Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரக்கோணம் அருகே ரயில்கள் மோதல்-15 பேர் பலி; ஏராளமானோர் படுகாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரக்கோணம் அருகே ரயில்கள் மோதல்-15 பேர் பலி; ஏராளமானோர் படுகாயம்

புதன்கிழமை, செப்டம்பர் 14, 2011, 0:10

அரக்கோணம்: அரக்கோணம் அருகே இரு ரயில்கள் மோதிக் கொண்டதில் 15 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இந்த விபத்து நடந்தது. அரக்கோணத்தில் இருந்து காட்பாடி சென்ற பயணிகள் ரயில் சித்தேரி ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது.

அப்போது மருவத்தூரில் இருந்து வேலூர் கண்டோன்மெண்ட் சென்ற ரயில் நின்று கொண்டிருந்த ரயிலின் மீது மோதியது.

இதில் காட்பாடி ரயிலின் இரு பெட்டிகளும் வேலூர் ரயிலின் ஒரு பெட்டியும் நசுங்கி கவிழ்ந்தன. இந்த விபத்தில் ஏராளமானோர் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.

வேலூர் ரயிலின் என்ஜினும் நசுங்கிவிட்டதில் அதிலிருந்த இரு டிரைவர்கள், காட்பாடி ரயிலின் கார்ட் உள்பட 15 பேர் பலியாகிவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கவிழ்ந்து கிடக்கும் 3 பெட்டிகளிலும் பல பயணிகள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க சென்னையிலிருந்தும் அரக்கோணத்திலிருந்தும் ரயில்வே மீட்புப் படையினர் விரைந்தனர்.

மெட்டல் கட்டர்களை வைத்து பெட்டிகளை வெட்டி பயணிகளை மீட்கும் பணி நடந்து வருகிறது.

சம்பவம் நடந்த இடத்தில் பலத்த மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்தால் அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. பல

ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

சம்பவம் குறித்து அறிய ரயில்வே உதவி எண்-044 25347771

http://thatstamil.oneindia.in/news/2011/09/14/trains-collide-near-arakonam-3-bogies-derail-15-dead-aid0090.html

கொல்லப்பட்ட அனைத்து உறவுகளுக்காகவும் அஞ்சலிகள்.

உறவுகளை பிரிந்தவர்களுக்கு எங்கள் ஆறுதல்கள்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட அனைத்து உறவுகளுக்கும் அஞ்சலிகள்.

அவர்களின் உறவுகளுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத்தேரிவித்து கொள்கின்றோம்.

Edited by தமிழ் அரசு

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

சில நாட்களுக்கு முன்னர் திருப்பதியிலிருந்து வரனாசியை நோக்கிச் செல்லவேண்டிய இரயில் ஒன்று 1000 பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு வேறு திசையில் 980 கி.மீ தூரம் சென்றுவிட்டதாம். பின்னர் பிரயாணிகள் சந்தேகத்தில் இரயிலை நிறுத்தி சரியான பாதையில் ஓட வைத்துள்ளனர்.

இந்தியாவில் இரயில் விபத்துக்களும் வாகன விபத்துக்களும் மலிந்து கிடக்கின்றன. அங்கு பிரயாணம் செய்பவர்கள் இரவுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

http://fr.news.yahoo.com/inde-train-roule-980-km-mauvaise-direction-092021388.html

  • கருத்துக்கள உறவுகள்

அகால மரணமடைந்த உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

இதய அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களினதும், காயம் பட்டவர்களினதும், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட அனைத்து உறவுகளுக்கும் அஞ்சலிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்த 83 பேருக்கு தீவிர சிகிச்சை-10 பேர் கவலைக்கிடம்

புதன்கிழமை, செப்டம்பர் 14, 2011, 9:59 [iST]

சென்னை : அரக்கோணம் அருகே ரயில் விபத்தில் சிக்கி 83 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 36 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரக்கோணம் அருகே சித்தேரி ரயில் நிலையம் அருகே நடந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 83 பேர் காயமடைந்தனர். இவர்களில் 36 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அரக்கோணத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குக் காரணமான மேல்மருவத்தூர்-வேலூர் ரயிலின் டிரைவர் ராஜ்குமாரும் சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://thatstamil.oneindia.in/news/2011/09/14/83-injured-passengers-admitted-chennai-hospital-aid0091.html

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.