Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

சரி.. மனிதனாகத்தான் இருக்கட்டுமே.. இப்ப என்னாங்கிறேன்.. இணையம் மனிதனின் சிருஷ்டிதானே.. கண்ட கண்ட மனுசரை எல்லாம் வீட்டுக்கை கொண்டு வாறது இந்த இணையம்தானே.. :)

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply

சோழியன் இணயத்தில கண்ட கண்ட மனிசரை நீங்க கூப்பிட்டாத் தான் வருவினம், நீங்க கூப்பிடாட்டி அவை ஏன் வருகினம். நீங்கள் மவுசை அமத்தினாத் தான் அவை வருவினம்,

இங்கே பயன் பெறுவதும்,சீரழிவதும் உங்கள் கையில் என்பதுவே எமது வாதம்.தல மனிதன் இணயத்தை உருவாக்கியது அதனால் பயன் பெற ,இல்லை நான் சீரழியப் போறன் எண்டா அது உங்கட விருப்பம். நாம் இங்கே தீர்மானமாகச் சொல்லவது இணயம் என்ற தொழில் நுட்பமானது உயர்வடைய விரும்புவோரை உயர்வடயச் செய்யும், சக்தி வாய்ந்தது என்பதுவே. நன்மை அடய விரும்புவோரின் செயற்படும் திறனை அது பல்மடங்காக்கிறது என்பதுவே.

மேலும் தல நீங்கள் இணயப் பாவனை தடை செய்யப் பட்டுள்ளதாகக் கூறி உள்ள தகவல் பிழயானது என்பதயே சுட்டிக் காட்டி உள்ளேன்.மேலும் கண்காணிக்கும் செயலிகள் சிறுவர்களை வழி நடத்த அவர்கள் உபயோகிக்கும் கணணிகள் சேவர்களில் ஏற்றப் பட்டுள்ளன,இதுவே நடைமுறை இதனையே நான் எழுதி உள்ளேன்.எழுதியவற்றை மீண்டும் வாசிச்சுப் பாக்கவும்.சிறுவர்கள் வழி நடத்தப் பட வேண்டியவர்கள், அவர்களுக்கான பாதுகாப்பு நிஜ உலகிலும்,இணய உலகிலும் பெரியவர்களாலேயே கொடுக்கப் படுகிறது.இதனை நடை முறைப் படுத்த தொழில் நுட்ப ரீதியான ஏற்பாடுகள் இணயத்தில் உண்டு.

இணயத்தை மனிதர் சீரழித்தாலும் தவறாகப் பயன் படுத்தினாலும் அதனை வழி நடத்த கட்டுப் படுத்த முறமைகள் இணயத்தில் உண்டு.முற்று முழுதாக சிறுவர்களோ அன்றி இளயவர்களோ இணயப் பாவனைக்கு தடை செய்யப் படாததற்கான காரணம் அதன் கற்றலுக்கான, நமைக்கான பயன்பாடுகள் மறுதலிக்க முடியாதவை என்பதாலேயே.அதனாலெயே இங்கிலாந்தில் அரசாங்கம் இணயத்தை கற்றல் செயற்பாடுகளுக்கான ஒரு முக்கியமான தொழில் நுட்பமாக கருதி ஆரம்பப் பாடசாலைகள் தோறும் அதற்கான வசதிகளை வழங்கி வருகிறது.

தல தந்த இணப்பிற்கு நன்றி,என்ன நீங்க தந்த இணைப்ப நீங்க வாசிச்சிருந்தா, அந்த இணைப்பைத் தந்திருக்க மாட்டியள் எண்டு நினக்கிறன்...இங்க அதன் அறிமுகப் பந்தியப் போடுறன் வாசிச்சுப் பாருங்க.

Whatever your age, the Internet is a great place to hang out. It’s not only fun, but it lets you keep in touch with friends and family and provides an enormous amount of information. There are lots of great educational sites as well as places to keep up with your favorite hobbies, music, sports, and much more. If you’re a teen, we probably don’t need to sell you on the benefits of the Internet. Many of you know far more than your parents or even teachers about the wonders of cyberspace. If you’re a parent, talk to your children about “the Net” and — if you need to learn more — see if they can help you. Either way, it’s important for teens and parents to share knowledge. You have something to learn from each other — if not about the Internet, then about life in general, how to make good decisions, and how to look at information critically.

நாரதரே! தங்களுடைய கருத்தின்படி பார்த்தால் மனிதன் எந்த ஒரு காரணியாலுமேயே சீரழிய முடியாதே!

'நண்பர்களை நாடுவதால் கெடுகிறான்.. சினிமாவைப் பார்ப்பதால் கெடுகிறான்.. இவ்வாறு ஒரு மனிதன் கெடுவதோஇ சீரழிவதோ அவனது கையில்தானே இருக்கிறது... இது இவ்வாறு இருக்க.. பிறகேன் மனிதனுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.. உதாரணமாக திரைப்படங்களுக்கு வயதெல்லையைப் போடவேண்டும்.. அது திரைப்படம்தானே என்று மனிதனுக்கு தெரியாதா? அதனால் பாதிப்பு ஏற்படும் என்பதால்தானே சில கட்டுப்பாடுகளை போடுகிறார்கள்.. உங்கள் பார்வையில் புறக்காரணிகளால் மனிதன் சீரழியவில்லை.. தன்னால்தான் சீரழிகிறான் என்றால்இ இதை திருப்பிப்போட்டால் பெறும் நன்மைகளுக்கும் பொருந்தும்தானே.. ஆகஇ உங்கள் கருத்துப்படி இந்த விவாதமே அர்த்தமில்லாதது ஆகிறது அல்லவா?! :lol:

நாரதரே! தங்களுடைய கருத்தின்படி பார்த்தால் மனிதன் எந்த ஒரு காரணியாலுமேயே சீரழிய முடியாதே!

'நண்பர்களை நாடுவதால் கெடுகிறான்.. சினிமாவைப் பார்ப்பதால் கெடுகிறான்.. இவ்வாறு ஒரு மனிதன் கெடுவதோஇ சீரழிவதோ அவனது கையில்தானே இருக்கிறது... இது இவ்வாறு இருக்க.. பிறகேன் மனிதனுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.. உதாரணமாக திரைப்படங்களுக்கு வயதெல்லையைப் போடவேண்டும்.. அது திரைப்படம்தானே என்று மனிதனுக்கு தெரியாதா? அதனால் பாதிப்பு ஏற்படும் என்பதால்தானே சில கட்டுப்பாடுகளை போடுகிறார்கள்.. உங்கள் பார்வையில் புறக்காரணிகளால் மனிதன் சீரழியவில்லை.. தன்னால்தான் சீரழிகிறான் என்றால்இ இதை திருப்பிப்போட்டால் பெறும் நன்மைகளுக்கும் பொருந்தும்தானே.. ஆகஇ உங்கள் கருத்துப்படி இந்த விவாதமே அர்த்தமில்லாதது ஆகிறது அல்லவா?! :lol:

உண்மைதான் அண்ணா...ஆனால் நன்மையையே இனங்காணத் தெரியாத சிந்தனை ஓட்டத்தில் மனிதர்கள் இருக்கும் போது எப்படி..."நன்மை" மனிதனைச் சென்றடையும்..! இப்போ ஒரு கொலைஞனுக்கு அவனின் பார்வையில் அது நன்மை...கொல்லப்பட்டவனின் சார்பில் தீமை...! இணையத்தை உருவாக்கினதும் மனிதன் தான்..ஆனால் அது கட்டுப்பாடுகளை மீறி சிலருக்கு "தவறான நன்மைகளை" அளிக்கும் போது அது சமூகத்தில் பெரும்பானவருக்கு தீமையாகி விடுகிறது. உதாரணத்துக்கு ஒரு பள்ளி மாணவன் தனக்குரிய மென்பொருள் உருவாக்கும் அறிவை வளர்க்க ஒரு கணணி சைரஸை உருவாக்கிறான் என்று வையுங்கள்..அவனைப் பொறுத்தவரை அது சாதனை..ஆனால் அதுவே வலையில் பயணித்து கணணிகளை தரவுகளை சேதப்படுத்தும் போது அது தீமை என்றுதான் கணிப்பிடப்படுகிறது..! எனவே பெறப்படும் விளைவின் தாக்கம் என்பதன் அடிப்படையிலேயே நன்மை தீமை உணரப்படுகிறது..! :wink: :P

நாரதரே! தங்களுடைய கருத்தின்படி பார்த்தால் மனிதன் எந்த ஒரு காரணியாலுமேயே சீரழிய முடியாதே!

'நண்பர்களை நாடுவதால் கெடுகிறான்.. சினிமாவைப் பார்ப்பதால் கெடுகிறான்.. இவ்வாறு ஒரு மனிதன் கெடுவதோஇ சீரழிவதோ அவனது கையில்தானே இருக்கிறது... இது இவ்வாறு இருக்க.. பிறகேன் மனிதனுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.. உதாரணமாக திரைப்படங்களுக்கு வயதெல்லையைப் போடவேண்டும்.. அது திரைப்படம்தானே என்று மனிதனுக்கு தெரியாதா? அதனால் பாதிப்பு ஏற்படும் என்பதால்தானே சில கட்டுப்பாடுகளை போடுகிறார்கள்.. உங்கள் பார்வையில் புறக்காரணிகளால் மனிதன் சீரழியவில்லை.. தன்னால்தான் சீரழிகிறான் என்றால்இ இதை திருப்பிப்போட்டால் பெறும் நன்மைகளுக்கும் பொருந்தும்தானே.. ஆகஇ உங்கள் கருத்துப்படி இந்த விவாதமே அர்த்தமில்லாதது ஆகிறது அல்லவா?! :lol:

ஆ அதைத் தானே திருப்பத் திருப்பச் சொல்லிக் கொண்டிருகிறம்.

மனிதருக்கு கட்டுப் பாடுகளை விதிப்பது யார்?அதுவும் மனிதர் தானே?சட்டங்கள் இயற்றுவது யார்?கட்டு பாடுகளை சமூக நியதிகளை ,பாதுகாப்பை உருவாக்குவது யார்?மனிதர் தானே?

ஆகவே சிறுவர் ,இளயவர் சீரழிவோம் என்று அறியாது செயற்பட விழையும் மனிதரைக் கட்டுப் படுத்த கட்டுப் பாடுகளை உருவாக்குவதும் மனிதனே.ஆகவே எமது கேள்வி இவ்வாறான கட்டுப் பாடுகளை உருவாக்க இணயத் தொழில் நுட்பத்தில் வசதிகள் இருக்கும் இடத்து அவற்றைப் பயன் படுத்தி இணயப் பாவனையை பயன் உள்ளது ஆக்கலாமே? என்பதுவே.இங்கே அதனை நிராகரித்து ,இணயம் என்னும் ஒரு சடப் பொருள் எம்மைக் கட்டுப் படுத்துகிறது என்று அதனை காரணி ஆக்கி வாதிட வேண்டாம் என்பது தானே எமது வாதம்.

அவ்வாறு மனிதர்களால் ஏற்படும் சீரழிப்புக்கள் மனிதர்களால் அகற்றப் பட மிகுதியாய் இருப்பவை பயன்கள் மட்டுமே அன்றி வேறென்ன?இதற்கெல்லாம் ஒரு விவாதம் இனியும் தேவயா? :lol:

  • தொடங்கியவர்

எங்க பூனைக்குட்டியைக் காணல? பூனைக்குட்டி எப்ப உங்கட கருத்தை வைப்பீர்கள்?> இன்று வைத்தீர்கள் என்றால் உதவியாக இருக்கும். நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ வைக்கிறன் வைக்கிறன்................ இப்பதான் நீங்க எழுதினத வாசிச்சனான்........... இண்டைக்கு வைக்கிறன் அக்கா..... முக்கியமான வேலையொண்டு இருக்கு அத செய்திட்டு எழுதுறன் அக்கா

  • தொடங்கியவர்

ஓ வைக்கிறன் வைக்கிறன்................ இப்பதான் நீங்க எழுதினத வாசிச்சனான்........... இண்டைக்கு வைக்கிறன் அக்கா..... முக்கியமான வேலையொண்டு இருக்கு அத செய்திட்டு எழுதுறன் அக்கா

நன்றி பூனைக்குட்டி

மேலும் தல நீங்கள் இணயப் பாவனை தடை செய்யப் பட்டுள்ளதாகக் கூறி உள்ள தகவல் பிழயானது என்பதயே சுட்டிக் காட்டி உள்ளேன்.மேலும் கண்காணிக்கும் செயலிகள் சிறுவர்களை வழி நடத்த அவர்கள் உபயோகிக்கும் கணணிகள் சேவர்களில் ஏற்றப் பட்டுள்ளன' date='இதுவே நடைமுறை இதனையே நான் எழுதி உள்ளேன்.எழுதியவற்றை மீண்டும் வாசிச்சுப் பாக்கவும்.சிறுவர்கள் வழி நடத்தப் பட வேண்டியவர்கள், அவர்களுக்கான பாதுகாப்பு நிஜ உலகிலும்,இணய உலகிலும் பெரியவர்களாலேயே கொடுக்கப் படுகிறது.இதனை நடை முறைப் படுத்த தொழில் நுட்ப ரீதியான ஏற்பாடுகள் இணயத்தில் உண்டு[/b']

நீங்கள் சொல்வதுதான் நான் சொன்னதும்... சிறுவர் இணையத்தால் சீரளிய மாட்டார்கள் இணையம் நன்மையானது எண்றால் எதற்க்காக கண்காணிப்பு செயலி, எதற்க்கு வளிநடத்தல்கள்...??????????????? மாணவர்களிடம் கணிதபாடப் புத்தகத்தை எப்படி கையில் கொடுத்து படிக்க விடுகிறார்களோ அப்படி விட வேண்டியதுதனே..! ஏன் செய்வதில்லை...??????? :roll: :roll: :roll:

நாரதரே! கட்டுப்பாடுகளை கேட்கும் நிலையிலா மனிதர் வாழ்கிறார்கள்.. கட்டுப்பாடுகளைக் கண்டதும் அதை தகர்த்து, அதனுள் என்ன இருப்பது என அறிய முயல்வதுதானே பெரும்பாலான மனிதர்களது இயல்பு.. அதுவும் தமிழ் இணையங்களைப் பொறுத்தளவில் கட்டுப்பாடுகள் எங்கே உள்ளன.. அதை உருவாக்க வேண்டும் என எந்த கணனி வித்தகர் நினைக்கிறார்.. அவருக்கு வருமானம் வந்தால் சிலவேளை நினைக்கலாம்..

சிகரட் விளம்பரத்தில் புகைத்தல் தீங்கு எனக் குறிப்பிட்டார்கள்.. தற்போது பெட்டிகளிலும் அதன் பாதிப்புகளைக் குறிப்பிடுகிறார்கள்.. குறிப்பிட்டுக்கொண்டே புதிய புதிய வகைச் சிகரட்டுகளை அறிமுகப்படுத்துகிறார்கள் அதற்காக..எவனாவது சிகரட் புகைக்காமலிருக்கிறானா என்றால்.. கேள்விக்குறியே..

இங்கேயும் நடைமுறையில் சிகரட்தான் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கிறது என்கிறோமே தவிர.. மனிதன் சிகரட்டால் கேட்டை அடைகிறான் என்று கூறுவதில்லையே.. இப்படி நுணுகஇகுக் காட்டியாக பிழை பிடிக்க முற்பட்டால் பலவற்றில் பிழை பிடிக்கலாம்.

இப்பட்டி மன்றத்தின் நோக்கம் எதை நோக்கியது என்பதை பகுத்தறிந்தால்.. இப்படியான கருத்துகளுக்கு இடமேற்படாது எனக் கருதுகிறேன்.:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ர கருத்த வச்சிட்டன் அக்கா..........கூட எழுதினாத்தான் அடுத்தமுறை பட்டிமன்றத்தில கடைசியா கதைக்கலாம் எண்டுறதால கொஞ்சம் கூட எழுதிட்டன்.......தப்பெண்டா மன்னிச்சுக்கொள்ளுங்கோ...........

..............

மற்றது நான் பள்ளியில இருந்தும் வேலையிடத்தில இருந்தும் தான் களத்துக்கு பவாறதால கிடைக்கிற நேரத்தில வாசிக்கிறதுகளுக்கு அவசர அவசரமா பதில எழுதிட்டு போயிடுவன்........ ரைப் பண்ணுற வேகத்துக்கு கீபோர்ட் ஒத்துவாறேல........... அதால வேணுமெண்டு பிழை விடுறேல.........டன் அண்ணா அண்டைக்கு என்னை உணர்வுள்ள களத்துக்கு போகச் சொல்லிட்டார்......அதான் ரோசம் வந்திட்டு நமக்கு இப்பிடியும் தமிழ் எழுதத் தெரியுமெண்டு காட்டத்தான் நம்மட அந்த கட்டுரையில முடிஞ்சளவு தூய எழுத்துத் தமிழில எழுதினான்.......அதுவும் தப்பெண்டா மன்னிச்சிருங்கோ.......எப்பிடிய

முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன் புhனைக்குட்டி அவர்களே! ஏற்கெனவே தாங்கள் எழுதிய கருத்துகளை வைத்து தங்களை சாதாரணமாக எடைபோட்டதற்கு.

எடுத்துக் கொண்ட விடயம்.. அதை வரையறுத்த விதம்.. ஆரம்பித்த முறை.. அடுத்தடுத்து கருத்துகளை முன்வைத்த பாங்கு.. முடித்த பாங்கு.. எல்லாவற்றிலுமே பிரமிக்க வைத்துவிட்டீர்கள்.

உண்மையிலேயே ஒரு அணித்தலைவரது பணியை தாங்கள் மிக இலாவகமாக நிறைவேற்றியிருக்கிறீர்கள்.

தங்களுடைய எழுத்தாற்றல் பல்துறையிலும் வியாபித்து.. பலவற்றை தமிழுக்கு தரவேண்டும் என வாழ்த்துகிறேன். நன்றி. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நீட்டி முழங்குவது" வாதம் என்றால் ....?????

எதிரணியின் சிலர் வாதங்களையும்,

தொகுப்புரை(?)யையும் பார்க்கும் போது,

பள்ளி நாள்களில் "புள்ளி" அதிகம் வாங்க

சிலர் "நீட்டி நீட்டி" எழுதி,

"சுத்தி சுத்தி ....கொல்லைக்குள்ள.."

என்ற "வங்குரோத்து" நிலை தான்

நினைப்புக்கு வருகிறது....

ஆனால் ஆசிரியர் என்ற பதவிநிலைகளால்

"பாரபட்சம்" காட்டிய அத் தகையானவர்களாக,

இங்கு கள நடுவர்கள் இருக்க மாட்டார்கள்

என்பது எதிர்பார்ப்பு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறாமை ஐயா பொறாமை பூனைக்குட்டியின் கருத்தை பார்த்ததில் எல்லோருக்கும் பொறாமை. அதுதான் முன்னவர் ஒப்பாரி வைத்துள்ளார். ஐந்தறிவுள்ள பூனை இப்படி கருத்துக்களை வைக்கிறதெண்ட பொறாமை. மேகநாதன் அண்ணா நீங்கள் வைத்த கருத்துக்களை வெட்டிபேசவேண்டியது பட்டிமன்ற மரபு. அதைத்தான் நண்பர் பூனைக்குட்டியும் செய்தார். அதற்காக பள்ளி புள்ளி என்ற வார்த்தைகளை பாவித்தால் பெரிய அறிஞர்கள் ஆகிவிடமுடியாது. பு-னைக்குட்டியின் கருத்துக்களில் இருக்கின்ற தாற்பரியத்தை மட்டும் பாருங்கள்.வாழ்த்தாதுவிடினும

ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது பூனைக்குட்டி...! எதிரணிக்கு நீட்டி முழங்கிச் சொல்லப்பட வேண்டிய கருத்துக்கள்தானே எல்லாமே... அப்படியும் விளங்காமல்ப்போகிறதால் விளக்கமாய் சொல்வதில் தப்பிலை....! :wink:

விமர்சனம் சொல்லணும்....! முழுவதும் படித்தபின் சொல்கிறன்..... :P :P :P

நாரதரே! கட்டுப்பாடுகளை கேட்கும் நிலையிலா மனிதர் வாழ்கிறார்கள்.. கட்டுப்பாடுகளைக் கண்டதும் அதை தகர்த்து, அதனுள் என்ன இருப்பது என அறிய முயல்வதுதானே பெரும்பாலான மனிதர்களது இயல்பு.. அதுவும் தமிழ் இணையங்களைப் பொறுத்தளவில் கட்டுப்பாடுகள் எங்கே உள்ளன.. அதை உருவாக்க வேண்டும் என எந்த கணனி வித்தகர் நினைக்கிறார்.. அவருக்கு வருமானம் வந்தால் சிலவேளை நினைக்கலாம்..

சிகரட் விளம்பரத்தில் புகைத்தல் தீங்கு எனக் குறிப்பிட்டார்கள்.. தற்போது பெட்டிகளிலும் அதன் பாதிப்புகளைக் குறிப்பிடுகிறார்கள்.. குறிப்பிட்டுக்கொண்டே புதிய புதிய வகைச் சிகரட்டுகளை அறிமுகப்படுத்துகிறார்கள் அதற்காக..எவனாவது சிகரட் புகைக்காமலிருக்கிறானா என்றால்.. கேள்விக்குறியே..

இங்கேயும் நடைமுறையில் சிகரட்தான் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கிறது என்கிறோமே தவிர.. மனிதன் சிகரட்டால் கேட்டை அடைகிறான் என்று கூறுவதில்லையே.. இப்படி நுணுகஇகுக் காட்டியாக பிழை பிடிக்க முற்பட்டால் பலவற்றில் பிழை பிடிக்கலாம்.

இப்பட்டி மன்றத்தின் நோக்கம் எதை நோக்கியது என்பதை பகுத்தறிந்தால்.. இப்படியான கருத்துகளுக்கு இடமேற்படாது எனக் கருதுகிறேன்.:D

ஐய்யா சோழியன் நீங்கள் எமது எதிரணி பட்டிமன்றத்தில்,

நான் எமது அணிக்கு சார்பான வாதங்களையே முன் வைக்கிறேன்.அதற்கு எதிர் வாதங்களை முன் வையுங்கள்.பட்டி மன்றதின் நோக்கம் என்ன என்பதுவும் எனக்குத் தெரியும்.உங்கள் வாதங்களின் முடிவில் நடுவர் தீர்ப்பின் பின் எனது நிலைப்பாட்டைக் கூறுகிறேன்.அ நேகமா நடுவர்களின் நிலைப்பாடும் அதுவாகத் தான் இருக்கும்.பொறுந்திருந்து பார்ப்பம்.

பூனைக் குட்டிக்காக வாதாடியதில் பயன் இருக்கு.எனக்கு பூனைக்குட்டியில் நல்ல நம்பிக்கை முன்னம் இருந்தே இருக்கிறது.ஒருவரின் கருத்துககளின் ஆளத்தய்,உண்மயையே நான் அளவு கோலாகப் பார்ப்பது ,எண்ணிக்கையை அல்ல.

:wink: :(

நன்றி பூஸ் குட்டி..! அழகாகவும் ஆணித்தரமாகவும் கட்டுரை வடிவில் உங்கள் கருத்தை வைத்து நமக்கெல்லாம் வாதாட வழியில்லாமல் செய்திட்டீங்கள்..! மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும்..! :P

வசம்பு வாங்கோ..கட்டுரையை வாசிச்சு சுருக்கமா எழுதுங்கோ... பூனைக்குட்டிக்கு இது முதல்தரம் என்றபடியாலும் சோழியான் அண்ணா செய்த தந்திரத்தால ரோசம் வந்ததாலும்.. :( நல்ல கருத்துக்கள் வந்திருக்கு எழுதுங்கோ...உங்கள் வாதத்தை..பாப்பம்..! :wink: :D

தல தந்த இணப்பிற்கு நன்றி,என்ன நீங்க தந்த இணைப்ப நீங்க வாசிச்சிருந்தா, அந்த இணைப்பைத் தந்திருக்க மாட்டியள் எண்டு நினக்கிறன்...இங்க அதன் அறிமுகப் பந்தியப் போடுறன் வாசிச்சுப் பாருங்க.

படிச்ச படியால்தான் போட்டனான்.. அதில் சொல்லப்பட்ட உள்ளர்த்தம் என்ன..?? அதுதான் கேள்வி, இளசுகள் கெட்டுப் போகக்கூடாது எண்ற நோக்கம்தான் என் கண்களுக்கு தெரிந்தது.! இதைத்தானே நாங்களும் பட்டி மண்றத்தில் சொல்கிறோம்...!

இணையத்தால் நன்மை செய்ய முடியாது. ஆனால் சீரளிக்க முடியும் எண்றுதானே சொல்கிறோம்.

மில்லியன் டொலர் எண்று இணையத்தளத்தை உண்டாக்கியவரைத்தவிர (அதுவும் ஏமாற்று வேலையால்த்தான்.) இணையத்தால் உயர்ந்தவர் எவரும் இல்லை சீரளிந்தவர்தான் இருக்கிறார்கள்..! என்பது எமது வாதம்..

வசம்பு வாங்கோ..கட்டுரையை வாசிச்சு சுருக்கமா எழுதுங்கோ... பூனைக்குட்டிக்கு இது முதல்தரம் என்றபடியாலும் சோழியான் அண்ணா செய்த தந்திரத்தால ரோசம் வந்ததாலும்.. :( நல்ல கருத்துக்கள் வந்திருக்கு எழுதுங்கோ...உங்கள் வாதத்தை..பாப்பம்..! :wink: :D

வசம்பு அண்ணா பிசியாம்... சனி ஞாயிறு வாறன் எண்றவர்... வரமலே போயிடுவாரோ எண்டு கவலையாக் கிடக்கு...! அதுக்கு அடுத்த சனி,ஞாயிறுதான் வருவார் எண்டு நினைக்கிறன்..... :lol::lol::lol:

  • தொடங்கியவர்

பூனைக்குட்டி பிரமாதாம் அசத்தீட்டீங்கள். வாழ்த்துக்கள்.

அடுத்ததாக நடுவரின் தொகுப்புரையை தொடர்ந்து வசம்பண்ணா நீங்கள் கருத்து வைக்க வேண்டும் ஆகவே ஆயத்தம் செய்யவும்

பூனைக்குட்டி பிரமாதாம் அசத்தீட்டீங்கள். வாழ்த்துக்கள்.

அடுத்ததாக நடுவரின் தொகுப்புரையை தொடர்ந்து வசம்பண்ணா நீங்கள் கருத்து வைக்க வேண்டும் ஆகவே ஆயத்தம் செய்யவும்

பாவம் நடுவர்..இம்பூட்டையும் வாசிக்கிறதுக்க மயங்கிடுவார்..குளுக்கோசும் கோலாவும் வாங்கிக் கொடுங்கோ..! :wink: :(

  • தொடங்கியவர்

பாவம் நடுவர்..இம்பூட்டையும் வாசிக்கிறதுக்க மயங்கிடுவார்..குளுக்கோசும் கோலாவும் வாங்கிக் கொடுங்கோ..! :wink: :(

சாச்சா நடுவர் நல்ல ஸ்ரோங் இதுக்கெல்லாம் மயங்க மாட்டார். சரி எதுக்கும் நான் முன் எச்சரிக்கையா வேண்டிக்கொடுக்கிறன் :P :P :wink:

ரசி அக்கா...பார்த்தீங்களா..நீங்கள் கீழே போட்ட ரசிகை ரசிகை..ரசிகை எண்ட படத்தையும் காணல...இப்பிடித்தான் என்னோட அவாட்டரும் போட்டுது :roll: :(

சாறி இங்க இதை எழுதுவதற்கு.. :roll:

நீளம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் நன்றாகவே எழுதி சோழியன் அண்ணா சொன்னது போல் அணி தலைவரின் வேலையை சுலபமாக்கியிருக்கின்றீர்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.