Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க நீதிமன்றின் அழைப்பாணை சிங்கள அரசு நிராகரிப்பு

Featured Replies

வவுனியா நிருபர்

ஞாயிற்றுகிழமை, யூன் 19, 2011

அமெரிக்க மத்திய நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணை மஹிந்தவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

30 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி ஜனாதிபதிக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பாணையை அலரி மாளிகை ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும், பின்னர் அந்த அழைப்பாணை நீதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

.

எமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய இவ்வாறான அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.

.

நாட்டின் இறையாண்மைக்கும் தேசியப் பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படக் கூடிய வெளிநாட்டு சட்ட நடவடிக்கைகளை நிராகரிப்பதற்கு இலங்கை அரசியல் சாசனத்தில் இடமிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயங்களை தடுத்து நிறுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Bookmark/Search this post with:

Eelanatham

வவுனியா நிருபர்

ஞாயிற்றுகிழமை, யூன் 19, 2011

அமெரிக்க மத்திய நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணை மஹிந்தவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

30 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி ஜனாதிபதிக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பாணையை அலரி மாளிகை ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும், பின்னர் அந்த அழைப்பாணை நீதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

.

எமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய இவ்வாறான அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.

.

நாட்டின் இறையாண்மைக்கும் தேசியப் பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படக் கூடிய வெளிநாட்டு சட்ட நடவடிக்கைகளை நிராகரிப்பதற்கு இலங்கை அரசியல் சாசனத்தில் இடமிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயங்களை தடுத்து நிறுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Bookmark/Search this post with:

Eelanatham

அமெரிக்கர்களுக்கு எப்பவுமே என்னோட குசும்புதான்

Mahi%20%20smile.jpg

நம்ம தலைவர் இனி அமேரிக்கா போகமுடியாது அது உறுதி , என்னும் இருக்குது நம்ம தலைவருக்கு தலையிடி

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம தலைவர் இனி அமேரிக்கா போகமுடியாது அது உறுதி , என்னும் இருக்குது நம்ம தலைவருக்கு தலையிடி

ஹரி எப்ப நீங்கள் ராஜபக்சே ஆள் ஆனிங்கள்....?

உங்களுக்குமா ராஜபக்சே தலைவன். ....... :D

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றின் அழைப்பாணையை ஏற்காதவர்களுக்கு இறுதியில் பிடிவிறாந்து தான் விடுவார்கள். பிரிட்டன் உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவற்றிலும் மகிந்த அண்ட் கோவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டால் குறைந்த பட்சம் மகிந்தவின் எதிர்கால வெளிநாட்டுப் பயணங்களை முடக்கலாம்.

அமெரிக்க தலைநகரில் உள்ள தேசிய நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியது.

அனேகமாக அரச தலைவர் என்ற ரீதியில் இவருக்கு சில இராசதந்திர விதி விலக்குகள் உள்ளன. அதையும் மீறி கைது செய்வது என்றால் அந்த நாட்டின் அரச ஆதரவு நிச்சயம் தேவை.

நிராகரித்துள்ள அதேவேளை இரகசியமாக இந்த முப்பது மில்லியன் பணத்தை கொடுத்து பிரச்னையை முடிக்க மகிந்த முயலாலம்.

எல்லா உறவுகளும் இப்படி ஒரு வழக்கை எல்லா புலம்பெயர் நாடுகளிலும் போடுவது நாளை இவர் பதவியில் இல்லாத காலத்தில் கைது செய்யக்கூட உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

டகலஸ் இந்தியாவில் சுற்றி திரிவது போல இவன் அமெரிக்கா செல்ல முடியுமா ? சட்ட சிக்கல்கள் வருமா? :rolleyes: :rolleyes:

டகலஸ் இந்தியாவில் சுற்றி திரிவது போல இவன் அமெரிக்கா செல்ல முடியுமா ? சட்ட சிக்கல்கள் வருமா? :rolleyes: :rolleyes:

பொதுவாக அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் உலகிலேயே மிகவும் கடமை உணர்ச்சி கொண்டவர்கள். கடவுச்சீட்டை கணணியில் போட்டு பார்க்கும் பொழுது ஒருவர் அமெரிக்க சட்டப்படி தேடப்படுபவர் என்றால் கைது தான்.

ஆனால் மகிந்தர் ஒரு அரசின் தலைவர் என்ற படியாலும் ஒரு அரசியல் நோக்கத்துடனும் வரும்பொழுது கைதாகும் சாத்தியங்கள் இல்லை. ஆனால், தனிப்பட்ட பிரயாணத்தில் வந்தால் கைதாகலாம்.

ஹரி எப்ப நீங்கள் ராஜபக்சே ஆள் ஆனிங்கள்....?

உங்களுக்குமா ராஜபக்சே தலைவன். ....... :D

சில சமயம் இலங்கை போக வேண்டி இருக்கு அப்ப பெல்டி அடிக்கலாமென்று

  • கருத்துக்கள உறவுகள்

சில சமயம் இலங்கை போக வேண்டி இருக்கு அப்ப பெல்டி அடிக்கலாமென்று

அங்க போகேக்க KP ஆள் எண்டு சொல்லி தப்பலாம், இல்லாட்டி அப்பே மாத்தய மாமா யாழுவ எண்டும் சொல்லித்தப்பலாம். ........ :D....... :D

Edited by தமிழ் அரசு

போறதுக்கு முன் டிக்கெட் எடுக்கிறதுக்கு முன் உங்களின் ஆலோசனை எடுக்கவேண்டும், சிங்கள தூள் பறக்குது :D :D

டகலஸ் இந்தியாவில் சுற்றி திரிவது போல இவன் அமெரிக்கா செல்ல முடியுமா ? சட்ட சிக்கல்கள் வருமா? :rolleyes: :rolleyes:

ஜனநாயகம் என்ற போர்வையில் இன அழிப்பில் ஈடுபட்டுவரும் கயவர்களின் நாட்டில்,

கடத்தல், கப்பம், கொலை, மன்னாதிமன்னன் டக்லஸ் என்ற கயவன் சுற்றித் திரிவதில் வியப்பேதும் இல்லையே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.