Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி சாத்தான் வேதம் ஓதுவதா? ஜெயலலிதா அரசு சட்டமன்ற தீர்மானம் பற்றி கலைஞர் விளக்கம்

Featured Replies

இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி சாத்தான் வேதம் ஓதுவதா? ஜெயலலிதா அரசு சட்டமன்ற தீர்மானம் பற்றி கலைஞர் விளக்கம்

59376.jpg

இலங்கை தமிழர் போராட்டத்துக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளின் போராட்டத்துக்கு எதிராகவும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய ஜெயலலிதா, இப்போது இலங்கை தமிழர்களுக்காக பரிந்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் (12.08.2011) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக சட்டமன்றத்தில் நேற்று ஒரு தீர்மானம் ஒன்றின் மீது பேசிய ஜெயலலிதா, முந்தைய திமுக ஆட்சியில் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம், சட்டமன்ற பேரவையில் தீர்மானம், மனித சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா, இறுதி எச்சரிக்கை என்பவையெல்லாம் கண்துடைப்பு நாடகங்கள் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் திமுக ஆட்சியில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை ஜெயலலிதா, அவரையும் அறியாமல் பட்டியலிட்டுக் காட்டியிருப்பதாக நன்றி கூறுகிறேன்.

ஜெயலலிதா சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து கோத்தபய ராஜபக்சே கருத்து தெரிவித்து, அந்த கருத்துக்கு எதிராக ஜெயலலிதா பதில் சொல்லும்போது, தேவையில்லாமல் நான் எங்கே வந்தேன்?

இலங்கைத் தமிழர் போராட்டத்திற்கு எதிராக, இலங்கையிலே தமிழீழப் போராளிகளுக்கு எதிராக, விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு எதிராக இதே சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறை வேற்றிய அந்நாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இப்போது கோத்தபய ராஜபக்சே கூறிய வார்த்தைகள் சாத்தான் வேதம் ஓதுவது போல் இருப்பதாகத் தெரிகிறது.

கோத்தபயவின் கூற்றினை தி.மு.க. கூர்மையாக எதிர்க்கிற அதே நேரத்தில் சாத்தான் வேதம் ஓதுவதா? என்ற வாசகத்தை இப்போது இலங்கைத் தமிழர்களுக்காக பரிந்து பேசுகிற ஜெயலலிதாவோடு ஒப்பிட்டுப் பார்க்கிற கடமை நம்மைப் போன்ற உண்மைத் தமிழர்களுக்கெல்லாம் இருக்கிறது அல்லவா?

இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

http://www.nakkheera...ws.aspx?N=59378

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய் கருணாநிதியாரே!கனக்க முக்காதையும் திருப்பியும் அவவிட்டை அடிவாங்கப்போறீரே?

இல்லாட்டி முந்தி வாங்கினது என்ன மறந்துபோச்சுதே?

கருணாநிதி தமிழரை ஏமாற்ற வேதம் ஓதிய சம்பவங்களை ஜெயலலிதா பட்டியல் இட்டுருந்தா. கிழட்டு புலி ஆற்றங்கரையில் தர்பைப்புல்லுடனிருந்து வேதமோதியது, பஞ்சதந்திரகதைகள் படித்த தமிழனொருவனுக்கும் புதியதல்ல. ஆனால் திராவிட தாத்தா கருணாநிதி ஓதிய வேதம், கிழட்டுபுலி ஓதிய ஆரியநாட்டு இருக்கு, யசூர், சாம, அதர்வண வேதமில்லை. அவர்தான் உண்மைத் (திருடனாயிற்றே)திராவிடனாயிறே. அவர் வாய் திறந்து ஆரிய வேதமோதமாட்டார். அவர் ஓதியது ரோமாபுரி வேதம். மேலைநாட்டு சாத்தான், இத்தாலிய பண்டிதை எழுதிக்கொடுத்த வேதம்.

ஜெயலலிதா ஒருதடவை ஈழத்தமிழருடன் முரன் பட்டா. மறுசமயம் ஒத்திருந்தா. இது அரசியலில் நாம் பலதடவை பார்த்தது. ஆனால் அவ முரன்பட்டிருந்த போது நேராகவே எதிர்த்தா. அவ மகளை ராசபக்சாவிடம் பரிசில் வாங்க அனுப்பிவிட்டு நாலு மணித்தியால உண்ணாவிரதம் இருக்கவில்லை. சாத்தான் தாத்தா கருணாநிதிதான் வேதமோதி மக்களை ஏமாற்றுபவர். இப்போது திரும்ப ஈழத்தமிழருக்காக வேதமோத ஆரம்பிக்கிறார் ஏன் எனில் லோக்சபா தேர்தலையும் கோட்டை விட்டுவிடாமலிருப்பதற்கே.

கோத்தபயவின் கூற்றினை தி.மு.க. கூர்மையாக எதிர்க்கிற அதே நேரத்தில் சாத்தான் வேதம் ஓதுவதா? என்ற வாசகத்தை இப்போது இலங்கைத் தமிழர்களுக்காக பரிந்து பேசுகிற ஜெயலலிதாவோடு ஒப்பிட்டுப் பார்க்கிற கடமை நம்மைப் போன்ற உண்மைத் தமிழர்களுக்கெல்லாம் இருக்கிறது அல்லவா?

என்னயா உண்மைத்தமிழன் கதை பேசுகிறீர். ஏனெனில் மற்ற தமிழர்களெல்லாம் சப்பிகள்கள் என்றோ அல்லது இரண்டாம் தரமென்றோ நினைக்கிறீர் என்பதாலா?

அடுத்தடுத்து பதவிகளை உற்றாருக்கு கொடுத்துவிட்டு, அடுக்கடுகாய் பணத்தை சேர்த்து கோட்டைகள் கட்டிவைத்துவிட்டு, அடுக்கு மொழி பேசி தமிழரை ஏமாற்ற வேதமோதியதைவிட இந்த உண்மை சாத்தான் தமிழருக்காற்றிய சேவைதான் என்ன?.

தான் அழித்த தமிழகத்தை திரும்ம மீட்க இந்த உண்மை தமிழனுக்கு மனமிருந்தால், இந்த ரவுடி குடும்பம் முழுவதும் அண்ணா கட்டிய சாம்பிராச்சியமான தி. மு.கா. வை விட்டு வெளியேறுமா? இந்த நச்சு பாம்பு கூட்டம், கறையான் கட்டிய பொந்திலிருந்து வெளியேறுமா? கட்சி தலைமைக்கு உருத்துரிமையானவரான வை.கோ. வை கட்சி அரியணையில் அமர்த்துமா?

யாருக்கையா தாத்தா சாத்தன் வேதமோதுகிறீர்? உமது உண்மை வேதம் கேட்க தமிழன் யாருமினி அடிமட்ட முட்டாள்கள் அல்ல.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபயவின் கூற்றினை தி.மு.க. கூர்மையாக எதிர்க்கிற அதே நேரத்தில் சாத்தான் வேதம் ஓதுவதா? என்ற வாசகத்தை இப்போது இலங்கைத் தமிழர்களுக்காக பரிந்து பேசுகிற ஜெயலலிதாவோடு ஒப்பிட்டுப் பார்க்கிற கடமை நம்மைப் போன்ற உண்மைத் தமிழர்களுக்கெல்லாம் இருக்கிறது அல்லவா?

சொற் சிலம்பம் ஆடுகிறாரப்பா. அதென்ன நம்மை போன்ற?? கொல்டிக்கள் வமசாவளிகள் எல்லாம் தமிழ்நாட்டில் டேரா போட்டால் இதான் கதி...

டிஸ்கி:

சைடு கேப்பில்ல் அப்ப அப்ப இந்த மாறி இக்கட்டான சிச்சுவேசன்ஸ் திராவிடம் திராவிடர் மறந்து போயிடும். ஈழ தமிழர்கள் திராவிடர்கள் என்று சொன்னால் எவனும் வாய் வழியா சிரிக்கமாட்டான்... அரை கொல்டி(கன்னடன்), கொல்டி.. அரைதமிழன்(மலையாளி) அனைவரையும் தமிழ்நாட்டை விட்டு அடித்து துறத்த வேணும் .. இவனுங்க ஸ்டேட்டுல ஒரு எம்பி சீட்டு கூட குடுப்பதில்லை.. இங்கதான் இவனுங்க நாட்டை ஆளுகின்ற கண்ராவியெல்லாம் நடக்குது.. :o

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி மனம் வைத்திருந்தால்..... முள்ளிவாய்க்காலில் படு கொலைசெய்யப்பட்ட 40,0000 மக்களையும், போராளிகளையும் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அவர் தான்... உலகத் தமிழினத் தலைவராக இருக்க வேண்டும் ஆசைப்பட்டு, ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு சாவு மணி அடிச்சவர். அந்த ஆசையில், தனது கட்சியையும் காப்பாற்ற முடியாமல் எதிர்கட்சியாக கூட வரமுடியாமல், கடைசிக்காலத்தில் குடும்பத்தவர்களுடன் கூடி இருக்க முடியாமல்..... திகார் ஜெயில்லை போய்ப் பார்க்க வேண்டி இருக்குது.

ஆசை மனிதனுக்கு இருப்பது இயற்கை. கருணாநிதிக்கு பிடிச்சது பேராசை. அதைத்தான் இப்ப... அனுபவிக்கிறார்.

இந்த ஓநாயின் குரல் மதிப்பற்றது.

உன்ரை சொத்தின் மதிப்பை பற்றி ஒருக்கா அறிக்கை விடும் பரதேசி .

50 சதத்திற்கு பாட்டு எழுதி பிசை எடுத்த காலம் போய் குடும்பத்திற்காக ஒரு இனத்தின் இருப்பையே இல்லாமல் செய்த கயவன்..

எங்களை பற்றி அறிக்கை விட அருகதை அற்றவர் .

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி

எங்களுக்காக எதுவும் செய்திருக்கத்தேவையில்லை. அங்கு நடந்த மக்கள் எழுச்சியை வஞ்சகமாக அடக்காமல் இருந்திருந்தாலே போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பமே சேர்ந்து தமிழ் நாட்டை கொள்ளை அடித்து குட்டிச்சுவர் ஆக்கி விட்டார்கள்.இவர்களின் முழுச்சொத்தையும் பறித்து அரச உடமை ஆக்க வேண்டும்.சாத்தான் வேதம் ஓதியதாக சொல்பவர் தமிழர்களுக்காக உருப்படியாக செய்த காரியம் ஒன்றையாவது கூற முடியுமா?

தமிழ் மக்கள் கொத்து கொத்தாக வன்னியில் அழிந்த போது வாழாவிருந்து விட்டு இப்போ அறிக்கைக்கு மட்டும் குறைவில்லை.திகார் சிறையில் குடும்பத்தையே அடைத்து வைத்து கும்மினால் தான் தமிழ் மக்களின் ஆத்திரம் அடங்கும். :D :D

கொலைஞன் கருநாய்நிதி சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைக்கூலியாக மாறிவிட்டான்?

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரும் குடும்பமும் பெரிய வியாபாரிகள் அவர்கள் எப்போதும் இலாபக்கனக்குகலையே கவனிப்பார்கள். அவர்களை பொறுத்த மட்டில் இனம் மொழி இவையொரு முதலீடு, அது புரியாது தமிழர்கள் ஏமாந்து போயுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.