Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முக்கியத்துவம்

Featured Replies

மனிதன் தன் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறானோ அதையே அதிகம் காண்கிறான், அதுவே அவன் வாழ்வில் அதிகம் பெருகுகிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். எதில் ஈடுபாடு அதிகமாகிறதோ, எதை அவன் மிக முக்கியம் என்று நினைக்கிறானோ அது குறித்த அவன் எண்ணங்களும், உணர்வுகளும் சக்தி வாய்ந்தவைகளாகின்றன. தன்னைச் சுற்றிலும் அதை ஈர்க்கும் ஒரு காந்த மண்டலத்தை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அது சம்பந்தமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் தன்னிடத்தே ஈர்த்துக் கொள்கிறான்.

ஒவ்வொரு துறையிலும் நிறைய சாதனை புரிந்தவர்களைக் கேளுங்கள். அந்தந்த துறையில் அவர்களுக்கு மகத்தான ஈடுபாடு இருந்திருக்கிறதென்று அவர்கள் சொல்வார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் அதுவாக இருந்திருக்கிறதென்றும், அது மற்ற எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவத்தில் இருந்திருக்கிறதென்றும், அதற்காக மற்ற எத்தனையோ விஷயங்களை அவர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள் என்றும் சொல்வார்கள்.

பல விஷயங்கள் நமக்கு அதிகம் கிடைப்பதில்லை என்பதற்குக் காரணமே அவற்றிற்கு நாம் நம் வாழ்வில் பிரதான இடத்தை அளிப்பதில்லை என்பது தான். அல்லது அதற்கு எதிர்மாறான ஒன்றிற்கு நாம் அதை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது கூடக் காரணமாக இருக்கலாம்.

பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன் ஆனால் அது ஒன்றும் என்னிடம் அதிகம் இல்லை என்று சொன்ன இருவரை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவர்களை ஆராய்ந்ததில் ஒருவர் பணத்தை விட அதிகமாக சும்மா சோம்பி இருப்பதை விரும்புபவர் என்பதையும், இன்னொருவர் பணத்தை விட அதிகமாக அதை சூதாட்டத்தில் வைப்பதில் விருப்பமுள்ளவர் என்பதையும் நான் காண நேர்ந்தது. அந்த இரண்டுமே பணம் சேரத் தடையாக இருக்கும் பழக்கங்கள். எனவே பணம் நிறைய வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு நிறைய இருந்தாலும், பணத்துக்கு அவர்கள் மிக அதிக முக்கியத்துவத்தை தருபவர்கள் என்ற போதிலும் அதற்கு எதிர்மறையான ஒன்றிற்கு அதை விட அதிக முக்கியத்துவம் தந்ததால் அவர்கள் கடனாளியாகவே இருக்கிறார்கள்.

எனவே நீங்கள் மிக முக்கியம் என ஒன்றை நினைப்பதாக நம்பி இருந்தும் அது அதிகம் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் முக்கியத்துவம் அளிக்கும் விஷயங்களின் பட்டியலை மீண்டும் ஒரு முறை ஆராயுங்கள். அந்தப் பட்டியலில் அந்த முக்கியமான விஷயத்திற்கும் அதிகமாக அதற்கு இசைவில்லாத, அல்லது எதிராக உள்ள விஷயம் ஒன்றிற்கு உங்களை அறியாமல் பிரதானத்துவம் நீங்கள் தந்து கொண்டு இருக்கலாம்.

ஆராய்ச்சியாளர்கள் நீங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக வேண்டும் என்று நினைப்பதைக் கூட எதிர்மறை வாக்கியங்களில் நினைக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கும், நோயில்லாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவதற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இரண்டாவதான அந்த எதிர்மறை வாக்கியத்தை ஆழ்மனதில் எண்ணும் போது நோய் என்ற வார்த்தையே பிரதானமாகிறது என்றும் அதையே அதிகம் நாம் நம் வாழ்வில் வரவழைக்கிறோம் என்றும் சொல்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ஆரோக்கியத்திற்கு மிக முக்கியத்துவம் தருபவர். அவருக்கு கவனமாக இல்லாவிட்டால் எதிலிருந்தும் சீக்கிரம் "infection" ஆகி விடும் என்ற பயம் அதிகம். எங்கு சென்றாலும் infection ஆகி விடக் கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக இருக்கும் அவர் எனக்குத் தெரிந்து அடிக்கடி நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை பெறுவதைப் பல முறை கண்டிருக்கிறேன். ஆக ஆரோக்கியம் என்ற எண்ணத்தை விட "infection" என்ற எண்ணமே ஆழமாகப் பதிந்து முக்கியத்துவம் பெற்றதன் விளைவே அது என்பது தான் சரியாகத் தோன்றுகிறது.

எனவே அப்படி இருக்கக்கூடாது, இப்படி செய்யக் கூடாது, இது வேண்டாம் என்று எதிர்மறை வாக்கியங்களால் ஒன்றிற்கு முக்கியத்துவம் தருவதை நிறுத்தி விட்டு அப்படி இருக்க வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், இது வேண்டும் என்று ஆழமாக நினைப்பது தான் அதை நம் வாழ்வில் வரவழைப்பதற்கு நல்ல வழி.

ஒன்று உங்களுக்கு மிக முக்கியம் என்றால், அதைத் தவிர வேறு எதுவும் அவ்வளவு முக்கியம் இல்லை என்றால் அதைக் காந்தமாக உங்களிடம் ஈர்க்கத் தேவையான சக்திகள் உங்களிடம் கண்டிப்பாக உருவாகும். அதை நிறைவேற்றத் தேவையான சூழ்நிலைகளும், மனிதர்களும் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் வருவார்கள். இதில் நம்பிக்கை மிக முக்கியம். நம்பிக்கை இல்லாமல் சந்தேகமே பிரதானமாக இருந்தால் அதை உறுதிப்படுத்துகிற மாதிரியான நிஜங்களே நடக்கும்.

எனவே உங்களுக்கு வேண்டியதையே பிரதானப்படுத்துங்கள். அதற்கே முதலிடம் கொடுங்கள். அதைக் கண்டிப்பாகப் பெறுவீர்கள் அல்லது அடைவீர்கள்.

படித்தவை கேட்டவை.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் தன் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறானோ அதையே அதிகம் காண்கிறான், அதுவே அவன் வாழ்வில் அதிகம் பெருகுகிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். எதில் ஈடுபாடு அதிகமாகிறதோ, எதை அவன் மிக முக்கியம் என்று நினைக்கிறானோ அது குறித்த அவன் எண்ணங்களும், உணர்வுகளும் சக்தி வாய்ந்தவைகளாகின்றன. தன்னைச் சுற்றிலும் அதை ஈர்க்கும் ஒரு காந்த மண்டலத்தை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அது சம்பந்தமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் தன்னிடத்தே ஈர்த்துக் கொள்கிறான்.

எவ்வளவு காலத்திற்கு இந்த ஞானிகள் சொன்னதை நம்பி காலம் கடத்தப்போகிறோம்....

விடுதலையை முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்த ஒரு இனம்(விடுதலை புலிகள்)அந்த இலக்கை அடைய முடியாமல் போனபிறகும் நாம் ஞானிகளின் புலம்பலை முக்கியப்படுத்த வேண்டியதில்லை

  • தொடங்கியவர்

எவ்வளவு காலத்திற்கு இந்த ஞானிகள் சொன்னதை நம்பி காலம் கடத்தப்போகிறோம்....

விடுதலையை முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்த ஒரு இனம்(விடுதலை புலிகள்)அந்த இலக்கை அடைய முடியாமல் போனபிறகும் நாம் ஞானிகளின் புலம்பலை முக்கியப்படுத்த வேண்டியதில்லை

நன்றிகள் புத்தன்.

ஓட்டைகள் இருந்ததால் தானே ஒட்டகங்கள் நுளைந்தன.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் தன் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறானோ அதையே அதிகம் காண்கிறான், அதுவே அவன் வாழ்வில் அதிகம் பெருகுகிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். எதில் ஈடுபாடு அதிகமாகிறதோ, எதை அவன் மிக முக்கியம் என்று நினைக்கிறானோ அது குறித்த அவன் எண்ணங்களும், உணர்வுகளும் சக்தி வாய்ந்தவைகளாகின்றன. தன்னைச் சுற்றிலும் அதை ஈர்க்கும் ஒரு காந்த மண்டலத்தை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அது சம்பந்தமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் தன்னிடத்தே ஈர்த்துக் கொள்கிறான்.

எங்கள் இனத்தைச்சேர்ந்த பெரும்பாலானவர்கள் பக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றாரகர். அவர்கள் எண்ணங்களும் உணர்வுகளும் சக்தி வாய்ந்தவையாக மாறுவதில்லை. அவர்கள் மேலும் மேலும் ஒரு குறுகிய வட்டங்களுக்குள் தங்களைக் குறுக்கிக்கொண்டே போகின்றார்கள்.சடங்குகளினால் கவரப்பட்டு அந்தச் சடங்குகளுக்குள் மூழ்கிப் போகின்றார்கள்.வருடா வருடம் அவர்கள் கட்டும் சப்பரங்கள் பெரிதாகிக்

கொண்டே போகும். அதில் அவர்கள் பெருமையும் அடைகின்றார்கள்.போட்டி மனப்பான்மை அவர்களுக்குள் வளர்கின்றதே அன்றி பக்தி மார்க்கம் போதிக்கும் கருணை, அன்பு என்பன அவர்களிடம் வற்றிப்போகின்றது.எமது மக்கள் கடும் துன்பங்களின் துவண்ட காலங்களில் கூட, மக்கள் கூடுவதற்கு ஒரு இடம் தேவைப்பட்ட போது அவர்கள் கோவில் கதவுகள் இறுக மூடிக் கொண்டன. உங்கள் கருத்துப்படி பார்க்கப் போனால், அவர்கள் எண்ணங்கள் அவர்கள் மனங்களில் கருணையை வளர்த்திருக்க வேண்டும்.சட்ட திட்டங்களைச் சாட்சிக்கு இழுப்பார்கள். சட்டங்கள் மனித்ர்களுக்காகவேயன்றி , மனிதர்கள் சட்டத்திற்காக அல்ல.இது எனது கருத்து மட்டுமே.எவரையும் புண் படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் சிறுவர்களாக இருந்து நீண்ட காலமாகியிருக்கலாம். ஆயினும் ஒரு காலத்தில் சிறுவர்களாகத்தான் இருந்தோம். அப்போது நாம் எதைப் பற்றியும் கவலைப்பட்டதில்லை. சந்தோஷமாக சிரித்து மகிழ வேண்டுமென்ற ஏக்கம் மட்டும்தான் இருந்தது. ஆனால் இப்போது நாம் வளர்ந்துவிட்டதால் நமக்கு அன்றாட தேவைகளும் நிறைவேற்ற வேண்டிய காரியங்களும். கடமைகளும் பொறுப்புகளும் அதிகரித்துவிட்டன. இவ்வனைத்திற்கும் அப்பாற்பட்டு அந்த மாறாத குழந்தை உள்ளம் நம்முள்ளேதான் இருந்து வருகிறது. இன்னமும் அங்கேதான் இருக்கிறது. என்றுமே விரும்பிய ஒரே விஷயத்தைதான் இன்னமும் நாடுகிறது. அது ஆனந்தத்தை உணர ஏங்கிகொண்டிருக்கிறது.

இந்த வாழ்வில் நாம் பல பாத்திரங்ளை ஏற்றுகொண்டிருந்தாலும் நாம் பிறந்தபோது எந்தவொரு பாத்திரங்களையும் ஏற்றுகொள்ளவில்லை. நாம் உயிரோடு இருந்தோம். எளிமையே உருவான நம்முள்ளிருக்கும் அந்தச் சிறுகுழந்தையை நாம் மறந்துவிட்டோம். எண்ணிப்பாருங்கள், மேலும் பின் நோக்கி எண்ணிப்பாருங்கள். தீவிரமாக ஆனந்தத்தை விரும்பிய அந்தச் சிறு குழந்தையை எண்ணிப்பாருங்கள். அதிகாலை எப்பொழுது விடியும் என ஏங்கித்தவித்த அந்தச் சிறு குழந்தையை எண்ணிப்பாருங்கள்.

அக்குழந்தைக்கு ஒவ்வொரு நாளும் அழகானதாக இருந்தது. சூரியன் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. சந்திரன் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக இருந்தது. திருப்தி, மனநிறைவு என்பதில் ஒரு தீவிர நாட்டம் இருந்தது. ஒரே காரணத்திற்காகத்தான் அந்தக் குழந்தை சிரித்தது. காலையில் சூரியன் உதிக்கும்பொழுது தானும் விழித்தெழுவதே அதன் கடமையாக இருந்தது. “நான் எழுந்துவிட்டேன்” என்கிறது. அந்தக் குழந்தைக்கு நாளைய பொழுது என்பது கிடையாது. இன்றைய பொழுதை வீணாக்கக்கூடிய வகையில் நேற்று நடந்ததைப் பற்றிய எந்தவொரு சிந்தனையும் கிடையாது. குழந்தையின் தீவிர நாட்டமெல்லாம் ஆனந்தம் அடைவது மட்டும்தான்.

பிறகு சிறிது சிறிதாக நாம் கொண்டிருந்த ஆனந்தம் மறைந்து விட்டது. நமக்கு ஆனந்தத்தைக் கொண்டு வரும் என நாம் எண்ணியது நிறைவேறாமல் போகும்போது “ஏன் இவ்வாறு நடைபெறுகிறது? எனக்கு தேவையானது அமைதிதான். எனக்குத் தேவையானது ஆனந்தம்தான்” என்கிறோம். அப்பொழுது “நான் என்ன செய்வேன்?” என மக்கள் புலம்புகிறார்கள். அந்த சூழ்நிலையிலும் பேரானந்தமும் அழகும் அங்கேயேதான் உள்ளது, அது ஒருபோதும் அகலவில்லை என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். அந்தச் சிறு குழந்தை இன்னமும் உயிரோடு உள்ளது. நம்முள்ளே வாழ்கிறது. அந்தக் குழந்தை இன்னமும் அதே விஷயத்தைத்தான் வேண்டுகிறது. நிறைவாக இருக்க வேண்டும் என்பதுதான் அது. அதை தவிர வேறு வேண்டுதல் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

அக்குழந்தைக்கு ஒவ்வொரு நாளும் அழகானதாக இருந்தது. சூரியன் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. சந்திரன் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக இருந்தது. திருப்தி, மனநிறைவு என்பதில் ஒரு தீவிர நாட்டம் இருந்தது. ஒரே காரணத்திற்காகத்தான் அந்தக் குழந்தை சிரித்தது. காலையில் சூரியன் உதிக்கும்பொழுது தானும் விழித்தெழுவதே அதன் கடமையாக இருந்தது. “நான் எழுந்துவிட்டேன்” என்கிறது. அந்தக் குழந்தைக்கு நாளைய பொழுது என்பது கிடையாது. இன்றைய பொழுதை வீணாக்கக்கூடிய வகையில் நேற்று நடந்ததைப் பற்றிய எந்தவொரு சிந்தனையும் கிடையாது. குழந்தையின் தீவிர நாட்டமெல்லாம் ஆனந்தம் அடைவது மட்டும்தான்

மிகவும் அருமையான கருத்து. அகதி கூறியது போல நாங்கள் ஆனந்தம் தரும் பொருட்கள் என்று எண்ணித் தேவையில்லாதவகளைத் தேவைகளாக்கி அதை நாடி ஓடிக்கொண்டிருக்கின்றோம். நவீன கால வியாபார விளம்பரங்களும் தேவையில்லாதவற்றை அத்தியாவசிய தேவைகளாக்குகின்றது.ஏறத்தாள நாங்கள் ஒரே வட்டத்தில் ஓடிக்கொண்டிருகின்றோம்.திரும்பத் திரும்ப ஒரே இடத்திற்கே வருகின்றோம்.இவ்வளவு தூரம் ஓடியும் மீண்டும் ஒரே இடத்திற்கு வரும்போது, எமது மனம் சற்று சிந்திக்கத் தொடங்கும்.ஆனால் நாம் நிற்பதில்லை. மீண்டும் அதே வட்டத்தில் தொடர்ந்து ஓட ஆரம்பிக்கின்றோம்.

  • தொடங்கியவர்

நன்றிகள் அகதிக்கும் புங்கையூரானுக்கும்,நான் சொல்ல வந்த செய்தியின் சாரம்சமும் இதுவே அதாவது நாங்கள் சாத்திரம் சம்பிரதாயம் என்ற பெயரில் அத்தியாவசமானதிற்கு முக்கியத்துவம் குடுக்காமல் தேவையில்லாத விடையத்திற்கு மண்டையுடைத்து காலத்தை வீணடிக்கின்றோம்.இதற்கு ஒரு ஜென் மத துறவியின் கதை.ஒரு ஜென் மத பீடத்தின் குரு சீடர்களுக்கு அதிகாலை வேளை தியானவகுப்பு எடுப்பது வளக்கம்.ஒரு நாள் சீடர்களுக்கு தியான வகுப்பு எடுக்கும் பொழுது ஒரு பூனை குறுக்கும் மறுக்குமாக ஓடி விளையாடிக் கொண்டிருந்து.இதனால் குருவானவருடைய தியானம் கலைந்து கொண்டிருந்தது.அப்பொழுது குரு பிரதமசீடரை அழைத்து ஓடி விளையாடும் பூனையை பிடித்து கட்டி வைக்கும் படி கட்டளையிட்டார்.பிரதம சீடரும் குருவின் கட்டளையை ஏற்று பூனையை பிடித்துக் கட்டி வைத்தார்.ஒவ்வொருநாள் காலை வேளையிலும் இந்தப் பூனையை பிடித்துக் கட்டும் நிகழ்சி பிரதம சீடரால் கர்மசிரத்தையாக நடத்தப்படது.காலம் உறுண்டோடியது குருவானவரும் வயோதிபத்தால் சமாதியடைந்தார் பூனையை பிடித்துக் கட்டும் நிகழ்சி கிரமமாக தொடர்ந்தது.காலப்போக்கில் பிரதம சீடரும் சமாதி அடைந்தார்.பின்பு அந்த மடத்தின் சீடர்கள் பூனையை பிடித்து கட்டிப் போட்டு தியானத்தைத் தொடர்ந்தார்கள்.

எப்படிப் போகின்றது பார்தீர்களா இப்படித்தான் நாங்களும்.

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் தன் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறானோ அதையே அதிகம் காண்கிறான், அதுவே அவன் வாழ்வில் அதிகம் பெருகுகிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். எதில் ஈடுபாடு அதிகமாகிறதோ, எதை அவன் மிக முக்கியம் என்று நினைக்கிறானோ அது குறித்த அவன் எண்ணங்களும், உணர்வுகளும் சக்தி வாய்ந்தவைகளாகின்றன. தன்னைச் சுற்றிலும் அதை ஈர்க்கும் ஒரு காந்த மண்டலத்தை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அது சம்பந்தமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் தன்னிடத்தே ஈர்த்துக் கொள்கிறான்.

எங்கள் இனத்தைச்சேர்ந்த பெரும்பாலானவர்கள் பக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றாரகர். அவர்கள் எண்ணங்களும் உணர்வுகளும் சக்தி வாய்ந்தவையாக மாறுவதில்லை. அவர்கள் மேலும் மேலும் ஒரு குறுகிய வட்டங்களுக்குள் தங்களைக் குறுக்கிக்கொண்டே போகின்றார்கள்.சடங்குகளினால் கவரப்பட்டு அந்தச் சடங்குகளுக்குள் மூழ்கிப் போகின்றார்கள்.வருடா வருடம் அவர்கள் கட்டும் சப்பரங்கள் பெரிதாகிக்

கொண்டே போகும். அதில் அவர்கள் பெருமையும் அடைகின்றார்கள்.போட்டி மனப்பான்மை அவர்களுக்குள் வளர்கின்றதே அன்றி பக்தி மார்க்கம் போதிக்கும் கருணை, அன்பு என்பன அவர்களிடம் வற்றிப்போகின்றது.எமது மக்கள் கடும் துன்பங்களின் துவண்ட காலங்களில் கூட, மக்கள் கூடுவதற்கு ஒரு இடம் தேவைப்பட்ட போது அவர்கள் கோவில் கதவுகள் இறுக மூடிக் கொண்டன. உங்கள் கருத்துப்படி பார்க்கப் போனால், அவர்கள் எண்ணங்கள் அவர்கள் மனங்களில் கருணையை வளர்த்திருக்க வேண்டும்.சட்ட திட்டங்களைச் சாட்சிக்கு இழுப்பார்கள். சட்டங்கள் மனித்ர்களுக்காகவேயன்றி , மனிதர்கள் சட்டத்திற்காக அல்ல.இது எனது கருத்து மட்டுமே.எவரையும் புண் படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை.

காரணம் அவர்கள் பக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை....பெருமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

அக்குழந்தைக்கு ஒவ்வொரு நாளும் அழகானதாக இருந்தது. சூரியன் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. சந்திரன் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக இருந்தது. திருப்தி, மனநிறைவு என்பதில் ஒரு தீவிர நாட்டம் இருந்தது. ஒரே காரணத்திற்காகத்தான் அந்தக் குழந்தை சிரித்தது. காலையில் சூரியன் உதிக்கும்பொழுது தானும் விழித்தெழுவதே அதன் கடமையாக இருந்தது. “நான் எழுந்துவிட்டேன்” என்கிறது. அந்தக் குழந்தைக்கு நாளைய பொழுது என்பது கிடையாது. இன்றைய பொழுதை வீணாக்கக்கூடிய வகையில் நேற்று நடந்ததைப் பற்றிய எந்தவொரு சிந்தனையும் கிடையாது. குழந்தையின் தீவிர நாட்டமெல்லாம் ஆனந்தம் அடைவது மட்டும்தான்

மிகவும் அருமையான கருத்து. அகதி கூறியது போல நாங்கள் ஆனந்தம் தரும் பொருட்கள் என்று எண்ணித் தேவையில்லாதவகளைத் தேவைகளாக்கி அதை நாடி ஓடிக்கொண்டிருக்கின்றோம். நவீன கால வியாபார விளம்பரங்களும் தேவையில்லாதவற்றை அத்தியாவசிய தேவைகளாக்குகின்றது.ஏறத்தாள நாங்கள் ஒரே வட்டத்தில் ஓடிக்கொண்டிருகின்றோம்.திரும்பத் திரும்ப ஒரே இடத்திற்கே வருகின்றோம்.இவ்வளவு தூரம் ஓடியும் மீண்டும் ஒரே இடத்திற்கு வரும்போது, எமது மனம் சற்று சிந்திக்கத் தொடங்கும்.ஆனால் நாம் நிற்பதில்லை. மீண்டும் அதே வட்டத்தில் தொடர்ந்து ஓட ஆரம்பிக்கின்றோம்.

அருமையான கருத்து. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.