Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் இரகசியமாக நடந்த தீபாவளி நிகழ்வுகள் அம்பலம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து நமீதாவுடன் சிங்களத்தின் காலடியில் விழுந்திருப்போரை ஒப்பீடாதீர்கள்

வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன்!-நமீதா

ஐஃபா விழாவில் பங்கேற்க வருமாறு நடிகை நமீதாவுக்கு ஐஃபா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை புறக்கணித்துள்ளதோடு, தமிழர் நலனுக்கு எதிரான எந்த நிகழ்விலும் நான் பங்கேற்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

ஐஃபா விழாவின் முதல்நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு நடனமாட நடிகை நமீதாவுக்கு ஐஃபா அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக பெரும் தொகை ஒன்றையும் வழங்க இலங்கை அரசு மற்றும் ஐஃபா நிர்வாகம் நமீதாவை அணுகியுள்ளது.

ஆனால், இந்த வாய்ப்பை அவர் ஆரம்பத்திலேயே மறுத்துவிட்டார். இதுகுறித்து நமீதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஐஃபா விழாவுக்காக என்னை சில தினங்களுக்கு முன்பே அணுகினார்கள். என்னை இந்த விழாவில் நடனமாட அழைத்தார்கள். அதற்காக பெரும் தொகையும் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் இதற்கு நான் சம்மதிக்கவில்லை. இங்கே இந்த பிரச்சனை இருப்பது தெரிந்த பிறகும் எப்படி நான் போக முடியும்.

எனக்கு சோறு போட்டது தமிழ் மக்கள்தான். இன்று இந்த அந்தஸ்து வந்தததும் அவர்களால்தான். எனவே யாரும் சொல்வதற்கு முன்பே மறுத்துவிட்டேன். வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.

-மீனகம் இணையத்தில் வந்த பழைய செய்தி

  • Replies 58
  • Views 6.8k
  • Created
  • Last Reply

இவரா அந்த நடிகர்??

a_Gokulraj.jpg

2008ம் ஆண்டு யுத்தம் அதன் உச்ச நிலையில் இருந்தபோது அவர்களால் கட்டாயப் படுத்தப்பட்டு எல்.ரீ.ரீ.ஈ யில் இணைக்கப்பட்ட பின், நான் அவர்களின் அரசியல் பிரிவில் ஒரு அங்கத்தவனாக இருந்தேன். நான் என்னுடைய தாய் தந்தையரையும் எனது சகோதரன் மற்றும் சகோதரியையும் தவிக்க விட்டு விட்டு, நான் என்ன செய்ய வேண்டுமென்று தமிழ் புலிகள் விரும்பினார்களோ அதைச் செய்யவேண்டியிருந்தது” என்று சொன்னார் அவர்.

ஒரு வருடம் அளவில் அவரது புதிய வேலையில் இருந்தபோது யுத்தம் அதன் இறுதிக்கட்டத்தை அடைந்தது, மற்றும் ஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் புலிகள் வசமிருந்த சிறிய பகுதியை நெருங்கியபோது, கோகுல்ராஜூக்கு அங்கிருந்து தப்பியோடி தனது குடும்பத்தினருடன் இணைவதற்கான ஒரு வாய்ப்புக் கிட்டியது.

“அப்போது இராணுவம் நிலை கொண்டிருந்த ஓமந்தைக்கு நான் எனது குடும்பத்தினருடன் வந்து சரணடைந்தேன். அங்கிருந்து புனர்வாழ்வு முகாமுக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன்” என்று கோகுல்ராஜ‘ தெரிவித்தார்.

போர் அதன் இறுதி முடிவை எட்டியபோது கோகுல்ராஜ் புனர்வாழ்வை அடைவதில் தனது நேரத்தைச் செலவிட்டார். அது பிற்காலத்தில் அவரை சுதந்திரமாக சமூகத்திடம் திரும்புவதற்கு ஏற்ற தயாரெடுப்புகளை வழங்கியது.

தனது புனர்வாழ்வுக் காலத்தின்போது அந்த முன்னாள் போராளி பிரபலமான ஒரு ஸ்ரீலங்கா நடிகையைச் சந்தித்தார், அவர்தான் அனோஜா வீரசிங்க, அவர் கோகுல்ராஜூக்கும் மற்றும் சிலருக்கும் நடிப்பு பயிற்சியை வழங்கினார்.

புனர்வாழ்வு முகாமுக்கு வருகை தந்திருந்த சில விருந்தாளிகளுக்காக வேண்டி ஒரு நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவேளையில் ஒரு உள்ளுர் திரைப்பட இயக்குனரின் கண்களில் கோகுல்ராஜ் சிக்கினார்.

ஸ்ரீலங்கா திரைப்பட இயக்குனரான சஞ்ஜய லீலாரத்ன தனது படங்களில் ஒன்றான, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஒரு தமிழ் புலிப் போராளியை அடிப்படையாக கொண்ட படமொன்றில் கோகுல்ராஜை நடிக்க வைப்பதற்கான அனுமதியை கேட்டுப் பெற்றுக் கொண்டார்.

“நாங்கள் அந்தப் படத்திற்கான படப்பிடிப்பை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தோம். மற்றும் பின்னர் அந்தப் படம் சமீபத்தில் கொழும்பில் திரையிடப்பட்டது. அனோஜா எனக்கு வழங்கிய பயிற்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதன் காரணமாகத்தான் என்னால் அந்தப்படத்தில் நடிக்க முடிந்தது” மகிழ்ச்சிப் பெருக்குடன் கோகுல்ராஜ் தெரிவித்தார்.

செல்வம் என்ற தலைப்பைக் கொண்ட அந்தப்படத்தின் அரங்கேற்றக் காட்சி, 30 வருடங்களாக நடைபெற்ற போரை முடிவுக்கு கொண்டு வந்ததாகப் புகழப்படும் ஸ்ரீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவின் பங்கேற்புடன் கொழும்பில் திரையிடப்பட்டது.

இந்தப்படத்தில் போரின் முடிவின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் புலிப் போராளி ஒருவர் புது வாழ்வு வாழத்தொடங்குவதாக உள்ள கதாபாத்திரத்தை கோகுல்ராஜ் ஏற்று நடித்திருந்தார்.

தனக்கு நடிப்பதற்கு ஏற்கனவே மற்றொரு வாய்ப்பு கிடைத்திருப்பதாகத் தெரிவித்த கோகுல்ராஜ், நடிப்பின் உயரங்களை எட்டுவதற்குரிய பல அரிய வாய்ப்புகளை இது திறந்துவிடும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

யுத்தக் குற்றங்களுக்காக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஸ்ரீலங்காவுக்கு அழுத்தங்கள் வழங்கப்படுவதற்கு மத்தியிலும், கோகுலராஜைப் போன்ற ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டு சமூகத்திடம் திரும்பியுள்ளார்கள். “முன்பு அது சாதாரண போராகவும் மற்றும் அதிக மோதல்களுமாக இருந்தது. எதிர்காலம் எனக்கு ஒருபோதும் குறிக்கோளுடையதாக இருந்ததில்லை,ஆனால் இப்போது சமாதானத்துடன் நான் எப்போதும் செய்வதற்கு விரும்பிய ஒன்றைச் செய்வதற்கான நல்வாய்ப்பு கிட்டியுள்ளது”என்றார் கோகுல்ராஜ். தனது மாங்குளம் வீட்டுக்குத் திரும்பியுள்ள கோகுல்ராஜ், பாடுவதிலும் தனது சொந்த இசைக்குழுவுடன் நிகழ்ச்சி நடத்துவதிலும் தனது நேரத்தைச் செலவிடுவதோடு மற்றும் பிரகாசமான நல்ல ஒரு எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

நன்றி: சண்டே லீடர்

இவரா அந்த நடிகர்??

a_Gokulraj.jpg

இவர் அவரல்ல.

58350224.png

அடடடா.................. எங்கே, உந்த பதுங்கி நிற்பவரை கண்டது போலுள்ளதே என்று யோசிக்க ... ஓகோ..... நமீதா மடத்தை சில வாரங்களுக்கு முன் லண்டனுக்கு கூட்டி வந்து கலைச்சேவை செய்தவர் நிற்பது போலல்லவா தெரிகிறது????????

அதுதானே யோசிக்க வேண்டி இருந்தது ... நமீதா மாம்மை கூட்டி வந்த கேபியின் லண்டன் தூண் ... மலர் காஸ் அன்ட் கரி/சரஸ்வதி பவன் ... நிற்கும் போது எவ்வாறு பாம் பீச் தப்பிச்சுது என்று!!!!!!!!!

யாராவது உந்த யூரியூப்பின் பிரதியை ... காஸ்ரோக்களின் ஐ.எல்.சி ரேடியோவிற்கு அனுப்புங்களேன் ... பணத்துக்காக மலர் இருக்கிறாள் 24 மணி நேரமும் என்று நிமிடத்துக்கு நிமிடம் அறிவிப்பு செய்யும் ... காஸ்ரோக்கள் பார்க்கட்டும்!!!!!!!!!

... யாரும் முடிந்தால் ... பிரதிகள் எடுத்து வெம்பிளி பகுதியில் விநியோகித்தும் விடுங்களேன் .... மலர்/சரஸ்வதி பவன்/பாம் பீச் புகழ் பரவட்டும் ... இலவசமாக!!!!!!!!!!!!!!!!!

யரோ ஒருவரின் வரவேற்பு விழாவுக்கு தீபாவழி என்று பெயர் வைத்து சில தமிழ் மொட்டைகளையும் அழைத்து நடத்தி முடித்திருக்கிறார்கள். தெரிந்தவர்கள் செல்வி தேசாய் ஆடும் நடனத்தையும் பாட்டின் வகையையும் பற்றி எழுதவும். இதற்கும் கர்நாடகம் போல மெட்டிருக்கும் சங்கீததிற்கும் என்ன தொடர்பு?

இவர்களை இலங்கையில் கடைகள் திறக்க மடக்குகிறது போலிருக்கு இலங்கை. விரைவில் எதிர்பார்க்கலாம் பாரிய தலப்புகளை "ஜனாதிபதியின் அழைப்பையேற்று இலங்கையில் புலபெயர் மக்களின் பாரிய முதலீடுகள்"

Edited by மல்லையூரான்

யரோ ஒருவரின் வரவேற்பு விழாவுக்கு தீபாவழி என்று பெயர் வைத்து சில தமிழ் மொட்டைகளையும் அழைத்து நடத்தி முடித்திருக்கிறார்கள். தெரிந்தவர்கள் செல்வி தேசாய் ஆடும் நடனத்தையும் பாட்டின் வகையையும் பற்றி எழுதவும். இதற்கும் கர்நாடகம் போல மெட்டிருக்கும் சங்கீததிற்கும் என்ன தொடர்பு?

இவர்களை இலங்கையில் கடைகள் திறக்க மடக்குகிறது போலிருக்கு இலங்கை. விரைவில் எதிர்பார்க்கலாம் பாரிய தலப்புகளை "ஜனாதிபதியின் அழைப்பையேற்று இலங்கையில் புலபெயர் மக்களின் பாரிய முதலீடுகள்"

என்ன பகிடியா?

இந்தக் கூட்டம் போய்ச் சேர்ந்து கனகாலம்.

...

ஆனால் நாங்கள் இன்னமும் விடுப்பும் பூராயமும் கதைத்தத படி வெட்டிப்பொழுதைக் கழிக்கிறோம். இன்னும் ஒரு 5 வரியத்தில் இந்த தீபாவழி விழாவிற்கு ஒரு டபெரிய கியூ நிக்கும் அப்பவும் நீங்கள் இந்த குப்பைகளை தான் கொட்டுவீர்கள்!

... மொட்டை, உதில் நிற்கும் உங்களோடு, அடுத்த முறைக்கு ....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=95404&pid=711961&st=0&#entry711961

.... இதில் உள்ள ஓரிருவரும் சேருவார்!

அதை விட இன்னும் ஒரு நாலைந்து, இப்படி யாரும் அம்பலப்படுத்த உங்களோடு தீபாவளியாம் கோண்டாட்டமோ கொண்டாட்டத்து அடுத்த அடுத்த வருடங்களில் வருவார்கள்!! ... என்ன இப்ப அவர்கள் தேசிய நினைவெழுச்சி நாள் செய்யும் பிஸ்னெஸ் செய்கிறார்கள், அது கவிழ வருவார்கள்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.