Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டொராண்டோவில் இன்று

Featured Replies

  • தொடங்கியவர்

வெளிநாடுகளில் கனேடிய நிறுவனங்கள் லஞ்சம் கொடுப்பதற்கு எதிரான சட்டங்கள் பலப்படுத்தப்படவுள்ளன.

 

வெளிநாடுகளின் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கும் கனேடியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை இலகுவாக்கும் வகையில் சட்டத் திருத்தங்களைக் கனேடிய அரசு முன்வைத்தது.

 

விதிகளுக்கு அமைவாக கனேடிய நிறுவனங்கள் செயற்படவேண்டுமென எதிர்பார்ப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்தார்.


செனற் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், தற்போது ஐந்து வருட காலமாக உள்ள சிறைத் தண்டனை 14 வருடங்கள் வரை அதிகரிக்கப்படும். அபராதத்திற்கு வரையறை விதிக்கப்படவில்லை.

 

இந்த அறிவிப்பை வரவேற்பதாக என்டீபீ அறிவித்தது.

 

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13625

  • Replies 427
  • Views 47.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எச்சரிக்கை. வியாழன் இரவு கடுமையான மழை, பனி இருக்கும்!

 

வியாழக் கிழமை இரவு மழையும் பனியும் ரொறான்ரோ நகரைத் தாக்கப் போவதாக கனடிய வானிலை நிறுவனம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.


மெலிதாய் இருக்கும் பனிப் பொழிவு வியாழன் காலையில் மிச்சிகன் மற்றும் லேக் ஹூரான் பகுதியிலிருந்து மெல்ல நகன்று ரொறான்ரோவை நோக்கி வரும் என்று அந்தத் தகவல் கூறுகிறது.

 

உறைய வைக்கும் குளிர் மழையும் சில இடங்களில் பனிக் கட்டி மழையும் பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

இந்த கடும் பனிப் பொழிவு வெள்ளி முழுவதும் இருக்கும் என்று தெரிகிறது.


ரொறான்ரோ உட்பட ஒண்டோரியோவின் கிழக்குப் பகுதியில் 15 செண்டிமீட்டர் வரை பனிப் பொழிவு இருக்கும். குளிர் -2 டிகிரிக்கு சென்று விடும் என்று வானிலை நிலையம் தெரிவிக்கிறது.

 

http://ekuruvi.com/news%204582013

  • கருத்துக்கள உறவுகள்
ரொறன்றோ பிராந்தியத்திற்குப் பனிப்பொழிவு எச்சரிக்கை - கனடா சுற்றுச்சூழல் திணைக்களம்
பிப் 7, 2013
 
ரொறன்றோ பிராந்தியத்திற்குப் பனிப்பொழிவு எச்சரிக்கையொன்றை கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் விடுத்தது.
தெற்கு மற்றும் கிழக்கு ஒன்றாரியோவின் பெரும் பகுதியில் பனிப் புயல் ஒன்று காரணமாக இன்றிரவு பனிப்பொழிவு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

07022013%20031.jpg

ரொறன்றோவில் குறைந்தது 20 சென்றிமீற்றர் பனிப்பொழிவு ஏற்படுமென அறிவிக்கப்படுகிறது.

மிசிசாகா, பிறம்ரன், ஹமில்டன், பேர்ளிங்ரன், ஓக்வில் ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட பனிப்புயல் குறித்த அவதானிப்பு நிலையை, பனிப்புயல் குறித்த எச்சரிக்கையாக சுற்றுச்சூழல் திணைக்களம் மாற்றியது.

கடந்த ஐந்து வருட காலத்தில் ரொறன்றோவில் 24 மணி நேரத்தில் 20 சென்றிமீற்றர் பனிப்பொழிவு ஏற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi24.com/news/26695/64//d,fullart.aspx

  • தொடங்கியவர்

நாளைக்கு விடுமுறையை போட்டு வீட்டில் இருப்பது பலவழிகளில் நல்லது.

சில விபத்துக்கள் ஏற்படும். பலரின் வாகன காப்புறுதி பணம் உயரும்.

பல மணி நேரங்களை வீதியில் செலவழிக்கவேண்டி இருக்கும்.

எனவே நாளைக்கு விடுமுறையை போட்டு வீட்டில் இருப்பது பலவழிகளில் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

Southern Ontario braces for biggest snowstorm in years

 

 

li-labrador-weather-2013020.jpg

 

 

நாளைக்குரிய வேலையை வீட்டில் இருந்தவாறே செய்யக் கூடியவர்கள் செய்யலாம் தானே, விடுமுறை தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றில்லைத் தானே.

Edited by யாயினி

  • தொடங்கியவர்

ஆம், வீட்டில் இருந்து செய்யக்கூடிய வேலை அதற்கு மேலிடமும் அனுமதித்தால் வீட்டில் இருந்து வேலையை செய்யலாம்.

  • தொடங்கியவர்

- பாடசாலைகள் திறக்கப்படும், ஆனால் போக்குவரத்து வசு வண்டிகள் ஓடாது
- இதுவரை பொழிந்த பனியை விட மேற்கொண்டுதான் அதிகமாக பொழிய உள்ளது
- 8 தொடக்கம் 11 வரை
- மணிக்கு ஒரு சென்றி மீட்டர் பொழிய உள்ளது
- மிசிசிசாகா, ஹமில்டன் பக்கம் அதிகமாக பொழிய உள்ளது

 

snow.jpeg.size.xxlarge.letterbox.jpeg

  • தொடங்கியவர்

கடும் பனிப்பொழிவால் பல விமானங்கள் ரத்து பேரூந்து , ரயில் சேவைகளும் மாற்றம்

 

ரொறொன்ரோவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதையடுத்து தெற்கு ஒன்றோரியப் பகுதிகளில் வாகனங்களில் எங்கும் பயணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புக்கள் வெளியாகியுள்ள்ளன.


விமானப் போக்குவரத்து தாமதம் மற்றும் ரத்து தொடர்பான விபரங்களை கீழே காணலாம்.

 

 

ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையம் :

பியர்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 120 விமானங்களும் , வந்து சேரவேண்டிய 110 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விமானங்களின் வருகை புறப்பாடு குறித்த மேலதிக: http://www.torontopearson.com/en/flights/schedules/#%23



GO போக்குவரத்து மாற்றங்கள் :

GO போக்குவரத்து சேவைகள் இயக்கப்படுகின்றன என்ற போதிலும் கூட விரைவு ரயில்கள் பெரும்பாலான நிலையங்களில் நிற்காது என்பது உள்ளிட்ட பல மாற்றங்களும்,  சில வழித்தட பேருந்து மற்றும் ரயில்  சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

 

இதனை சரியாக அறிந்து: http://www.gotransit.com/public/en/schedules/winterstorm.aspx#



http://ekuruvi.com/toronto%20weather%20feb

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தற்சமய நிலவரப்படி

 

img6251x.jpg



img6252i.jpg

  • தொடங்கியவர்

வரும் இரண்டு நாட்களில் வெப்பநிலை + ஆறுக்கு செல்கின்றது. பொழிந்த பனியில் கணிசமான பகுதி உருகும்.

 

 

பின்னர் திங்கள் அளவில் மழை. பின்னர் - க்கு செல்லும் வெப்பநிலை.


பல இடங்களில் ஆபத்தான சறுக்கல் நிலை ஏற்படும்.

  • தொடங்கியவர்

மாலை நாலு மணியளவில் பொழியும் பனி பலவீனம் அடையும்
இரவு பத்து மணிக்கு முழுமையாக நிற்கும்.
அப்பொழுது 15-25cm அளவில் இருக்கும் - பனி  :icon_idea:

 

அமெரிக்காவில் சில இடங்களில் 80 cm வரை பனி பொழியும்  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரி 4 ற்கு பின் விடைபெறும் பென்னி(penny) நாணயம்.

 

61785_538051706228649_308023291_n.jpg

 

பெப்ரவரி 4 ற்கு பின் விடைபெறும் பென்னி(penny) நாணயம்.

 

1958 லிருந்து இதுவரை காலமும் புழக்கதிலிருந்து வந்த பென்னி என்று அழைக்கப்படும் கனேடிய ஒரு சத நாணயம் இந்த மாதத்தோடு விடை பெற்றுக்கொள்கிறது.

 

1959 லிருந்து 1907 வரை இது  இங்கிலாந்தில் தான் தயாரிக்கபட்டது.

 

1908 லிருந்து 2012 வரையில் இந்த பென்னி என்று அழைப்கப்படும் நாணயம் கனடாவில் தயாரிக்கப்பட்டது.

 

1908 லிருந்து 2012 வரையில் கனடாவில் தயாரிக்கப்பட்டது.

 

2012ம் ஆண்டில் ஒன்றின் உற்பத்தி செலவு 1.6 சதம்.

 

இதுவரையில் கனடாவில் புழகத்திலிருக்கும் இவற்றின் மொத்த நிறை 3100 மெட்ரிக் தொன்.

 

ஆனால் ஒரு சதம் செல்லுபடியாவதற்கு காலவரையறை இல்லை.ஏற்றுக்கொள்ளுவதும் மறுப்பதும் வணிக நிறுவனங்களின் முடிவு.வங்கிகள் எப்போதும் பென்னிகனை ஏற்றுக்கொள்ளும்.

 

கொள்வனவுகளுக்குப் பணம் செலுத்தும் போது கிட்டடிய 5 சதத்தில் செலுத்துவீர்கள்.
(உ-ம் $1.02 1.00. $2.63, $ 2.65)

 

வங்கி அட்டைகள் மூலம் கொள்வனவுக்கான தொகையை மட்டுமே செலுத்துவீர்கள்.


(உ-ம் $24.32 ; $24.32)

 

இனி பணமாக செலுத்தினால் ஆகக்கூடியது 2 சதம் லாபம் அல்லது நட்டம்.


 

சிறுவர்களின் சேமிப்பு பழக்கம் கூட பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

  • தொடங்கியவர்

பெப்ரவரி 4 ற்கு பின் விடைபெறும் பென்னி(penny) நாணயம்.

 

 

 

இனி பணமாக செலுத்தினால் ஆகக்கூடியது 2 சதம் லாபம் அல்லது நட்டம்.

 

எப்பொழுதுமே இலாபம் அடையலாம், பணத்தை இல்லை மட்டையை தேவைக்கு ஏற்ப பாவித்தால்  :D

  • தொடங்கியவர்

கடும் பனிப்புயலால் ரொறொன்ரோ சாலைகள் சேதம் - சுத்தப்படுத்த $4 மில்லியன் வேண்டுமாம்!!

 

கடந்த சில ஆண்டுகளில் இதுவரை கண்டிராத அளவிற்கான கோரப் பனிப்புயலின் தாக்கம் ரொறொன்ரோ நகர மக்களை மட்டுமன்றி சாலைகளையும் புரட்டிப் போட்டுள்ளது என்று தான் கூற வேண்டும். 30-cm அளவிற்கான பனி விமான வழித்தடங்களிலும் , சாலைகளிலும் அடர்ந்துள்ளதால் பல இடங்களில் போக்குவரத்தும் முற்றிலுமாக முடக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.


மெதுவாக இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து சாலைகளை சுத்தப்படுத்தும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்கு $4 மில்லியன் செலவாகும் என்ற கணிப்பினை வெளியிட்டுள்ளார் மாநகர சாலைகள் செயல் மேலாளர் ஹெச்டோர் மொரேனோ.

இது ரொறொன்ரோ நகர் சாலைகளை சுத்தப்படுத்துவதற்கான தொகை மட்டுமே . உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான முனையங்களை சுத்தம் செய்வதற்கு இன்னமும் அதிகம் செலவாகலாம் எனத் தெரிகிறது.

இந்த பனிப்புயலினால் வெள்ளிக்கிழமையன்று பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதும், நேற்றும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இயக்கப்படாததால் பயணிகள் தத்தளித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

http://ekuruvi.com/snow%204%20millian

  • தொடங்கியவர்

நில மாற்ற வரி நீக்கப்படும் - மேயர் ஃபோர்ட் அறிவிப்பு

 

மேயர் தேர்தலில் போட்டியிடும்போது அதிகமாய் இருக்கும் நில மாற்ற வரியை நீக்குவேன் என்று ராப் ஃபோர்ட் அறிவித்திருந்தார். தற்போது அதை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். வானொலியில் தன்னுடைய வார நிகழ்ச்சியில் அவர் இந்தத் தகவலை தெரிவித்திருக்கிறார்.


’வரப் போகும் சில மாதங்களில் இந்த வரியில் பத்துசதவீதத்தை நீக்கிவிடுவோம். பிறகு படிப்படியாக அந்த வரி முழுமையாக நீக்கப்படும்’ என்று அந்த வானொலி நிகழ்ச்சியில் அறிவித்திருக்கிறார் ஃபோர்ட்.

‘இந்த வரியால் நகர சபைக்கு பணம் வருகிறது. ஆனால் இந்த வரியை விதிக்கும் ஒரே நகரச்பை நம்முடையதுதான். அதுவும் இது இரட்டை வரிவிதிப்பு போன்றது. இது நியாமல்ல. நான் தேர்தல் பிரச்சாரத்தின்போது இதை நீக்குவேன் என்று அறிவித்திருந்தேன். அந்த வாக்குறுதியை கண்டிப்பாய் நிறைவேற்றுவேன்’ என்று அவர் தெரிவிக்கிறார்.

இந்த நில மாற்ற வரியை ஃபோர்டுக்கு முந்தைய மேயர் டேவிட் மில்லர் தனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்தார். அப்போது நகரசபையின் பணத்தேவைக்காக இந்த வரி அறிமுகம் செய்யப்பட்டது.

 

http://ekuruvi.com/Ford%20promises%20to%20cut%20land%20transfer%20tax

  • தொடங்கியவர்

ஸ்காபுறோ தமிழரின் கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பலை துணிச்சலுடன் எதிர்கொண்ட தமிழ்த் தம்பதிகள்!!

 

ஸ்காபுறோ தமிழரின் கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பலை துணிச்சலுடன் எதிர்கொண்ட தமிழ்த் தம்பதிகள்!!


ஸ்காபுரோவில் பட்டுச் சேலைகள்  மற்றும் இதர துணிமணிகளை விற்று வரும் பிரபல நிருவனங்களுள் ஒன்று ராஷி சில்க்ஸ். பிரேமநாதன் மற்றும் ஜெயந்தினி கண்ணப்பநாதனுக்குச் சொந்தமான இந்தக் கடையில் பேரம் பேசி துணிகளை வாங்குவதற்கு பலர் வருவது வழக்கம்.

இரு நாட்களுக்கு முன்னர் துப்பாக்கி ஏந்திய 17 வயது இளையோர் இருவர் இந்தக் கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் உரிமையாளர்களையும் , பணியாற்றியவர்களையும் மிரட்டியுள்ளனர். சாதுர்யத்துடனும் , துணிச்சலுடனும் கணவன், மனைவி இருவரும் துப்பாக்கி ஏந்திய கும்பலுடன் போராடி அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவரின் துணிச்சலுடன் போராடியதைக் கண்டு பலர் வியந்துள்ளனர். குறிப்பாக பெண்மணி ஒருவர் கயவர்களுடன் துணிச்சலாக சண்டையிட்டதே நேற்று கனடிய ஊடகங்கள் அனைத்திலும் பெரிதாய் பேசப்பட்டது.

 

http://ekuruvi.com/carborough%20store%20owners%20fight%20off%20armed

  • கருத்துக்கள உறவுகள்

Start your thumbs. RRRoll Up the Rim to Win is back! Visit your local Tims to start rolling for a chance to win.* http://bit.ly/v74RUTR

 

 

579669_10151294088163097_1196544339_n.jp

  • கருத்துக்கள உறவுகள்
போலியான பயணச் சீட்டுக்கள் பெருக்கத்தால் நட்டத்தில் ரொறொன்ரோ போக்குவரத்துக் கழகம்!!
Feb 19 2013 08:57:43
 
9516ab384abe9a5.jpg

 

ரொறொன்ரோ போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான தொடரூந்துகளில் பயணம் செய்வோரில் பலர் போலியான பயணச் சீட்டு , மற்றும் அனுமதிச் சீட்டுக்களை பயன்படுத்தியது கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ரொறொன்ரோ மாணவர்கள் பயன்படுத்தி வந்த அனுமதி அட்டைகளே.

 
இது போன்ற மக்களின் செயல்களால் கடந்த ஆண்டு மட்டும் $2 மில்லியன் வருமான இழப்பு ரொறொன்ரோ போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இப்படிப் போலியாகத் தயாரிக்கப்பட்ட அனுமதி அட்டைகள் பல சீனாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன . அவை அச்சு அசலாக கனடிய டோக்கன்கள் போன்று இருப்பதால் கண்டுபிடிப்பதும் எளிதாக இல்லை என்கின்றனர் அதிகாரிகள்.

 

http://ekuruvi.com/Fake%20tokens%20Metropasses%20cost%20TTC%20nearly

  • தொடங்கியவர்

கனடாவிற்குள் குடியேறி தனி முத்திரை பதித்தவரா நீங்கள்?

 

பிற நாடுகளிலிருந்து கனடாவிற்குள் குடியேறி தொழிற்துறையில் தொடங்கி அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய 25 பேர்களில் நீங்களும் ஒருவரா ? அப்படியெனில்  உங்களுக்கு விருது கொடுத்து கௌரவிக்க  காத்திருக்கிறது றோயல் பேங்க் ஒப் கனடா.


2013 ஆம் ஆண்டின்  25 RBC Top 25 Canadian Immigrant  விருதுக்கான மனுத் தாக்கல்கள் ஆரம்பமாகியுள்ளன. ஆண்டுதோறும்  றோயல் பேங்க் ஒப் கனடாவால்  வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள் கடந்த ஆண்டுகளில் கனடாவிற்கு வந்து தொழிற்துறையில் சாதனை படைத்தோர் , சிறந்த மனித நேயப் பண்பாளர்கள் , சிறந்த கலைநயம் மிக்கவர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய பலருக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

இதற்கான தகுதிகள் என்ன தெரியுமா??

 

பிற நாடுகளிலிருந்து கனடாவிற்கு வந்து கனடாவில் ஏதாவது ஒரு துறையில் தனி முத்திரை பதித்து நாட்டில் உள்ள பலருக்கும் நீங்கள் முன் மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்பதே. சமூக சேவை, கலை, தொழில் உள்ளிட்ட எந்த பிரிவினையும் சார்ந்தவராக நீங்கள் இருக்கலாம்.

 

இந்த தகுதிகள் உங்களிடம் இருந்தால் இனியும் தாமதிக்க வேண்டாம். உடனடியாக  http://canadianimmigrant.ca/canadas-top-25-immigrants/  தளத்திற்குச் சென்று மனுத்தாக்கல் செய்யுங்கள். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி திகதி பெப்ரவரி 28

 

http://ekuruvi.com/best%20immigration%20award

 

Edited by akootha

புதிதாக வாகனங்களை வாங்குவோர் கவனத்திற்கு......

 

    இந்த வருட ஆரம்பத்திலிருந்து ஒன்ராறியோ அரசு வாகனப்புகையிலிருந்து ஏற்படும் காபனீரொட்சைட் மற்றும் மாசுகளை கட்டுப்படுத்தும் பரிசோதனை இயந்திரங்களை மாற்றியுள்ளது.முந்தைய இயந்திரத்தில் வாகனங்களின் உற்பத்தி திகதிக்கேற்ப அளவீடுகள் மாறுபடும். இப்புதிய இயந்திரமானது ஒரே அலகை மாத்திரம் கொண்டுள்ளது.பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு 2004ம் ஆண்டுக்கு முற்பட்ட வாகனங்கள் பலத்த சவால்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது.( charcoal canister)சாக்கோல் கனிஸ்டர் மற்றும் (catalytic converter) கற்றலிக்கொன்வேட்டர் போன்றவைகளின் செயற்பாடுகள் ஐந்து ஆறு வருடங்களின் பின் செயலற்றுப்போவதால் இவகளை மாற்றீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.இவையிரண்டும் வாங்குவதற்கு குறைந்தது $1000 செலவாகும். அத்துடன் மாற்றுவதற்குரிய செலவு $300.00-$500.00 வரையாகலாம்.இந்த புகை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் வாகனம் சித்தி பெறாதவிடத்து அதே இடத்தில் நீங்கள் $450.00+வரி செலுத்தி சிறு திருத்த வேலைகளை மேற்கொள்ள வேண்டும்.அப்படியும் சித்தி பெறாத வாகனங்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இரண்டு வருடத்திற்கான பாவனை உரிமம் வழங்கப்படும்.இரண்டு வருடம் முடிய பழைய இரும்பிற்கு பேரிச்சம்பழம் தான்.

                                                          சரி இனி விடயத்திற்கு வருவோம்.பாவித்த வாகனங்களை வாங்குவோர் வாகனத்தை வாங்க முன்பு புகைப்  பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா? சாதரணமாய் சித்தியெய்தியுள்ளதா? என்று கவனமாய் வாங்க முன்பு ஆராயவும்.விற்பவர் வாங்குபருக்கு தற்போதுள்ள நிலையிலேயே வாகனத்தை விற்கிறேன் என்று எழுதினால் வாங்குபவர் பணத்தை இழக்க நேரிடும்.

 

அன்புடன்

 நீலக்குருவி

 

 

 

Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்

தமிழர்களின் மரபணுக்களை பரிசோதனை செய்து சில ஆய்வுகளைச் செய்யவேண்டிய நிலை - Sick Children Hospital

 

இலங்கைத் தமிழர் ஒருவரின் 10 - 12 வயதான மகன் கண்பார்வை மிக வேகமாக குறைந்து வருவதனை அவதானித்து வைத்திய ஆலோசனைக்காக அழைத்துச்சென்று உள்ளனர்.  சோதனைகளின் பின்னர், இவ்விதமான் நோய்/குறைபாடு இலங்கைத் தமிழ் வம்சாவழிக் கனேடியத் தமிழ்ச் சிறுவர்கள் மத்தியில் வெகுவேகமாக பரவிவருவதனை ரொரன்றோ Sick Children Hospital ஐச் சேர்ந்தை வைத்தியர்கள் அவதானித்துள்ளனர்.  இது தொடர்பான சிகிச்சைகள் / வைத்திய ஆய்வுகளுக்காக இலங்கைத் தமிழர்களின் மரபணுக்களை பரிசோதனை செய்து சில ஆய்வுகளைச் செய்யவேண்டிய நிலை உள்ளது. 


மேற்குறித்த மரபணுச்சோதனைகளுக்காக இரத்த உறவில்லாத ஆகக் குறைந்தது 100 இலங்கைத் தமிழராவது தமது உமிழ்நீர் மாதிரியை வழங்கி உதவி புரியலாம்.  நீங்கள் வழங்கப் போகும் உமிழ்நீர் மாதிரி விலைமதிப்பே இல்லாததாகும்


இடம்:  Maclean Community Centre in Ajax
காலம்: Sunday Feb 24th from 3 – 7 PM

 

http://ekuruvi.com/dna%20testing

  • கருத்துக்கள உறவுகள்

உதவுங்கள் உறவுகளே.உமிழ்நீர் தானே. ஆராட்சிக்கு தானே கேட்கிறார்கள்.எதிர்கால சிறார்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு உதவுங்கள்.

  • தொடங்கியவர்

ரொறொன்ரோவைத் தாக்க வருகிறது மற்றுமொரு பனிப்புயல்!!

 

45kuruvi.jpg

http://ekuruvi.com/Winter%20storm%20could%20hit%20Toronto%20Tuesday%20evening

  • கருத்துக்கள உறவுகள்
இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாலாடைக்கட்டி(cheese) திரும்ப அழைக்கப்படுகின்றன
Peter February 26, 2013 Canada
 
இத்தாலி நாட்டில் இருந்து கனடாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பாலாடைக்கட்டியில் லிஸ்ரிறியா என அழைக்கப்படும் பதார்த்தம் சேர்ந்திருப்பதாகத் தகவல் கிடைத்ததையிட்டு அவைகள் திரும்ப அழைக்கப்படுகின்றன.
 
இந்தப்பாலாடை கட்டிகள் இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும். மாயுறி, ஹொற்கொன்சொலா என்ற பெயரையுடைய பாலாடைக் கட்டிவகைகளே திரும்ப அழைக்கப்படுகின்றன. இவைகள் 1.44 கில்லோக்கிராம் அளவுகளில் உள்ளன. அத்துடன் யூலை1, 2013, யூலை4, 2013 காலங்களுக்கு முன்பு பாவக்கும்படி குறிப்பிடப்பட்டவைகள் என தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.
 
கனடிய உணவு பரிசோதனைத் தாபனமானது இதுவரையில் இந்தப் பொருளைப் பாவித்ததால் எந்தவிதமான நோய் ஏற்பட்டதாக தகவல்கள் எதும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்திருக்கின்றது.
 
லிஸ்ரிறியாவால் பாதிக்கப்பட்ட பொருட்கள் எந்தவிதமான மணத்தையும் தெரிவிக்காது, ஆனால் அவற்றை உண்பதனால் கடுமையான காய்ச்சல், தலையிடி, கழுத்தில் இறுக்கம், வாந்தியெடுத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம் என கூறப்படுகின்றது. கருவுற்றிருக்கும் பெண்கள், வயது முதியவர்கள் இவற்றை உண்டால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.