Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டில்லி உணர்ச்சியற்று இருக்க முடியாது? நிருபாமா ராவ்

Featured Replies

இலங்கைத்தமிழர்கள் தொடர்பில் தமிழ் நாட்டு மக்கள் உணர்ச்சியுடன் செயற்படுகின்றார்கள். தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம். அவர்களின் உணர்வுகள் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் உணர்ச்சியற்றிருக்க முடியாது என இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் கூறியுள்ளார்.

.

இலங்கை, மாலைதீவு நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் குழுவொன்றை புதுடில்லியில் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

.

இலங்கையில் நடைபெறும் விடயங்கள் குறித்து தமிழ் நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்களும் அவ்வப்போது கரிசனைகளை வெளிப்படுத்துவதாக நிருபமா ராவ் கூறினார். அங்கு தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு கவலையளிக்கும் ஏதேனும் நடந்தால் அவர்கள் (தமிழக மக்கள்) மிகவும் கவலை கொள்கின்றனர். அந்த கரிசனைகளை புறக்கணித்துவிட முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாடும் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். தமிழக மக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதையிட்டு நாம் உணர்ச்சியற்று இருந்துவிட முடியாது. அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

.

நான் இதில் மிக வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்கிறேன். இலங்கையில் நாம் என்ன செய்கிறோம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து இலங்கை அரசாங்கமும் நாமும் என்ன கலந்துரையாடுகிறோம், அனைத்து அபிவிருத்தி உதவிகள், நடைபெறுகின்ற உட்கட்டமைப்பு பணிகள், இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்க்கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் என்பன குறித்து தமிழ் நாட்டு அரசாங்கத்துக்கு கூறுவதற்காக அவர்களுடன் நாம் தொடர்பில் இருக்கிறோம்;என நிருபமா ராவ் கூறினார்.

.

இலங்கையுடனான இந்தியாவின் உறவின் உணர்வுபூர்மான தன்மை குறித்து தமிழ்நாட்டு அரசாங்கமும் அதிகாரிகளும் கரிசனை கொண்டிருப்பதாகவும் இந்திய அரசாங்கம் தன்னால் இயன்றளவு சிறப்பாக இவ்விவகாரத்தை கையாளும் என அவர்கள் புரிந்துகொண்டுள்ளதாகவும் நிருபமா ராவ் தெரிவித்தார்.இக்கரிசனைகள் அவ்வப்போது வெளியிடப்படும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அது நிறுத்தப்பட மாட்டாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது இயற்கையானது. ஏனெனில் அனைவரும் தமிழ் பேசும் மக்கள்உள்ளனர். எனவே உங்கள் நாட்டில உள்ளதைப் போன்றே, எங்களுடையதைப் போன்றதொரு ஜனநாயக அமைப்பில் அவர்கள் எப்போதும் தமது கருத்துக்களை, அபிப்பிராயங்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவார்கள் என அவர் கூறினார்.

.

அம்மணி அது சரி நீங்கள் உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சியற்றும் இருக்க முடியாது என்பது தமிழ் நாட்டு மக்களினால் தேர்தலில் உங்களுக்கு படிப்பினைகள் தரப்பட்டபின்பே வந்ததோ. உண்மையாக தமிழ் நாட்டு மக்களின் உணர்வினை நீங்கள் மதிப்பீர்களானால் முள்ளிவாய்க்காலில் சிங்களம் ஈழத்தமிழர்களை கொத்துக்கொத்தாக கொல்லும் போது எங்கே போனது உங்கள் உணர்வுகள்.

.

இப்போது தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நடந்திருக்கின்றது. ஒட்டுமொத்த தோல்வியினையும் மூடி மறைத்து தமிழக மக்களை ஏமாற்ற இவ்வாறான நவரசங்களை கொட்டியே ஆகவேண்டிய சூழல் டில்லிக்கு அதனைத்தான் அரச விசுவாசத்துடன் தாங்கள் செய்கின்றீர்கள் என்பது தமிழ் நாட்டு மக்களுக்கு புரியாதா என்ன?

My link

  • கருத்துக்கள உறவுகள்

அம்மணி அது சரி நீங்கள் உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சியற்றும் இருக்க முடியாது என்பது தமிழ் நாட்டு மக்களினால் தேர்தலில் உங்களுக்கு படிப்பினைகள் தரப்பட்டபின்பே வந்ததோ. உண்மையாக தமிழ் நாட்டு மக்களின் உணர்வினை நீங்கள் மதிப்பீர்களானால் முள்ளிவாய்க்காலில் சிங்களம் ஈழத்தமிழர்களை கொத்துக்கொத்தாக கொல்லும் போது எங்கே போனது உங்கள் உணர்வுகள்.

எரியிற வீட்டில் புடுங்குகின்ற ஜீவன்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

"நீங்கள் புரிந்துகொள்ளவேணும்" எண்டு யாரைப்பார்த்துச் சொல்லுறா? :unsure:

புரிந்து கொள்ளவேண்டிய ஆட்களே நீங்கள்தாண்டா வெண்ணைகளா..! :o

Edited by இசைக்கலைஞன்

ஐநா நிபுணர் குழு அறிக்கை வெளி வராது இருந்திருந்தால், channel 4 வில் இலங்கையின் கொலைக்களம் ( Sri Lanka 's Killing Field ) வெளிவராது இருந்திருந்தால், தமிழ் நாட்டின் சட்ட சபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப் படாது இருந்திருந்தால் டில்லிக்கு உணர்ச்சி வந்து இருந்திருக்குமா....?

மக்கள் கொத்து கொத்தாக அழிக்கப் பட்ட போது வராத உணர்ச்சி திடீரென்று எப்படி வந்தது..... இலங்கை மீதான சர்வதேசத்தின் சீற்றம் இனி வரும் காலங்களில் மகிந்த கூட்டத்தின் தலை பந்தாடப் படப் போகிறது..... மேற்குறிப்பிட்ட காணொளி இனி வரும் காலங்களில் பிரித்தான்னியாவின் channel 4 அவுஸ்திரேலியாவின் ABC மற்றும் அல்ஜசீரா வோடு நின்று விடாது.... சர்வதேசத்தின் டில்லியின் மீதான விசனம் குற்றச்சாட்டுக்களாக திரும்ப ஆரம்பிக்கும் தருணமிது..... அதிலிருந்து தப்பிக்க இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது என்பது தான் உண்மை....இது தமிழர்பால் உண்டான கரிசனை, இரக்க சிந்தனையோ அல்ல...

இலங்கை மீதான சர்வதேசத்தின் தலையீடு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்ட இன்றைய நிலையில் இந்தியாவினால் இலங்கையை தனித்து சமாளித்து விடலாம் என்பது மிகவும் தவறான கணிப்பாகும்....

இனிமேலாவது காலம் காலமாக கடை பிடித்து வரும் தமிழர் மீதான விரோத போக்கினை புறம் தள்ளி வைத்து விட்டு, போர்க்குற்ற வாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை சர்வதேச குற்றவாளி கூண்டில் ஏற்ற சர்வதேசத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அனைத்து மக்களினதுமான விருப்பமாகும்.....

Edited by Rudran

  • கருத்துக்கள உறவுகள்

:lol: நீங்க எல்லோரும் தப்பாப் புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்கன்னு நினைக்கெறேன்.

அவா சொல்ல வந்தது தில்லிக்கு உணர்ச்சி வந்து இன்னொரு வாட்டி மகிந்த மாமாவுக்கு முண்டு குடுக்குறதைப் பத்தி. நீங்க என்னடான்னா, உணர்ச்சி, கிளர்ச்சின்னு ஏதேதோ எல்லாம் பேசுறீங்க??

போன வாரம்தான் அவனுங்க கூட புதுசா பாதுகாப்பு ஒப்பந்தம் ஒண்ணு போட்டுட்டு வந்தோம், அதுக்குள்ள எங்கள உசுப்பேத்தி இன்னொருவாட்டி மகிந்த மாமாவுக்கு காவடி எடுக்க வைக்காதீங்க. முட்டி முட்டி போட்டு கால்தான் வலிக்குது, என்ன நான் சொல்லுறது புரியுதா??

  • கருத்துக்கள உறவுகள்

20101228055516!Chicken_Biryani.jpg

இலங்கை, மாலைதீவு நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் புரியாணிக்காக கூடிய குழுவொன்றை புதுடில்லியில் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

.

இலங்கையில் நடைபெறும் விடயங்கள் குறித்து தமிழ் நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்களும் அவ்வப்போது கரிசனைகளை வெளிப்படுத்துவதாக நிருபமா ராவ் கூறினார். அங்கு தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு கவலையளிக்கும் ஏதேனும் நடந்தால் அவர்கள் (தமிழக மக்கள்) மிகவும் கவலை கொள்கின்றனர். அந்த கரிசனைகளை புறக்கணிக்கவேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாடும் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். தமிழக மக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதையிட்டு நாம் உணர்ச்சியற்று இருந்துவிட வேண்டும். அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

.

  • கருத்துக்கள உறவுகள்

"நீங்கள் புரிந்துகொள்ளவேணும்" எண்டு யாரைப்பார்த்துச் சொல்லுறா? :unsure:

புரிந்து கொள்ளவேண்டிய ஆட்களே நீங்கள்தாண்டா வெண்ணைகளா..! :o

இசை மன்னிக்க வேனும் உங்களுக்கு மீன்டும் ஒரு பச்சை :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.