Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் -திமுக பொதுக்குழு தீர்மானம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் -திமுக பொதுக்குழு தீர்மானம்.

24 ஜூலை 2011

பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

இன்று காலை திமுக தலைவர் கலைஞர் தலைமையில் கோவையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கிடையில் கோவையில் துவங்கிய திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 2,000 மேற்பட்ட திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் இன்று 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தங்களுக்கு வாக்களித்த ஒரு கோடியே 45 லட்சம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் இறுதிப்போரின் போது போர்குற்றங்களில் ஈடுபட்டோரை தண்டிக்க இந்தியா சர்வதேச நாடுகளையும் ஐநா அவையையும் நிர்பந்திக்க வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வாக அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த முன் வரவேண்டும் என்று இதற்கு சர்வதேச அழுத்தங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதி முக்கியமான இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுள்ளதோடு, கச்சத்தீவை மீட்கவும், சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றவும் சட்டரீதியான முயற்சிகளை இந்திய அரசு செய்ய வேண்டும் என்றும்,சமச்சீர் கல்வியில் நீதிமன்றங்களின் உத்தரவை அவமதிக்கும் வகையில் நடக்கும் தமிழக அரசுக்கு கண்டனமும், முல்லை அணையில் தமிழக விவசாயிகளின் உரிமையை மீட்க நடவடிக்கை கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இத்தீர்மானங்களோடு மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட கலைஞருக்குப் பின்னர் திமுகவின் தலைமை ஸ்டாலினுக்கா? அழகிரிக்கா என்ற சர்ச்சைக்கு பொதுக்குழு தற்காலிக ஒய்வு கொடுத்துள்ளது. நேற்று கோவை சென்ற கலைஞரை அழகிரி, ஸ்டாலின் ஆகியோர் தனித்தனியாக சந்தித்துப் பேசியதில் கலைஞர் இப்போதைக்கு கட்சி கடும் நெருக்கடிகளை சந்திப்பதால் தலைமை தொடர்பான விவாதங்களை இப்போதைக்கு எவரும் பொதுக்குழுவில் எழுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

ஸ்பெக்டரம் வழக்குகள்,கைதுகள், ராஜிநாமாக்கள் என கட்சியின் சூழலை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்கும் படி கலைஞர் இரு புதல்வர்களிடமும் கேட்டுக் கொண்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கட்சியின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு ஆலோசனைக்குழு ஒன்றை அறிவித்திருக்கிறது.

பொதுக்குழு பாராளுமன்ற உறுப்பினரான டி.கே.எஸ், இளங்கோவன் தலைமையிலான அக்குழுவில் ஷா,பிச்சாண்டி, முக்கமது கனி, வி,பி.ராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு தமிழகம் முழுக்க கட்சி சந்திக்கும் பிரச்சனைகள் சவால்கள் குறித்து விசாரித்து தலைமைக்கு கொடுக்கும் அறிக்கை தொடர்பாக கட்சியில் மாற்றங்கள் செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்படுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64563/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் -திமுக பொதுக்குழு தீர்மானம்.

24 ஜூலை 2011

பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

இன்று காலை திமுக தலைவர் கலைஞர் தலைமையில் கோவையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

"இலங்கையில் இறுதிப்போரின் போது போர்குற்றங்களில் ஈடுபட்டோரை தண்டிக்க இந்தியா சர்வதேச நாடுகளையும் ஐநா அவையையும் நிர்பந்திக்க வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வாக அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த முன் வரவேண்டும் என்று இதற்கு சர்வதேச அழுத்தங்கள் உருவாக்கப்பட வேண்டும்"

என்ன நடந்தது.

தீர்மானம் சரி. அதற்கான நகர்வுகள் என்ன? தோல்வி அரசியலில் இருந்து மீண்டெழுவதற்கான நகர்வா?

திரும்ப திரும்ப ஈழத்தமிழர் பிரச்சினையினை தனது குடும்ப நலனிற்காக பாவிப்பதனை திமுக நிறுடத்த வேண்டும். இது எமது தீர்மானம்.

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக இருந்தாலும் சொன்னவற்றை செய்து முடிக்கட்டும். ஒரு படி மேலே தூக்கிவிடட்டும் எம்மை அதுவே எமக்குத்தேவை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரச்சனையை முன் வைத்து அரசியலுக்கு வந்தவர்தான் இவரின் மகள் கனிமொழி இவரும் ஈழத்தமிழர்களின் சோகவரலாற்றை ஈன இரக்கம் இன்றி தமது அரசியல் நலனுக்கு பயன்படுத்திய துரோகி கலைஞன் ஈழ வரலாற்றில் மன்னிக்க முடியாத பச்சைத்துரோகி ஆவார்.

  • கருத்துக்கள உறவுகள்
:oஇதையே ண்டா மொதல்லேயே சொல்லலே?? ஆட்சியிலிருக்கும்போது எங்கேடா இதேல்லாம் போச்சி??
  • கருத்துக்கள உறவுகள்

இனி கலைஞர் எழுதும் கடிதங்களில் நாங்கள் 2001ல் ஈழத்தமிழர்களுக்காக தீர்மானம் எடுத்தோம் என்று அடிக்கடி எழுதி இம்சை தரப்போகிறார்.

இனி கலைஞர் எழுதும் கடிதங்களில் நாங்கள் 2001ல் ஈழத்தமிழர்களுக்காக தீர்மானம் எடுத்தோம் என்று அடிக்கடி எழுதி இம்சை தரப்போகிறார்.

2011 கந்தப்பு........ கூட்டம் கூடியது வேற பிரச்சனை. அங்கை அழகிரிக்கு ஸ்டாலின் அணிக்கும் கடும் வாக்குவாதம் வெட்டுக் கொத்தில் போய் முடியும் போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: வெட்டுக் குத்தில முடியும் போல இல்லை, முடிய வேண்டும் !!!

கருணாநிதி அன்ட் கோ வின் காலம் கடந்த சுடலை ஞானம்.

தமிழினத்தின் மீது உண்மையான அக்கறை இருப்பின் அவர்கள் செய்யக்கூடியது அன்பழகனையும், வைக்கோவையும் அடுத்த தலைவர்களாக நியமிப்பதே.

இல்லையெனின் குடும்பத்தோடு பழி பாவத்தை அனுபவித்தபடி காணாமல் போவதையே தமிழர் விரும்புகின்றனர்.

அது என்ன மொட்டையாக பொது வாக்கெடுப்பு?

கலைஞருக்கு அரசியல் ஞானம் மங்கிவிட்டது.

தமிழ் மக்கள் என்ன தீர்வை விரும்புகிறார்கள் என்று அறிய சகல ஈழத்தமிழர் (புலம் பெயர்ந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் உட்பட) கருத்தைக் கேட்டு ஈழத் தமிழர்களிடையே மட்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்பதுதானே சாணாக்கியம்.

" ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வாக அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த முன் வரவேண்டும் என்று இதற்கு சர்வதேச அழுத்தங்கள் உருவாக்கப்பட வேண்டும்" - நல்ல முயற்சி. இதுவே (தென் சூடான் போன்று ) எமது இலக்கு.

இன்றைய நிலையில், கலைழர் தொலைக்காட்சி சனல் நாலை ஒளிபரப்பினால் அது இந்த தீர்மானங்களை விட பலமானதும் நம்பக்கூடியதும் ஆகும்.

Edited by akootha

கருணாநிதி அன்ட் கோ வின் காலம் கடந்த சுடலை ஞானம்.

தமிழினத்தின் மீது உண்மையான அக்கறை இருப்பின் அவர்கள் செய்யக்கூடியது அன்பழகனையும், வைக்கோவையும் அடுத்த தலைவர்களாக நியமிப்பதே.

இல்லையெனின் குடும்பத்தோடு பழி பாவத்தை அனுபவித்தபடி காணாமல் போவதையே தமிழர் விரும்புகின்றனர்.

புது தலைமை இல்லையேல் தி.மு.க தன்னைத்தான் அழிக்கபோகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.