Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நகர பகுதியில் 5 நட்சத்திர விடுதி ...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகர பகுதியில் 5 நட்சத்திர விடுதி ...

25 ஜூலை 2011

ஒன்று அமைப் பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பமாகி விட்டதாகத் தெரிய வருகின்றது.

யாழ் நகர பகுதியில் 5 நட்சத்திர விடுதி ...

யாழ் நகர பகுதியில் 5 நட்சத்திர விடுதி ஒன்று அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பமாகிவிட்டதாகத் தெரிய வருகின்றது.

யாழ்ப்பாணம் கோட்டையை அண்டிய குடாக்கடல் பகுதியில் இப்பணிகள் இடம்பெறுகின்றது. கொழும்பை சேர்ந்த தாஜ் ஹொட்டல் உரிமையாளர் தரப்பே காணிகளைக் கொள்வனவு செய்து விட்டதாக தெரியவருகிறது. 5 நட்சத்திர விடுதியை யாழ்ப்பாணத்தில் அமைக்க முடிவுகள் மேற்கொண்டு அதற்கேற்ப காணிகள் கொள்வனவு செய்யப்பட்டு யாழ் கோட்டைக்கு முன்னதாக 5 நட்சத்திர விடுதி ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

குறிப்பாக சாட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் நட்டசத்திர ஹொட்டல்கள் அமைப்பதற்கு பல்வேறு தரப்புகளும் முயற்சிகளை மேற்கொள்ளவதாக அவர் தெரிவித்தார். தற்போது தெற்கைச் சேர்ந்தவர்களே கணிசமான அளவில் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணிகளாக வருகின்ற போதிலும் அடுத்து வரும் காலங்களில் குடா நாட்டிற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி நீக்கப்பட்டிருப்பதால் பெருமளவில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் யாழ்ப்பாணம் வருகைதரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக குடாநாட்டில் சுமூகமானநிலை உருவாகியிருப்பதால் அவர்களை யாழ்ப்பாணத்தில் தங்கவைப்பதற்கு போதிய கட்டடவசதி இல்லை என யாழ் மாவட்ட ஹொட்டல் உரிமையாளர்கள் சங்கம் கூறுகின்றது. எனினும் பலகாலம் இயங்காதிருந்த ஞானம்ஸ் ஹொட்டல் மீண்டும் இயங்க ஆரம்பித்துவிட்ட போதிலும் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே மேலும் பல நட்சத்திர விடுதிகள் அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதனிடையே குடாநாட்டில் ஹொட்டல்களை ஆரம்பிப்பவர்களை ஊக்குவிக்கும் முகமாக அடுத்து வரும் 3 தினங்களுக்கு நடமாடும் சேவையினை வழங்க இலங்கை சுற்றுலாத்துறை திட்டமிட்டிருப்பதாக தெரியவருகின்றது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64646/language/ta-IN/article.aspx

அப்பா இனிபோனால் சந்தோஷமாக நிற்கலாம். :) :)

இங்கே நின்றால் 'அவர்களுக்கு' வசதியாக இருக்கும், கொழும்பில் வைத்து பணம் பறிக்க :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பா இனிபோனால் சந்தோஷமாக நிற்கலாம். :) :)

சந்தோசம் திரும்ப வருமா

சாகவும் வழி இல்ல...தப்பி வெளிநாட்டுக்கு ஓடுறதுக்கும் காசு இல்ல...இப்டி அன்றாட ஜீவிததுக்கே திண்டாடும் , எமது உறவுகளுக்கு ,இதன் மூலம் வேலைவாய்ப்பு கிட்டுமெனில்....இந்த முயற்சியை ஆரம்பித்தவர்களுக்கு நன்றி!! அதற்காக... சிங்களவனை எனக்கு பிடிக்கும் என்று அர்த்தமில்லை! அது என் சொந்த பிரச்சனை!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நட்சத்திர விடுதிகளால் வரும் வேலை வாய்ப்புக்கள், மிகவும் குறைவு!

அத்துடன் இவற்றின் வருகை, ஒரு சமுதாய அமைப்பைச் சீரழித்து விடும்!

உதாரணமாக, பிலிப்பின்ஸ் அமெரிக்கப் படைகளின் விளையாடும் மைதானமாக மாறியிருந்தது!

இப்போது பிலிப்பினோ மக்களே அதை வேண்டாமென்று துரத்தி விட்டார்கள்!

தாய்லாந்தும், சிங்களமும் இன்னும் இந்த மாதிரி இடங்களை வரவேற்கின்றன!

இந்த உல்லாசப் பயணிகளால் விட்டுச் செல்லப்படும் மீதங்கள், உடனடி விளைவுகளைத் தராது!

காலப் போக்கில் தான் தெரியவரும்!

மேலும் இதனால் வரும், வருமானமும் தமிழனுக்குச் சேராது!

சந்தோசம் திரும்ப வருமா

சும்மா ஒரு கதைக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகர பகுதியில் 5 நட்சத்திர விடுதி = கலாச்சார சீரழிவு

இந்த நட்சத்திர விடுதிகளால் வரும் வேலை வாய்ப்புக்கள், மிகவும் குறைவு!

அத்துடன் இவற்றின் வருகை, ஒரு சமுதாய அமைப்பைச் சீரழித்து விடும்!

அப்போ புலம்பெயர்மக்கள் எல்லாம் சேர்ந்து வேலை வாய்ப்புக்களை அதிகரித்து , யாழில் உள்ள ஏதிலிகளின் வறுமயை போக்கலாம்! அப்புறம் என்ன ...சமுதாய அமைப்பை சீரழிக்குமா? நல்லாதான் சொன்னிங்க போங்க புங்கையூரான் அண்ணா! யாழ்ப்பாணத்தில இப்போ நடக்குற சமூக சீரழிவை எந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் வந்து ஆரம்பிச்சு வைச்சுது?

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ புலம்பெயர்மக்கள் எல்லாம் சேர்ந்து வேலை வாய்ப்புக்களை அதிகரித்து , யாழில் உள்ள ஏதிலிகளின் வறுமயை போக்கலாம்! அப்புறம் என்ன ...சமுதாய அமைப்பை சீரழிக்குமா? நல்லாதான் சொன்னிங்க போங்க புங்கையூரான் அண்ணா! யாழ்ப்பாணத்தில இப்போ நடக்குற சமூக சீரழிவை எந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் வந்து ஆரம்பிச்சு வைச்சுது?

உங்கள் ஆதங்கம் எனக்கும், உண்டு அறிவிலி!

இருக்கின்ற வருத்தத்திற்கு, அது எப்படி வந்ததாயினும், மருந்து தேடுவது புத்திசாலித் தனம்!

ஆனால், மருந்திற்காக யாராவது வருத்தத்தைத் தேடலாமா?

தெரியாமல் தான் கேட்கின்றேன்?

தயாராகவுள்ள பல புலம் பெயர் மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கான விண்ணப்பங்கள், அரசாங்கத்தினால் நிராகரிக்கப் படுவது, நீங்கள் அறியாததா?

சமூதாய சீரழிவை உருவாக்கிய அதே கூட்டமே, இப்போது நட்சத்திர விடுதி கட்டவும் வருகின்றது!

இரண்டு கரங்களையும் கூப்பி வரவேற்பது, உங்கள் உரிமை!!!

உங்கள் ஆதங்கம் எனக்கும், உண்டு அறிவிலி!

இருக்கின்ற வருத்தத்திற்கு, அது எப்படி வந்ததாயினும், மருந்து தேடுவது புத்திசாலித் தனம்!

ஆனால், மருந்திற்காக யாராவது வருத்தத்தைத் தேடலாமா?

தெரியாமல் தான் கேட்கின்றேன்?

தயாராகவுள்ள பல புலம் பெயர் மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கான விண்ணப்பங்கள், அரசாங்கத்தினால் நிராகரிக்கப் படுவது, நீங்கள் அறியாததா?

சமூதாய சீரழிவை உருவாக்கிய அதே கூட்டமே, இப்போது நட்சத்திர விடுதி கட்டவும் வருகின்றது!

இரண்டு கரங்களையும் கூப்பி வரவேற்பது, உங்கள் உரிமை!!!

யார்மேலயும் குற்றமில்லை! உங்களூக்கு கடந்த கால எம் துயரங்கள் மனசுல நிக்குது ,எனக்கு நிகழ்கால எம் மக்கள் துயரங்கள் மனசில நிக்குது!

நிகழ்காலத்தை சாமாளிச்சாத்தான்,கடந்த காலத்திற்க்கு பழிவாங்க , எதிர்காலத்தை திட்டமிடலாம் ! என்பதே என் கருத்து அண்ணா ,நான் இப்டிதான் யோசிப்பேன் அண்ணா , ஏன்னா, நான்தான் அறிவிலி ஆச்சே!

பொருளாதார மேம்பாட்டிற்கு இவைகள் மிக அவசியம்.வெளிநாட்டு செல்வந்தர்கள்,முதலீட்டாளர்கள் போகவேண்டும்,நாங்கள் கண்ணுபிடிக்காத வளங்களையும்,எமது திறன்களையும் உலகிற்கு எடுத்து செல்லவேண்டும்.மனித உரிமை மீறல்களை கூட கவனத்தில் எடுக்கக்கூடும்.

அரசியல் தீர்வுவரை எதுவும் வேண்டாமென்றிருந்தால் பாலைவனமாகிவிடும் நமதுபூமி.

பொருளாதார மேம்பாட்டிற்கு இவைகள் மிக அவசியம்.வெளிநாட்டு செல்வந்தர்கள்,முதலீட்டாளர்கள் போகவேண்டும்,நாங்கள் கண்ணுபிடிக்காத வளங்களையும்,எமது திறன்களையும் உலகிற்கு எடுத்து செல்லவேண்டும்.மனித உரிமை மீறல்களை கூட கவனத்தில் எடுக்கக்கூடும்.

அரசியல் தீர்வுவரை எதுவும் வேண்டாமென்றிருந்தால் பாலைவனமாகிவிடும் நமதுபூமி.

பொருளாதாரத்தை பொறுத்தவரையில் அங்கு உண்மையான திட்டமிடல் இல்லை, நேர்மை இல்லை. அபிவிருத்தி என்ற பெயரில் சுரண்டலும், குடியேற்றமுமே நடக்கின்றன.

சொந்த நிலங்களில், கடலில் வாழ்வாதாரம் மறுக்கப்படுகின்றது. கல்வியில் இருந்து சுகாதாரம் வரை அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், வாழ்க்கையே பாலைவனமான நிலையில் உள்ள நிலையிலும் அந்த மக்கள் கேட்பது சுதந்திரத்தை, நட்சத்திர விடுதியை அல்ல. அதையே இந்த தேர்தல் மூலம் அந்த மக்கள் கூறியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரத்தை பொறுத்தவரையில் அங்கு உண்மையான திட்டமிடல் இல்லை, நேர்மை இல்லை. அபிவிருத்தி என்ற பெயரில் சுரண்டலும், குடியேற்றமுமே நடக்கின்றன.

சொந்த நிலங்களில், கடலில் வாழ்வாதாரம் மறுக்கப்படுகின்றது. கல்வியில் இருந்து சுகாதாரம் வரை அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், வாழ்க்கையே பாலைவனமான நிலையில் உள்ள நிலையிலும் அந்த மக்கள் கேட்பது சுதந்திரத்தை, நட்சத்திர விடுதியை அல்ல. அதையே இந்த தேர்தல் மூலம் அந்த மக்கள் கூறியுள்ளனர்.

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்............

விடுதியும் இரண்டு மூன்று விபச்சாரிகளும் இருந்தால்தான் ஜனநாயகமாம் அன்று அவர்கள் சொல்கிறார்கள்.

எமக்குதான் எதுவுமே புரியுதில்லை!

அப்பாடா, உங்கே டாய்லட் ரிஷ்யூ கிடைக்கும் தானே? அப்பத்தான் எங்களில் சில புலம் பெயர்ந்தவர்கள் ஊருக்கு போவார்களாம். :huh:

சிலர் சொல்லும் கதைகளைக்கேட்டால்.... :unsure::blink:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா, உங்கே டாய்லட் ரிஷ்யூ கிடைக்கும் தானே? அப்பத்தான் எங்களில் சில புலம் பெயர்ந்தவர்கள் ஊருக்கு போவார்களாம். :huh:

சிலர் சொல்லும் கதைகளைக்கேட்டால்.... :unsure::blink:

ஐய்ய.. யாரும் கையால் தொடுவார்களா "அதை", உவேக்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐய்ய.. யாரும் கையால் தொடுவார்களா "அதை", உவேக்..

வாளிக்கை தண்ணி எடுத்துக் கொண்டுபோய்...அலசி அடிச்சு அலம்பி கழுவினதெல்லாம் குளிருக்கை வந்தவுடனை மறந்துபோச்சுது போலை.

  • கருத்துக்கள உறவுகள்

வாளிக்கை தண்ணி எடுத்துக் கொண்டுபோய்...அலசி அடிச்சு அலம்பி கழுவினதெல்லாம் குளிருக்கை வந்தவுடனை மறந்துபோச்சுது போலை.

ஆ. அப்பிடியும் செய்யிறவையோ!! :o:o

அடிப்படையில் பொருளாதாரமே எந்த இனத்தின் பலத்தையும் தூக்கி நிறுத்தும் என்பது, வசதியான நாட்டில வாழுறவங்களுக்கு புரியாம போறது, ம்கா கேவலம்!

ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டுவதால், வேலைவாய்ப்பு ஒண்ணும் பெரிகிடாது என்பது எவ்வளவு உண்மையோ, அதை விட உண்மை..... நாழ் நகரப்பகுதி, வாகன ஓட்டுநர்கள், வழிகாட்டிகள், நகர உணவகங்கள், அதை விட மேலாய் , 30ம் வருசம் இந்த இரும்பு திரை யாழ்குடாவில என்ன நடந்தது என்று உலகம், அறிய கிடைக்கும் சிறு எத்தனங்கள்!...

இது எல்லாம் யாருக்கு புரியுதோ இல்லியோ, 2009 பேரழிவுக்கு அப்புறம், சுட சுட யாழ் போய் வந்த கிருபன் அண்ணாச்சிக்கு புரியாம போகுமா என்ன? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் யாருக்கு புரியுதோ இல்லியோ, 2009 பேரழிவுக்கு அப்புறம், சுட சுட யாழ் போய் வந்த கிருபன் அண்ணாச்சிக்கு புரியாம போகுமா என்ன? :huh:

ரொம்ப உங்களை நீங்களே மெச்சிக்கொள்ள வேண்டாம் :lol: . யாழில் இருந்து வெளியேறி புலம்பெயர்ந்த பின்னர் இன்னமும் அங்கு போகவில்லை. போகும் எண்ணமும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.