Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிராமத் தலைவராக பிச்சைக்காரர் தேர்வு

Featured Replies

(உத்தரப்பிரதேசம்), டிச.15: வெறும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல்வாதிகளை இனியும் நம்பி மோசம் போக வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சஹாவர் ஷா கிராம மக்கள். தங்களுக்குப் பணியாற்ற பிச்சைக்காரர் ஒருவரை கிராமத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்த்தியுள்ளனர்.

இந்த கிராமத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் மொத்தம் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 70 வயது பிச்சைக்காரரும் ஒருவர். நாராயண் நாத் என்ற இவரையே கிராமத் தலைவராக அப்பகுதி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தக் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சையெடுத்து வாழ்ந்து வருகிறார் நாராயண் நாத். இவருக்கு நான்கு மகன்கள், 14 பேரக் குழந்தைகள். கடந்த மாதம் நடந்த தேர்தலில் இவர் வெற்றி பெற்ற போதிலும் இப்போதும் பிச்சையெடுத்துதான் வாழ்ந்து வருகிறார்.

கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ஒரு காசு கூட இவர் செலவு செய்யவில்லை. கிராமத்தை முற்றிலுமாக மாற்றிவிடுவதாக இவர் அளித்த வாக்குறுதிதான் மக்கள் மனதில் பெரும் மாற்றம் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது.

கிராம மக்கள் மேம்பாட்டுக்கு, அரசு ஒதுக்கும் அனைத்து நிதியையும் செலவிடப் போவதாக அறிவித்துள்ளார் நாராயண் நாத். கிராமம் முழுவதும் மகளிர்க்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தருவதே தனது முதல் பணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச கிராமத்தில் ஏற்பட்டுள்ள இத்தகைய அரசியல் மாற்றம் வெகு விரைவில் பிற பகுதிகளுக்குப் பரவினால் நல்லது ஏற்படுவது நிச்சயம். மக்களின் இத்தகைய மனமாற்றம் வெறும் வார்த்தை ஜாலங்களைக் காட்டி வாழ்க்கை ஓட்டும் அரசியல்வாதிகள் வயிற்றில் புளியைக் கரைக்கும் என்பது உறுதி.

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=347147&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%20%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குறுதிகளை காப்பாற்றினால் புகழப்படுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் பிச்சை எடுக்கிறார் என்கிறீர்கள்

இனி கட்டுக்கட்டாக பணம் விழப்போகுது தட்டில்...........???

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் பிச்சை எடுக்கிறார் என்கிறீர்கள்

இனி கட்டுக்கட்டாக பணம் விழப்போகுது தட்டில்...........???

இப்போது வசதியாக வாழும் அரசியல்வாதிகளில் பாதிப்பேர் பிச்சைக்காரர்களாக இருந்து வந்தவர்கள் தான். :D

  • தொடங்கியவர்

இப்போது வசதியாக வாழும் அரசியல்வாதிகளில் பாதிப்பேர் பிச்சைக்காரர்களாக இருந்து வந்தவர்கள் தான். :D

உண்மை, ஆனால் இவருக்கு வயது 70! அதனால் சிலவேளை பணத்தில் ஆசை இருக்காமல் போகலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை, ஆனால் இவருக்கு வயது 70! அதனால் சிலவேளை பணத்தில் ஆசை இருக்காமல் போகலாம். :D

இந்தக் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சையெடுத்து வாழ்ந்து வருகிறார் நாராயண் நாத். இவருக்கு நான்கு மகன்கள், 14 பேரக் குழந்தைகள்.

நாரயண் நாத்துக்கு பணத்தில் ஆசை இல்லாமலிருக்கலாம், ஆனால் அவருக்கு 4 பிள்ளைகளும், 14 பேரப் பேரப் பிள்ளைகளும் உள்ளார்கள். :D

அவரை இனியும் பிச்சை எடுக்க அவர்கள் விடுவார்களா? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது வசதியாக வாழும் அரசியல்வாதிகளில் பாதிப்பேர் பிச்சைக்காரர்களாக இருந்து வந்தவர்கள் தான். :D

கருணாநிதி சோனியாவை ஒருநாளும் உப்பிடி நக்கலடிக்கக்கூடாது :D

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி சோனியாவை ஒருநாளும் உப்பிடி நக்கலடிக்கக்கூடாது ^_^

lol-020.giflol-022.gif

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி சோனியாவை ஒருநாளும் உப்பிடி நக்கலடிக்கக்கூடாது

வாவ்! வாட் எ கிரேட் திங், எப்படி கு. சா. இப்படி கில்லிமாதிரி.... :D^_^

சிங்கள நாட்டில் ஒரு மீன் வியாபாரி ஜணதிபதியா இருக்குறார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு பிச்சக்காரர் கிராமத் தலைவராக இருப்பதில் என்ன.

இருந்தாலும் மகிந்தர இப்படி கேவளப்படுத்தக்கூடாது.

சிங்கள நாட்டில் ஒரு மீன் வியாபாரி ஜணதிபதியா இருக்குறார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு பிச்சக்காரர் கிராமத் தலைவராக இருப்பதில் என்ன.

இருந்தாலும் மகிந்தர இப்படி கேவளப்படுத்தக்கூடாது.

அமெரிக்கால அபிரகம் லிங்கன் தெருவிளக்கில் படிச்சு ஜனாதிபதி ஆனால் அது வரலாறு அதே என் சகோதரம் பச்சாயத்து தலைவார் ஆனால் அதுக்கு நக்கல் நயான்ண்டியா? ^_^

^_^

அமெரிக்கால அபிரகம் லிங்கன் தெருவிளக்கில் படிச்சு ஜனாதிபதி ஆனால் அது வரலாறு அதே என் சகோதரம் பச்சாயத்து தலைவார் ஆனால் அதுக்கு நக்கல் நயான்ண்டியா?

அந்த ஊர் மக்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொன்டதிள் சந்தோசம் தான் ஆனால் அவரது வாக்குருதிகள் மக்களிடையே காப்பாற்றாப்பட்டு மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளுமா எண்பதை பொருத்திந்துதான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை எடுப்பது என்று நான் குறிப்பிட்டது

சாதாரண மனித வாழ்விலிருந்து மாறுபட்டது

மரியாதை

சுயகௌரவம்

கடினஉழைப்பு

........

........ போன்றவற்றை கவனிக்காததாக பிச்சை எடுப்பது என்பது இருக்கும்

உண்மையில் எமது இந்த இயந்திர ஓட்டங்கள் எல்லாம் இவற்றைக்காப்பாற்றத்தானே....

வீதியில் போய் பிச்சை எடுப்பது என்பது எவ்வளவு தூரம் வரவேற்கத்தக்கது. அவரை ஒரு ஊரவர் பொறுப்புமிக்க பதவியில் அமர்த்துகின்றனர் என்றால்

என்னைப்பொறுத்தவரை

அவர் மீதான பற்றுதலைவிட

வேறு ஆட்கள் மீதான வெறுப்பே காரணமாக முடியும். இந்த தெரிவு நல்லது செய்யுமா....?

பிச்சை எடுப்பது என்று நான் குறிப்பிட்டது

சாதாரண மனித வாழ்விலிருந்து மாறுபட்டது

மரியாதை

சுயகௌரவம்

கடினஉழைப்பு

........

........ போன்றவற்றை கவனிக்காததாக பிச்சை எடுப்பது என்பது இருக்கும்

உண்மையில் எமது இந்த இயந்திர ஓட்டங்கள் எல்லாம் இவற்றைக்காப்பாற்றத்தானே....

வீதியில் போய் பிச்சை எடுப்பது என்பது எவ்வளவு தூரம் வரவேற்கத்தக்கது. அவரை ஒரு ஊரவர் பொறுப்புமிக்க பதவியில் அமர்த்துகின்றனர் என்றால்

என்னைப்பொறுத்தவரை

அவர் மீதான பற்றுதலைவிட

வேறு ஆட்கள் மீதான வெறுப்பே காரணமாக முடியும். இந்த தெரிவு நல்லது செய்யுமா....?

அம்மனுக்கு கூழ் ஊத்த என்று பிச்சை எடுக்கிறதில இருந்து சொந்த வயிறுக்கு பிச்சை எடுப்பதில் என்ன வேறு பாடு இருக்கு இவளவு வளர்ந்த நாட்டில் கூட பிச்சைக்காரர் இருக்கிறார்கள் தான் அதை விட புலத்தில வந்து நாங்கல் அசிலம் அடிச்சு விட்டு எடுக்கிரதும் பிச்சை தான் ஊரில் கனவ்ர் செத்தவர்களுக்கு அரசங்கத்தால் பிச்சைக் காசு என்று ம் மாசம் 100 150 கொடுத்தவ்ர்கள் நான் ஊரில் நிக்கும் போது..............பிச்சை என்றால் எலலம் பிச்சை தான் .

வறுமையில் உயிரை விடுவதை பார்க்க வெக்கத்தை விட்டு பிச்சையாவது எடுத்து மனைவி பிள்ளைகளை காப்பாற்றுபவன் மனிதன்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மனுக்கு கூழ் ஊத்த என்று பிச்சை எடுக்கிறதில இருந்து சொந்த வயிறுக்கு பிச்சை எடுப்பதில் என்ன வேறு பாடு இருக்கு இவளவு வளர்ந்த நாட்டில் கூட பிச்சைக்காரர் இருக்கிறார்கள் தான் அதை விட புலத்தில வந்து நாங்கல் அசிலம் அடிச்சு விட்டு எடுக்கிரதும் பிச்சை தான் ஊரில் கனவ்ர் செத்தவர்களுக்கு அரசங்கத்தால் பிச்சைக் காசு என்று ம் மாசம் 100 150 கொடுத்தவ்ர்கள் நான் ஊரில் நிக்கும் போது..............பிச்சை என்றால் எலலம் பிச்சை தான் .வறுமையில் உயிரை விடுவதை பார்க்க வெக்கத்தை விட்டு பிச்சையாவது எடுத்து மனைவி பிள்ளைகளை காப்பாற்றுபவன் மனிதன்.

வேற ஏதோ கோபத்தை இங்கு காட்டுற மாதிரி தெரியுது

நான் இந்த விளையாட்டுக்கு வரல சாமி............. ^_^:D

வேற ஏதோ கோபத்தை இங்கு காட்டுற மாதிரி தெரியுது

நான் இந்த விளையாட்டுக்கு வரல சாமி............. ^_^:D

அந்த தொழில் எவளவு கஷ்டமானது என்பது அதை செய்த செய்து கொண்டு இருக்கிற இன்னுமெரு தொழிலாளிக்கு தான் தெரியும். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.