Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெர்மன் டென்மார்க் சுவிடன் ஊடாக நோர்வே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொலைபேசி மணி அடித்ததும் பாய்ந்து விழுந்து எடுத்தா மறு பக்கத்தில் சிவா டென்மார்க் இல் இருந்தது கதைத்தான். , என்ன மாதிரி நாளைக்கு எங்கடை ஆக்கள் உங்கடை பக்கம் வருகினம் நீயும் வாறியா என்றான்,நானும் ஓமென்று சொல்லி விட்டு வைத்தேன்.பல மாதங்களுக்கு முன்னர் நோர்வே போக ஆசைப்பட்டு அவனிடம் கேட்டிருந்தேன்.அதை ஞாபகம் வைத்திருந்து எனக்கு உதவி செய்ய வந்ததையிட்டு மகிழ்ந்தேன்.

அடுத்த நாள் விசாவும் இல்லை ஒரு கோதாரியும் இல்லை நான் டென்மார்க்கில் நின்றேன்.

எப்படா நோர்வே போவது என்று நான் சிவாவை நச்சரிக்க அவனும் வந்தனி நின்று

ஒரு கிழமை டென்மார்க்கை சுற்றிப் பார்த்து விட்டுப் போகலாம் என்றான்.

எனக்கென்றால் ஒரே பயம் எப்ப போலீஸ்காரன் வந்து அப்பிக் கொண்டு போகப்போகின்றானோ என்று.

வேண்டாத கடவுளே இல்லை.ஒரு கிழமை ஒரு வருடம் மாதிரி மெல்ல மெல்ல போய்விட்டது.

என்னுடைய நச்சரிப்பைத் தாங்க முடியாமல் சிவாவும் தனக்குத் தெரிந்த

எனக்கு அறிமுகம் இல்லாத ஒருவரை அழைத்து வந்தான்.

மச்சான் இவர் தான் மணி :o உங்களைப் பத்திரமாக நோர்வேயில் இறக்கி விடுவார் .

ஒன்றுக்கும் யோசிக்காமல் போய் வாருங்கள் என்றான்.

இதற்குள் என்னுடன் இன்னொருவரையும் சேர்த்துவிட்டார்கள்.

சரியென்று மணி அண்ணை :o எங்களைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு

ப்றிட்ரிச்ஸ்பெர்க்(Friedsrichburg) என்ற துறையுடாக கோடேபெர்க்(Goteborg )

என்ற சுவிடன் நாட்டின் துறையை அடைந்தார் .

தம்பிமாரே நான் காரை :lol: எடுத்துக் கொண்டு வாறன் நிங்கள் இரண்டுபேரும் கார் வார வாசலுக்கு வாருங்கள் என்று குறி விட்டு மணி அண்ணை முன்னுக்குப் போய்விட்டார்.

எல்லா வாகனங்களும் போய் விட்டன் மணியண்ணையை மட்டும் காணவில்லை.

அக்கம் பக்கம் எல்லாரும் எங்களையே பார்த்தபடி போகின்றார்கள்

நாங்களோ எந்தப் பக்கத்தாலை போலீஸ்காரன் வாரானோ கடவுளே என்று பயந்தபடி........ :o

வாத்தியாரே, மணியண்ணா காறோட வந்தாரா?? :blink::mellow:

  • கருத்துக்கள உறவுகள்

விசா இல்லாமல் ஜெர்மன் டென்மார்க் சுவிடன் ஊடாக நோர்வே போன வாத்தியாருக்கு துணிவு அதிகம். :rolleyes:

விசாவோடை வந்த, மணியண்ணைக்கு என்ன நடந்தது?

விசா இல்லாமல் ஜெர்மன் டென்மார்க் சுவிடன் ஊடாக நோர்வே போன வாத்தியாருக்கு துணிவு அதிகம். :rolleyes:

விசாவோடை வந்த, மணியண்ணைக்கு என்ன நடந்தது?

அடுத்த அத்தியாயம் வரும்வரை பொருத்திருக்கவும்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த அத்தியாயம் வரும்வரை பொருத்திருக்கவும்.... :D

தொடர் கதை எழுதுகிறவர்களுக்கு, ஆக்களின் பொறுமையை சோதிக்கிறதே பிழைப்பாய் போச்சுதையா...... :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர் கதை எழுதுகிறவர்களுக்கு, ஆக்களின் பொறுமையை சோதிக்கிறதே பிழைப்பாய் போச்சுதையா...... :D:lol:

நன்றி குட்டி, ஜில் ,சிறி அண்ணா :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நேரம் கழிய மணியண்ணையின் தலை துரத்தில் தெரியத தான் எங்களுக்குக் கொஞ்சம்

தைரியம் வந்திச்சுது. கிட்ட வந்த மணியண்ணை எல்லாம் பிழைச்சுப் போட்டுது கெதியா எனக்குப் பின்னாலை வாங்கோ எண்டார்.ஏன் மணியண்ணை உங்கடை கார் எங்கை எண்டு என்னோடு வந்தவர் கேக்க கார் ஸ்டாட் அடிக்குதில்லை தள்ள வேணும் அங்காலை போலீஸ்காரன் நிக்கிறான் கவனமாய் பாத்து வாங்கோ எண்ட மணியண்ணை காருக்குள்ளைபோய் ஏற நாங்கள் ரெண்டுபேருமா காரைத் தள்ளினோம் .

ஒருமாதிரி தள்ளி இறக்கமாக இருக்கும் கப்பலின் வெளி வாசலுக்கு வந்தும் கார் ஸ்டாட் அடிக்கேல்லை. :o மணியண்ணை அந்த நேரம் எங்களைப் பேசின பேச்சு கொஞ்சம் இல்லை. :lol:

நானும் மற்றவரும் இந்தாளோடை சண்டை பிடிச்சா இடையிலை விட்டுட்டு போயிடும் எண்டு எங்களுக்கை கதைச்சுக் கொண்டு அண்ணை இறக்கத்திலை கட்டாயம் அடிக்கும் எண்டம்.மணியண்ணையும் சரிசரி ஊண்டித் தள்ளுங்கோ எண்டார்.நாங்களும் பயம் ஒருபக்கம் பசி ஒரு பக்கம் எலுமானவரை தள்ளினம். மற்றவர் அந்த நேரம் பாத்து கப்பல்லை மணியண்ணை சாப்பாடு வாங்கித் தராததை ஞாபகப்படுத்தி நக்கல் வேறை.

ஒருமாதிரிக் காரை வீதிக்கு கொண்டு வந்தும் ஸ்டாட் மட்டும் அடிக்கேல்லை.

நிமர்ந்து பாத்தால் சோதனைப் பகுதி :o கண்ணுக்கு முன் இருக்குது.என்ன செய்வம் எண்டு யோசிக்கிரதுக்குள்ளை முன்னாலையும் பின்னாலையும் உந்துருளியிலை போலீஸ்காரன்.

ஒருத்தன் எங்களிட்டையும் மற்றவன் காருக்குள்ளாலை இறங்கின மணியண்ணை

பக்கமாயும் வந்தார்கள்.எனக்கு கிட்ட வந்தவன் தன்ரை பாசையிலை எதோ கேட்டான்.

எனக்கு ஒண்டும் விளங்கவில்லை.நான் மற்றவரைப் பார்த்தேன் அவர் மணி அண்ணையைப்

பார்த்தார். மணிய அண்ணை அந்தப் போலீஸ்காரன் உடன் ஏதோ தன்ரை காரைக் காட்டிக் கதைத்துக் கொண்டிருந்தார் .பிறகு தன்ரை பையுக்குள்ளாலை விசாக்களையும் பேப்பர்களையும் எடுத்துக் கொடுக்க மற்றவன் அதைக் காட்டி எங்கடை எங்கை எண்ட மாதிரிக் கேட்டான். நாங்களும் டென்மார்கிலை சிவா சொல்லித்தந்த மாதிரி ஸ்ரீலங்கா :) தமிழ் எண்டோம் .

அதுக்கு மேலை எங்களை ஒண்டும் கேக்கவில்லை. மணி அண்ணையிட்டை ஒரு பத்து நிமிடம்

வரை கதைத்தார்கள் :blink: .கொங்கச நேரத்தாலை எங்கள் இரண்டு பேரையும் சோதனைப் பகுதிக்குள்

கொண்டு போய் அந்த :) மாதிரிச் சோதிச்சுப் போட்டு ஒரு காருக்குள்ளை ஏத்தினாங்கள்.

என்னோடைவந்தவர் இனி நாங்கள் நோர்வேக்குப் போக முடியாது சுவிடனிலை

தான்இருக்க வேணும் போலை எண்டார் :lol: .நானும் எனக்குள்ளை இந்தாளுக்கு ஒரு இழவும் தெரியாது

எண்டு நினைச்சுப் போட்டு தலையை மட்டும் ஆட்டினேன். இரண்டு நிமிசத்திலை கார் நாங்கள் வந்த கப்பலிற்கு அருகில்வந்து நின்றது. விஷயம் விளங்கிவிட்டது .டென்மார்க்கிற்கு எங்களைத் திருப்பி அனுப்பப் போகின்றார்கள் :o எண்டது மட்டும் விளங்கிவிட்டது. ......

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொடர் வாத்தியார்..! புலம்பெயர்ந்த ஒவ்வொருவடுக்கும் பின்னால் ஒவ்வொரு கதை இருக்கும்..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமாதிரி தள்ளி இறக்கமாக இருக்கும் கப்பலின் வெளி வாசலுக்கு வந்தும் கார் ஸ்டாட் அடிக்கேல்லை. :o மணியண்ணை அந்த நேரம் எங்களைப் பேசின பேச்சு கொஞ்சம் இல்லை. :lol:

வாத்தியார் நல்லா இருக்கு, வரைவில் மறுபகுதியை தரவும். இப்படி ஆட்கள் மூல வருத்தமுடையவர்கள்,

  • கருத்துக்கள உறவுகள்

நானும் குடும்பமாக 2009இல் ஜேர்மனியூடாக டென்மார்க் சுவீடன் நோர்வே போய்வந்தோம். சுவீடன் சென்று மீண்டும் திரும்பி டென்மார்க் வந்து டென்மார்க்கிலிருந்து கப்பலில் நோர்வே போய் வந்தோம். எங்கும் ஒரு தடவை கூட எம்மிடம் எதுவித சோதனைகளோ விசா சம்பந்தமான விசாரிப்புக்களோ இருக்கவில்லை. அந்த கப்பலுக்குள்ளும் உள்ளே போகும்போதோ வெளியில் வரும் போதோ எந்தவித சோதனைகளும் இருக்கவில்லை. நாங்களே பேசிக்கொண்டோம் இதற்குள்ளாலதான் ஆட்களை இலகுவாக கடத்துவார்களோ என்று. அந்தளவுக்கு பயணம் சுதந்திரப்படுத்தப்பட்டு இருந்தது.

டிஸ்கி : அந்த கப்பல் பயணம் வாழ்வில் மறக்கமுடியாதது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

-------

ஒருமாதிரி தள்ளி இறக்கமாக இருக்கும் கப்பலின் வெளி வாசலுக்கு வந்தும் கார் ஸ்டாட் அடிக்கேல்லை. :o மணியண்ணை அந்த நேரம் எங்களைப் பேசின பேச்சு கொஞ்சம் இல்லை. :lol:

நானும் மற்றவரும் இந்தாளோடை சண்டை பிடிச்சா இடையிலை விட்டுட்டு போயிடும் எண்டு எங்களுக்கை கதைச்சுக் கொண்டு அண்ணை இறக்கத்திலை கட்டாயம் அடிக்கும் எண்டம்.மணியண்ணையும் சரிசரி ஊண்டித் தள்ளுங்கோ எண்டார்.நாங்களும் பயம் ஒருபக்கம் பசி ஒரு பக்கம் எலுமானவரை தள்ளினம். மற்றவர் அந்த நேரம் பாத்து கப்பல்லை மணியண்ணை சாப்பாடு வாங்கித் தராததை ஞாபகப்படுத்தி நக்கல் வேறை.

-------

அப்ப..... வாத்தியாருக்கு,

விசா இல்லாமல் போனது பயமில்லை. மணியண்ணை இடையிலை, பாசை தெரியாத ஊரிலை விட்டுட்டுப் போயிடுவார் எண்டு பயமோ.... :lol:

வாத்தியாருடன் வந்த கூட்டாளி, சரியான சாப்பாட்டு ராமன் போலிருக்கிறான். :D

... திரை கடல் ஓடினோம், திரவியம் தேட மட்டுமல்ல ... புலம்பெயர நாம் பட்ட இன்னல்கள் ஆவணமாக்கப்பட வேண்டும்! ....

... ஆறு கடக்க, ஆற்றோடு அள்ளுப்பட்டுச் சென்றோரும், பெட்டிகளுக்குள் அடைபட்டு மூச்சு விட்டோரும், உடல்களை விற்கக்கூட திணிக்கப்பட்டோரும், நட்டாற்றில் கைவிடப்பட்டோரும் , ..., ... சொல்லில் அடங்காதவை! ... மறக்கக்கூடியவைகளா???? ... மறந்து விடுகிறோம் நாம் வந்த பாதைகளை!!!!!!!!!!!

... நன்றிகள் வாத்தியார், தொடருங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.