Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனிதப்பண்பு

Featured Replies

மனிதப் பிறவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர்; அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனசாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடனொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும்.எனக்குப் பிடித்த வரிகள்.எனது கேள்வி என்னவன்றால் இது நடக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

மனிதப் பிறவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர்; அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனசாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடனொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும்.எனக்குப் பிடித்த வரிகள்.எனது கேள்வி என்னவன்றால் இது நடக்குமா?

ஒருவன் முதல் தடவை பிழை செய்யும் போது, மனச்சாட்சி உரத்து எச்சரிக்கின்றது .

இரண்டாவது தடவை திரும்பச் செய்யும் போது, மனச்சாட்சி மெதுவாக எச்சரிக்கின்றது.

மூன்றாவது தடவை செய்யும் போது, மனச்சாட்சி மௌனமாகி விடுகின்றது.

-மகாத்மா காந்தி-

விலங்கிலிருந்து தோன்றிய மனிதன்,

பரிணாமத்தின் பாதி வழியில்,

அவன் பரிணாமம் முற்றுப்பெறுகையில்,

நீங்கள் நினைப்பது நடக்கலாம்.

அதுவரை புத்தனின் பாதத்தைக்

கண்ணீரால் கழுவுபவன் கூட,

தங்கள் கொலைகளை

நியாயப்படுத்துவான்.

  • தொடங்கியவர்

மனிதகுல பரிமாணம் முற்றுப்பெற சாத்தியக்கூறுகள் இல்லை.வேண்டுமானால் தேடலும் பரிமாணமும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் பொழுது இவை நடக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்!வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

மனிதப் பிறவி மட்டுமல்ல எல்லா உயிரினங்களுமே சுதந்திரமாகத்தான் பிறக்கின்றன. எல்லாமே உணவுச் சங்கிலியால் ஒன்றை ஒன்று கொன்று தின்று உலகில் ஒரு சமநிலையைப் பேணுகின்றன. இதில் மனிதன் மட்டும் சிந்திக்கும் அறிவால் வேறுபட்டு நாளைக்குத் தேவை, நாளைய தலைமுறைக்கு தேவை என்று சொல்லி இன்றைக்கே பதுக்கி வைத்துக்கொள்ள முயல்கிறான். ஒரு கண்டத்திலிருக்கும் மனிதனுக்கு இன்னொரு கண்டத்தில் இருக்கும் விலங்குகள் உணவுக்காக கொல்லப் பட்டு அனுப்பப்படுகின்றன. எங்கோயோ ஆர்டிக், அண்டார்டிக்கில் வாழும் விலங்குகளையும் மீன்களையும் தேடிச் சென்று வாரிக் கொண்டு வருகின்றான். சகோதர உணர்வு, மனிதப் பண்பு எல்லாம் மறைந்து, அழிந்து வருகின்றன. ஆகையால் நீங்கள் இதெல்லாம் நடக்கும் என்று பேராசைப் படக் கூடாது. நடந்தால் நல்லது! :rolleyes:

  • தொடங்கியவர்

வணக்கம்!வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

மனிதப் பிறவி மட்டுமல்ல எல்லா உயிரினங்களுமே சுதந்திரமாகத்தான் பிறக்கின்றன. எல்லாமே உணவுச் சங்கிலியால் ஒன்றை ஒன்று கொன்று தின்று உலகில் ஒரு சமநிலையைப் பேணுகின்றன. இதில் மனிதன் மட்டும் சிந்திக்கும் அறிவால் வேறுபட்டு நாளைக்குத் தேவை, நாளைய தலைமுறைக்கு தேவை என்று சொல்லி இன்றைக்கே பதுக்கி வைத்துக்கொள்ள முயல்கிறான். ஒரு கண்டத்திலிருக்கும் மனிதனுக்கு இன்னொரு கண்டத்தில் இருக்கும் விலங்குகள் உணவுக்காக கொல்லப் பட்டு அனுப்பப்படுகின்றன. எங்கோயோ ஆர்டிக், அண்டார்டிக்கில் வாழும் விலங்குகளையும் மீன்களையும் தேடிச் சென்று வாரிக் கொண்டு வருகின்றான்.

சகோதர உணர்வு, மனிதப் பண்பு எல்லாம் மறைந்து, அழிந்து வருகின்றன. ஆகையால் நீங்கள் இதெல்லாம் நடக்கும் என்று பேராசைப் படக் கூடாது. நடந்தால் நல்லது! :rolleyes:

உங்கள் பந்தியில் உள்ள விரக்தி வெளிப்பாட்டை உணரமுடிகின்றது சுவி, நம்பிக்கை தானே வாழ்வு நாளைய மரணம் இன்று தெரிந்தால் நம்பிக்கையுடன் இன்றய பொழுதைக் கழிக்க முடியுமா?

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கத்துக்கு சரியான பதிலோ விளக்கமோ கிடைப்பது அல்லது தருவது கடினமான ஒன்று.

ஒன்றை வேண்டுமானால் சொல்லலாம்

இது எமது ஆசை அல்லது விருப்பம்

ஆனால் உண்மை அல்லது நடைமுறை என்பது நாம் விரும்புவதுபோல் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

Edited by விசுகு

  • தொடங்கியவர்

உங்கள் ஆதங்கத்துக்கு சரியான பதிலோ விளக்கமோ கிடைப்பது அல்லது தருவது கடினமான ஒன்று.

ஒன்றை வேண்டுமானால் சொல்லலாம்

இது எமது ஆசை அல்லது விருப்பம்

ஆனால் உண்மை அல்லது நடைமுறை என்பது நாம் விரும்புவதுபோல் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

மென்மையான,ஆழமான விமர்சன வெளிப்பாடு.

நன்றிகள் பல விசுகு

மனிதப் பிறவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர்; அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனசாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடனொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும்.எனக்குப் பிடித்த வரிகள்.எனது கேள்வி என்னவன்றால் இது நடக்குமா?

ஏற்றத் தாழ்வுகள் மறைந்து போகும் என்ற எதிர்பார்ப்பு ஆறாத் துயரில்தான் முடியும்.

நாம் பாதிக்கப்படாமல் இருக்க ஒரேவழி பலமுள்ளவர்களாக மாறுவது தான்!

- ஆராவமுதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.