Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி யிடம் இருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்கிறோம் : இனப்படுகொலை அரசு

Featured Replies

இலங்கை ராஜபக்ச பேரினவாத அரசு தமிழ்ப் பேசும் மக்களுக்கு என்ன சேவைகளைச் செய்துவருகிறது? இன அழிப்பு, இனச் சுத்திகரிப்பு, இராணுவமயமாக்கல், சிங்கள மயமாக்கல், பெளத்த மதத் திணிப்பு, படுகொலைகள், பாலியல் வன்முறைகள் என்பன இங்கு சில. இந்த நிலையில் கே.பி யும் அரசுடன் இணைந்து சேவையாற்றுவதாக இலங்கை அரசு தெரிவிக்கிறது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போது கே.பியிடம் இருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் தொடர்ந்தும் இருந்து வருகிறது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஈழம் என்பது கனவு என அவர் புலம்பெயர் தமிழர்களுக்கு சில காலங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தன் மூலம் இது உறுதியாகி உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கே.பியினதும் இலங்கை அரசினதும் சேவை என்ற மாயையைச் சுற்றி புலம் பெயர் நாடுகளில் பல குழுக்கள் உருவாகி வருகின்றன. முன்னைநாள் புலி ஆதரவாளர்கள், புலி எதிர்ப்பாளர்கள் போன்றோர் ஜனநாயகத்தை உருவாக்கல், இணக்க அரசியல், மனிதாபிமான உதவி போன்றவற்றை சுலோகங்களை முன்வைத்து கே.பி வழங்கும் “சேவையை” நியாயம் என்று பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான அரசியல் வன்முறைக்கு எதிராக மக்கள் விழிப்படைவது அவசியமானது.

http://inioru.com/?p=22325

  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுதும், எமக்கான காலம் கனிந்து வரும் போது, எங்களுக்குள் இருந்து ஒரு ' அவதாரம்' அதைக் குழப்புவதற்கென்றே உருவாவது வழக்கமாகப் போய் விட்டது!

இப்போதைய அவதார் கே.பி. ஆகும்!

கே.பி. ஒரு ஏமாற்றுப்பேர்வழி என்று தெரிந்தும் நம்பி மோசம் போனது தான் வருத்தமான விடயம்.

இலங்கை ராஜபக்ச பேரினவாத அரசு தமிழ்ப் பேசும் மக்களுக்கு என்ன சேவைகளைச் செய்துவருகிறது? இன அழிப்பு, இனச் சுத்திகரிப்பு, இராணுவமயமாக்கல், சிங்கள மயமாக்கல், பெளத்த மதத் திணிப்பு, படுகொலைகள், பாலியல் வன்முறைகள் என்பன இங்கு சில. இந்த நிலையில் கே.பி யும் அரசுடன் இணைந்து சேவையாற்றுவதாக இலங்கை அரசு தெரிவிக்கிறது.

இது ஊருக்கே தெரிந்தது தானே?

இணக்க அரசியலின் ஆதிக்கக் கம்பும், அடிமை முதுகும்.

தற்போது சிங்களத் தரப்பில் இருந்தும், தமிழ்த் தரப்பில் இருந்தும் இணக்க அரசியல் பற்றிய பதத்தைப் பிரயோகிப்பவர்கள் காலமெல்லாம் தமிழர் மோதல் அரசியலைப் பின்பற்றியதாகவும், சிங்களத் தலைவர்கள் இணக்க அரசியலுக்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும், எனவே இனியாவது தமிழ்த் தரப்பும் இணக்க அரசியலுக்கு தயாராக வேண்டும் என்ற பாணியிலும் பேசுவதாய்த் தெரிகிறது. இதற்கு கடந்த ஒரு நூற்றாண்டு கால அரசியலின் சில உதாரணங்களை மட்டும் எடுத்து ஆராய்ந்தால் உண்மை புலனாகும்.

தமிழ் மக்களின் துயரத்தோடும், இரத்தத்தோடும், வாழ்வோடும் பிணைக்கப்பட்டுள்ள இன்றைய அரசியலில் இதயத்தாலும், மூளையாலும் சிந்திக்கும் ஓர் அரசியலை நாம் விரும்புவோமாக. தமிழ் மக்களின் இரத்தத்தை தானம் செய்யும் அரசியல் எமக்கு வேண்டாம். அவர்கள் சிந்திய இரத்தத்தை தானமாக்கும் அரசியலாக அன்றி அதைச் சத்தியமாக்கும் அரசியலே எமக்கு வேண்டும்.

மூலம் : http://ponguthamil.com/aayirampookal/aayirampookalcontent.asp?sectionid=10&contentid={7542A8F3-FC1B-4C2D-8DD0-DF8F0A214B15}

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள்: தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வைக்கபட வேண்டும்

சிங்களம் அன்ட் ஒட்டு குழுவினர் அன்ட்கோ: போருக்கு பிறகான புனர் உதவியில் கான்சன்ரேட் செய்யவேணும் பழையதை கிளறபடாது..

தமிழர்கள்: போர்குற்றவாளிகளை தண்டிக்க வேணும்

சிங்களம் அன்ட் ஒட்டுகுழுவினர் அன்கோ: அது தற்போது நிலவிவரும் மூவின மக்களிடைய பிளவு களை உண்டாக்கிவிடும்.

தமிழர்கள்:அந்த வடக்கு கிழக்கு இணைப்பு?

சிங்களம் அன்ட் ஒட்டுகுழுவினர் அன்கோ:அந்த காந்த அறிவியலை பற்றி கேட்கிறீர்கள் போல தெரியுது? உலகுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயம் இல்லை..

தமிழர்கள்: எப்பதான் தீர்வு?

சிங்களம் அன்ட் ஒட்டுகுழுவினர் அன்கோ: அது தரும்போது வரும்

தமிழர்கள்: எப்பதான் தருவீங்க?

சிங்களம் அன்ட் ஒட்டுகுழுவினர் அன்கோ: அது வரும்போது தருவம்

  • தொடங்கியவர்

... அநியாயம் ... இப்போதுதான் யோசிக்கிறேன்??? ... பேசாமல் கேபியுடன் ... வாசு, சுமங்களா, நிர்மலன், ... போன்றோர் போல் இணைந்திருந்தால் ... மாதம் ஒரு சிறிலங்காவிற்கான இலவச காலிடே, வேலை செய்யாமல் மோட்கேஜும் கட்டி இராஜ வாழ்கை வாழ்ந்திருக்கலாம்!!!!!!!! ... இனிச்சேர ... வாசு, நிர்மலன், சுமங்களா போன்றோர் அனுபவிக்கும் போகங்களை நானும்??? ... டீல், போட்டால் ... ததேயும்? கோத்தேயும்? என்று போய் விடுவேன்!! :lol:

... அநியாயம் ... இப்போதுதான் யோசிக்கிறேன்??? ... பேசாமல் கேபியுடன் ... வாசு, சுமங்களா, நிர்மலன், ... போன்றோர் போல் இணைந்திருந்தால் ... மாதம் ஒரு சிறிலங்காவிற்கான இலவச காலிடே, வேலை செய்யாமல் மோட்கேஜும் கட்டி இராஜ வாழ்கை வாழ்ந்திருக்கலாம்!!!!!!!! ... இனிச்சேர ... வாசு, நிர்மலன், சுமங்களா போன்றோர் அனுபவிக்கும் போகங்களை நானும்??? ... டீல், போட்டால் ... ததேயும்? கோத்தேயும்? என்று போய் விடுவேன்!! :lol:

இப்பிடி கேணதனமா கருத்து எழுதுறதுக்கு பதிலா நாண்டுகிட்டு சாவலாம்! இப்ப என்னதான் உங்க பிரச்சினை?....அநியாயமா உங்களோட காசு போச்சே எண்டா?இல்ல முதலே இப்பிடி ஆகும் எண்டு தெரிஞ்சால் நீங்களும் சுருட்டி இருக்கலாம் என்றா? இப்பிடி வயிறு எரியுறதுக்கு பதிலா எதுவுமே நீங்க பண்ணாது விட்டிருக்கலாம்! இதைவிட பெரிசா செய்தவன் எல்லாம் நாடு ஒன்று இல்லாம போச்சே எண்டுதான் கவலை படுறான், உங்களை போல காசு போச்சே எண்டு இல்ல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.