Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

23, 24 இந்தியாவில் பேச்சு; பரந்தன் ராஜன், வரதராயப்பெருமாள் ஆகியோரும் பங்கேற்பாம்

Featured Replies

மீண்டும் 1980 பாணியில் இந்தியா தமிழ்க்கட்சிகளை டில்லிக்கு அழைக்கின்றது. இது சிங்கள அரசாங்கத்தினை மிரடுவதற்காகவே என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் வருமாறு இந்தியா அழைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் இது தொடர்பிலான அழைப்பை அனுப்பி உள்ளார்.

எதிர்வரும் 23, 24 ஆகிய இரு தினங்கள் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள, தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எவ்) சுரேஷ் மற்றும் பத்மநாபா அணிகள், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எவ்) ஆகிய கட்சிகளுக்கு அழைப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்சியில் இருந்தும் இரு பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அழைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உத்தியோகபூர்வ அழைப்பு இன்னும் அனுப்பப்படவில்லை.

.

தமிழரசுக் கட்சியில் இருந்து மாவை சேனாதிராசா மற்றும் எம்.ஏ.சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எவ் வரதர் அணியில் இருந்து வரதராஜப் பெருமாள் மற்றும் சுகு, சுரேஷ் அணியில் இருந்து சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் ரெலோவில் இருந்து செல்வம் அடைக்கலநாதன், புளொட் சித்தார்த்தன், ஈஎன்டிஎல்எவ் பரந்தன் ராஜன் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரியவருகிறது. முதல்நாள் கூட்டத்தில் தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் கருத்துக்களை இந்திய அரச பிரதிநிதிகள் கேட்டறிவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

.

முதல்நாள் அமர்வில் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் தீர்வு தொடர்பில் எமது கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என்று நினைக்கிறோம். அனைத்துக் கட்சியினரும் இணக்கப்பாடான கருத்துக்களைத் தெரிவிப்பது நன்மையளிக்கக்கூடும். இரண்டாம் நாள் அமர்வில் இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகளின் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேச வாய்ப்புக் கிடைக்கும் என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

.

இந்தியா செல்வதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்துக்கும் இடையில் தீர்வு தொடர்பான பொது இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. உள்ளூராட்சி சபைகளில் வெற்றிபெற்ற தலைவர், உபதலைவர், உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் நடைபெறும் 20ஆம் திகதி, கட்சித் தலைவர்கள் இது பற்றிக் கலந்துரையாடுவார்கள் என்றும் தெரிகிறது. இந்தியா செல்வதற்கு முன்னர் பொது இணக்கப்பாடு பற்றிய புர்ந்துணர்வு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின் மத்தியில் எட்டப்படுவது அவசியம் என்று கருதப்படுகிறது.

ஈழ நாதம்

Edited by உமை

அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அரசு இன்றுவரை பதிலளிக்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்தது

அரசியல் தீர்வு மற்றும் மீள்குடியேற்றம் உட்பட பல விடயங்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு முன்வைத்த இராண்டுவார காலக்கெடு நாளை வியாழக்கிழமையுடன் முடிவடையவுள்ள நிலையில், இதுவரை அரசு சாதகமான பதில் வழங்கிவில்லையென கூட்டமைப்பின் பிரதி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நாளை வியாழக்கிழமைக்குப் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூட்டமைப்பு அறிவிக்குமென மாவை சேனாதிராஜா கூறினார்.

இது தொடர்பாக எமது கொழும்பு செய்தியாளருக்கு இன்று முற்பகல் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா, அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை புறக்கணிப்பதாக குறை கூறினார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு ஒன்றுகூடி ஆராய்ந்த பின்னர் அரசாங்கத்தின் இனவாத செயற்பாடுகள் குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கும் ஊடகங்களுக்கும் விளக்கமளிக்கப்படுமென மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இது குறித்து அரச பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினரான அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வாவுடன் தொடர்பு கொண்ட கேட்டபோது அவர் கருத்துக்கூற மறுத்து விட்டதாக எமது செய்தியாளர் அறிவிக்கிறார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8977

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒருமுறை சகோதரர்களுக்குள் மோதவிட்டு அவர்களை அழிப்பதற்கான ஒரு சதித்திட்டமா ........?

இந்தியாவை நம்ப முடியாது கடந்த கால அனுபவம் .

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வேதாளம் ஏறுகிறதா? தமிழரது அரசியல் தளம் தமது கையைமீறிச்செல்லும் சூழலில் இருந்து கையகப்படுத்தவும் காலத்தை இழுத்தடித்து அரசியல் பலத்தை சிதைப்பதையும் நோக்காக் கொண்டதே இந்தக் காங்கிரசின் நகர்வாகும். முள்ளிவாய்க்காலில் தமிழரது படைத்துறைப் பலத்தை அழித்ததோடு மக்களையும் கொன்றொழித்து நரமாமிசம் தின்று குருதி உறிஞ்சும் சோனியா தலைமையிலான காங்கிரஸை நம்புவதால் எந்தப் பயனும் இல்லை. தமிழினம் வழங்கிய ஆணைக்கிசைவாக த.தே.கூட்டமைப்பு உரிய நகர்வுகளை அரசியல் இராசதந்திர ரீதியாக அணுகுவதோடு தமிழர் தாயகமெங்கும் கிராமிய மட்டத்திலான குழுக்களை அமைத்து தற்போதைய அரசியல் நிலையை மக்களுக்கு எடுத்துச் செல்வதோடு , துரோகத்தின் மொத்த உருவமான காங்கிரஸ் அரசோடு மட்டும் நில்லாது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், தென்னாபிரிக்கா, சீனா, போன்ற நாடுகளோடும் தொடர்புகளை ஏற்படுத்தி தமிழரது நிலையைத் தொடர்ந்து தெளிவுபடுத்தும் இராஜதந்திரச் செயற்பாட்டையும் முன்னெடுப்பதே நீண்டகால அடிப்படையில் பயனளிக்கக் கூடியது. இல்லையேல் மீண்டும் கிந்தியக் காங்கிரஸின் குழிபறிப்பில் எஞ்சியிருக்கும் தமிழினமும் அழியத் துணைபுரியும் செயலாகவே முடியும்.

"கருநாகத்தை நம்பினாலும் தமிழினத்தை அழிக்கத் துணைநின்ற கிந்தியக் காங்கிரஸை நம்பாதே "

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசுக்கோ, மக்களவைக்கோ, அறிக்கை புலிகளுக்கோ அழைப்பு இல்லையா :wub:

அவர்களையும் அழைச்சால் தானே இன்னொரு திம்பு . இல்லை என்றால் செம்பு (பஞ்சாயத்து) :lol: :lol:

கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு காலக்கெடு விதித்ததால் பழி வாங்கலாக கூட்டமைப்பை உடைக்க இந்தியா செய்யும் பிரயத்தனம் இது. நிருபம்மா இல்லாததால் பிள்ளையானுக்கு அழைபில்லை.

Edited by மல்லையூரான்

சிங்கள அரச பயங்கரவாதிகளின் எலும்புத்துண்டுகளை நக்கி வாழும் ஹிந்திய காட்டுமிராண்டி ஜனநாகப் பயங்கரவாதிகளின் இன்னுமொரு சதித்திட்டம்.

இதில் நாயப்பனை வைத்து சதி பின்னுவது காங்கிரஸ் பயங்கரவாதிகள் தான். இந்த சொறிநாய்களின் அழைப்புக்கு ஏன் எமது வெங்காயங்களும் அலையுதுகள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.