Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னொரு பிரிவு வேண்டாமடா....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு பிரிவு வேண்டாமடா....

கிருஸ்ணமூர்த்திக்கு அஞ்சலிக் கவிதை......

நீ உன்னையே எரிக்கும் உரிமையை

உனக்கு யார் தந்தது.........

நம் தமிழ் தலைவனா....

இருக்கவே இருக்காது.....

அவன் அக்கினிக் குஞ்சுவளர்த்து

எதிரியையல்லவா எரிக்கச் சொன்னவன்......

ஆறுகோடி தமிழினம் தமிழ் நாட்டில்

நீ தமிழுக்காக எரிந்து போ என்று

அரசியல் வாதியா சொன்னான்.....

ஆம் சொன்னாலும் சொல்லுவான்....

தான் வாழ

எவனையும் எரிக்கத் தயங்காதவன்....

உன் தமிழ் பற்றா

உன்னை நீயே எரிக்கத் தூண்டியது.....

பற்றுள்ளவன் எரிந்து போனால்

பற்றியெரியும் தமிழை

யார் காப்பாற்றுவது?

பற்றைக் காடெல்லாம் போட்டு

உன் தொப்புள் கொடியுறவை

பாழாய்ப் போனவன் எரிக்க

நீயோ பற்றவைககும் திராவகத்தை ஊற்றி

உன்னையே எரித்ததில் என்ன நியாயம்....

தன் எதிரியில் ஒருவன் இறந்ததாய்

எதிரியல்லா எக்காளமிடுகிறான்.....

எதிரியைச் சிரிக்கவைத்து

எங்களை அழவைக்க நீ ஏன் நினைத்தாய்....

உன் உடலில் பற்றியதை

ஆறுகோடி தமிழர் மனதில்

பற்ற வைத்திருந்தால்

எதிரியல்லா பஸ்பமாகியிருப்பான்....

ஏனடா,,...

உன் பெற்றேரின் மனதயும் கொன்று.....

எங்களின் மனதையும் கொன்று.....

உன்னையும் கொன்று......

எதிரிக்கு சிறிது ஆயுளை பரிசளித்தாய்...

தூக்குக் கயிற்றின் பயம்

எதிரியை துரத்த ஆரம்பிக்க

கயிற்றை அவன்

கழுத்தில் இறக்குவதை விடுத்து

நீ ஏன் கட்டையில் போனாய் என்றுதான்

இப்பவும் புரியவில்லை......

புலியாய் நின்றவளின்

புனிதம் கலைத்து

அவளுடலை காக்கை கூட பார்த்து

கொத்த அஞ்சும்

கொடூரம் புரிந்தவன்

உயிருடன் இருக்க......

மண்ணில் புதைந்த நம் மழலைகளின்

நினைவுகள் எங்கள்

மனதை விட்டகல மறுக்க......

இறுதி மூச்சுவரை போராடி

ஈழ மண்ணிலேயே த்ம்முயிரை

மணணோடு மண்ணாக்ககிய

எங்கள் மாவீரர் நினைவுகள்

எங்களைப் பற்றியிருக்க....

இன்னும் பதவி நாற்ற்காலிக்கு

போட்டி போடும்

தமிழ் பற்றாளரும்

பலர் இருக்க.......

நீ மட்டும் ஏனடா.....

எம் இனத்தின் நினைவுகளால்

மனதில் உன்னை எத்தனை தடவை

எரித்திருப்பாய் என்று

உன் உடல் எரிந்த பின்புதான்

எம்மால் புரியமுடிந்ததடா.....

கிருஸ்ணமூர்த்தியெனும்

பசசைத் தமிழனொருவன்

இறந்துவிட்டான் எனும் கவலையுடன்

உன் பட்டுடலும் எரிந்த சோகமெண்ணி

என் மனதால்...

உன் எரியும் ஆன்மாக்கு

பால் வாக்கிறேன்......

உன் எரியும் ஆன்மபலத்தை

எமக்கும் பிரித்துத் தா....

கடைசியோட்டத்தில் நிற்கிறோம்.....

எதிரியைக் கொழுத்திவிட்டு

எங்கள் கொடி பிடிக்கும் நேரம்

நெருங்கிக்கொண்டிருக்கிறது....

இளங்கவி.....

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமே ஜெயம் என்னும்

புத்தகத் தத்துவத்தில்

வளர்ந்தவர்கள் இவர்கள்.

நித்திய வாழ்க்கையில்

சத்தியம் தோற்பதைக்

காணச்சகிக்காது

தன்னுயிரை மாய்க்கின்றார்!

எதிரிகளின் எண்ணிக்கையில்

இன்னுமொன்று குறைந்ததென

எக்காளமிடுவான்,

எங்கள் எதிரி.

இனியும் இது வேண்டாம்!

எங்கள் உறவுகளே!!!

நம் தமிழ் தலைவனா....

இருக்கவே இருக்காது.....

அவன் அக்கினிக் குஞ்சுவளர்த்து

எதிரியையல்லவா எரிக்கச் சொன்னவன்

கவிதை மனத்தில் சுமையாய் கனக்கின்றது இளங்கவி!!!

Edited by Punkayooran

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியமே ஜெயம் என்னும்

புத்தகத் தத்துவத்தில்

வளர்ந்தவர்கள் இவர்கள்.

நித்திய வாழ்க்கையில்

சத்தியம் தோற்பதைக்

காணச்சகிக்காது

தன்னுயிரை மாய்க்கின்றார்!

எதிரிகளின் எண்ணிக்கையில்

இன்னுமொன்று குறைந்ததென

எக்காளமிடுவான்,

எங்கள் எதிரி.

இனியும் இது வேண்டாம்!

எங்கள் உறவுகளே!!!

கவிதை மனத்தில் சுமையாய் கனக்கின்றது இளங்கவி!!!

Punkayooran

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.....

களத்தில் எங்கள் காவலர்கள் நில்லாது போனதால் நிகழ்ந்த / நிகழ்ந்துகொண்டிருக்ககும அழிவுகளைப் பார்த்தீர்களா? அதேபோல கிருஸ்ணமூர்த்தி போன்ற தம் இனத்தை நேசிப்பவர்கள் எங்கள் இனத்தில் இல்லாது போனால் எங்கள் இனம் என்னாவது என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட வரிகள் இது....

இனத்தின் பற்று மேலோங்கி முத்துக்குமார், முருகதாஸ் வரிசையில் இன்று கிருஸ்ணமூர்த்திபோல எங்கள் சீமானும் முடிவெடுத்திருந்தால் தமிழ்துரோகிக்கூட்ட காங்கிரஸ்காரர்கள் இன்று தமிழ்நாட்டில் ஆட்டம் காணுமளவுக்கு செய்திருக்கமுடடியுமா?

இனப்பற்றை எதரியிடம் காட்டி அவனை ஒழிக்கும் முயற்சியில் இறங்குங்கள் உறவுகளே என்பதுதான் எல்லோரது விருப்பமும்....

நன்றிகள்....

Punkayooran

இனத்தின் பற்று மேலோங்கி முத்துக்குமார், முருகதாஸ் வரிசையில் இன்று கிருஸ்ணமூர்த்திபோல எங்கள் சீமானும் முடிவெடுத்திருந்தால் தமிழ்துரோகிக்கூட்ட காங்கிரஸ்காரர்கள் இன்று தமிழ்நாட்டில் ஆட்டம் காணுமளவுக்கு செய்திருக்கமுடடியுமா?

இனப்பற்றை எதரியிடம் காட்டி அவனை ஒழிக்கும் முயற்சியில் இறங்குங்கள் உறவுகளே என்பதுதான் எல்லோரது விருப்பமும்....

நன்றிகள்....

ஆம் வேண்டாம் இன்னொரு தீக்குளிப்பு

  • கருத்துக்கள உறவுகள்

பற்றுள்ளவன் எரிந்து போனால்

பற்றியெரியும் தமிழை

யார் காப்பாற்றுவது?..........................

..உணரவைக்கும் நியாயமான் கேள்வி ........

.....உணர்ச்சி மிகு கவிதைக்கு நன்றி .

அடிகக்டி வாருங்கல் .

  • கருத்துக்கள உறவுகள்

Punkayooran

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.....

களத்தில் எங்கள் காவலர்கள் நில்லாது போனதால் நிகழ்ந்த / நிகழ்ந்துகொண்டிருக்ககும அழிவுகளைப் பார்த்தீர்களா? அதேபோல கிருஸ்ணமூர்த்தி போன்ற தம் இனத்தை நேசிப்பவர்கள் எங்கள் இனத்தில் இல்லாது போனால் எங்கள் இனம் என்னாவது என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட வரிகள் இது....

இனத்தின் பற்று மேலோங்கி முத்துக்குமார், முருகதாஸ் வரிசையில் இன்று கிருஸ்ணமூர்த்திபோல எங்கள் சீமானும் முடிவெடுத்திருந்தால் தமிழ்துரோகிக்கூட்ட காங்கிரஸ்காரர்கள் இன்று தமிழ்நாட்டில் ஆட்டம் காணுமளவுக்கு செய்திருக்கமுடடியுமா?

இனப்பற்றை எதரியிடம் காட்டி அவனை ஒழிக்கும் முயற்சியில் இறங்குங்கள் உறவுகளே என்பதுதான் எல்லோரது விருப்பமும்....

நன்றிகள்....

நன்றிகள் இளங்கவி!!! இதுவே தான் எனது விருப்பமும்! கவிதை நன்றாக உள்ளது!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் வேண்டாம் இன்னொரு தீக்குளிப்பு

Jil

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு....

எல்லோரின் விருப்பமும் இதுதான்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பற்றுள்ளவன் எரிந்து போனால்

பற்றியெரியும் தமிழை

யார் காப்பாற்றுவது?..........................

..உணரவைக்கும் நியாயமான் கேள்வி ........

.....உணர்ச்சி மிகு கவிதைக்கு நன்றி .

அடிகக்டி வாருங்கல் .

நிலாமதி அக்காவுக்கு.....

உஙகள் கருத்துக்கு மிக்க நன்றி....

நேரம் கிடைக்கும் போதெல்லாம் வர முயற்சிக்கிறேன் அக்கா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் இளங்கவி!!! இதுவே தான் எனது விருப்பமும்! கவிதை நன்றாக உள்ளது!!!

உங்களுக்கும் எனது நன்றிகள்....

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பிரிவு வேண்டாமடா....

கிருஸ்ணமூர்த்திக்கு அஞ்சலிக் கவிதை......

உன் உடலில் பற்றியதை

ஆறுகோடி தமிழர் மனதில்

பற்ற வைத்திருந்தால்

எதிரியல்லா பஸ்பமாகியிருப்பான்....

ஏனடா,,...

உன் பெற்றேரின் மனதயும் கொன்று.....

எங்களின் மனதையும் கொன்று.....

உன்னையும் கொன்று......

எதிரிக்கு சிறிது ஆயுளை பரிசளித்தாய்...

எங்கள் ஒவ்வொருவரின் மனதிலிருந்தும் வெளிப்படும் உண்மையான வரிகள் இவை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி, நெஞ்சை தொடும் கவிதை. அதற்குள் நீங்கள் புகுத்தியிருக்கும் நியாயமும் அழகு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் ஒவ்வொருவரின் மனதிலிருந்தும் வெளிப்படும் உண்மையான வரிகள் இவை

valvaizagara

இப்படியான பலரின் மன நிலையோடுதான் நானும் இருப்பதால் என் வரிகளையும் உங்கள் வரிகளாய் ஏற்க முடிந்தது....

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.....

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பிரிவு வேண்டாமடா....

கிருஸ்ணமூர்த்திக்கு அஞ்சலிக் கவிதை......

எம் இனத்தின் நினைவுகளால்

மனதில் உன்னை எத்தனை தடவை

எரித்திருப்பாய் என்று

இளங்கவி.....

ஒவ்வொரு தமிழனின் இன்றையநிலை

எம்மை எரிப்பதா?

எதிரியை எரிப்பதா?

நிச்சயம் முடிவு இரண்டில் ஒன்றுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி, நெஞ்சை தொடும் கவிதை. அதற்குள் நீங்கள் புகுத்தியிருக்கும் நியாயமும் அழகு.

KuLavi

மிக்க நன்றி உங்கள் கருதத்துக்கு....

உரிமையை இழந்த இனம் அதைப் திரும்பப்பெறும் போராட்டத்தில் எவ்வளவோ அழிவைச் சந்தித்திருக்கும் நிலையில் எங்களுக்கு ஆதரவாய் நிற்கவேண்டிய எங்கள் தொப்புள்கொடியுறவுகள் தங்களைத் தாங்களே அழிப்பதன் வலிதான் இந்த வரிகளாயின....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு தமிழனின் இன்றையநிலை

எம்மை எரிப்பதா?

எதிரியை எரிப்பதா?

நிச்சயம் முடிவு இரண்டில் ஒன்றுதான்.

விசுகு அண்ணாவுக்கு

கருத்துக்கு மிக்க நன்றிகள்....

நிச்சயம் இரண்டாவது தெரிவுதான் அவசியம்.....

  • 1 year later...

[size=4]உன் உடலில் பற்றியதை[/size]

[size=4]ஆறுகோடி தமிழர் மனதில் [/size]

[size=4]பற்ற வைத்திருந்தால்[/size]

[size=4]எதிரியல்லா பஸ்பமாகியிருப்பான்....[/size]

இந்த வரிகள் என் மனதை பற்றவைப்பது போல ... ஆறுகோடி தமிழனின் மனதிலும் பற்றட்டும் ....

நட்புடன்

ஏழுமலை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]உணர்ச்சி மிகு கவிதை[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.