Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெருவிளக்கைப் பொருத்துவதற்கே கூட்டமைப்புக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது

Featured Replies

உள்ளுராட்சித் தேர்தலில் தெருவிளக்கைப் பொருத்துவதற்கே கூட்டமைப்புக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது! - பசில் ராஜபக்ச

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரிக்கும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அமெரிக்க காங்கிரஸின' வெளிவிவகாரக் குழுவின் தீத்மானம் ஆகியவை தொடர்பில் சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கடுந்தொனியில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி என்பது தமிழ் மக்கள் அவர்களுக்கு வழங்கிய ஆணை என்று கருதமுடியாது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் பிரதேச சபைத் தேர்தலில் பெற்ற வெற்றியானது தமிழ் மக்கள் வழங்கிய ஆணை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது. ஆனால் சிறிலங்கா ஜனாதிபதிக்கு முழு நாடுமே ஆணை வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தல் என்பது உண்மையில் தெருவிளக்குகளை பொருத்துவதற்கும், குடிநீர் குழாய்களை அமைப்பதற்கும் தான் அதிகாரம் கொண்டது. இந்நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்களின் ஆணை கிடைத்துள்ளது என்றும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் படி மக்களின் ஆணை என்பது சர்வஜன வாக்கெடுப்பு மூலமோ அல்லது ஜனாதிபதித் தேர்தல் மூலமோ அல்லது நாடாளுமன்றத் தேர்தல் மூலமோ தான் பெறப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.<

அதேவேளை, போரின் போது இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் தொடர்பில் ஹில்லரியும், ஜெயலலிதாவும் சந்தித்த போது கவலை வெளியிட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட பசில் ராஜபக்ச, அவர்கள் நட்பு ரீதியாக கவலையை வெளியிட்டிருந்தால் அதை வரவேற்பதாகக் கூறியுள்ளார். ஆனால் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினையை அமெரிக்கா முதலில் தீர்க்க வேண்டும் என்றும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை விட தமிழ்நாட்டில் வறுமை நிலை மோசமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் பற்றி கவலைப்பட முன்னர் ஜெயல்லிதா தமிழ்நாட்டில் வறுமை நிலையில் உள்ளவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்களின் எந்தவொரு கரிசனையும் தமது தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கு இடையூறுகளை விளைவிப்பதாக இருக்கக் கூடாது என்றும் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸின் வெளிவிவகாரக் குழுவில் இலங்கைக்கான உதவிகளை தடைசெய்யக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் அதுகுறித்து கவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், அமெரிக்கா இதனை நடைமுறைப்படுத்தும் என தான் கருதவில்லை எனவும் பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={D10BF9B6-4AEF-4C50-B1B5-E2032CA39E0D}

ஒரு வாரத்திற்கு முன் தான் இலங்கையின் காரியக்காற தூதுவர் ஜெயலலிதாவுக்கு தான் நேரடியாகச் சென்று மிகவும் பவித்திரமாக அழைப்பிதழ் கொடுத்திருந்தார். அதற்குள்ளே இப்படி கீழித்தெறிகிறார் பசில். இந்த தந்திரம் கருணாநிதியிடமும் மனமோகன் சிங்கிடமும் நல்லாய் வேலை செய்தது. அதையே ஜெயலலிதாவுக்கும் விட பார்க்கிறர்கள். (யசோதாவின் சூட்டுக்காயம் ஆறமுன் இப்பாடி துள்ளுகிறர் பசில்)

"அதேவேளை, போரின் போது இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் தொடர்பில் ஹில்லரியும், ஜெயலலிதாவும் சந்தித்த போது கவலை வெளியிட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட பசில் ராஜபக்ச, .......................................

..................................................

இலங்கையை விட தமிழ்நாட்டில் வறுமை நிலை மோசமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் பற்றி கவலைப்பட முன்னர் ஜெயல்லிதா தமிழ்நாட்டில் வறுமை நிலையில் உள்ளவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்"

  • கருத்துக்கள உறவுகள்

சபாஸ் சரியான போட்டி.

எனி சுமந்திரனும்.. சம்பந்தரும் என்ன சொல்லப் போகினம் என்று பார்ப்பம்.

சுமந்திரன் சொல்வாராக்கும்.. ஐக்கிய இலங்கைக்குள்.. மூவின மக்களும் சேர்ந்து கம்பம் நடுவோம்.. புலம்பெயர் தமிழ் மக்கள் மாற்றி யோசிச்சு.. போடுவது நியோன் லைட்டா.. ஆர்கன் லைட்டா என்று தீர்மானிக்கட்டும் என்று கூட இருக்கலாம்.

சம்பந்தர் சொல்லக் கூடும்.. தெருவிளக்குப் போடுவது இந்தியாவுக்கு வெளிச்சம் அடிக்கும் அதனால் தமிழ் மக்கள் இருட்டுக்குள் இருப்பதே நல்லது. இந்தத் திட்டத்தை கைவிடுவோம் என்று. :lol::unsure::o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சபாஸ் சரியான போட்டி.

எனி சுமந்திரனும்.. சம்பந்தரும் என்ன சொல்லப் போகினம் என்று பார்ப்பம்.

சுமந்திரன் சொல்வாராக்கும்.. ஐக்கிய இலங்கைக்குள்.. மூவின மக்களும் சேர்ந்து கம்பம் நடுவோம்.. புலம்பெயர் தமிழ் மக்கள் மாற்றி யோசிச்சு.. போடுவது நியோன் லைட்டா.. ஆர்கன் லைட்டா என்று தீர்மானிக்கட்டும் என்று கூட இருக்கலாம்.

சம்பந்தர் சொல்லக் கூடும்.. தெருவிளக்குப் போடுவது இந்தியாவுக்கு வெளிச்சம் அடிக்கும் அதனால் தமிழ் மக்கள் இருட்டுக்குள் இருப்பதே நல்லது. இந்தத் திட்டத்தை கைவிடுவோம் என்று. :lol::unsure::o

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை, தமிழ்மக்கள் மாபெரும் வெற்றி பெறச் செய்தமையை.... சுமந்திரன், சம்பந்தன் போன்றோர் தவறாக எடை போடுகின்றார்கள் போல் உள்ளது.நெடுக்ஸ்,

உண்மையில் சிங்களக் கட்சிகளோ... ஒட்டுக் குழுக்களோ வரக்கூடாது என்று தான் த.தே.கூட்டமைப்புக்கு அம்பாறையிலிருந்து, பருத்தித்துறை வரை ஒற்றுமையாக வாக்களித்தார்கள். மற்றும் படி மூவின மக்களும் ஏற்கக் கூடிய தீர்வு என்பதன் கொள்கையிலிருந்து இவர்கள் விலகி வரவேண்டும். தமக்கு கிடைத்த பதவியை பயன் படுத்தி சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்தி தமிழ்மக்களுக்கு விடிவு ஏற்படுத்தவே இவர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்தார்கள்.

தமிழர்கள் யாருக்கு வாக்களித்தார்கள்,? எதற்காக வாக்களித்தார்கள் என்றெல்லாம் இவர்களால் எண்ண முடியாமையினால் ஏற்பட்ட வயிற்றெரிச்சலில் முனங்கியிருக்கிறார். இதைக் கர்ஜனை என்று அவர் நினைக்கக் கூடும். அத்தனை பலமிருந்தும் தமிழர்கள் தங்களது விருப்பத்தினை சுயத்தோடு வெளிக்காட்டியிருக்கிறார்கள். நீ என்ன செய்தால் என்ன? எத்தனைபேரைக் கொன்றாலென்ன? நாங்கள் தமிழர்கள்தான் என்ற வெளிப்பாடாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

இதற்கு தெரு விளக்கைப் பொருத்துவது என்று ஏளனமாகச் சொல்கிறார் என்று நினைத்துவிடக் கூடாது. அவர்களிடம் ஆள் ஆயுத பலங்களுண்டு. தமிழரும் தமது பலத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சிங்களவன் சொல்லுறத சொல்லிட்டு போறான், அவன் அப்ப்டிதான் பேசுவான்,ஏன்னா தமிழர்களின் மிக நீண்டகால எதிரி!

எங்களுக்குள்ளதான் சின்ன தளம்பல்! எப்போ என்ன செய்தி வந்தாலும்,ஒப்பாரி வைக்குற ரேஞ்சில பயப்பிடுறது!

நாடுகடந்த அரசின் பிரதமர், தமிழக தற்போதைய முதல்வர்,தமிழ்தேசிய கூட்டமைப்பு ,அனைவருமே சேர்ந்து, இனி ஒரு எதிரிகூட எங்களுக்குள்ள உருவாக்காம, "சர்வதேசத்தோட" கைகோர்க்கணும்!

அதை செய்ய,அவங்களுக்கு மட்டுமே சக்தி இருக்கு!!

அதை விட்டு, சும்மா, வாண வேடிக்கை காட்டுறம் பேர்வழி என்று போகிற ,குழம்புற உணர்ச்சிகளிலான எமது கருத்துக்கள் ,மஹிந்த குடும்பம், மீண்டும் மீண்டும், பயம் இல்லாம, தெம்புடன் வாழ வழி செய்யும்!!

ஏன்னா தமிழனின் ,இந்த குழம்பிய குட்டையிலதானே, இதுநாள்வரை மீன்புடிக்குறான் சிங்களவன்! shame on you guys!

  • கருத்துக்கள உறவுகள்

:( இதில் பகிடி என்னவென்றால், கூட்டமைப்பினரும் தமிழரும் போர்க்குற்ற விசாரணைகள் குறித்து இனிமேல் பேசக்கூடாதென்று இந்தியா சம்பந்தனிடம் அன்புக்கட்டளையிட்டதாம். அதற்குப் பிரதியுபகாரமாக 13 ஆம் திருத்தச் சட்டத்தை மீன்டும் தூசி தட்டி சிங்கலம் எடுத்துவரும் என்று இந்தியாவால் வாக்குறுதி வழங்கப்பட்டதாம். ஆனால் ஜெயலைதா அண்மையில் தமிழ்நாடு பாராளுமன்றத்தில் இலங்கைக்கெதிரான பொருளாதாரத்தடையை கொன்டுவரவேண்டும் என்று தீர்மானம் நிரைவேற்ரிய அடுத்த நாளே மகிந்தவைச் சந்தித்தன் சிவ சங்கர் மேனன் என்பவன், "ஜெயலைதாவை நீங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கத் தேவையில்லை, கருணாநிதியை எப்படி தில்லியின் கட்டலைக்குப் பணிந்து நடக்கும் பெட்டிப் பாம்பாக மாற்றினோமோ அதேபோல ஜெயலைதாவையும் மாற்றிக் காட்டுவோம், நீங்கள் எதற்கும் பயப்பட வேன்டாம்". என்று சொல்லி ஆறுதல் படுத்தியிருக்கிறான். அதுமட்டுமல்லாமல், "13 ஆம் திருத்தச் சட்டத்தை முன்வைக்கும்படி இந்தியா ஒருபோதுமே இலங்கையைக் கேட்கப்போவதில்லை" என்றும் அவன் அப்போது மகிந்தவிடம் உறுதியளித்திருக்கிறான்.

ஆனால் இந்தியா சென்று பேட்டியளித்தபோது ஏதோ அரசியல் தீர்வுபற்றிப் பேசியதாக மலையாள நாய் மேனன் கதையளக்க, மகிந்தவோ, "எந்த அரசியல் தீர்வுபற்றியும் மேனன் எம்முடன் பேசவில்லை" என்று குட்டை உடைத்துவிட்டான்.

பசிலும் மற்றவர்களும் தடிப்புடன் பேசுவதற்கான காரணம் மேனன் ஜெயலலிதாவைப் பற்றிப் பயப்பட வேண்டாம், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று உறுதியளித்ததுதான்.

தமிழர் மீதான காழ்ப்புணர்வே மலையாளிகளான மேனன், நாராயாணன், நம்பியார் போன்ற மலையாளிகள் தொடர்ந்தும் எம்மை அழிக்கத் துனைபோவதன் காரனம். தில்லியில் தனது நண்பர்களிடம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் பற்றிப் பேசும்போது, "மடையர்கள், கோமாளிகள், இழிஜாதியினர்" என்று பொருள்பட மேனென் பேசியிருப்பதாக கிரவுண்ட் ரிப்போட் செய்தி வெளியிட்டிருக்கிரது.

சில மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்குத் தஞ்சம் பிழைக்க வந்த மலையாளி நடிகன் ஜெயராம் கூட ஒருதடவை தனது வீட்டு வேலைக்கறியான தமிழ்ப்பெண்னை, "கறுத்த எருமைமாடு" என்று தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.

என்ன செய்வது, தமிழகத்துத் தமிழனுக்கு ரோசம் என்று இருப்பதே தெரியாதபோது இப்படியான மலையாளிகளின் கொட்டம் அடங்கப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

:lol:சிங்களவன் விரும்பிய தீர்வுதான் தமிழர்க்குச் சரி என்று சொல்ல சுமந்திரன் என்பவன் யார் ?? சிங்களவன் விரும்புகிற தீர்வு என்னெவென்று இந்த நாதாரிக்கு யாராவது சொல்லுங்களேன். இவ்வளவு காலமும் நித்திரையில் இருந்தானா இந்த சோமாறி??

சிங்களவர் விரும்புகிற தீர்வைப் பெறத்தானா இவ்வளவு தமிழரும் உயிர் விட்டார்கள்?? இவர்களெல்லாம் தமிழரின் பிரதிநிதி???

சம்பந்தனுக்கும், ஆனந்தசங்கரிக்கும் மிகப் பொருத்தமான வேலை.

  • கருத்துக்கள உறவுகள்

தெருவுக்கு விளக்கு போடுவதற்காக மகிந்த குழு வடக்கில் தேர்தலுக்காக முகாமிட்டது – அரியநேத்திரன் பதிலடி!

Published on July 30, 2011-12:54 am No Comments

தெருவுக்கு விளக்கு போடுவதற்கும் குழாய் நீர் வழங்கவுமே அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் காலத்தில் அமைச்சர்கள் வடக்கில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்தனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தெரு விளக்குகளைப் பொருத்தும் ஆணையே தமிழ் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கியுள்ளனர் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் கூறிய கூற்றுக்கு பதிலளிக்கும் விதத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் மேலுள்ளவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது. வடபகுதிக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்த 35 அமைச்சர்களும் ஜனாதிபதி அவர்களும் தெரு விளக்கு போடவும் குழாய் நீர் வழங்கவுமே பாடுபட்டனர் என தற்போது தெரியவந்துள்ளது.

ஆனால் இதற்கு கூட இவர்கள் தகுதி இல்லாதவர்கள் என தமிழ் மக்கள் நினைத்ததால்தான் அவர்களுக்கு வாக்களிக்காது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர். எனவே இந்த அரசாங்க அமைச்சர்களும் ஜனாதிபதியும் அவர்களும் தாங்கள் தெருவுக்கு விளக்கு போடுவதாக கூறுவதைக்கூட தமிழ் மக்கள் நம்புவதாக இல்லை.

மேலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் கூறுவதுபோன்று உற்று நோக்கினால் தமிழ் மக்கள் தெருக்களுக்கு விளக்கு போடுவதை எதிர்பார்க்கவில்லை அவர்களுக்கான உரிமையை வெல்ல வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார்கள். தெருவிளக்கு தேவையென்றால் அரச கட்சிக்கே அவர்கள் வாக்களித்திருப்பார்கள். எனவே எந்த வகையில் உற்று நோக்கினாலும் பசில் ராஜபக்ச அவர்கள் கூறுவது சிறிதளவும் பொருத்தமில்லாத விடயமாகும்.

ஆகையால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களித்தார்கள் என்பதனை இந்த அமைச்சர்கள் நன்கு அறிந்திருந்தும் வேண்டுமென்றே ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு விதமாக பிதற்றுகிறார்கள். நாவில் வருகின்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தமென்றே தெரியாமல் பேசுகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.saritham.com/?p=28245

  • கருத்துக்கள உறவுகள்

:lol:சிங்களவன் விரும்பிய தீர்வுதான் தமிழர்க்குச் சரி என்று சொல்ல சுமந்திரன் என்பவன் யார் ?? சிங்களவன் விரும்புகிற தீர்வு என்னெவென்று இந்த நாதாரிக்கு யாராவது சொல்லுங்களேன். இவ்வளவு காலமும் நித்திரையில் இருந்தானா இந்த சோமாறி??

சிங்களவர் விரும்புகிற தீர்வைப் பெறத்தானா இவ்வளவு தமிழரும் உயிர் விட்டார்கள்?? இவர்களெல்லாம் தமிழரின் பிரதிநிதி???

:rolleyes::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.