Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். வருகிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ: ஐந்து நாட்கள் தங்கி அபிவிருத்தி விடயங்களை நேரடியாக நெறிப்படுத்துவாராம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வருகிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ: ஐந்து நாட்கள் தங்கி அபிவிருத்தி விடயங்களை நேரடியாக நெறிப்படுத்துவாராம்

[Monday, 2011-07-11 19:20:01]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ நாளை மறுதினம் யாழ்ப்பாணம் வருகை தருகை தரவுள்ளதாக ஜனாதிபதியின் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி ஜந்து நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அபிவிருத்தித் திட்டம் பற்றி ஆராய்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தேர்தல் சூடுபிடித்த நிலையில் ஆளும் கட்சி அமைச்சர்கள் 13 பேர் தமது தேர்தல் பிரச்சாரங்களை யாழில் மேற்கொண்டுவரும் நிலையிலேயே ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமாரை தொடர்புகொண்டு கேட்ட போது யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் யாழ். மக்களையும் அரச உத்தியோகத்தர்களையும் ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது சிங்கள தமிழ் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் கோப்பாய் நாவலர் பாடசாலையில் கட்டப்பட்ட கட்டடத்தொகுதியையும், பருத்துத்துறையில் கட்டடம் ஒன்றையும் திறந்து வைப்பார் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ் விஜயத்தை முடித்துக்கொண்டு 20ம் திகதி கிளிநொச்சி செல்லும் ஜனாதிபதி அங்கு 325 மில்லியன் செலவில் அமைக்கப்படவிருக்கும் சர்வதேச தரத்திலான விளையாட்டரங்குக்கான அடிக்கல்லை நாட்டி வைப்பார் என விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நேற்றுக்காலை கிளிநொச்சி அரச செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46308&category=TamilNews&language=tamil

'நெறிப்படுத்த', 'நேரடியாக அங்கிருந்து', 'அபிவிருத்தி' (சீனாக்காரனிடம் முழுமையான அறிக்கையை பெறலாம்) - இந்த பெயர்களில் தமது உண்மையான அடிமைத்தனத்தை மறைத்து மக்களிடம் வாக்கை கேட்கும் நாடகத்தின் காட்சிகள். அதேவேளை இவற்றை பாவித்து சர்வதேசத்தையும் ஏமாற்றவே (பணம் கறக்க, அதில் இராணுவ மயமாக்க) இந்த நடவடிக்கைகள்.

மக்கள் ஏமாறாமல் கூட்டமைப்புக்கே வெற்றி பெற்றுத்தருவார்கள்.

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இல்லை என்ற துணிவுதான், கொழும்பில் நடமாடவே பல பாதைகளை மூடிய சிங்களம் இன்று யாழ்ப்பாணம் வரை வந்து தங்கப்போகின்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ ...........?

Edited by தமிழ் அரசு

சிங்கள பௌத்த பயங்கரவாதிகளின் கொட்டம் முடியும் நேரம் நெருங்குகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ். வருகிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ

பாலங்கள்,மதகுகள் பள்ளிக்கூட சுவர்கள் ,கோயில் மதில் எண்டு எல்லாத்துக்கும் பெயின்ரடி நடக்கப்போகுது.
  • கருத்துக்கள உறவுகள்

போன பொங்கல் திருவிழாவுக்கு வந்த போது தான்....

மகிந்தவின் தலைப்பாகை, பொங்கல் பானைக்குள்ளை விழுந்தது.

இது வரவேற்கப்படவேண்டிய விடயம்! வடபகுதி அபிவிருத்தி மிகவும் தேவையானது! இதற்கெதிரான கருத்துக்கள் வைக்க நினப்பவர்கள்தான் சிங்களவனை விட மிகவும் கெடுதல் செய்கிறார்கள் வடபகுதிக்கு! எம்மில் பெரும்பாலானவர்கள் எமது பிரதேசத்திற்க்கோ அங்கு வாழும் மக்களுக்கோ ஒரு வரையறையை மீறி, எந்தவொருவிதத்திலும் நிதி பங்களிப்பு வழங்கமுடியாது அதற்க்கு எமக்கு மனது இருந்தாலும் ,இங்குள்ள பொருளாதார நெருக்கடி எம்மை நகரவிடாது! இரண்டு கிழமை வேலை இல்லையென்றாலே நம்ம கதை கந்தல்! போதியவரை சிங்களவன் தன்னை காப்பாற்றவேனும் எங்கள் மண்ணில் ஏதாவது கிள்ளிப்போடட்டும்!..எம் மக்கள் வாக்குகளை அவனுக்கு போடாமல் விடுவதில்தான் உண்மையான பழிவாங்கல் இருக்கணும்! பாலமும் ரோட்டும் போடுவதால் சர்வதேசத்தை சிங்களவன் ஏமாற்றமுடியாது! ஏன்னா..பாலமும் ரோட்டும் போடுறது கிழக்காசியாக்காரனுக்குத்தான் சாதனை ...மேற்குலகத்தவனுக்கு அது ஒரு அரசு மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டிய அடிப்படைத்தேவை! இது கூட செய்யலைனா நாடு பிரிந்தது என்று அவனே சொல்வான்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் – சிங்கள ஒற்றுமையை வலுப்படுத்த யாழ்.செல்கிறாராம் மஹிந்த!

Published on July 12, 2011-8:31 am

ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ நாளை மறுதினம் யாழ்ப்பாணம் பயணமாகவுள்ளதாக ஜனாதிபதியின் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் செல்லும் மஹிந்தராஜபக்ச ஐந்து நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அபிவிருத்தித் திட்டம் பற்றி ஆராய்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தேர்தல் சூடுபிடித்த நிலையில் ஆளும் கட்சி அமைச்சர்கள் 13 பேர் தமது தேர்தல் பிரச்சாரங்களை யாழில் மேற்கொண்டுவரும் நிலையிலேயே ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமாரை தொடர்புகொண்டு கேட்ட போது யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் யாழ். மக்களையும் அரச உத்தியோகத்தர்களையும் ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது சிங்கள தமிழ் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் கோப்பாய் நாவலர் பாடசாலையில் கட்டப்பட்ட கட்டடத்தொகுதியையும், பருத்துத்துறையில் கட்டடம் ஒன்றையும் திறந்து வைப்பார் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ் விஜயத்தை முடித்துக்கொண்டு 20ம் திகதி கிளிநொச்சி செல்லும் ஜனாதிபதி அங்கு 325 மில்லியன் செலவில் அமைக்கப்படவிருக்கும் சர்வதேச தரத்திலான விளையாட்டரங்குக்கான அடிக்கல்லை நாட்டி வைப்பார் என விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நேற்றுக்காலை கிளிநொச்சி அரச செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.

http://www.saritham.com/?p=25821

மகிந்த மாத்தையா மாறி யோசிச்சிட்டார். ஒரு வேளை சனாதிபதி தேர்தல் என்டு நினைச்சாரோ.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். செல்லும் ஐனாதிபதி - தேர்தல் வியூகம் என்கிறது கொழும்புத் தகவல்

July 13, 2011, 7:31 am[views: 155]

எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் கட்சியை வெற்றிபெற வைக்கும் முனைப்புடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷ யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி ஐந்து நாட்கள் இங்கு தங்கியிருந்து அபிவிருத்தித் திட்டம் பற்றி ஆராய்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தேர்தல் சூடு பிடித்த நிலையில் ஆளும் கட்சி அமைச்சர்கள் 13 பேர் தமது தேர்தல் பிரசாரங்களை யாழில் மேற்கொண்டுவரும் நிலையிலேயே ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். வீரசிங்கம் மண்படத்தில் யாழ்.மக்களையும் அரச உத்தியோகத்தர்களையும் ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் உறுதிப்படுத்தினார்.

இம்முறை ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது சிங்கள, தமிழ் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் கோப்பாய் நாவலர் பாடசாலையில் கட்டப்பட்ட கட்டடத் தொகுதியையும் பருத்தித்துறையில் கட்டடம் ஒன்றையும் திறந்து வைப்பார் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்.விஜயத்தை முடித்துக் கொண்டு 20ஆம் திகதி கிளிநொச்சி செல்லும் ஜனாதிபதி அங்கு 325 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவிருக்கும் சர்வதேச தரத்திலான விளையாட்டரங்குக்கான அடிக்கல்லை நாட்டி வைப்பார் என விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கிளிநொச்சி அரச செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷ 18ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வார் என முன்னர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அதற்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வார் என ஜனாதிபதி செயலக அதிகாரி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.paristamil.com/tamilnews/news_detail.php?id=12222&v=154

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.