Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அப்பா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாகவே 'பாசம்" அப்பிடி என்றால்........எல்லோருக்கும் நினைவில் வருவது அம்மா..............ஆனால்....தன்னுடைய பாசங்களை எல்லாம் நெஞ்ஞங்களில் சுமந்து குடும்பத்துக்காக ஒடி ஒடி உழைத்து சற்று கண்டிப்பு...சற்று பாசம்..என்று குடும்பத்தை கொண்டு இயக்குவது தந்தை என்னும் இந்த மாபெரும் உறவு......தன்னுடைய பாசத்தை நேரடியாக காட்டா விட்டாலும் மறைமுகமாக பிள்ளைக்கு ஒன்றென்றால்..துடிக்கும் அந்த துடிப்பு தந்தைக்கே உரித்தான ஒன்று..................

அந்த வகையில்...பல அம்மா சென்டிமென்ட் திரைப்படங்கள் தமிழ் திரையுலகை ஆண்டிருந்தாலும்...தந்தையினுடைய பாசத்தை சொல்லும்...திரைப்படமாக வெளிவந்தது..1987 இல் வெளிவந்..'அன்புள்ள அப்பா" திரைப்படம்......இதில் அப்பாவாக சிவாஜியும்...மகளாக..நதியாவும் நடித்திருந்தார்கள்.......மனைவி இல்லாமல் மகளை வளர்த்து அவளுக்கு திருமணம் செய்து வைப்பதே கதையின் சுருக்கம்........இதில் நடிகர் சிவாஜி அப்பாவாகவும்.....நதியா மகளாகவும் போட்டி போட்டு நடித்திருந்தார்கள்.......இத்தனை வருடங்களாக மகளை செல்லமாக வளர்த்து அவளை திருமணம் செய்து வைக்கும் போது ஒரு பாசாக்காற தந்தையாக சிவாஜி அழுவதும்...அதே நேரம் ஒரு பொறுப்புள்ள அப்பாவக மகிழ்வதும்....மகளை கட்டி கொடுத்து விட்டு புகுந்த வீட்டில் மகள் எப்பிடி இருப்பாள் என்று நினைத்து கலங்குவதும்...மகளை பார்க்க பேச துடிப்பதும் என்று நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்....நிச்சயமாக இந்த படத்தை பாத்தவார்கள் அனைவருமே அழுதிருப்பார்கள்....அந்தளவிற்க்கு தந்தையென்னும் அந்த மாபெரும் உறவை அதன் பாசத்தை...அதனுடைய மறுபக்கத்தை கூறிய திரைப்படம்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த வகையில் கள உறவுகளே...உங்களுக்கு உங்கள் தந்தையுடன் ஏறப்பட்ட மறக்க முடியாத அணுபவங்களை இன்றும் நீங்கள் உங்களுக்குள் சுமந்திருக்ம் அந்த இனிமையதன நிகழ்வுகளை மற்றவர்களுடனும் பகிர்ந்துக்கலாமே....

அந்த வகையில் கள உறவுகளே...உங்களுக்கு உங்கள் தந்தையுடன் ஏறப்பட்ட மறக்க முடியாத அணுபவங்களை இன்றும் நீங்கள் உங்களுக்குள் சுமந்திருக்ம் அந்த இனிமையான நிகழ்வுகளை மற்றவர்களுடனும் பகிர்ந்துக்கலாமே...

இணைப்பிற்கு நன்றி சுண்டல்.

எனது தந்தை இன்னும் ஊரில் இருக்கிறார் என்று நினைத்து மனதைத் தேற்றிக் கொள்வேன், பல சமயங்களில் அவரின் இறுதிச்சடங்கு நினைவில் வந்து மனதைக் கனமாக்கி, கண்களையும் இருளச்செய்யும்... :(

அவர் உயிரோடு இருந்தபோது அவரிடம் கல்வியறிவைப் பெற்றவர்கள் அவர் இல்லாத போது அவரைப்பற்றிக் கூறும் நேரங்களில் 'இறந்தும் வாழும் மனிதர்' என்பதை உறுதி செய்து கொள்வேன். :wub::)

பொதுவாகவே 'பாசம்" அப்பிடி என்றால்........எல்லோருக்கும் நினைவில் வருவது அம்மா..............ஆனால்....தன்னுடைய பாசங்களை எல்லாம் நெஞ்ஞங்களில் சுமந்து குடும்பத்துக்காக ஒடி ஒடி உழைத்து சற்று கண்டிப்பு...சற்று பாசம்..என்று குடும்பத்தை கொண்டு இயக்குவது தந்தை என்னும் இந்த மாபெரும் உறவு......தன்னுடைய பாசத்தை நேரடியாக காட்டா விட்டாலும் மறைமுகமாக பிள்ளைக்கு ஒன்றென்றால்..துடிக்கும் அந்த துடிப்பு தந்தைக்கே உரித்தான ஒன்று..................

...

உண்மை! நல்லதொரு கருத்து!!

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று, இதனை ஏற்கெனவே இங்கே இணைத்திருந்தேன்...

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு தந்தையானால்.. நிச்சயம் அம்மாவை வெல்லக் கூடிய அளவுக்கு குழந்தைகள் மீது அன்பு காட்டுவேன். அன்புக்கு அம்மா என்பதை மாற்றிக் காட்டுவது கடினம் அல்ல. கொஞ்சம் நேரத்தை தினமும் பிள்ளைகளுக்காகவும் ஒதுக்கிக் கொண்டால் அது சாத்தியப்படும் என்று நினைக்கிறேன். இதன் மூலம்.. அம்மாக்களுக்கு காய்ச்சல் குலப்பன் வர வைக்க முடியும். :D

பெரும்பாலான தந்தையர்.. குழந்தைகளின் பொறுப்புக்களை பெரும்பாலும் தாய்மாரிடம் விட்டுவிடுவதால்.. தந்தை என்பவரின் நேரிடை தொடர்பு குறைவதால்.. அவர்களின் அன்பு பாசத்தைப் பிள்ளைகள் சரிவர பெறவும் உணரவும் முடிவதில்லை. இந்த நிலையைக் களைந்து தாய்க்கு ஒப்பாக இல்லாவிட்டாலும் போட்டியாக அமையக் கூடிய வகைக்கு குழந்தைகளோடு அன்பு பாசம் நேசம் பரிமாற தினமும் நேரத்தை ஒதுக்கி தந்தையர் வாழ்ந்தால்... நிச்சயம் குழந்தைகள் தந்தை அன்பையும் உணரவே செய்வர். அது அவர்கள் வளர்ந்த பின்னும் அவர்களில் பிரதிபலிக்கும்.

எங்கள் அப்பா ஒன்றைச் செய்வார். நான்.. அம்மாவிடம் கேட்டு அவா வாங்கித் தராததை.. அவதானித்து விட்டு சரியான நேரத்தில் அதை வாங்கித் தருவார். அதனால் அம்மாவிடம் பேச்சு வாங்குவது அவராக இருந்தாலும்.. என்னிடம் அன்பான அப்பா என்ற உணர்வை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். எனக்கு அந்த tactic சும் பிடிச்சிருக்குது. :D:)

Edited by nedukkalapoovan

அன்பான தந்தைமாருக்கு இந்தப் பாடலும் சமர்ப்பணம் :)

படம்: தாம்பத்யம் ஒரு சங்கீதம் (1982)

பாடல்: நான் தாயுமானவன் தந்தையானவன்

பாடியவர்:ஜெயசந்திரன்

இசை; விஸ்வனாதன்

http://www.inbaminge.com/t/t/Thambathyam%20Oru%20Sangeetham/Neelak%20Karu%20Vizhiyil.eng.html

நீலக்கருவிழியில் ஒலை கொண்டு மை எழுதி

ஏலக் கருங்குழலில் இதமாக நெய் தடவி

வாரி தலைசீவி, வகிடெடுத்து பின்னலிட்டு

வாரி அணைக்க வரும் வாஞ்சையில் நான் தாயடியோ

நான் தாயுமானவன்

தந்தையானவன்

அன்பு சேவகன்

அருமை நாயகன்

நான் தாயுமானவன்

தந்தையானவன்

அன்பு சேவகன்

அருமை நாயகன்

அடி நானே உனது உயிர்க்காப்பு

கண்ணே நானே இடுவேன் வளைகாப்பு

அடி நானே உனது உயிர்க்காப்பு

கண்ணே நானே இடுவேன் வளைகாப்பு

நானே இடுவேன் வளைகாப்பு

நான் தாயுமானவன்

தந்தையானவன்

அன்பு சேவகன்

அருமை நாயகன்

புன்னகையில் முத்தெடுத்தும் இள மானே

அதை கண்ணிரண்டில் சிந்தி விட விடுவேனோ

புன்னகையில் முத்தெடுத்தும் இள மானே

அதை கண்ணிரண்டில் சிந்தி விட விடுவேனோ

நெஞ்சத்தில் எதையும் நினைக்காதே

முன்னை போல் அதிர நடக்காதே

நெஞ்சதில் எதையும் நினைக்காதே

முன்னை போல் அதிர நடக்காதே

வைரத்தை சுமக்கும் இடையோடு

தங்கமே மெதுவாய் நடைபோடு

தங்கமே மெதுவாய் நடைபோடு

நான் தாயுமானவன்

தந்தையானவன்

அன்பு சேவகன்

அருமை நாயகன்

பிள்ளைக்கு நீ வாயார பால் வார்ப்பாய்

அவன் பெற்றவள் உன் வயிராற பால் வார்ப்பான்

பிள்ளைக்கு நீ வாயார பால் வார்ப்பாய்

அவன் பெற்றவள் உன் வயிராற பால் வார்ப்பான்

திங்கள் போல் மழலை முகம் பார்த்து

தென்றல் போல் மெதுவாய் மடி சேர்த்து

திங்கள் போல் மழலை முகம் பார்த்து

தென்றல் போல் மெதுவாய் மடி சேர்த்து

முத்தங்கள் கனிவாய் தரும்போது

எண்ணிக் கொள் என்னையும் மறவாது

எண்ணிக் கொள் என்னையும் மறவாது

நான் தாயுமானவன்

தந்தையானவன்

அன்பு சேவகன்

அருமை நாயகன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் குளப்படி செய்தால் அல்லது படிக்கா விட்டால் அப்பா அடிக்கவே மாட்டார் அம்மா தான் அடிப்பார் ஆனால் அம்மா அடித்தும் நான் படிக்கவில்லை என்பது வேற விசயம் :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவிற்கு, கிட்டியில் தெய்வ திருமகள் பாடம் பார்த்து கண் கலங்விட்டேன், என்ன ஒரு நடிப்பு விக்கிரம் & அந்த நிலாவிடம்

1)

நிலா : அப்பா அம்மா எங்கப்பா?

விக்ரம் : சாமிகிட்டப் போயிட்டாங்க.

நிலா : ஏம்ப்பா. சாமிக்கு அம்மா இல்லையா?

2)

விக்டர் : நிலா, நீ படிச்சு டாக்டராகனும்.

நிலா : நான் ஏன் டாக்டராகனும்.

விக்டர் : அப்பத்தான் உங்க அப்பாவ நல்லபடியா பாத்துக்க முடியும்.

நிலா : அப்பா, நான் எப்பப்பா டாக்டராவேன்?

கிருஷ்னா : நாளைக்கு, இல்ல இல்ல இன்னொரு நாளைக்கு, இல்ல ரொம்ப நாளைக்கு அப்புறம்

நிலா : நான் டாக்டராகித் தான் உன்னப் பாத்துக்கனுமா?

இந்தக் கேள்வி கேட்கும் போது என் நிலாவின் முகத்தைப் பாருங்கள். தாய்மை வயது எனும் லௌகீகத்திற்கு அப்பாற்பட்ட ஓர் தெய்வீக நிலை என்று புரியும். ஆம் 5 வயது சிறுமி, தந்தையைப் பார்த்துக் கொள்வதாய்ச் சொல்வதைக் கேட்க்கும் போது ஈரமாகாத கண்கள் பாவம் செய்தவை.

டைனோஸர் தான சாகனும், புலி ஏன் செத்துச்சு? என்று கேட்கும் போது அவள் உதடுகளைக் கவணியுங்கள்.

நீதிமன்றத்தில் வெகுநாட்கள் கழித்து தந்தையப் பார்த்தவுடன் "எங்க போய்ட்ட? நீ ரொம்ப ஒல்லி ஆகிட்ட" என்று ஜாடையில் சொல்லும் போது அவள் உடல் மொழியைக் கவணியுங்கள்.

வெகுநேரம் வீட்டு வாசலில் காத்திருந்துவிட்டு, தந்தையுடன் எதுவும் பேசாமல் இருந்து பின்னர் தவறு தந்தை மேல் அல்ல என்று தெரிந்ததும் அவள் காட்டும் முகபாவத்தைக் கவணியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு........

.என் அப்பா அன்பால் அறிவூட்டியவர் ..

அபியும் நானும் கூட இப்படியான படம்தான்.நான் மிகவும் ரசித்துபார்த்தது.

எனது அப்பா,அம்மா பற்றி இப்பொ எழுத கொஞ்சம் பயமாக இருக்கின்றது.இருவரும் இன்றும் பூட்டப்பிள்ளைகளை பார்த்த பின்பும் ஓரளவு சுகதேகிகளாக இருகின்றார்கள்.

முழு புத்தகங்கள்,(குமுதம்,ஆனந்தவிகடன்,குங்குமம்,கல்கி.)படங்கள்,பிடித்த நாடகங்கள் எதுவுமே தவறுவதில்லை.தெய்வதிருமகன் கூட தியேட்டரில் போய் பார்த்தார்கள்.நான் இன்னமும் பார்க்கவில்லை.பல பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் இருப்பதால் கூட்டிக்கொண்டுபோக பிரச்சனை இல்லை.

கனடா வந்த புதிதில் சந்தா கட்டி கணையாழி எடுத்தவர்களாக்கும் எனது குடும்பத்தில் அனைவருமே போட்டி போட்டுக்கொண்டுவாசிப்போம் .அதற்கு நன்றி அப்பா,அம்மா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.