Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களூர்க் கண்ணகி கோவில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது எங்கள் ஊரின் கோவில் பற்றியது. இந்தக் கோவில் மிகவும் பிரபலமானது.

இதைப் பற்றிய கேள்விகள் எப்போதுமே எனது மனத்தில் தோன்றிய வண்ணமே இருக்கும்.

அந்தக் கேள்விகளுக்கான விடை காணலின் வெளிப்பாடு தான், இந்தக் கிறுக்கல்.

எங்களூர்க் கண்ணகி

இந்துமா சமுத்திரத்தின் பேரலைகள்,

ராமர் அணையில் மோதித்தெறித்து,

வெள்ளித்திவலைகளாய், வெண்ணிறமாய்,

எங்கள் ஊரின் சேலைக் கரையாய்

விந்தைகள் காட்டின.

எங்கள் கடற்கரையில் கண்ணகி கோவில்,

ராஜதானியாய் உயர்ந்து நின்றது.

எங்கள் ஊரின் தண்ணீர்க் குடமாய்,

மாலை நேர விளையாட்டு மைதானமாய்,

காலி முகத் திடலாய், பல வடிவம் எடுத்தது.

விழாக் காலங்களில்,

அன்னதான மடமாய், அங்காடியாய்,

புது வடிவம் எடுக்கும்.

ஆரியக் காற்றின் மூச்சுக்கள் படாத,

அழகான தமிழ்த் தெய்வம் நீயானாய்.

ஆயிரம் உறவுகள் உனக்கு இல்லை.

மனுதர்மம் கூட உன்னிடம் மண்டியிட்டது.

இந்திரனோ அல்லது சந்திரனோ,

உனக்குச் சொந்தமாகவில்லை

கடல் கொண்ட குமரிக்கண்டத்தின் எச்சமாய்,

நீ தப்பிப் பிழைத்திருக்கிறாய்.

அகிலத்தையே வடிவமைத்த

அதிசயத் தெய்வங்கள் எங்கள் மூர்த்திகள்.

வடதிசை, கீழ்த்திசை வாசல்கள்,

அவர்கள் கோவில்களின் வடிவமைப்புகள்..

அனல் பறக்கும் உனது தமிழ் முகத்தின்

'கனல்' ஊரை எரித்து விடுமாம்.

தென் திசையின் கடல் பார்த்து,

மோனத்தவநிலையில் நீ.

உனது தல புராணமும் தனித்துவமாய்,

கனவுகளில் வந்து கண்ணுறக்கம் கலைக்காமல்,

கலங்கரை விளக்கடியில்,

பேழையாய்க் கிடந்தாயாம்.

பெரியோர் உன்னைத் தூக்கி வந்தனராம்

அவ்விடம் வந்ததும் அந்தப் 'பேழை'

அசைக்க முடியாத பாரமாய்ப் போனதாம்.

அதிலே உனக்குக் கோவில் கட்டினராம்.

மணி பல்லவம் உனக்குக் கசந்தது.

கோவலனும் மாதவியும் கூடிய வாழ்வின்

பாவத்தின் சாட்சியமாய் மணிமேகலை.

தன்மானத்தின், தமிழ் மானத்தின்,

வீரச்சின்னமாய்,

தமிழ்ப் பெண்ணின் வரைவிலக்கணமாய்,

எங்களூரின் காவல் தெய்வமாய் நீ.

உங்களின் அற்புதமான படைப்பிற்கு நன்றி ..

இன்னும் பல இதே போல படைக்க என் வாழ்த்துக்கள்.... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் அற்புதமான படைப்பிற்கு நன்றி ..

இன்னும் பல இதே போல படைக்க என் வாழ்த்துக்கள்.... :)

வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

ஒய்வு நேரம் கிடைக்கும்போது எழுதுவேன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் படைப்பு உங்கள் ஊரை வெளிப்படுத்தியிருந்தது. மேலும் தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கிறுக்கல் தொடர்ந்து கிறுக்க வாழ்த்துக்கள்....தம்பியும் சிட்னி போல கிடக்குது...அப்படியே சிட்னி முருகனைப்பற்றியும் ஒரு பாடலை பாடுறது......இப்ப முருகன் அந்தமாதிரி உலா வாரார் ... :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் படைப்பு நல்லாயிருக்கு! :D

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணகை அம்மன்

புரிகிறது தங்களின் அமைவிடம்.

நல்ல கிறுக்கல் தொடர்ந்து கிறுக்க வாழ்த்துக்கள்....தம்பியும் சிட்னி போல கிடக்குது...அப்படியே சிட்னி முருகனைப்பற்றியும் ஒரு பாடலை பாடுறது......இப்ப முருகன் அந்தமாதிரி உலா வாரார் ... :D

அது எனது கடவுள் புத்தன்

அப்படியே கிராஞ்சியம்பதி முருகனைப்பற்றியும் ஒரு பாடல் பாடுங்கள் புங்கையூரான். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் படைப்பு உங்கள் ஊரை வெளிப்படுத்தியிருந்தது. மேலும் தொடருங்கள்.

நன்றிகள் கறுப்பி.படைப்பு என்று ஏற்றுக்கொண்டு விட்டீர்கள். பெரிய ஆறுதல்.

நல்ல கிறுக்கல் தொடர்ந்து கிறுக்க வாழ்த்துக்கள்....தம்பியும் சிட்னி போல கிடக்குது...அப்படியே சிட்னி முருகனைப்பற்றியும் ஒரு பாடலை பாடுறது......இப்ப முருகன் அந்தமாதிரி உலா வாரார் ... :D

எங்கள் கிறுக்கல்கள் தொடரும்.ஆனால் 'சிட்னி' முருகனோடு கோபம்.பத்து வருஷங்களுக்கு முன்பு தனக்கு வீட்டுக்கடன் கட்ட காசு இல்லையென்று என்னிட்டை வந்தவர்.இப்ப அவர் கடனும் முடிஞ்சு,அருகில இருந்த வீடெல்லாம் வாங்கிப்போட்டார்.என்னுடைய கடன் மட்டும் வட்டி குட்டியாய் வளர்ந்த படி இருக்கு.

உங்கள் படைப்பு நல்லாயிருக்கு! :D

நன்றிகள் சுவி.உங்கள் விமரிசனங்கள் , எம்மைத் தூக்கி நிறுத்தும் சுமை தூக்கிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணகை அம்மன்

புரிகிறது தங்களின் அமைவிடம்.

அது எனது கடவுள் புத்தன்

அப்படியே கிராஞ்சியம்பதி முருகனைப்பற்றியும் ஒரு பாடல் பாடுங்கள் புங்கையூரான். :rolleyes:

விசுகு அண்ணா, கிராஞ்சியம்பதி முருகன்??? முருகன் குறிஞ்சிக்கடவுள். குறிஞ்சி என்பது மலையும், மலை சார்ந்த இடமும். அவருக்கு கிராஞ்சியாம்பதியில் என்ன வேலை?

கிழக்கூரான் என்று அறிந்துவிட்டீர்கள் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஒவ்வொருவருக்கும் தாம் பிறந்த.... ஊரில் உள்ள கோவில்களின் நினைப்பு அன்றாடம் வந்து போகும்.

புங்கையூரான் அதனை அழகிய கவிதையில் வடித்துள்ளார்.... பாராட்டுக்கள். :)

ஆனால்... இன்று எத்தனை புத்த விகாரைகள் அதனை, அண்மித்து எழுகின்றன என்பதனையும், கவிதை எழுதும் போது.... குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா, கிராஞ்சியம்பதி முருகன்??? முருகன் குறிஞ்சிக்கடவுள். குறிஞ்சி என்பது மலையும், மலை சார்ந்த இடமும்.

அவருக்கு கிராஞ்சியாம்பதி யில் என்ன வேலை?

கிழக்கூரான் என்று அறிந்துவிட்டீர்கள் போலும்.

பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தன் எனது கடவுள்

அவரையும் பாடுங்கள் என்று கேட்டேன். எனக்கு ஓரளவு தங்களை ஊகிக்கமுடிகிறது. ஏன் இந்த பணிவு...?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தன் எனது கடவுள்

அவரையும் பாடுங்கள் என்று கேட்டேன். எனக்கு ஓரளவு தங்களை ஊகிக்கமுடிகிறது. ஏன் இந்த பணிவு...?

அட,நம்மட பெருங்காட்டுக் கந்தசாமி கோயில்.வைகாசியில் தேரோடும். அம்மன் கோவில் திருவிழா முடிந்தவுடன், திருவிழாக்கடைக்காரர் எல்லாரும் அந்தப் பக்கம் தான் வருவினம். கிராஞ்சியம்பதியில் மலைகள் இல்லை.உங்களைச் சீண்டிப்பார்த்தேன்.அவ்வளவு தான், விசு. கவனிக்கவும் விசு அண்ணா,வெறும் விசுவாக. நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஒவ்வொருவருக்கும் தாம் பிறந்த.... ஊரில் உள்ள கோவில்களின் நினைப்பு அன்றாடம் வந்து போகும்.

புங்கையூரான் அதனை அழகிய கவிதையில் வடித்துள்ளார்.... பாராட்டுக்கள். :)

ஆனால்... இன்று எத்தனை புத்த விகாரைகள் அதனை, அண்மித்து எழுகின்றன என்பதனையும், கவிதை எழுதும் போது.... குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

தமிழ் சிறியின் அங்கலாய்ப்பு எனக்குப் புரிகின்றது. அந்த ஏக்கம் எனக்கும் நிறையவே உண்டு. ஆனால் இந்தப் பாடல் ஒரு கடந்த கால நினைவு. கருத்துக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உனது தல புராணமும் தனித்துவமாய்,

கனவுகளில் வந்து கண்ணுறக்கம் கலைக்காமல்,

கலங்கரை விளக்கடியில்,

பேழையாய்க் கிடந்தாயாம்.

பெரியோர் உன்னைத் தூக்கி வந்தனராம்

அவ்விடம் வந்ததும் அந்தப் 'பேழை'

அசைக்க முடியாத பாரமாய்ப் போனதாம்.

அதிலே உனக்குக் கோவில் கட்டினராம்.

புங்கையூரான் ,உங்கள் ஊர் கோவில் பற்றி வாசித்தேன்.ரசித்தேன்.தொடர்ந்து எழுதுங்கள்.எழுதுவதில் ஆர்வம் உள்ளவர் போலுள்ளது.தொடர்ந்து எழுதி உங்களின் எழுத்துக்கு மெருகூட்டுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் ,உங்கள் ஊர் கோவில் பற்றி வாசித்தேன்.ரசித்தேன்.தொடர்ந்து எழுதுங்கள்.எழுதுவதில் ஆர்வம் உள்ளவர் போலுள்ளது.தொடர்ந்து எழுதி உங்களின் எழுத்துக்கு மெருகூட்டுங்கள்.

நன்றிகள் நுணாவிலான். முயற்சிக்கின்றேன்.

வரலாற்றையும் தொட்டுக் காட்டும் நல்ல படைப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றையும் தொட்டுக் காட்டும் நல்ல படைப்பு.

நன்றிகள்! ஆராவமுதன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.