதியிச்சினம் "பல்சரினால் பறக்கிற பன்னாடைகள்" என்று..அவை உண்மையில பறக்கிரவை போலத்தான் கிடக்கிறது..ஏனெண்ட ரோட்டோண்டும் ஒன்றும் தேவையில்லை

உங்கடை சந்தேகம்..சிங்களவன் பணருத்தானம் செய்திருப்பான், இது எங்களுக்கு மூக்குடஞ்சாலும் பரவாயில்லை அவனுக்கு சகுனம் பிழைச்ச சரி என்ற மாதிரி. அங்கெ ஆஸ்பத்திரி கிடக்கு 100 / 200 பள்ளிக்கூடம் கிடக்குது..வேற என்ன என்ன வெல்லம் இருக்கு, எல்லாத்திலேயும்தான் பணருத்தானம் செய்கிரங்கள்..அப்ப அதுக்காண்டி எல்லாத்தையும் பூட்டிபோட்டு இருப்பமே? கொஞ்சமாவது உந்த வி. கு விளையாட்டுக்கால விடுங்கோ? ( முந்தி சொல்லுவான் உலகத்தில ஒரே ஒரு நாடு பயங்கரவாத்துக்கு சாப்பாடும் மருந்தும் கொடுக்கிறது எண்டு, அதுக்காட்டின் வன்னிக்கு மருந்தும் சாப்பாடும் அனுப்பவேண்டாம் என்று சொன்னாங்களோ அல்லது அப்படி அனுப்பின மருத்தை சாப்படை பங்கு போடாமல் விட்டனாங்க்களோ? )

இன்னுமொரு கருத்து மக்களின் கருத்து அறிந்து நடக்கிறது...

எல்லாம் சுகம் வரும் ஆள் தப்பாது எண்டமாதிரிதான்...இங்கே எனக்கு தெரிய வீதி பெருந்தேருக்களுக்கு பெயர் போன அமெரிக்காவிலேயே உந்த பிரச்சனை இருக்கு.."ப்ரூக்ளின்-கியீன்ஸ் எக்ஸ்பிரஸ் வே" இருக்குது, ஏற்கனவே இருந்த ஒரு வர்த்தக இடத்துக்கு மேலாக கட்டப்பட்ட பாதை..எல்லோருடைய எதிர்ப்பையும் சம்பாதித்தது..அனாலும் இன்றுவரை அதிக பயன்பாட்டில் உள்ள பாதைகளில் ஒன்று. அந்த பாதையால் போகும் பொது வடிவாக தெரியும் பழைய விற்பனை நிலையங்கள்...ஆனால் அதைவிட வேறு வழிகள் இருந்திருக்குமோ தெரியாது..

மற்றது உங்களது கரிசனம் வன்னி மக்கள் பற்றியது...

அவன் செய்கிறானோ இல்லையோ சனம் அங்கேதான் இன்னும் இருக்குது, எல்லா கஸ்த்தரத்தையும் அனுபவிக்குது. அவர்களுக்கு நாங்கள் என்ன செய்கிறம்? அவன் எதை செய்கிறானோ அதைத்தான் நாங்களும் செய்கிறோம்..அவனுக்கும் வன்னி மக்கள் அடிமை குடிமை எங்களுக்கும்தான்...அது இங்கே இருக்கிற புலம் பெயர்ந்தவைக்கு மட்டுமல்ல அங்கே இருக்கிற கனவாங்களுக்கும்தான்...சும்மா கதைக்கேக்க கதையோட 4 கதை அவையல பற்றியும் கதைப்பம்.

சிங்கள அரசு எமக்கு பாரபட்சம் காட்டுதென்றுதானே சுதந்திரம் அடைந்ததில் இருந்து சொல்லிக் கொண்டுவருகின்றோம்.அது உலகம் அறிந்த உண்மையும் கூட.

அதற்கு தீர்வு என்ன? இதுதான் மில்லியன் டொலர் கேள்வி.

ஒவ்வொருநாளும் விடிய எழும்பி சிங்களவன் அது செய்கின்றான்,இது செய்கின்றான் எனக் கத்தி ஆகப் போவதொன்றும் இல்லை.இதுவே புலம் பெயர்ந்த ஊடகங்களுக்கு பிழைப்பாக போய் விட்டது.அவன் ஒன்று செய்ய அதை பத்தாக்கி ஊதிப் பெருக்கி என்னத்தை காணப் போகின்றீர்கள்.அவன் செய்வதை செய்துகொண்டுதான் இருக்கப் போகின்றான்.அதை வைத்து தான் இங்கு பலர் தம் பிழைப்பையே நடாத்துகின்றார்கள்.எல்லோரையும் திட்டி திட்டியே எம் காலம் முடியப் போகின்றது.

இப்படி ஒரு நிலமை இன்று உருவானதில் எங்களுக்கும் பெரும் பங்கு உண்டு..எங்கட நாடு என்ற உணர்வு இல்லாமல் யாராலேயோ நாடு கிடைக்கும் என்று இன்றுவரை நம்பிக்கொண்டிருக்கின்றோம் பாருங்கள் இப்படியே திட்டிக் கொண்டே அழிந்து போகப் போகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு எமக்கு பாரபட்சம் காட்டுதென்றுதானே சுதந்திரம் அடைந்ததில் இருந்து சொல்லிக் கொண்டுவருகின்றோம்.அது உலகம் அறிந்த உண்மையும் கூட.

அதற்கு தீர்வு என்ன? இதுதான் மில்லியன் டொலர் கேள்வி.

ஒவ்வொருநாளும் விடிய எழும்பி சிங்களவன் அது செய்கின்றான்,இது செய்கின்றான் எனக் கத்தி ஆகப் போவதொன்றும் இல்லை.இதுவே புலம் பெயர்ந்த ஊடகங்களுக்கு பிழைப்பாக போய் விட்டது.அவன் ஒன்று செய்ய அதை பத்தாக்கி ஊதிப் பெருக்கி என்னத்தை காணப் போகின்றீர்கள்.அவன் செய்வதை செய்துகொண்டுதான் இருக்கப் போகின்றான்.அதை வைத்து தான் இங்கு பலர் தம் பிழைப்பையே நடாத்துகின்றார்கள்.எல்லோரையும் திட்டி திட்டியே எம் காலம் முடியப் போகின்றது.

இப்படி ஒரு நிலமை இன்று உருவானதில் எங்களுக்கும் பெரும் பங்கு உண்டு..எங்கட நாடு என்ற உணர்வு இல்லாமல் யாராலேயோ நாடு கிடைக்கும் என்று இன்றுவரை நம்பிக்கொண்டிருக்கின்றோம் பாருங்கள் இப்படியே திட்டிக் கொண்டே அழிந்து போகப் போகின்றோம்.

நீங்களும் பதில் சொல்வீர்களோ என்று ஓடி வந்து வாசித்தேன்

சொதப்பி விட்டீர்கள்

ஊருக்கு உபதேசம்

உனக்கில்லடி......

எனது பதிலில் தீர்வு இருந்ததை படிக்கவில்லையா?

அவனவனுக்கு தன்ரை நாடு,அதை பெற தான் தான் எதுவும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும்.இதுதான் தீர்வு.

அதற்கு ஒரு தமிழனும் தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி

அதை ஒழுங்காக

தமது உயிரையும் மதியாது செய்தவர்களையும் நாம் செய்யவிட்டோமா...???

செய்ய விடுவோமா..???

ரகு,தயா மற்றும் நெல்லையன். ஆடம்பர விடுதிகள் விடையத்தில் நீங்கள் சொல்வது முறிலும் சரி.ஆனால் வீதிகள் அகலப்படுத்துவதும் திருத்துவதும் தேவையான ஒன்றே. ஆனால் இந்த வீதி அகலப்படுத்தும் விடையத்தை புலிகள் செய்திருந்தாலும் மக்கள் எதிர்ப்புத்தான் தெரிவிது இருப்பார்கள்.இதை ஒரு விவாதமாக நோக்கமால் எமது இனத்தின் குணத்தை வைத்துப்பாத்தால் உங்களுக்கே புரியும். :blink:

புலிகள் வரி வாங்கும் போதும் குற்றம் சொன்னவர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

Deserted%20Poonamali%20road.JPG

hosur-bangalore-highways.jpg

ரோட்டுக்கு அந்த பக்கம் இந்தபக்கம் பெரும்பான்மை யாருக்கு நிலம் சொந்தமாகி..... சொந்தமாக கடை போடுகிறார்களோ அங்கிருந்தே ஆக்ரமிப்பாளர்கள் யார் என துல்லியமாக எடை போடலாம்... மோட்டல் நவீன யுகத்தில் ஒரு வருமானம் கொழிக்கும் தொழில்..... இவர்கள் வைத்ததுதான் ரேட்.. :blink::wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.