Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் தொலைத்து விட்டவைகளின் நினைவுகளில் வாழும் மனிதன்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவயதுகளில்

வாழ்க்கையின்

வழிகளில்

காலம் ஒரு

கவிதையாக

வழிந்தோடிக்கொண்டிருந்தது

கனவில் தோன்றும்

கவிதைவரிகளைப்போல

வாழ்தலின்

இனிமைகளைமட்டுமே

கண்களைத்திறந்தபடி

ரசித்துத் திரிந்தேன்

உடலின் ஒவ்வொரு

நுண்ணிய

அணுக்களிலும் புகுந்து

இயற்க்கை

நான் என்னும்

ஆன்மாவை

வனைந்து கொண்டிருக்க

காலமடியில்

இளமை

வழிந்தோடிக்கொண்டிருந்தது..

அணல் எறிக்கும்

புழுதி வீதிகளில்

உலாவித்திரியும்

என் பாதங்களை

பூமித்தாய்

வாஞ்சையுடன்

நீவிக் கொடுப்பாள்

அப்பொழுதெல்லாம்

பூமிக்கு நான்

பாரமாக இருப்பதாக

உணர்ந்ததில்லை...

அம்மாதரும் முத்தங்களை

வாங்கியவாறே

எதற்க்கிந்த வாழ்தலென்ற

புரிதல் இல்லாவிட்டாலும்

நிறைவாக

அறிதல் குறித்த தீராப்பசியுடன்

நான் வளர்ந்து கொண்டிருந்தேன்..

என் பால்யகாலங்கள்

மெதுமெதுவாக

ஒரு கவிதையாக

வளர்ந்து கொண்டிருந்தன..

எப்பொழுதுமே

கடைசி வரியை

எழுத விரும்பாத

அந்தக் கவிதைக்கு

காலம் எப்பொழுதோ

முற்றுப்புள்ளியை

வைத்துவிட்டது என்பதை

என் கன்னத்தில் அரும்பிய

மீசைகள்தான் நினைவுபடுத்தின..

முகத்தில் அரும்பியிருக்கும்

மீசை முடிகளைத்

தடவிவிட்டவாறே

திரும்பிப்பார்க்கிறேன்..

இறந்த காலங்கள்

நினைவுகளின்

ஏதோ ஒரு மூலையின்

நிறுத்தத்தில் இருந்தபடி

கண்சிமிட்டிக் கொண்டிருக்கின்றன...

இழந்துவிட்டவைகளை

மீட்டிப்பார்த்து

இதயம்

வலியுடன் கதறினாலும்

இரக்கமே

இல்லாதவனைப்போலக்

காலம் என்னை

இன்னமும் வேகமாக

இழுத்துக்கொண்டுபோகிறது

உதிர்ந்து விழுந்த

உலர்ந்த

இதழ்களைப்போல

வாழ்க்கை

இப்பொழுதெல்லாம்

வறண்ட நிலத்தில்க்

கிடைத்த

என் சிறுவயதுப்

பசுமைகளைத்

தொலைத்து விட்டுக்

குளிர் நாட்டிலும்

வெறுமையாகக் கிடக்கிறது

என் இளயதுகளை

இழந்து விட்டு

சுதந்திரமாகச் சிறகடித்த

ஏதோ ஒரு பறவையின்

சிறகுகளில் இருந்து

தவறி விழுந்த

இறகாகத்

தனிமையை உணர்கிறேன்..

காலம் என் தோழ்களில்

வாழ்க்கைச் சிலுவையை

இறக்கி வைத்திருக்கிறது

இப்பொழுதெல்லாம்

வலிகளின் அழுத்தங்களில்

தலை நசுங்கிப்போகிறது

எனதான்மா..

வாழ்க்கைப் போராட்டங்களே

இப்பொழுது

இருத்தலைத்

தீர்மானிப்பவையாக

மாறிப்போயிருக்கின்றன

வெற்றிகளுக்கும்

தோல்விகளுக்கும்

இடையில்

நிம்மதியைத்

தொலைத்துவிட்டு

விடாது ஓடிக்கொண்டிருக்க

வேண்டியதாகிவிட்டிருக்கிறது..

ஆயினும்

எல்லாவற்றையும் மீறி

அடிக்கடி மனம்

வெகு இயல்பாய்

என் பால்யகாலங்களை

நோக்கிப் பறந்து கொண்டேயிருக்கிறது..

என் ஊரின்

மழைப்பாடல்களும்

மெல்லிய அதிகாலையின்

குயில்ச் சங்கீதங்களும்

செவிக்குள் இன்னமும்

ரீங்காரமிட்டுக்கொண்டேயிருக்கின்றன..

தாலாட்ட யாருமற்ற

பின்னிரவுகளில்

என் அம்மாதந்த

முத்தத்தின் ஈரங்கள்

கனவுகளில் பிசுபிசுக்கின்றன..

நான் பிடித்துவிட்ட

பட்டாம்பூச்சிகள்

இன்னமும்

சிறகடித்துக் கொண்டிருக்கின்றன..

என் நினைவுகளின்

எச்சங்களில்

காலத்தை ஏய்த்துவிட்டு

வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

நினைவுகளில்

இன்னமும் குழந்தையாக...

Edited by சுபேஸ்

அணல் எறிக்கும்

புழுதி வீதிகளில்

உலாவித்திரியும்

என் பாதங்களை

பூமித்தாய்

வாஞ்சையுடன்

நீவிக் கொடுப்பாள்

அப்பொழுதெல்லாம்

பூமிக்கு நான்

பாரமாக இருப்பதாக

உணர்ந்ததில்லை...

அருமை........... தொடருங்கள் சுபேஸ் . இதற்கு பட்டையங்கள் வெகுமதியல்ல . மாறாக , உங்கள் மீது வெறிகொண்ட ரசிகர்களும் , மனமுவந்த பாராட்டுக்களுமே உண்மையான வெகுமதி................. :):):) +

  • கருத்துக்கள உறவுகள்

வலிமையான வலிகளைச் சுமக்கும் வரிகள்

உங்கள் கவிதைக்கு நன்றிகள் சுபேஸ்

சிறுவயதுகளில்....

வாழ்க்கையின்

வழிகளில்

காலம் ஒரு

கவிதையாக

வழிந்தோடிக்கொண்டிருந்தது

வாழ்தலின்

இனிமைகளைமட்டுமே

கண்களைத்திறந்தபடி

ரசித்துத் திரிந்தேன்

அணல் எறிக்கும்

புழுதி வீதிகளில்

உலாவித்திரியும்

என் பாதங்களை

பூமித்தாய்

வாஞ்சையுடன்

நீவிக் கொடுப்பாள்

அப்பொழுதெல்லாம்

பூமிக்கு நான்

பாரமாக இருப்பதாக

உணர்ந்ததில்லை...

எப்பொழுதுமே

கடைசி வரியை

எழுத விரும்பாத

அந்தக் கவிதைக்கு

காலம் எப்பொழுதோ

முற்றுப்புள்ளியை

வைத்துவிட்டது என்பதை

என் கன்னத்தில் அரும்பிய

மீசைகள்தான் நினைவுபடுத்தின..

முகத்தில் அரும்பியிருக்கும்

மீசை முடிகளைத்

தடவிவிட்டவாறே

திரும்பிப்பார்க்கிறேன்..

இறந்த காலங்கள்

நினைவுகளின்

ஏதோ ஒரு மூலையின்

நிறுத்தத்தில் இருந்தபடி

கண்சிமிட்டிக் கொண்டிருக்கின்றன...

இழந்துவிட்டவைகளை

மீட்டிப்பார்த்து

இதயம்

வலியுடன் கதறினாலும்

இரக்கமே

இல்லாதவனைப்போலக்

காலம் என்னை

இன்னமும் வேகமாக

இழுத்துக்கொண்டுபோகிறது

என் இளயதுகளை

இழந்து விட்டு

சுதந்திரமாகச் சிறகடித்த

ஏதோ ஒரு பறவையின்

சிறகுகளில் இருந்து

தவறி விழுந்த

இறகாகத்

தனிமையை உணர்கிறேன்..

காலம் என் தோழ்களில்

வாழ்க்கைச் சிலுவையை

இறக்கி வைத்திருக்கிறது

வாழ்க்கைப் போராட்டங்களே

இப்பொழுது

இருத்தலைத்

தீர்மானிப்பவையாக

மாறிப்போயிருக்கின்றன

வெற்றிகளுக்கும்

தோல்விகளுக்கும்

இடையில்

நிம்மதியைத்

தொலைத்துவிட்டு

விடாது ஓடிக்கொண்டிருக்க

வேண்டியதாகிவிட்டிருக்கிறது..

காலத்தை ஏய்த்துவிட்டு

வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

நினைவுகளில்

இன்னமும் குழந்தையாக...

உண்மையிலேயே அருமையான கவிதை. அதில்.... என் மதைத் தொட்ட வரிகளை மட்டும் மேற்கோளிட்டுக் காட்டியிருக்கின்றேன். அதிலும் சிவப்பெழுத்துக்கள் என்னை ஆழமாகத் தொட்டுச்சென்ற வரிகள். அருமை சுபேஸ். வாழ்த்துக்கள். :)4

Edited by கவிதை

"ஆயினும்

எல்லாவற்றையும் மீறி

அடிக்கடி மனம்

வெகு இயல்பாய்

என் பால்யகாலங்களை

நோக்கிப் பறந்து கொண்டேயிருக்கிறது.."

நிஜம் தான் !

மனம் விசித்திரமானது! நமது பால்ய காலங்கள் திரும்பி நம்மிடம் வரமாட்டாது. நாம் தான் அதனிடம் செல்லவேண்டும். நமது சிறு பராயத்தை அசை போடும் வேளை இழந்தவைகள் மனதில் முள்ளாய்த் தைக்கும். ஆனாலும் அதில் சிறு ஆறுதல்.

உங்கள் கவிதைக்கு எனது நன்றிகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

தொலைந்து போன நினைவுகளும்,

கலைந்து போன கனவுகளும்,

கண்களின் வரி எழுதும் கண்ணீரும்,

கனல் பறக்கும் பெருமூச்சும்,

குற்றுயிரும், குலையுயிருமாய்க்,

கோவணதுக்கே கையேந்தும் வாழ்வும்,

கழுத்தை நெரிக்கும் கடன்களும் தானே,

தமிழனின் வாழ்வாகி விட்டது!

உங்கள் ஏக்கத்தை, உங்கள் கவிதை அழகுடன் சொல்கின்றது, சுபேஸ்!!!>>

நான் பிடித்துவிட்ட

பட்டாம்பூச்சிகள்

இன்னமும்

சிறகடித்துக் கொண்டிருக்கின்றன..

என் நினைவுகளின்

எச்சங்களில்

..

உங்கள் நினைவுகளில் மட்டுமல்ல், இன்று உங்களின் அன்றைய வயதில் உலாவும் சிறுவர்களின் கைகளிலும் இவை பறக்கின்றன

பால்ய வயதின் அத்தணை தருணங்களும் அற்புதமானவை... அதை விட்டு வெகு தூரம் வந்தாலும் எப்பவாவது வரும் கனவொன்றில் எம் அதே பருவம் வந்து போகும்..

ஆனால் காலமும் பருவமும் ஒரே புள்ளியில் நிற்பது இல்லையே.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசித்துக் கருத்திட்ட எல்லோருக்கும் நன்றிகள்..

கோமகன் அண்ணை..! சும்மா ரசிகர் அது இதென்னு சொல்லிக் குளிர் பிடிக்கவைகாதேங்கோ...ஆளை விடுங்கோ...எழுதுறதே ஒரு மன நிம்மதிக்குத்தான்..வாசிக்கிறதும் அதே நிம்மதிக்காகவும் அமைதிக்காகவும்தான்..எழுதுறவங்க யாரும் எதையும் எதிர்பார்ப்பதில்லை..அரைவாசிப் பேர் மறைந்திருந்துதான் எழுதுவது...

காலம் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கிறது...பருவங்கள் அதனுடன் போட்டிபோட்டுக்கொண்டு ஓடுகின்றன....ஆறுதலாக இருந்து யோசிக்கும்போதுதான் தெரிகிறது இந்த வாழ்க்கையின் உண்மைகள் எங்கள் பருவங்களைப்போல் நிரந்தரமில்லாதவை என்பதை..நெஞ்சில் அப்படியே நிலைத்திருப்பன சிறுவர்களாகத் துள்ளித்திருந்த காலங்களே...இப்படியே இருந்திருக்கலாமே என்று மனிதர்கள் ஆசைப்படுவது,பொறாமைப்படுவது பால்யகாலங்களை நினைத்துத்தான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.