Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புள்ள பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களே

Featured Replies

அன்புள்ள பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களே,

மக்களின் விடுதலைக்காகப் போராடி உயிரையே ஈகம் செய்த உன்னதமான விடுதலைவீரர்களை மாவீரர்களாகப் போற்றி வழிபடும் உயரிய பண்பாட்டினை செலுமையூட்டி – அதனை அரசியல், சமூக, பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக்கியவர்கள் தமிழீழ மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமுமாகும். எமது தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்தப் பாரம்பரியம் காலஓட்டத்தில் விரிவடைந்து முழு மக்கள் திரளையும் ஒன்றிணைக்கும் உணர்வும் - உயிரும் கொண்ட நிகழ்வாகியுள்ளது.

இந்த நிகழ்வு 2009ல் தமிழீழ விடுதலைப் போரட்டமும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் எதிர்கொண்ட நெருக்கடிகளினால் பலவித சிக்கல்களை எதிர்கொண்டது. முழு மக்களின் நிகழ்வு - தமிழீழ விடுதலை இலட்சியத்தினை சுமந்த நிகழ்வு - தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைக்கும் அரசியல் வெளிப்பாடுகளை ஒன்றுபட்டு வெளிப்படுத்தும் நிகழ்வு என்கின்ற ஒழுங்குமுறைகள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. கடந்த ஆண்டு மாவீரர்நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமைச் செயலக அறிக்கை மக்களைச் சென்றடைய முடியாத மிகமோசமான நிலைமை ஏற்பட்டது.

இந்த நெருக்கடிகளை களைந்து, ஒன்றுபட்ட தமிழ்மக்களின் நிகழ்வாகவும் - ஒன்றுபட்ட அரசியல் செய்தியினை தமிழீழத்தில் வாழும் மக்கள் - புலம்பெயர்ந்து வாழும் மக்கள் - இறுதிவரை களத்தில் இரத்தமும், உணர்வும் கொடுத்த போராளிகளையும், பொதுமக்களையும் உள்ளடக்கிய நிகழ்வாகவும் - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச்செயலகம் முன்வைக்கும் அரசியலை ஒன்றுதிரண்டு வலுப்படுத்தும் அரசியல் ஒழுங்குமுறையை கடைப்பிடிக்கும் நிகழ்வாகவும் அமைய வேண்டிய தேவை புலம்பெயர்ந்து வாழும் அனைவர் முன்பாகவும் எழுந்தது.

இதன் காரணமாகவே, மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு பல்வேறு நாடுகளில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. அனைத்து தரப்புக்களையும் இந்த ஏற்பாட்டுக்குழவில் பங்கேற்குமாறு விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் அழைத்தது. இதற்கான பகிரங்க ஒன்றுகூடல் நடத்தப்பட்டது. ஒன்றுபட்டுச் செயற்படுவது என்கின்ற வாக்குறுதிகள் மக்கள் முன்பாக வைக்கப்பட்டது.

இந்த வழிமுறைகளின் அடிப்படையில் ஒன்றுதிரண்ட மாவீரர்நாள் 2011 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் தமிழீழ மக்களின் விடுதலைக்கான போரட்டம் சர்வதேச மட்டத்தில் - சனநாயக வழிகளில் - காத்திரமான வடிவங்களில் இடம்பெறுவதற்கான தேவையை உணர்ந்தே இந்த மாவீரர்நாள் 2011 மக்கள் நிகழ்வாக ஒழுங்கமைக்கப்படுகின்றது.

எளிமையாகவும், உண்மைத்தன்மையுடனும், தலைவர் காட்டிய வழியில் பயணிக்கும் பண்பாட்டுடனும் இந்நிகழ்வில் அனைத்துத்தமிழ் சமூகமும் பங்கேற்க வேண்டும் என அன்புடன் வேண்டுகின்றோம்.!

மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு பிரான்ஸ்.

தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்,

post-2864-0-38821300-1318001972_thumb.jp

  • கருத்துக்கள உறவுகள்

அசுரன்

எப்போதிருந்து இணைய முகவரியுடன் மட்டும் மாவீரர் நாள்.

ஏதோ தங்களால் முடிநதது என்று எடுத்துக்கொள்ளலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிவரை களத்தில் இரத்தமும், உணர்வும் கொடுத்த போராளிகளையும், பொதுமக்களையும் உள்ளடக்கிய நிகழ்வாகவும் - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச்செயலகம் முன்வைக்கும் அரசியலை ஒன்றுதிரண்டு வலுப்படுத்தும் அரசியல் ஒழுங்குமுறையை கடைப்பிடிக்கும் நிகழ்வாகவும் அமைய வேண்டிய தேவை புலம்பெயர்ந்து வாழும் அனைவர் முன்பாகவும் எழுந்தது.

சுயதணிக்கை :wub: நேற்று ரீஆர்ரீ வானொலியில் நிகழ்ச்சி கேட்டோம். :wub:

Edited by shanthy

  • தொடங்கியவர்

மன்னிக்கவும் விசுகு....

மின்னஞ்சல் முகவரிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட அலுவலக உத்தியோகபூர்வ முகவரியும் உள்ளது.

தாயகதத்த்தில் எவ்வாறு உணர்வு பூர்வமாக துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் இடம்பெற்றதோ அதுபோல் உணர்வும் - மரபும் மாறாத மாவீரர் நாள் ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

மே - 2009ம் இறுதி யுத்த களத்தில் மண்ணுக்காகவும் - மக்களுக்காவும் களமாடிய 200க்கும் மேற்பட்ட போராளிகள் முன்னின்று ஏற்பாடு செய்கின்ற மாவீரர் நாளாக இது அமைகின்றது.

அவர்களின் கரங்களை இறுகப்பற்றி மாவீரர் நாளை பலப்படுத்துவோம்.

மண்ணுக்காக மரணித்தவர்களை வைத்து யாராவது சுயநலம் தேட முயற்சிக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மே - 2009ம் இறுதி யுத்த களத்தில் மண்ணுக்காகவும் - மக்களுக்காவும் களமாடிய 200க்கும் மேற்பட்ட போராளிகள் முன்னின்று ஏற்பாடு செய்கின்ற மாவீரர் நாளாக இது அமைகின்றது.

mains-05.gifanimierte-gifs-haende-003.gifanimierte-gifs-haende-029.gif

  • தொடங்கியவர்

அலைஅரசி சொல்வது 100க்கு நூறு சரி....

ஏன்எனில் சுயநலவாதிகளின் கைகளில் ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டம் சுருங்குவதை அனுமதிக்க முடியாது.

மக்களின் விடியலுக்கான போராட்டம்.

அதன்வழி மக்கள் தளத்தில் இருந்து மேலெழுவதே எழுச்சி.

அவ்வாறான பரந்துபட்ட கூட்டிணைவுடன் விடுதலைப் பண்புகள் நிறைந்த பெரும் நிகழ்வாக மாவீரர் நாள் அமையும்.

இது தனி மனித இருப்புக்களை நிராகிரித்து - தமிழின இருப்புக்கான போராட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தம் எத்தனை 2 ஆ இல்ல 1 ஆ?

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தம் எத்தனை 2 ஆ இல்ல 1 ஆ?

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் விசுகு....

மின்னஞ்சல் முகவரிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட அலுவலக உத்தியோகபூர்வ முகவரியும் உள்ளது.

தாயகதத்த்தில் எவ்வாறு உணர்வு பூர்வமாக துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் இடம்பெற்றதோ அதுபோல் உணர்வும் - மரபும் மாறாத மாவீரர் நாள் ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

மே - 2009ம் இறுதி யுத்த களத்தில் மண்ணுக்காகவும் - மக்களுக்காவும் களமாடிய 200க்கும் மேற்பட்ட போராளிகள் முன்னின்று ஏற்பாடு செய்கின்ற மாவீரர் நாளாக இது அமைகின்றது.

அவர்களின் கரங்களை இறுகப்பற்றி மாவீரர் நாளை பலப்படுத்துவோம்.

அவிக்கிறதுக்கும் ஒரு அளவு வேணும் சுதன்ராச். 200 பேர் தப்பி வந்தவர்களா??

... பிரான்ஸிலுள்ள இலங்கை தூதரகத்திலும் ... மேலுள்ள போஸ்டர் ஒட்டியிருக்கிறார்களாம்??????? .... வரலாற்றில் முதல் முறையாக மாவீரர்- நாள் சிங்கள மக்களும் சேர்ந்து நினைவுகூரப்போகிறார்கள் ... கொண்டாடப் போகிறார்கள்????!!!!

... கடந்த இரு வருடங்களுக்கு முன்னமே ... சிங்களவன் ராமை வைத்து மாவீரர் நாளை கொண்டாட முற்பட்டவன்!!! ... ஆனால் அப்போ நாம் அனுமதிக்கவில்லை!!!! ... இம்முறை பழிக்கு பழியாக எம்மை அனுமதிப்பானோ தெரியாது??????

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்கிறது பிரன்ஸில்?

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வுக்கு வரும் மக்கள் தாமாக தமது கடமை என நினைத்து யார் அழைத்தல் என்ன அழைக்காவிட்டால் என்ன என தாமே முன்வந்து தீபம் ஏற்றி அகவணக்கம் செய்து வருவது வழக்கம், இம்முறை ஏன் புதிதாய் கொஞ்சப்பேர் புறப்பட்டுள்ளார்கள் இதில் இவர்கள் என்னத்தை புதிதாய் செய்யப்போகின்றார்கள் இப்படி செய்வதன் மூலம் சிங்களவன் செய்யநினைப்பதை இவர்கள் செய்யப்போகின்றனரா ? இறுதி கட்டப்போரின்போது இவர்கள் இருந்திந்தால் இவர்கள் ஏன் முரண்பாடான அறிக்கைகளை விடுகின்றார்கள் இதற்க்கான விடை கிடைக்கும் வரை வழக்கமாய் நடைபெறும் நிகழ்வுபோலே நடக்கவிடுங்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கில் கார்த்திகைப் பூவும் கொத்து ரொட்டியும் இலவசமாகக் கொடுத்துக் கூட்டத்தைச் சேர்த்தாலும் சேர்ப்பார்கள் போலிருக்கின்றது.

Edited by கிருபன்

... தற்போது அருகிலுள்ள கடைக்கு போனால், அங்கு சொன்னார்கள் ... வந்தார்களாம் / கதைக்க வேண்டும் என்றார்களாம் / மாவீரர் நாள் வருகுது தெரியுமல்லோ என்று கேட்டார்களாம் / .. / .. / இறுதியாக 1000 சொல்லி விட்டு போனார்களாம்!!!!!!!

... என்ன/ ... இம்முறை வசூலை, சிங்களம் புலத்தில் மாவீரர் நாளென்னும் பெயரில் பொறுப்பேற்றிருக்கிறது!!!

... எங்கே எங்கள் ஆய்வாளர்கள்? ஊடகவியலாளர்கள்? .... பயப்படுகிறார்களா??????????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

அவிக்கிறதுக்கும் ஒரு அளவு வேணும் சுதன்ராச். 200 பேர் தப்பி வந்தவர்களா??

,இந்தியாவிலிருந்து ஆட்கள் கொண்டுவாற மாதிரி இப்போ முள்ளிவாய்க்கால் ஆட்கள்?

நல்ல விளம்பரம்

ஆனால் அது மாவீரர் நாளில் வேண்டாம். வேண்டாம் வேண்டாம்.

அசுரனின் கருத்துப்படி முள்ளிவாய்க்காலுக்கு முன்னம் நடந்த நிகழ்வுகள் எல்லாம் வேறு ஏதோ போல இருக்கு.

அவற்றை முன்நின்று செய்தவன் செய்கின்றவன் கேட்கின்றேன். விளக்கம் தேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.