Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சற்று ஆறுதல்…!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சற்று ஆறுதல்…!

--------------------

கடந்த சில நாட்கள்

கடப்பதே துயரமாய்

கடந்து போனது

கண்களில் நீருடன்

திரண்ட தமிழகம்

தீர்ப்பினை மாற்றென

நீதியைக் கோரி

நீண்டது தெருக்களில்

தமிழகத் தாயோ

தன்னால் முடிந்தததை

அவையிலே செய்தார்

அரியதோர் நகர்வாய்

அமைந்தது கண்டோம்!

மூவரின் உயிரை

முழுதுமாய்க் காத்திட

உலகம் எங்கும்

வாழ்கின்ற தமிழரே

உறுதியோடு

குரல் கொடுப்பீரா?

காப்பது என்ன

மூவரின் உயிரா

உயிருடன் இணைந்து

நீதியுமல்லவா?

நீதியை காத்திட

நெருப்பென எழுகின்ற

தமிழக உறவே

பற்றிக் கொள்கிறோம்

நன்றியுடனே!

நாதியற்றவன்

தமிழன் என்பதை

நாளைய சந்ததி

எதிர்கொள்ளலாமா?

மீட்கும் வரைக்கும்

நீதியைக் கேட்போம்

நீதியை மறுத்தால்

தமிழனுக்கான

நீதியைக் காண

அவனுக்கோர் அரசை

தேடுதல் வேண்டும்

முடிவு இப்போ

நீதியின் கையில்!

சற்று ஆறுதல்

மூச்சு விடவே

சரியாய் நாமும்

திட்டமிட்டே

ஒன்றாய் இணைந்து

உறுதியாய் நடந்தே

மூவரையும்

நாம் காத்திட வேண்டும்!

Edited by nochchi

நன்றிகள்.

நாம் எமக்கென ஒரு நாடு அமைப்பதே நீதி தரும், தலைமுறை வாழும்.

மீட்கும் வரைக்கும்

நீதியைக் கேட்போம்

நீதியை மறுத்தால்

தமிழனுக்கான

நீதியைக் காண

அவனுக்கோர் அரசை

தேடுதல் வேண்டும்
  • கருத்துக்கள உறவுகள்

நாதியற்றவன்

தமிழன் என்பதை

நாளைய சந்ததி

எதிர்கொள்ளலாமா?

மீட்கும் வரைக்கும்

நீதியைக் கேட்போம்

நீதியை மறுத்தால்

தமிழனுக்கான

நீதியைக் காண

அவனுக்கோர் அரசை

தேடுதல் வேண்டும்

முடிவு இப்போ

நீதியின் கையில்!..

..அழகான அருமையான வரிகள் பாராட்டுக்கள் நொச்சி .......மேலும் தொடருங்கள். ......

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கும் கொஞ்சம் ஆறுதலைத்தருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நாதியற்றவன்

தமிழன் என்பதை

நாளைய சந்ததி

எதிர்கொள்ளலாமா?

மீட்கும் வரைக்கும்

நீதியைக் கேட்போம்

இன்றைய பொழுது, இனிய செய்தியுடன் ஆரம்பித்தது மகிழ்ச்சியே....

இதுவே... நிரந்தரமாக இருக்க வேண்டும். கவிதைக்கு நன்றி நொச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

நளினியோடு சேர்ந்து நால்வரும் விரைவில் விடுதலையாக வேண்டும்

நளினியோடு சேர்ந்து நால்வரும் விரைவில் விடுதலையாக வேண்டும்

அவர்கள் விடுதலையாகும் போது இந்த கவிதைகளுக்கு அவர்களிடம் சிறைவாசம் கிடைக்கட்டும்.

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

நொஞ்சி அருமையான வரிகள், வாழ்த்துக்கள், அவர்கள் விடுதலை விரைவில் நடக்கும்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்.

நாம் எமக்கென ஒரு நாடு அமைப்பதே நீதி தரும், தலைமுறை வாழும்.

மீட்கும் வரைக்கும்

நீதியைக் கேட்போம்

நீதியை மறுத்தால்

தமிழனுக்கான

நீதியைக் காண

அவனுக்கோர் அரசை

தேடுதல் வேண்டும்

உண்மை அகூதா. வேறு வழி..

நாதியற்றவன்

தமிழன் என்பதை

நாளைய சந்ததி

எதிர்கொள்ளலாமா?

மீட்கும் வரைக்கும்

நீதியைக் கேட்போம்

நீதியை மறுத்தால்

தமிழனுக்கான

நீதியைக் காண

அவனுக்கோர் அரசை

தேடுதல் வேண்டும்

முடிவு இப்போ

நீதியின் கையில்!..

..அழகான அருமையான வரிகள் பாராட்டுக்கள் நொச்சி .......மேலும் தொடருங்கள். ......

நிலாமதியவர்களே உங்களின் பாராட்டுக்கு எனது நன்றிகள்.

எமக்கும் கொஞ்சம் ஆறுதலைத்தருகிறது.

நன்றி கறுப்பியவர்களே.நிரந்தர ஆறுதலைப் பெறத் தமிழினம் ஒன்றுபடாதா?கறுப்பியவர்களே!

இன்றைய பொழுது, இனிய செய்தியுடன் ஆரம்பித்தது மகிழ்ச்சியே....

இதுவே... நிரந்தரமாக இருக்க வேண்டும். கவிதைக்கு நன்றி நொச்சி.

தமிழ்சிறி அவர்களுக்கு நன்றிகள். நிரந்தரமாவது எமது கைகளில், ஒருகொடியாய் நிற்பின் சாத்தியமே.

நளினியோடு சேர்ந்து நால்வரும் விரைவில் விடுதலையாக வேண்டும்

உண்மை ரதியவர்களே. மூவரல்ல, நால்வரும் விடுதலையாக வேண்டும். நன்றிகள்.

அவர்கள் விடுதலையாகும் போது இந்த கவிதைகளுக்கு அவர்களிடம் சிறைவாசம் கிடைக்கட்டும்.

I.V.சசியவர்களே! சிறையிலிருப்போர் சிறைமீண்டு சிறைப்பிடிப்பார் ஒருநாளில் கவிதனையே... காலமொன்று மலரட்டும்.

நொஞ்சி அருமையான வரிகள், வாழ்த்துக்கள், அவர்கள் விடுதலை விரைவில் நடக்கும்

உடையாரவர்களே நன்றிகள். எல்லோரது ஏக்கமும் ஒருநாள் பலிக்கும்.

கருத்துகளால் உற்சாகமூட்டிய யாழ்க்கள உறவுகளான அகூதா, நிலாமதி,கறுப்பி, தமிழ்சிறி, ரதி, I.V.சசி, உடையார் ஆகியோருக்கு எனது நன்றிகள. உரித்தாகட்டும். (இணைப்பின் இடையூறால் தாமதமாகவே எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன்.)

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.