Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகத்தமிழினமே! உடனடியாக செயல்படுங்கள்!

Featured Replies

12/11/2011

மலையாளிகளா இல்ல மானங்கெட்ட நாய்களா [இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள் நண்பர்களே]

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண் டும். குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் தேனி, கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் இருந்து சென்று வருபவர்கள்.

அதிகாலையில் எஸ்டேட்காரர்கள் அனுப்பும் வாகனங்களில் புறப்படும் இவர்கள், மாலையில் அதே வாகனங்களில் வீடு திரும்பிவிடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த டிச. 5-ம் தேதி இப்படிச் சென்ற வர்களை ஆங்காங்கே வழிமறித்த கேரளத்தைச் சேர்ந்த 'போராட்டக்காரர்கள்’ தமிழர்களை மோசமாகத் தாக்கியதுடன், தமிழகப் பெண்கள் மீது பாலியல் வன்முறையையும் அவிழ்த்து விட்டுள்ளனர்.

''அவங்களும் வேன்ல, ஜீப்லதான் வந்தாங்க. அச்சங்கோடு, மந்திப்பாறை, சேத்துக்குழினு அங்கங்க வழிமறிச்சுட்டாங்க. ஏன்டா... உங்க சோத்துக்கு நாங்க தண்ணி விட்டா, எங்க உசுருக்கே நீங்க உலை வைப்பீங்களான்னு கேட்க ஆரம்பிச்சு, தண்ணி வேணுமா... இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடான்னு எங்க மேலேயே...'' என்று சொல்ல ஆரம்பித்த அந்தக் கூலித் தொழிலாளியால் அதற்கு மேல் பேச முடிய வில்லை.

''எங்களை வரிசையா நிப்பாட்டி... ஒரு பள்ளிக்கூடத்துல அடைச்சு வெச் சுட்டாய்ங்க. அப்போ 500 பேருக்கு மேல நாங்க இருந்தோம்... பான்பராக், வெத்தலையை எங்க மூஞ்சி மேல துப்புனாங்க. 'இது, உங்க பொம்பள சி.எம். மேல துப்புறதா நினைச்சுத் துப்புறோம்’ன்னான் ஒருத்தன். வயசுப் பொண்ணுங்க சீலையைப் பிடிச்சு இழுத்து, இடுப்புல, மாருல... என்னால சொல்ல முடியலையே சாமீ'' என்று அலறினார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

தோட்ட வேலைக்குச் செல்வோரில் சிறுமிகளின் எண்ணிக்கை கணிசமானது. அவர்களைத் தனியாக நிறுத்தி, தாவணியை உருவிவிட்டு, மார்பின் மீது முகத்தைத் தேய்த்து செல்போனில் படம் எடுத்து இருக்கிறார்கள்.

''அண்ணா நாங்க அழுதாலும் அடிச்சாங்கண்ணா. அழறதை நிப்பாட்டிட்டு கேவினாலும் அடிச்சாங் கண்னா'' என்றாள் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவள்.

''சப்பாத்து, வண்டிப்பெரியார், கட்டப்பனை, நெடுங்கண்டம்னு எல்லாப் பகுதியிலும் பிரச்னை. பெரிய கொடுமை என்னன்னா, கேரள போலீஸ் காரர்கள் பக்கத்துல இருக்கும்போதேதான் இத்தனை கொடுமையும் நடந்துச்சு. அதைவிடப் பெரிய கொடுமை... நூறடித் தூரத்துல நின்னு தமிழ்நாட்டு போலீஸ் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்துச்சு. யாராலும் ஒண்ணும் செய்ய முடியலை'' என்றார் கம்பம் எல்லையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருக் கிறார்கள். அவர்களின் பெயரையும் நம்மிடம் சொன்னார்கள். அவர்களுடைய உயிர் பாதுகாப்பு கருதி பெயர்களை வெளியிட மாட்டோம் என்ற உறுதியுடன் இந்தச் சந்திப்பு நடந்தது. கம்பத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (37), கொடியம்மாள் (35) இருவரும் ''அய்யா... எங்க உசுரே போனாலும் பரவாயில்லை. இந்தக் கொடுமையை எழுதுங்க'' என்று துணிச்சலாக வாக்குமூலம் அளித்தார்கள். பேச்சியம்மாளை செருப்பால் அடித்திருக் கிறார்கள். கொடியம்மாளின் பின்புறத்தில் அச்சில் ஏற்ற முடியாத அசிங்கத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். இந்தக் கொடுமையின்போது பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர்களில் ஜீப் ஓட்டுநர் ஜெய சீலனும் ஒருவர். இவர் மீது சிறுநீர் கழித்து இருக்கிறார்கள்.

இந்தக் கொடுமைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத கொடுமைகள் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் _ கேரள அரசின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் _ தமிழர்கள் வசிக்கும் கிராமங்களில் அரங்கேறி இருக்கின்றன (அந்த மக்களின் பாதுகாப்பு கருதி ஊர்ப் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன).

அச்சங்கடைப் பகுதியில் கார்கள், ஜீப்புகள் எரிக்கப்பட்டன. வழியில் தென்பட்ட தமிழர்கள் பலர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள செக் போஸ்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கம்பம் அருகே உள்ள என்.டி. பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் கார் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு இருக்கி றது. தமிழர்களின் டீக்கடைகளும் நாசமாக்கப் பட்டன.

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் 300-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன. வாகனங் கள் தலைகுப்புறக் கவிழ்க்கப்பட்டதாக, வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் கம்பத்தைச் சேர்ந்த ருக்மான் கூறினார். வண்டிப்பெரியாரில் ஐயப்பப் பக்தர்கள் வந்த வண்டியை மறித்து செருப்புமாலை போட்டிருக்கிறார்கள். கடைசி நிலவரப்படி தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் உத்தமபாளையம் அருகில் உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு ஐயப்பன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றி, ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும், தேசியக் கட்சிகளும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன வெட்கமே இல்லாமல்!

- சண்.சரவணக்குமார்

வந்தேமாதரத்தின் கண்டனம்:

தின்பது இங்கே படிப்பது இங்கே சம்பாதிப்பதும் இங்கே தமிழ்நாட்டுல இருந்து எதுவும் வரவில்லை என்றால் நீங்கள் தேயிலையை தான் பறிச்சு திங்க வேண்டும் ஞாபகம் இருக்கட்டும். இந்த நிலைமையில் இருக்கும் போதே உனக்கு இவ்ளோ திமிரா? ஏண்டா #$ர்#%$ மாதிரி பொம்பளைங்கள அடிக்கிற உன் வீரத்தை ஆம்பிளைகளுக்கு காட்டு. உண்மையிலேயே உனக்கு ரோசம் இருந்தால் நீ சாப்பாட்டுல உப்பு போட்டு சாப்பிட்டால் தமிழகத்தில் இருந்து வரும்(மின்சாரம் உட்பட) எதுவும் எங்களுக்கு வேணாம்னு சொல்லுங்கடா அப்ப ஒத்துக்குறேன். அதை விட்டுட்டு கூலி வேலைக்கு வரும் என் தாய்கள்,சகோதரிகள் மீது காட்டுகிறாயா? தமிழகத்தில் யாரும் மலையாள பெண்கள் இல்லை என நினைத்து கொண்டு இருக்கிறீர்களா இங்கும் ஆயிரக்கணக்கில் மலையாள சகோதரிகள் இருக்கின்றனர். தமிழன் எப்பொழுதும் தன் வீரத்தை பொம்பளைங்க மீது காட்ட மாட்டான். மாட்டுக்கறி திங்கும் உங்களுக்கு எங்க இதெல்லாம் தெரிய போகுது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை மறக்க வேண்டாம்.

(சில ஈனச் செயலில் இறங்கியுள்ள நபர்களுக்கு மட்டுமே இக்கண்டனம்)

இணையத்தில் உங்கள் ஆதரவை தெரிவிக்க:

நண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.

<a href="http://www.change.org/petitions/central-government-of-india">'>http://www.change.org/petitions/central-government-of-india">http://www.change.org/petitions/central-government-of-india

நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.

பதிவர் நண்பர்களே இந்த செய்தியை உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டு பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நம் சமூகத்தை காக்க உதவுங்கள்.

tm_toolbar_logo.gif

இது இந்திய உள் நாட்டுப் பிரச்சனை இந்திய தேசிய கொடியை ஏற்றுக் கொண்ட இரு மாணில மக்கள் பிரச்சனை இதுக்க போய் மூக்கு கொடுத்து உடைபடுவதை விட இந்திய நடுவன் அரசு தமிழர் விரோத கொள்கை உடையவர்கள் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழக அரசியல் வாதிகள் புரிய வைக்க வேண்டும்..........

  • தொடங்கியவர்

இது இந்திய உள் நாட்டுப் பிரச்சனை இந்திய தேசிய கொடியை ஏற்றுக் கொண்ட இரு மாணில மக்கள் பிரச்சனை இதுக்க போய் மூக்கு கொடுத்து உடைபடுவதை விட இந்திய நடுவன் அரசு தமிழர் விரோத கொள்கை உடையவர்கள் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழக அரசியல் வாதிகள் புரிய வைக்க வேண்டும்..........

மருத்துவர் ராமதாஸ் ச்சீ வடிவேலு ஐயா!

ஒரு கையெழுத்து போடுவதில் தப்பில்லையே? ஒரு இளைஞர் அணித்தலைவர் என்று வாசலில் பெரிய போட்டே மாட்டிகிடக்கு.இதுக்குள்ளே மாட்ட ஏன் இந்த அச்சம்

  • கருத்துக்கள உறவுகள்

வந்தேமாதரம் என்று போலிக் கூப்பாடு போடுவதை முதலில் விட்டுத் தொலையுங்கள். முதலில் நீங்கள் இந்தியர் இல்லை என்பதை உணருங்கள், அப்போது எங்கள் ஆதரவு கிடைக்கும். வந்தேமாதரம், ஜெய் கிந் என்றெல்லாம் போலித் தேசியவாத மதுவைக்குடித்துவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு இங்கே வருகிறீர்கள்??

முதலில் தமிழனென்று சொல்லிக்கொண்டு வாருங்கள், பின்னர் ஆதரவு பற்றி யோசிக்கலாம். இந்திய போலித்தேசியவாதம் பாடும் எந்த நாய்க்கும் தமிழன் ஆதரவு தரமாட்டான். <_<

  • கருத்துக்கள உறவுகள்

வந்தேமாதரம் என்று போலிக் கூப்பாடு போடுவதை முதலில் விட்டுத் தொலையுங்கள். முதலில் நீங்கள் இந்தியர் இல்லை என்பதை உணருங்கள், அப்போது எங்கள் ஆதரவு கிடைக்கும். வந்தேமாதரம், ஜெய் கிந் என்றெல்லாம் போலித் தேசியவாத மதுவைக்குடித்துவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு இங்கே வருகிறீர்கள்??

முதலில் தமிழனென்று சொல்லிக்கொண்டு வாருங்கள், பின்னர் ஆதரவு பற்றி யோசிக்கலாம். இந்திய போலித்தேசியவாதம் பாடும் எந்த நாய்க்கும் தமிழன் ஆதரவு தரமாட்டான். <_<

உங்களின் கருத்தே எனது கருத்தும்.

நன்றி ரகுநாதன்.

ந.க.அ, GTF, வட அமெரிக்க நாம் தமிழர், வட அமெரிக்க தமிழ் சங்கம்(FeTNA), மற்றும் இயக்கங்கள் எல்லோரும் சேர்ந்து இந்திய மட்திய அரசின் மாற்றாந்தாய் மனபோக்குக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும்.

இந்த விடயத்தை கில்லாரிக்கு தெரிய படுத்த வேண்டும். அவவுக்கு தமிழநாடு மீது அக்கறை உண்டு.

நாங்கள் 21 ம் நூற்றாண்டு பொன்னம்பலங்களாக இருக்க கூடாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

வந்தேமாதரம் என்று போலிக் கூப்பாடு போடுவதை முதலில் விட்டுத் தொலையுங்கள். முதலில் நீங்கள் இந்தியர் இல்லை என்பதை உணருங்கள், அப்போது எங்கள் ஆதரவு கிடைக்கும். வந்தேமாதரம், ஜெய் கிந் என்றெல்லாம் போலித் தேசியவாத மதுவைக்குடித்துவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு இங்கே வருகிறீர்கள்??

முதலில் தமிழனென்று சொல்லிக்கொண்டு வாருங்கள், பின்னர் ஆதரவு பற்றி யோசிக்கலாம். இந்திய போலித்தேசியவாதம் பாடும் எந்த நாய்க்கும் தமிழன் ஆதரவு தரமாட்டான். <_<

:lol:

தமிழன் என தம்மை அழைத்துக் கொள்வதையே வெட்கமென நினைத்து நாய்க்கு கழுத்தில் கட்டும் வார் மாதிரி 'பொந்தியன்' என அழைத்துக்கொள்ளும் சென்மங்களும் இங்கேயுண்டு...

ரகுநாதன், நீங்கள் சொல்லும் விடயம் நடக்க பல காலமாகலாம் ..தமிழன் அடிபட்டு உயிர்போகும் நிலை வந்தால் நிலைமை மாறும்...அதுவரை நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க போகிறீர்கள்...நாங்கள் முள்ளிவாய்க்காலை பார்த்தமாதிரி... நடக்கட்டும் ராசா... :icon_idea:

உலகத்தமிழினம் ஒன்றுபட்டு நிற்கட்டும். அதுவே எமது இழப்புக்களின் பாடம்.

கையொப்பம் இட்டுள்ளேன் : http://www.change.org/petitions/central-government-of-india

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கைநாட்டு வைத்திருக்கிறேன்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கையொப்பம் இட்டுள்ளேன்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.