Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேசக்கரம் அமைப்பு தனது சேவைகளை நிறுத்திக்கொள்கின்றது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படையாக, அரசியல் குறுக்கீடுகளின்றிச் செயற்படக் கூடிய காலம் வரும்போது, மீண்டும் தங்கள் பணிகளை ஆரம்பிக்கவேண்டும். இந்தத் திடீர் முடிவு கவலையானதுதான், ஆனால் ஆபத்துக்கள் நிறைந்த சூழலில் யாரையும் சிக்காமல் வைத்திருக்கவும் வேண்டும்.

நான் தனிப்பட்ட ரீதியில் நேரடியாக யாருக்கும் உதவமுடியாமல் போவதையிட்டு மனம் வருந்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு கவலை தருகிறது..! :(

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியும், சாத்திரியாரும் நேசக்கரத்தின் சேவையை நிறுத்தியது கவலையான விடயம். :unsure:

இன்னும் ஒரு சில மாதத்தில் எனது பங்களிப்பையும் செய்வோம் என்று நினைத்திருந்த போது..... இப்படியான செய்தி. :(

சிறி,

விலகிக்கொள்ளும் முடிவுவரை உதவி பெற்றுக்கொண்டிருப்போருக்கான உதவிகள் தடைப்படாதபடி ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். பல வழிகள் இருக்கிறது அவற்றில் ஏதாவது ஒழு வழியில் உங்கள் உதவியை வழங்குங்கள்.

சிறு அணில்களாய் இயங்கினோம்.

இம்முடிவானது என் வரையில் எனக்கும் மண்ணுக்குமான எஞ்சியிருந்த உறவு வேரோடு அறுபடுவது போல நெஞ்சுக்குள் வலியாயுள்ளது. அர்த்தம் சொல்ல முடியாதளவு துயராகத்தானிருக்கிறது. ஒவ்வொருவரும் இந்த முடிவு பற்றி விசாரிக்கிற ஒவ்வொரு வினாடியும் கண்ணீருடன் தான் அவர்களுடன் கதைக்க முடிகிறது.

நேசக்கரம் ஆரம்பிக்கும் முதல் 2பிள்ளைகள் மட்டும்தான் அம்மா என்றனர் , 3சகோதரம் தான் அக்கா என்றது , ஒரு அம்மாவும் அப்பாவும் மகளே என்றார்கள். ஆனால் நேசக்கரத்தினுள் முழுயைாக இறங்கிய பின்னர் எத்தனையோ பிள்ளைகள் அம்மாவென்றனர் , எத்தனையோ சகோதரர்கள் அக்காவென்னறர் எத்தனையோ அம்மாக்களும் அப்பாக்களும் மகளேயென்று உரிமையோடு எனக்குள் உறவாகினர். அத்தனைபேரையும் விட்டு ஒதுங்கும் அளவுக்கு எம்மை அழுத்திய காரணியை பலர் புரிந்து கொள்ளாதது தான் வேதனை தருகிறது.

உங்கள் போல் முகம் அறியாத பல நல்ல நண்பர்களை இந்த யாழ் களம் தந்தது. அவர்கள் மட்டும்தான் எம்மைப்புரிந்து கொண்டுள்ளார்கள். அதுவரையில் நிம்மதி.

புத்தாண்டோடு பல புதிய திட்டங்களை முன்னெடுக்கும் வகைகளை வருட இறுதியில் திட்டமிட்டோம். அதுவெல்லாம் வெறும் கனவுகளாக.... :mellow:

எல்லாவற்றிற்கும் எல்லாருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.

Edited by shanthy

சாத்திரி உங்கள் முன் உள்ள சவால்களை அறியாமல் கதைப்பது பொருத்தமல்ல.

மிக நேர்த்தியாக செயற்பட்ட உங்கள் முடிவு பயன்பெற்ற மக்களுக்கு பாரிய இழப்பு. இது கவலையானது.

எனினும் உரிய வேளையில் மீண்டும் இயங்குவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

சாந்தி ரமேஸ், வவுனியன், சிறி மற்றும் ஏனைய உள்ளூர் உறுப்பினர்களுக்கு "அரசியல் பலமோ பணபலமோ ஆள்பலமோ இல்லாதவர்கள்" என்ற எண்ணத்தை விடுங்கள். அவர்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல்கள் இருந்தால், தேவையெனின் அவற்றை எதிர்கொள்ள எமது துணை நிச்சயம் உண்டு.

மிகவும் வேதனையான செய்தி !

உண்மையில் அங்கு கஷ்டப் படும் சாதாரண மக்கள் தான் மிகவும் பாதிக்கப் படப் போகிறார்கள்.

என்னால் நம்ப முடியவில்லை ,அதுவும் தமிழ் அரசியல்வாதிகளால் தான் பிரச்சினை என்று நினைக்கும் போது இன்னும் மிக வருத்தம் , அவர்களுக்கே கஷ்டப் படும் எம் இனத் தவர் மீது எந்த தயவும் இல்லை என்பதும் வரும் உதவியில் தங்கள் குறிப்பிட்ட ஆட்களுக்கு வழங்கவும் ,அதில் சொந்த ஆதாயம் அடையவும் ,அடுத்த்வர் உழைப்பில் பேர் வாங்கவும்முட்படுபவர்களை என்னெண்டு சொல்வது? கேவலமான ஈனப் பிறவிகள் , நிச்சயமாக உண்மையான மனிதத் தன்மையாக இருக்கும் தமிழரெல்லாம் வெட்கப் படவேண்டும்.

கடைசியாக சாந்தி ரமேஷ் அவர்களுடன் நெசக்கரம் மூலம் உதவிகள் செய்யும் விடயமாக பேசியதில் மிக்க திருப்தி , மேலும் மேலும் பாதிக்கப் பட்ட எம் மக்கள் பயணதைய வேண்டும் ,வாழ வழி காட்ட வேண்டும் என்ற உண்மையான செயல்ப்பாடு கொண்ட நீங்கள் , சாத் திரி மற்றும் நிர்வாகிகள் தயவு செய்து இந்த முடிவை மீள் பரிசீலிிக்கவும் ,

இலங்கையின் அரசியல்வாதிகள் எல்லாருமே கொடியவர்கள் , இதனால் இங்குள்ள தொண்டர்களுக்கு உயிராபத்திது உண்டு என்பதும் உண்மை, தயவு செய்து உங்களை தட்காத்துகொண்டு மற்றாய அமைப்புகள் அரசியல்வாதிகள் போன்றவர்களுடன் தொடர்புககளை எவ் வகையிலும் பேணாமல் இந்த மக்கள் சேவையை தொடறுமாறு தால்மையுடன் வேண்டிக் கொள்கிறேன் ,

பாதிக்கப் பட்ட மக்கள் சார்பில் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் , ஒருவாறு நெளிந்து சு ழிந்து சேவையை முன் நெடுப்போம் , மானுடம் வெல்லும் இறுதியில் . நன்றி

தயவு செய்து அமைப்பை மூடாமல் நிலவரத்தை பார்த்து செயட்படுவோம் ,இனிமேல் கெரில்லா பாணியில் மக்களுக்கு உதவுவோம் ,நன்றி வணக்கம்

Edited by UK_podiyan

மிகவும் கவலைதரும் செய்தி

அண்மைக்காலமாகத்தான் யாழ்கள உறவுகள் அதிகம் பங்களிக்கத் தொடங்கியிரந்தார்கள்

இந்த நிலையில் இப்படியொரு செய்தி

சாத்திரி சாந்தி உங்களுக்கு என்ன இக்கட்டான பிரச்சினையோ தெரியவில்லை

எங்களால் ஆதங்கப்படுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்

நிலமை திரும்பாமலா போய்விடும்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனங்களின் முயற்சி தேக்கப்படுவது கவலையான செய்தி... இம்முடிவு தற்காலிகமாக இருக்க வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிறுத்துவதற்குண்டான தடங்கலை சரி செய்து, மாற்று வழியில் ஏதேனும் செயல்படுத்த இயலுமா என்று நேசக்கரம் உறவுகள் ஒன்றிணைந்து கலந்தாய்வு செய்யவும். எம்மால் இயன்ற உதவிகளை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இதுவரை நேசக்கரம் அமைப்பிற்கு paypal மூலம் மாதாந்தம் பணம் அனுப்பிவந்த உறவுகள் அதனை நிறுத்தி விடுமாறு கேட்டுக்கொள்வதோடு அதற்கு மாற்றீடாக பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றின்நேரடி தொடர்புகளை ஏற்படுத்தித் தருகிறோம் நேரடியாக அனுப்ப முடியுமா என பதில் தாருங்கள். அல்லது தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.