Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் ஈஸ்ராமில் மீண்டும் தமிழ் குழுக்கள் மோதல்

Featured Replies

நேற்று அதிகாலை ஈஸ்ராம் புகையிரத நிலையம் அண்மித்த பகுதியில் இரு தமிழ் கோஸ்ட்டிகள் மோதிகொண்டன. பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டு இருந்த ஒரு குழு மீது என்னொரு குழு தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகிறது, இந்த கோஸ்டி மோதலில் பிறந்த நாள் கொண்டாடிய பேர்த்டே போய் மீது கார் ஏற்றி கொலை முயற்சி நடந்துள்ளதாக தெரியவருகிறது, இதில் அவர் படுகாயமுற்று கோமா நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் வரை புகையிரத நிலையம் அண்டிய கடைகளை பொலிசார் திறக்க அனுமதி மறுத்ததோடு அந்த பகுதிக்குள் எவரையும் அனுமதிக்கவில்லை என தெரியவருகிறது. செய்தியை முழுமையாக உறுதி செய்யமுடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அட கடவுளே.

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பிக்கு ஒன்றும் நடக்கவில்லையா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் சாபக்கேடு

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பகுதிக்கு நானும் இன்று சென்றேன். காவல்துறையினர் பிரதான வீதியை பாவிக்க தடை செய்திருந்தனர். அந்தப் பகுதியில் இரவு வேளைகளில்.. தமிழர்கள் குடித்துவிட்டு.. நிற்பது வழமை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். நிறைய தமிழ் கட்டாக்காலிகள் அந்த இடத்தை நிறைத்திருக்கின்றனர். அவர்களை நியூகாம் நகரசபை சுத்திகரிப்பு செய்யாத வரைக்கும்.. இவை தொடரவே செய்யும். இந்த வகையான வன்முறைகளில்.. இளைஞர் குழுக்கள் மட்டுமன்றி.. கட்டாக்காலிகளும்.. ஈடுபடுகின்றனர். இரவு வேளைகளில் அந்த இடத்தை இளைஞர்களே கடந்து செல்ல முடியாதபடிக்கு தமிழ் குடிகாரர்களின் அக்கிரமம்.. இருக்கிறது. இரவு வேளைகளில் நடந்து செல்லும் பெண்களை.. தகாத வழிக்கு அழைக்கும் செயல்களும் நடைபெறுகின்றன. இதனை உள்ளூர் காவல்துறையும் கண்டும் காணாமலும் இருக்கிறது. அப்புறம் கொலை.. வன்முறை நடந்தால் மட்டும்.. இப்படி செய்து கொள்ளும். இந்தப் பகுதிக்கு.. போல் சத்தியநேசன் .. என்ற தமிழர் நகரசபை உறுப்பினராக இருந்தும்.. இவர்களை சமூகத்திற்கான நற்பிரஜைகளாக மாற்றும் நடவடிக்கைகளை அவர் எடுப்பதாகத் தெரியவில்லை. கோவில் திருவிழாக்களுக்கு வெள்ளைகளைக் கூட்டி வந்து மாலை மட்டும் மாற்றிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலுக்கும் வந்து வாக்கும் கேட்டுப் பெற்றுக் கொள்கின்றனர்.. என்று அப்பகுதி மக்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தான் போக இயலாத மூஞ்சூறு, விளக்குமாத்தையும் எவ்வாறு, கொண்டு செல்ல முடியும்? :wub:

இது தான் தமிழனின் விதி, எப்போதும்! இப்போதும்!

அந்தப் பகுதிக்கு நானும் இன்று சென்றேன். காவல்துறையினர் பிரதான வீதியை பாவிக்க தடை செய்திருந்தனர். அந்தப் பகுதியில் இரவு வேளைகளில்.. தமிழர்கள் குடித்துவிட்டு.. நிற்பது வழமை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். நிறைய தமிழ் கட்டாக்காலிகள் அந்த இடத்தை நிறைத்திருக்கின்றனர். அவர்களை நியூகாம் நகரசபை சுத்திகரிப்பு செய்யாத வரைக்கும்.. இவை தொடரவே செய்யும். இந்த வகையான வன்முறைகளில்.. இளைஞர் குழுக்கள் மட்டுமன்றி.. கட்டாக்காலிகளும்.. ஈடுபடுகின்றனர். இரவு வேளைகளில் அந்த இடத்தை இளைஞர்களே கடந்து செல்ல முடியாதபடிக்கு தமிழ் குடிகாரர்களின் அக்கிரமம்.. இருக்கிறது. இரவு வேளைகளில் நடந்து செல்லும் பெண்களை.. தகாத வழிக்கு அழைக்கும் செயல்களும் நடைபெறுகின்றன. இதனை உள்ளூர் காவல்துறையும் கண்டும் காணாமலும் இருக்கிறது. அப்புறம் கொலை.. வன்முறை நடந்தால் மட்டும்.. இப்படி செய்து கொள்ளும். இந்தப் பகுதிக்கு.. போல் சத்தியநேசன் .. என்ற தமிழர் நகரசபை உறுப்பினராக இருந்தும்.. இவர்களை சமூகத்திற்கான நற்பிரஜைகளாக மாற்றும் நடவடிக்கைகளை அவர் எடுப்பதாகத் தெரியவில்லை. கோவில் திருவிழாக்களுக்கு வெள்ளைகளைக் கூட்டி வந்து மாலை மட்டும் மாற்றிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலுக்கும் வந்து வாக்கும் கேட்டுப் பெற்றுக் கொள்கின்றனர்.. என்று அப்பகுதி மக்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள்.

ஒருமாதிரி மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுவிட்டிர்கள்,இதுக்கு தமிழனைக்கேட்டுத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமாதிரி மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுவிட்டிர்கள்,இதுக்கு தமிழனைக்கேட்டுத்தான்.

இது தமிழனைக் கேட்டல்ல.. நகரசபையின் செயற்பாடுகளை கண்ணுற்ற போது தெரிகிறது. கிரீன்விச் பகுதிகளில்.. இரவில் வீதிகளில் நின்று குடிக்க.. குடிபானங்களை வீதியில் விட்டெறிய என்று பல தடைகள் இருக்கின்றன. நியூகாமில் அப்படி இல்லை.

அதுமட்டுமன்றி முழத்துக்கு முழம் கோவில் அமைக்க விட்டது.. சமூகச் சீர்த்திருத்தங்களை நோக்கி இளைஞர்களை இழுக்கவுமே. ஆனால்.. அப்பகுதியில் இருந்து தெரிவான தமிழர்கள் இதில் அக்கறை செய்வதாகத் தெரியவில்லை.

எம்மவர்களின் அரசியல் நடவடிக்கைகள்.. வெறும் பதவி புகழ் என்ற அடிப்படையில் இருக்கிறதே அன்றி.. உண்மையான சமூக அக்கறை.. சீர்திருத்தம்.. என்ற நோக்கம் கிடையாது. அப்படி இருக்க.. அவர்கள் என்ன.. சமூக அறிவியலா கற்றுவிட்டு அரசியலில் இருக்கின்றனர்.. இல்லையே.

இந்த இடத்தில் சரியான இடத்துக்குத்தான் முடிச்சுப் போட்டிருக்கு. ஏன் போல்.. உங்கட நண்பரோ...???! இருந்தாலும் இருக்கலாம். :)

போல் எனது நண்பரேன்பது வேறுவிடயம்,போல் பதவிக்கு வரமுதலே ஈஸ்ட்காமில் குழுச்சண்டை இருந்தே வந்தது.நான் லண்டனில் இருக்கும் போது தமிழன் குண்டெறிந்து நாலு தமிழன் ஈஸ்ட்காமில் செத்தான்.

உலகமெங்கும் பயங்கரவாதம் பரப்பியவர்கள் யாரென்று உலகிற்கு தெரியும்,ஒரு சிலரைத்ததவிர.(சத்திரியின் கதை வாசித்தல் விளங்கும்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

உலகமெங்கும் பயங்கரவாதம் பரப்பியவர்கள் யாரென்று உலகிற்கு தெரியும்,ஒரு சிலரைத்ததவிர

ஆமாம் மாலை தீவை பிடிக்க போனதில் இருந்து ...........

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பிக்கு ஒன்றும் நடக்கவில்லையா :lol:

என்னைப்ப்ற்றியும் கேட்க ஒரு ஜீவன் . மெய் சிலிர்த்துபோனேன். :)

.

:o

  • கருத்துக்கள உறவுகள்

போல் எனது நண்பரேன்பது வேறுவிடயம்,போல் பதவிக்கு வரமுதலே ஈஸ்ட்காமில் குழுச்சண்டை இருந்தே வந்தது.நான் லண்டனில் இருக்கும் போது தமிழன் குண்டெறிந்து நாலு தமிழன் ஈஸ்ட்காமில் செத்தான்.

உலகமெங்கும் பயங்கரவாதம் பரப்பியவர்கள் யாரென்று உலகிற்கு தெரியும்,ஒரு சிலரைத்ததவிர.(சத்திரியின் கதை வாசித்தல் விளங்கும்)

போல் வர முதல் இருந்தது இப்பவும் தொடருது என்றால்.. பிறகெதற்கு போலை வாக்குப் போட்டு தெரிவு செய்யனும். நான் தமிழன் வந்தால் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பன் என்று சொல்லி ஏன் போலும் வாக்குக் கேட்டு வாக்குச் சாவடி வாசல்களில் கால்கடுக்க நின்று.. வாக்குக் கெஞ்ச வேண்டும். அவசியம் இல்லைத் தானே. அந்த இடத்திற்கு ஒரு கறாரான.. உண்மையான சீர்திருத்தம் விரும்புற.. உண்மையான சமூக அக்கறை உள்ள ஒருவரை மக்கள் தெரிவு செய்வதே அவசியம் என்பது எனது நிலைப்பாடு. இதன் மூலம்.. அந்தப் பகுதி பள்ளிகளில் இருந்து பிறப்பெடுக்கும்.. இந்த வன்முறைக் குழுக்கள்.. அந்த மாணவர்கள்.. பள்ளிகளை விட்டு வெளியே வந்ததும்.. மேற்படிப்புக்குப் போகாமல்..வீதிகளில்.. தங்கிவிடச் செய்கிறது.

இதன் பின்னணியில்.. வறுமை.. குடும்பப் பிரச்சனைகள்.. பெற்றோர் பிள்ளைகள் பிணைப்பின்மை.. பெற்றோரின் கடுமையான கட்டுப்பாடுகள்.. தகாத நண்பர்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிகின்றமை.. கட்டுப்பாடற்ற.. போதைப்பொருள் பாவனை.. மதுபானப்பாவனை.. கிழக்கு ஐரோப்பியர்களின் தகாத செயல்கள்... கூடியுள்ளமை.. என்று பல்வேறு காரணிகள் இருக்கின்றன.

இவற்றை கண்காணித்து தீர்வுகளை சமூகச் சீர்திருத்தங்களை கட்டுப்பாடுகளை கொண்டு வர முயற்சிக்க வேண்டிய.. நகரசபைக்கு தெரிவானவர்கள்.. அதனைச் செய்யாமல் இருப்பதும்.. இந்த வன்முறைகள்.. ஆண்டுக்கு ஆண்டு விஸ்வரூபம் எடுக்கக் காரணம். ஆண்டு தோறும் பள்ளிகளை விட்டு வெளியேறும் மாணவர்களில் ஒரு தொகுதியினர்.. இப்படி புதிய வன்முறைக்குழுக்களாக மாறி வருகின்றனர். இதனை.. ஆசிரியர்களும்.. நலன்விரும்பிகள்.. பலரும் சுட்டிக்காட்டி.. வருத்தம் தெரிவிக்கின்ற போதும்.. போதுமான அரசியல் ஒத்துழைப்புக்கள் இன்றி.. அவர்களும் எதுவும் செய்ய முடியாமல்.. வன்முறைக்குழுக்கள் பெருக இடமளிக்கின்றனர்.

நான் அவதானித்த வகையில்.. வன்முறைக்குழுக்களில்.. உள்ள பல இளைஞர்கள் அடிப்படையில் நல்லவர்கள். குடும்பச் சூழலில்.. வறுமை.. அப்பா அம்மா சண்டை.. அம்மா அப்பாக்கு எதிராக பிள்ளைகளை தூண்டி விடுகின்றமை.. பெற்றறோர் பராமரிப்பின்மை.. அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளை பிள்ளைகள் மீது திணிப்பவை.. காதல்.. பெண் விவகாரங்கள்.. என்ற காரணிகள்.. இந்தக் குழுக்கள் புதிது புதிதாக பிறக்கவும் பெருக்கெடுக்கவும் காரணமாகின்றன. இந்த இளைஞர்களில்.. அநேகருக்கு இலங்கையில் என்ன நடக்கு என்பது பற்றியே தெரியாது... ஆனால்.. தாங்கள் தமிழர்கள் என்பதை உணர்கிறார்கள்.

இதற்கும்.. பயங்கரவாதத்திற்கு அல்லது தாயக விடுதலைச் செயற்பாடுகளுக்கும்.. என்ன சம்பந்தம்.. ஏன்.. புலிகள் தோன்ற முதல் இன்றைய தமிழ்நாடு பாணியில் சண்டியன் குழுக்கள் வைச்சு.. ஊரில அப்பாப்பிள்ளைகளும்.. ஜி ஜிக்களும் அரசியல் செய்யல்லையோ..!!

முன்னர் யாழ்ப்பாணத்தில் சில இடங்களுக்குள் நுழையவே மக்கள் பயப்படுவார்கள். குறிப்பாக.. கொட்டடி.. நாவாந்துறை.. ஆரிய குளம் பகுதிகள். ஆனால் போராட்ட காலத்தின் போது.. குறிப்பாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் போது.. அந்தப் பகுதிகள் எங்கும் மக்கள்.. சர்வ சுதந்திரமாக இரவிரவாக திரிந்தனர். விடுதலைப்புலிகளின் ஆட்சிக்காலத்தில்.. யாழ்ப்பாணத்தில் ஒரு வன்முறைக் கும்பலும் இருந்ததற்கான எந்த பதிவுகளும் இல்லை. கிறீஸ் பூதங்களும் இருக்கவில்லை.. பாலியல் வன்புணர்வு.. கொலை செய்யும்.. தமிழ்.. சிங்கள்.. ஆயுத தாரிகளும் இருக்கவில்லை.

அடிப்படையில் புலிகளின் பெயரால்.. வன்முறைக் கலாசாரத்தை பரப்பியவர்கள் ஒட்டுக்குழுவினரே. இந்தியப்படைகள் காலத்திலும் சரி.. இன்றைய சிங்களப் படைகள் காலத்திலும் சரி இதனை தெளிவாகக் காணலாம்.

1990 - 1995 முதல் யாழ்ப்பாணம் விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்தது. வடக்குக் கிழக்கின் பெரும் பகுதிகள் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. அக்காலத்தில்.. ஒரு பெண் தூக்கு மாட்டி.. அல்லது கிணற்றில்.. பிணமாகக் கிடந்தால் என்ற செய்து வந்திருந்ததாக.. ஒரு செய்தி காட்டுங்கள் பார்க்கலாம். ஒரே ஒரு சம்பவம் மட்டும் நிகழ்ந்திருந்தது. ஒரு பெண்ணை ஏமாற்றி அவளின் காதலன் அவளைக் கொலை செய்தது. இந்த விடயம் தமிழீழ காவல்துறைக்கு தெரிய வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களில் கொலையாளி கைது செய்யப்பட்டு உண்மைகள் ஊடகங்களில் வெளிவந்ததுடன்.. காவல்துறை கடுமையான எச்சரிக்கைகளையும் வழங்கியது.

உண்மையில்.. தமிழர்கள் மத்தியில் ஆயுதங்களை.. தவறான வழியில் பாவிக்க முயன்றவர்கள்.. ஒட்டுக்குழுவினரே தவிர புலிகள் அல்ல. இன்றும்.. வெளிநாடுகளில்.. தமிழர்கள் தவறான வழியில் போவதை.. புலிகளை விமர்சிக்க.. வன்முறைகள் பெருகுவதை.. வரவேற்கும்.. சமூக அக்கறையற்ற வங்குரோத்து மூளையோடு அலைபவர்களும் உங்களைப் போன்ற முன்னாள் ஒட்டுக்குழுவினரே..!

சாத்திரியின் கதையைப் படிச்சுத் தான் உண்மைகளை அறிய வேண்டும் என்ற அவசியம் எனக்குக் கிடையாது. அதுமட்டுமன்றி.. சாத்திரி எழுதுவதெல்லாம் உண்மை என்பதும் கிடையாது.

நான்.. நான் வாழும் சமூகத்தை கண்காணிக்கிறேன்.. என்ன நடக்கிறது என்ற உண்மையை ஓரளவுக்கு திரட்டியும் கொள்கிறேன். நான் எங்கு வாழ்ந்தாலும்.. இதனைச் செய்து கொள்கிறேன். உண்மையான.. குடிமகன்.. இப்படித்தான் இருப்பான்.! அந்த வகையில் எனக்கு சாத்திரியின் கதைகள் அவசியமில்லை.. விடயங்களை அறிந்து கொள்ள. என்னிடமே பல கதைகள்.. மூளையில் பதிவுகளாக.. நிஜத்தின் பிரதிபலிப்புகளாகக் கிடக்க.. நான் ஏன் சாத்திரியின் கதையை நோக்கி ஓட வேண்டும். (இங்கு சாத்திரியின் கதையை இழுத்தபடியால்.. இதனைக் குறிப்பிடுகிறேன். மற்றும்படி.. நான் சாத்திரியின் கதைகளுக்கு விசுவாசமானவனோ.. எதிரானவனோ.. கிடையாது.) :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, இது எல்லாம் யாருக்கு தெரியாது,

தூங்குபவனை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது என்கிற பழமொழி உண்டு, அவர்களின் வட்டம் அவ்வளவுதான்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.