Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

வெளிநாடுகளில் கனேடிய நிறுவனங்கள் லஞ்சம் கொடுப்பதற்கு எதிரான சட்டங்கள் பலப்படுத்தப்படவுள்ளன.

 

வெளிநாடுகளின் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கும் கனேடியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை இலகுவாக்கும் வகையில் சட்டத் திருத்தங்களைக் கனேடிய அரசு முன்வைத்தது.

 

விதிகளுக்கு அமைவாக கனேடிய நிறுவனங்கள் செயற்படவேண்டுமென எதிர்பார்ப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்தார்.


செனற் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், தற்போது ஐந்து வருட காலமாக உள்ள சிறைத் தண்டனை 14 வருடங்கள் வரை அதிகரிக்கப்படும். அபராதத்திற்கு வரையறை விதிக்கப்படவில்லை.

 

இந்த அறிவிப்பை வரவேற்பதாக என்டீபீ அறிவித்தது.

 

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13625

Link to comment
Share on other sites

  • Replies 427
  • Created
  • Last Reply

எச்சரிக்கை. வியாழன் இரவு கடுமையான மழை, பனி இருக்கும்!

 

வியாழக் கிழமை இரவு மழையும் பனியும் ரொறான்ரோ நகரைத் தாக்கப் போவதாக கனடிய வானிலை நிறுவனம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.


மெலிதாய் இருக்கும் பனிப் பொழிவு வியாழன் காலையில் மிச்சிகன் மற்றும் லேக் ஹூரான் பகுதியிலிருந்து மெல்ல நகன்று ரொறான்ரோவை நோக்கி வரும் என்று அந்தத் தகவல் கூறுகிறது.

 

உறைய வைக்கும் குளிர் மழையும் சில இடங்களில் பனிக் கட்டி மழையும் பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

இந்த கடும் பனிப் பொழிவு வெள்ளி முழுவதும் இருக்கும் என்று தெரிகிறது.


ரொறான்ரோ உட்பட ஒண்டோரியோவின் கிழக்குப் பகுதியில் 15 செண்டிமீட்டர் வரை பனிப் பொழிவு இருக்கும். குளிர் -2 டிகிரிக்கு சென்று விடும் என்று வானிலை நிலையம் தெரிவிக்கிறது.

 

http://ekuruvi.com/news%204582013

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ரொறன்றோ பிராந்தியத்திற்குப் பனிப்பொழிவு எச்சரிக்கை - கனடா சுற்றுச்சூழல் திணைக்களம்
பிப் 7, 2013
 
ரொறன்றோ பிராந்தியத்திற்குப் பனிப்பொழிவு எச்சரிக்கையொன்றை கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் விடுத்தது.
தெற்கு மற்றும் கிழக்கு ஒன்றாரியோவின் பெரும் பகுதியில் பனிப் புயல் ஒன்று காரணமாக இன்றிரவு பனிப்பொழிவு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

07022013%20031.jpg

ரொறன்றோவில் குறைந்தது 20 சென்றிமீற்றர் பனிப்பொழிவு ஏற்படுமென அறிவிக்கப்படுகிறது.

மிசிசாகா, பிறம்ரன், ஹமில்டன், பேர்ளிங்ரன், ஓக்வில் ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட பனிப்புயல் குறித்த அவதானிப்பு நிலையை, பனிப்புயல் குறித்த எச்சரிக்கையாக சுற்றுச்சூழல் திணைக்களம் மாற்றியது.

கடந்த ஐந்து வருட காலத்தில் ரொறன்றோவில் 24 மணி நேரத்தில் 20 சென்றிமீற்றர் பனிப்பொழிவு ஏற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi24.com/news/26695/64//d,fullart.aspx

Link to comment
Share on other sites

நாளைக்கு விடுமுறையை போட்டு வீட்டில் இருப்பது பலவழிகளில் நல்லது.

சில விபத்துக்கள் ஏற்படும். பலரின் வாகன காப்புறுதி பணம் உயரும்.

பல மணி நேரங்களை வீதியில் செலவழிக்கவேண்டி இருக்கும்.

எனவே நாளைக்கு விடுமுறையை போட்டு வீட்டில் இருப்பது பலவழிகளில் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Southern Ontario braces for biggest snowstorm in years

 

 

li-labrador-weather-2013020.jpg

 

 

நாளைக்குரிய வேலையை வீட்டில் இருந்தவாறே செய்யக் கூடியவர்கள் செய்யலாம் தானே, விடுமுறை தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றில்லைத் தானே.

Link to comment
Share on other sites

ஆம், வீட்டில் இருந்து செய்யக்கூடிய வேலை அதற்கு மேலிடமும் அனுமதித்தால் வீட்டில் இருந்து வேலையை செய்யலாம்.

Link to comment
Share on other sites

- பாடசாலைகள் திறக்கப்படும், ஆனால் போக்குவரத்து வசு வண்டிகள் ஓடாது
- இதுவரை பொழிந்த பனியை விட மேற்கொண்டுதான் அதிகமாக பொழிய உள்ளது
- 8 தொடக்கம் 11 வரை
- மணிக்கு ஒரு சென்றி மீட்டர் பொழிய உள்ளது
- மிசிசிசாகா, ஹமில்டன் பக்கம் அதிகமாக பொழிய உள்ளது

 

snow.jpeg.size.xxlarge.letterbox.jpeg

Link to comment
Share on other sites

கடும் பனிப்பொழிவால் பல விமானங்கள் ரத்து பேரூந்து , ரயில் சேவைகளும் மாற்றம்

 

ரொறொன்ரோவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதையடுத்து தெற்கு ஒன்றோரியப் பகுதிகளில் வாகனங்களில் எங்கும் பயணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புக்கள் வெளியாகியுள்ள்ளன.


விமானப் போக்குவரத்து தாமதம் மற்றும் ரத்து தொடர்பான விபரங்களை கீழே காணலாம்.

 

 

ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையம் :

பியர்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 120 விமானங்களும் , வந்து சேரவேண்டிய 110 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விமானங்களின் வருகை புறப்பாடு குறித்த மேலதிக: http://www.torontopearson.com/en/flights/schedules/#%23



GO போக்குவரத்து மாற்றங்கள் :

GO போக்குவரத்து சேவைகள் இயக்கப்படுகின்றன என்ற போதிலும் கூட விரைவு ரயில்கள் பெரும்பாலான நிலையங்களில் நிற்காது என்பது உள்ளிட்ட பல மாற்றங்களும்,  சில வழித்தட பேருந்து மற்றும் ரயில்  சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

 

இதனை சரியாக அறிந்து: http://www.gotransit.com/public/en/schedules/winterstorm.aspx#



http://ekuruvi.com/toronto%20weather%20feb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்சமய நிலவரப்படி

 

img6251x.jpg



img6252i.jpg

Link to comment
Share on other sites

வரும் இரண்டு நாட்களில் வெப்பநிலை + ஆறுக்கு செல்கின்றது. பொழிந்த பனியில் கணிசமான பகுதி உருகும்.

 

 

பின்னர் திங்கள் அளவில் மழை. பின்னர் - க்கு செல்லும் வெப்பநிலை.


பல இடங்களில் ஆபத்தான சறுக்கல் நிலை ஏற்படும்.

Link to comment
Share on other sites

மாலை நாலு மணியளவில் பொழியும் பனி பலவீனம் அடையும்
இரவு பத்து மணிக்கு முழுமையாக நிற்கும்.
அப்பொழுது 15-25cm அளவில் இருக்கும் - பனி  :icon_idea:

 

அமெரிக்காவில் சில இடங்களில் 80 cm வரை பனி பொழியும்  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரி 4 ற்கு பின் விடைபெறும் பென்னி(penny) நாணயம்.

 

61785_538051706228649_308023291_n.jpg

 

பெப்ரவரி 4 ற்கு பின் விடைபெறும் பென்னி(penny) நாணயம்.

 

1958 லிருந்து இதுவரை காலமும் புழக்கதிலிருந்து வந்த பென்னி என்று அழைக்கப்படும் கனேடிய ஒரு சத நாணயம் இந்த மாதத்தோடு விடை பெற்றுக்கொள்கிறது.

 

1959 லிருந்து 1907 வரை இது  இங்கிலாந்தில் தான் தயாரிக்கபட்டது.

 

1908 லிருந்து 2012 வரையில் இந்த பென்னி என்று அழைப்கப்படும் நாணயம் கனடாவில் தயாரிக்கப்பட்டது.

 

1908 லிருந்து 2012 வரையில் கனடாவில் தயாரிக்கப்பட்டது.

 

2012ம் ஆண்டில் ஒன்றின் உற்பத்தி செலவு 1.6 சதம்.

 

இதுவரையில் கனடாவில் புழகத்திலிருக்கும் இவற்றின் மொத்த நிறை 3100 மெட்ரிக் தொன்.

 

ஆனால் ஒரு சதம் செல்லுபடியாவதற்கு காலவரையறை இல்லை.ஏற்றுக்கொள்ளுவதும் மறுப்பதும் வணிக நிறுவனங்களின் முடிவு.வங்கிகள் எப்போதும் பென்னிகனை ஏற்றுக்கொள்ளும்.

 

கொள்வனவுகளுக்குப் பணம் செலுத்தும் போது கிட்டடிய 5 சதத்தில் செலுத்துவீர்கள்.
(உ-ம் $1.02 1.00. $2.63, $ 2.65)

 

வங்கி அட்டைகள் மூலம் கொள்வனவுக்கான தொகையை மட்டுமே செலுத்துவீர்கள்.


(உ-ம் $24.32 ; $24.32)

 

இனி பணமாக செலுத்தினால் ஆகக்கூடியது 2 சதம் லாபம் அல்லது நட்டம்.


 

சிறுவர்களின் சேமிப்பு பழக்கம் கூட பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

Link to comment
Share on other sites

பெப்ரவரி 4 ற்கு பின் விடைபெறும் பென்னி(penny) நாணயம்.

 

 

 

இனி பணமாக செலுத்தினால் ஆகக்கூடியது 2 சதம் லாபம் அல்லது நட்டம்.

 

எப்பொழுதுமே இலாபம் அடையலாம், பணத்தை இல்லை மட்டையை தேவைக்கு ஏற்ப பாவித்தால்  :D

Link to comment
Share on other sites

கடும் பனிப்புயலால் ரொறொன்ரோ சாலைகள் சேதம் - சுத்தப்படுத்த $4 மில்லியன் வேண்டுமாம்!!

 

கடந்த சில ஆண்டுகளில் இதுவரை கண்டிராத அளவிற்கான கோரப் பனிப்புயலின் தாக்கம் ரொறொன்ரோ நகர மக்களை மட்டுமன்றி சாலைகளையும் புரட்டிப் போட்டுள்ளது என்று தான் கூற வேண்டும். 30-cm அளவிற்கான பனி விமான வழித்தடங்களிலும் , சாலைகளிலும் அடர்ந்துள்ளதால் பல இடங்களில் போக்குவரத்தும் முற்றிலுமாக முடக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.


மெதுவாக இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து சாலைகளை சுத்தப்படுத்தும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்கு $4 மில்லியன் செலவாகும் என்ற கணிப்பினை வெளியிட்டுள்ளார் மாநகர சாலைகள் செயல் மேலாளர் ஹெச்டோர் மொரேனோ.

இது ரொறொன்ரோ நகர் சாலைகளை சுத்தப்படுத்துவதற்கான தொகை மட்டுமே . உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான முனையங்களை சுத்தம் செய்வதற்கு இன்னமும் அதிகம் செலவாகலாம் எனத் தெரிகிறது.

இந்த பனிப்புயலினால் வெள்ளிக்கிழமையன்று பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதும், நேற்றும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இயக்கப்படாததால் பயணிகள் தத்தளித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

http://ekuruvi.com/snow%204%20millian

Link to comment
Share on other sites

நில மாற்ற வரி நீக்கப்படும் - மேயர் ஃபோர்ட் அறிவிப்பு

 

மேயர் தேர்தலில் போட்டியிடும்போது அதிகமாய் இருக்கும் நில மாற்ற வரியை நீக்குவேன் என்று ராப் ஃபோர்ட் அறிவித்திருந்தார். தற்போது அதை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். வானொலியில் தன்னுடைய வார நிகழ்ச்சியில் அவர் இந்தத் தகவலை தெரிவித்திருக்கிறார்.


’வரப் போகும் சில மாதங்களில் இந்த வரியில் பத்துசதவீதத்தை நீக்கிவிடுவோம். பிறகு படிப்படியாக அந்த வரி முழுமையாக நீக்கப்படும்’ என்று அந்த வானொலி நிகழ்ச்சியில் அறிவித்திருக்கிறார் ஃபோர்ட்.

‘இந்த வரியால் நகர சபைக்கு பணம் வருகிறது. ஆனால் இந்த வரியை விதிக்கும் ஒரே நகரச்பை நம்முடையதுதான். அதுவும் இது இரட்டை வரிவிதிப்பு போன்றது. இது நியாமல்ல. நான் தேர்தல் பிரச்சாரத்தின்போது இதை நீக்குவேன் என்று அறிவித்திருந்தேன். அந்த வாக்குறுதியை கண்டிப்பாய் நிறைவேற்றுவேன்’ என்று அவர் தெரிவிக்கிறார்.

இந்த நில மாற்ற வரியை ஃபோர்டுக்கு முந்தைய மேயர் டேவிட் மில்லர் தனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்தார். அப்போது நகரசபையின் பணத்தேவைக்காக இந்த வரி அறிமுகம் செய்யப்பட்டது.

 

http://ekuruvi.com/Ford%20promises%20to%20cut%20land%20transfer%20tax

Link to comment
Share on other sites

ஸ்காபுறோ தமிழரின் கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பலை துணிச்சலுடன் எதிர்கொண்ட தமிழ்த் தம்பதிகள்!!

 

ஸ்காபுறோ தமிழரின் கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பலை துணிச்சலுடன் எதிர்கொண்ட தமிழ்த் தம்பதிகள்!!


ஸ்காபுரோவில் பட்டுச் சேலைகள்  மற்றும் இதர துணிமணிகளை விற்று வரும் பிரபல நிருவனங்களுள் ஒன்று ராஷி சில்க்ஸ். பிரேமநாதன் மற்றும் ஜெயந்தினி கண்ணப்பநாதனுக்குச் சொந்தமான இந்தக் கடையில் பேரம் பேசி துணிகளை வாங்குவதற்கு பலர் வருவது வழக்கம்.

இரு நாட்களுக்கு முன்னர் துப்பாக்கி ஏந்திய 17 வயது இளையோர் இருவர் இந்தக் கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் உரிமையாளர்களையும் , பணியாற்றியவர்களையும் மிரட்டியுள்ளனர். சாதுர்யத்துடனும் , துணிச்சலுடனும் கணவன், மனைவி இருவரும் துப்பாக்கி ஏந்திய கும்பலுடன் போராடி அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவரின் துணிச்சலுடன் போராடியதைக் கண்டு பலர் வியந்துள்ளனர். குறிப்பாக பெண்மணி ஒருவர் கயவர்களுடன் துணிச்சலாக சண்டையிட்டதே நேற்று கனடிய ஊடகங்கள் அனைத்திலும் பெரிதாய் பேசப்பட்டது.

 

http://ekuruvi.com/carborough%20store%20owners%20fight%20off%20armed

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
போலியான பயணச் சீட்டுக்கள் பெருக்கத்தால் நட்டத்தில் ரொறொன்ரோ போக்குவரத்துக் கழகம்!!
Feb 19 2013 08:57:43
 
9516ab384abe9a5.jpg

 

ரொறொன்ரோ போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான தொடரூந்துகளில் பயணம் செய்வோரில் பலர் போலியான பயணச் சீட்டு , மற்றும் அனுமதிச் சீட்டுக்களை பயன்படுத்தியது கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ரொறொன்ரோ மாணவர்கள் பயன்படுத்தி வந்த அனுமதி அட்டைகளே.

 
இது போன்ற மக்களின் செயல்களால் கடந்த ஆண்டு மட்டும் $2 மில்லியன் வருமான இழப்பு ரொறொன்ரோ போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இப்படிப் போலியாகத் தயாரிக்கப்பட்ட அனுமதி அட்டைகள் பல சீனாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன . அவை அச்சு அசலாக கனடிய டோக்கன்கள் போன்று இருப்பதால் கண்டுபிடிப்பதும் எளிதாக இல்லை என்கின்றனர் அதிகாரிகள்.

 

http://ekuruvi.com/Fake%20tokens%20Metropasses%20cost%20TTC%20nearly

Link to comment
Share on other sites

கனடாவிற்குள் குடியேறி தனி முத்திரை பதித்தவரா நீங்கள்?

 

பிற நாடுகளிலிருந்து கனடாவிற்குள் குடியேறி தொழிற்துறையில் தொடங்கி அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய 25 பேர்களில் நீங்களும் ஒருவரா ? அப்படியெனில்  உங்களுக்கு விருது கொடுத்து கௌரவிக்க  காத்திருக்கிறது றோயல் பேங்க் ஒப் கனடா.


2013 ஆம் ஆண்டின்  25 RBC Top 25 Canadian Immigrant  விருதுக்கான மனுத் தாக்கல்கள் ஆரம்பமாகியுள்ளன. ஆண்டுதோறும்  றோயல் பேங்க் ஒப் கனடாவால்  வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள் கடந்த ஆண்டுகளில் கனடாவிற்கு வந்து தொழிற்துறையில் சாதனை படைத்தோர் , சிறந்த மனித நேயப் பண்பாளர்கள் , சிறந்த கலைநயம் மிக்கவர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய பலருக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

இதற்கான தகுதிகள் என்ன தெரியுமா??

 

பிற நாடுகளிலிருந்து கனடாவிற்கு வந்து கனடாவில் ஏதாவது ஒரு துறையில் தனி முத்திரை பதித்து நாட்டில் உள்ள பலருக்கும் நீங்கள் முன் மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்பதே. சமூக சேவை, கலை, தொழில் உள்ளிட்ட எந்த பிரிவினையும் சார்ந்தவராக நீங்கள் இருக்கலாம்.

 

இந்த தகுதிகள் உங்களிடம் இருந்தால் இனியும் தாமதிக்க வேண்டாம். உடனடியாக  http://canadianimmigrant.ca/canadas-top-25-immigrants/  தளத்திற்குச் சென்று மனுத்தாக்கல் செய்யுங்கள். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி திகதி பெப்ரவரி 28

 

http://ekuruvi.com/best%20immigration%20award

 

Link to comment
Share on other sites

புதிதாக வாகனங்களை வாங்குவோர் கவனத்திற்கு......

 

    இந்த வருட ஆரம்பத்திலிருந்து ஒன்ராறியோ அரசு வாகனப்புகையிலிருந்து ஏற்படும் காபனீரொட்சைட் மற்றும் மாசுகளை கட்டுப்படுத்தும் பரிசோதனை இயந்திரங்களை மாற்றியுள்ளது.முந்தைய இயந்திரத்தில் வாகனங்களின் உற்பத்தி திகதிக்கேற்ப அளவீடுகள் மாறுபடும். இப்புதிய இயந்திரமானது ஒரே அலகை மாத்திரம் கொண்டுள்ளது.பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு 2004ம் ஆண்டுக்கு முற்பட்ட வாகனங்கள் பலத்த சவால்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது.( charcoal canister)சாக்கோல் கனிஸ்டர் மற்றும் (catalytic converter) கற்றலிக்கொன்வேட்டர் போன்றவைகளின் செயற்பாடுகள் ஐந்து ஆறு வருடங்களின் பின் செயலற்றுப்போவதால் இவகளை மாற்றீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.இவையிரண்டும் வாங்குவதற்கு குறைந்தது $1000 செலவாகும். அத்துடன் மாற்றுவதற்குரிய செலவு $300.00-$500.00 வரையாகலாம்.இந்த புகை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் வாகனம் சித்தி பெறாதவிடத்து அதே இடத்தில் நீங்கள் $450.00+வரி செலுத்தி சிறு திருத்த வேலைகளை மேற்கொள்ள வேண்டும்.அப்படியும் சித்தி பெறாத வாகனங்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இரண்டு வருடத்திற்கான பாவனை உரிமம் வழங்கப்படும்.இரண்டு வருடம் முடிய பழைய இரும்பிற்கு பேரிச்சம்பழம் தான்.

                                                          சரி இனி விடயத்திற்கு வருவோம்.பாவித்த வாகனங்களை வாங்குவோர் வாகனத்தை வாங்க முன்பு புகைப்  பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா? சாதரணமாய் சித்தியெய்தியுள்ளதா? என்று கவனமாய் வாங்க முன்பு ஆராயவும்.விற்பவர் வாங்குபருக்கு தற்போதுள்ள நிலையிலேயே வாகனத்தை விற்கிறேன் என்று எழுதினால் வாங்குபவர் பணத்தை இழக்க நேரிடும்.

 

அன்புடன்

 நீலக்குருவி

 

 

 

Link to comment
Share on other sites

தமிழர்களின் மரபணுக்களை பரிசோதனை செய்து சில ஆய்வுகளைச் செய்யவேண்டிய நிலை - Sick Children Hospital

 

இலங்கைத் தமிழர் ஒருவரின் 10 - 12 வயதான மகன் கண்பார்வை மிக வேகமாக குறைந்து வருவதனை அவதானித்து வைத்திய ஆலோசனைக்காக அழைத்துச்சென்று உள்ளனர்.  சோதனைகளின் பின்னர், இவ்விதமான் நோய்/குறைபாடு இலங்கைத் தமிழ் வம்சாவழிக் கனேடியத் தமிழ்ச் சிறுவர்கள் மத்தியில் வெகுவேகமாக பரவிவருவதனை ரொரன்றோ Sick Children Hospital ஐச் சேர்ந்தை வைத்தியர்கள் அவதானித்துள்ளனர்.  இது தொடர்பான சிகிச்சைகள் / வைத்திய ஆய்வுகளுக்காக இலங்கைத் தமிழர்களின் மரபணுக்களை பரிசோதனை செய்து சில ஆய்வுகளைச் செய்யவேண்டிய நிலை உள்ளது. 


மேற்குறித்த மரபணுச்சோதனைகளுக்காக இரத்த உறவில்லாத ஆகக் குறைந்தது 100 இலங்கைத் தமிழராவது தமது உமிழ்நீர் மாதிரியை வழங்கி உதவி புரியலாம்.  நீங்கள் வழங்கப் போகும் உமிழ்நீர் மாதிரி விலைமதிப்பே இல்லாததாகும்


இடம்:  Maclean Community Centre in Ajax
காலம்: Sunday Feb 24th from 3 – 7 PM

 

http://ekuruvi.com/dna%20testing

Link to comment
Share on other sites

உதவுங்கள் உறவுகளே.உமிழ்நீர் தானே. ஆராட்சிக்கு தானே கேட்கிறார்கள்.எதிர்கால சிறார்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு உதவுங்கள்.

Link to comment
Share on other sites

ரொறொன்ரோவைத் தாக்க வருகிறது மற்றுமொரு பனிப்புயல்!!

 

45kuruvi.jpg

http://ekuruvi.com/Winter%20storm%20could%20hit%20Toronto%20Tuesday%20evening

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாலாடைக்கட்டி(cheese) திரும்ப அழைக்கப்படுகின்றன
Peter February 26, 2013 Canada
 
இத்தாலி நாட்டில் இருந்து கனடாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பாலாடைக்கட்டியில் லிஸ்ரிறியா என அழைக்கப்படும் பதார்த்தம் சேர்ந்திருப்பதாகத் தகவல் கிடைத்ததையிட்டு அவைகள் திரும்ப அழைக்கப்படுகின்றன.
 
இந்தப்பாலாடை கட்டிகள் இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும். மாயுறி, ஹொற்கொன்சொலா என்ற பெயரையுடைய பாலாடைக் கட்டிவகைகளே திரும்ப அழைக்கப்படுகின்றன. இவைகள் 1.44 கில்லோக்கிராம் அளவுகளில் உள்ளன. அத்துடன் யூலை1, 2013, யூலை4, 2013 காலங்களுக்கு முன்பு பாவக்கும்படி குறிப்பிடப்பட்டவைகள் என தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.
 
கனடிய உணவு பரிசோதனைத் தாபனமானது இதுவரையில் இந்தப் பொருளைப் பாவித்ததால் எந்தவிதமான நோய் ஏற்பட்டதாக தகவல்கள் எதும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்திருக்கின்றது.
 
லிஸ்ரிறியாவால் பாதிக்கப்பட்ட பொருட்கள் எந்தவிதமான மணத்தையும் தெரிவிக்காது, ஆனால் அவற்றை உண்பதனால் கடுமையான காய்ச்சல், தலையிடி, கழுத்தில் இறுக்கம், வாந்தியெடுத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம் என கூறப்படுகின்றது. கருவுற்றிருக்கும் பெண்கள், வயது முதியவர்கள் இவற்றை உண்டால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.