Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 6 இருந்து 11 வரை)

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு! உண்மையிலேயே கதை வாசிக்க நல்லாய்ப் போகுது! ஆனால்... யானைப் பசி பசித்த வாய்க்கு சோளப்பொரி போல கொஞ்சமா இருக்குது. கொஞ்சம் அதிகமா எழுதுங்கோவன். ஆசையா இருக்கு........!

( நான் இன்னும் ரெண்டு பவுணைத் தொடரல...... என்ற குற்றவுணர்வு எனக்குள்ள இருக்கு... வெகுவிரைவில் தொடரணும்! :( )

நீங்கள் தொடருங்கள்!

பாராட்டுக்கள்! :)

நன்றி

< நாம் பெற்றோராக இருந்து பிள்ளைகளுக்கு என்ன செய்யவேண்டும் என அவர்களிடம் கேட்க்காமலே எல்லாவற்றையும் செய்து கொடுத்தோம் பிள்ளைகளின் சந்தோஷத்துக்கு

ஆனால் இந்த பிள்ளைகளுக்கு பெற்றோருக்கு என்ன செய்ய வேணும் என்று தெரியவில்லை

ஏன் அவர்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லையோ !? >

இதுதான் தாயகத்திற்கும் , புலம் பெயர்ந்தோருக்கும் உள்ள பிரதான முரண் . இதன் பிரதான குற்றவாளிகள் இங்குள்ளவர்களே!!!!! வெளிச்சூழலில் வாழ்ந்தாலும் , தமது கஸ்ரநஸ்ரங்களை மனம்விட்டு கதைக்காததின் விளைவே , " வித்தை செய்கின்றவர்கள்" என்ற எண்ணப்பாட்டைத் தோற்றுவித்துள்ளது .

தமிழரசு உங்கள் கதையில் முன்னேற்றங்கள் காணப்படுகின்றன . தொடர்ந்து முன்னேறுங்கள் :):):) .

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தமிழ் குடும்பமும் வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகள் நடை முறைகள்.

கதையை சற்று கோர்வையாக சொன்னால் இன்னும் அழகு . மேலும் தொடர்க

நன்றி ....

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்

இனி தொடர்ந்து வாசிப்பேன்.

"ஜோசனை" யோசனை என்று வரவேண்டும். இது பல இடங்களில் வருகிறது தமிழரசு.

மற்றபடி கதை நன்றாக போகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளீர்கள். தொடருங்கள்.

நன்றாக உள்ளது. ஒரு சில இடங்களில் வெடுக் வெடுக் என்று வசனங்கள்/சம்பவங்கள் முடிகின்றன. மற்றபடி நல்ல கதை.

நன்றி .....

இனியாவின் தவிப்பு சிறுகதையா இல்லை இசையும் கதையுமா என்று நினைக்கத் தோன்றுகிறது..ஒவ்வொரு பாகத்திலும் இணைக்கும் பாடல்கள் மற்றும் படங்கள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கிறது.அவ்வப்போது வந்து ஒவ்வொரு பாகத்தையும் படித்து செல்வேன்.அனேகமாக எழுதுபவர்களுக்கு சொல்லும் விசயத்தை உங்களுக்கும் சொல்கிறேன் எழுத்துப் பிழைகளை கவனத்தில் கொள்ளவும்.

நன்றி .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு ...... (பாகம் 11)

picture-015.jpg

கதிரவன் ..... கதிரவன் யாரும் இல்லையோ வீட்டில் ...?

யார் .......வாத்தியாரோ வாங்கோ இதில இருங்கோ அப்பாவை கூப்பிடுகின்றேன், அப்பா ...... அப்பா இங்கே வாங்கோ வாத்தியார் வந்திருக்கின்றார்.

ஆ .... வாங்கோ .... எப்படி இருக்கின்றீர்கள் ?

என்ன ..... எதோ இருக்கிறம், அதுசரி .... கதிரவன் ராத்திரி நடந்த விஷயம் என்ன என்று தெரியுமோ ?

(ஆச்சரியமாக ) என்ன நடந்தது ?

நேற்றைய தினம் 37 பேரை வெளியில் விட்டவங்களாமே ! அதில் ஒருவர் இந்த இடத்தை சேர்ந்தவராம் நானும் அவரை ராத்திரி பார்த்தனான் ..... (என்று சொல்லிக்கொண்டு இருக்கையில் )

வாத்தியார் நீங்கள் பார்த்தனியளோ அவர் எப்படி இருந்தவர் ? அவரின் பெயர் என்ன எனச்சொன்னவர் ?

அந்த பெடியனைப்பார்த்தால் நல்ல வெள்ளை நிறம் நல்ல உயரம் நல்ல அழகான தோற்றம்

அது சரி கதிரவன் உங்களுக்கு தெரிந்தாக்கள் யாரும் உள்ளுக்குள் இருக்கினமோ ?

இல்லை ....... எல்லாரும் எங்கட ஆட்கள்தானே

அதுக்கிடையில் அந்த பெடியனை அவங்கள் வெளியில விடுகின்றமாதிரி விட்டு விட்டு சுட்டு போட்டாங்களாம்

(ஏக்கத்துடன் ) என்ன சுட்டு போட்டாங்களாமோ!?

ஓம் ... கதிரவன் இவங்கள் என்னும் கொல்லுறதை நிப்பாட்டல்லை .....

சரி .... கதிரவன் நான் புறப்படப்போகின்றேன் வீட்டில் மனைவி தனியாக இருக்கின்றார்

ஓம் ... ஓம் போட்டுவாங்கோ வாத்தியார்

பிள்ளை .... அம்மாவை கூப்பிடு ...... அப்படியே என்னக்கும் என்னமோ செய்கின்றது கொஞ்ச சுடுதண்ணி எடுதுவாம்மா

அம்மா ... அம்மா, அப்பா உங்களை கூப்பிடுகின்றார் இஞ்ச வாங்கோ நான் அப்பாவுக்கு தண்ணி எடுத்திட்டு வாறன் ......

என்னங்கோ அவசரமாக கூப்பிடுகின்றீர்கள் ? என்ன ஒருமாதிரி இருக்கிறியள் ஏதாவது பிரச்சனையோ ?

அது ....... முன்னுக்கு ரோட்டில யாரையோ சுட்டுப்போட்டாங்களாம்

ஐயோ ..... கடவிளே யாராம் ? (அங்கும் இங்குமாக பதட்டத்துடன் திரிகின்றாள்)

யார் என்று தெரியவில்லையாம் ஆனா ......

(அந்த நேரத்தில் போனடித்தது....)

ஹலோ ........ ஹலோ, இனியா ..... நான் புகழின் பெரிய அக்கா கதைக்கிறன்.... புகழ் வந்து விட்டாரோ ?ஏன் என்னும் எங்களுக்கு போனெடுத்து சொல்லவில்லை ...... இரண்டு நாட்கள் கழிந்து விட்டது எங்களுக்கு ஒரே பதட்டமாக இருக்கின்றது புகழ் வெளிக்கிடும் போது குழப்பமாகவே இருந்தார் ஏன் என்று கேட்டபோது பதில் சரியாக இல்லை ......

அங்கு எங்கள் வீட்டுக்கு போனடிச்சால் லையின் போகுதில்லை எனக்கு ஒரே ரென்சனாக இருக்கு ....

நாங்களும் இங்கு ஒரே குழப்பத்தில்தான் இருக்கின்றோம், நாங்களும் அவர்களின் போனுக்காக பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்

ஏன் எங்களுக்கு இப்படியொரு கொடுமை, எல்லாம் சன்சலமாக இருக்கவேண்டுமா ?? என்னதான் நடக்குது ? எல்லாவற்றுக்கும் எப்போது விடைகிடைக்கும் ?

இனியா பெரிசாக யோசிக்காதேங்கோ ..... நான் எனக்கு தெரிந்தவர்கள் கொழும்பில் இருக்கின்றார்கள் அவர்களை கொண்டு விசாரித்து பார்க்கின்றேன் ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்கின்றேன் நீங்களும் ஏதாவது அவர்களைப்பற்றி தெரிந்தால் உடனடியாக தெரிவியுங்கோ ......

(என பதட்டத்துடன் சொன்னவாறே போணை வைத்தாள்)

அம்மா ..... வாங்கோ .... வெளியில் யாரிடமாவது விசாரித்து விட்டு அப்படியே புகழின் வீட்டுக்கும் சென்று விசாரித்து வருவோம்

நல்லதுதான் நானும் அப்படித்தான் நினைச்சனனான் கொஞ்சம் பொறு பிள்ளை உடனே வாறன்......

( இருவரும் வீதியில் சென்று கொண்டு இருக்கும் போது )

IMG_1409.jpg

பிள்ளையாரே விநாயகா வினை தீர்ப்பவனே எல்லாம் நல்லதாக நடக்கவேண்டும் ஒரு கெடுதலும் வரக்கூடாது

(இருவரும் கும்பிட்டு விட்டு செல்லும் போது .....)கடவுளே உனக்கும் இந்த நிலைமையா ? ஒரு அரசமரம் இருந்ததினால் உன்னிடத்தில் புத்த விகாரையா ?

(சற்று தூரம் சென்றதும் )

இனியா அங்கு பார் ......தெய்வங்களுக்காக அமைக்கப்பட்ட துயிலும் இல்லத்தை கூட உந்த கொடியவங்கள் என்ன செய்திருக்கின்றாங்கள் என்று பாரன்,

காதில் இந்த வரிகள் ஒலித்தது ........

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய

சந்தனப் பேழைகளே! - இங்கு

கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?

குழியினுள் வாழ்பவரே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்

உறவினர் வந்துள்ளோம் - அன்று

செங்களம் மீதிலே உங்களோடாடிய

தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்.

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்.

(கண்களை துடைத்தவாறு)

இந்த நினைவுகளும் மண் மேலுள்ள பற்றும்தானே நாங்கள் இங்கு இருப்பதற்கான காரணமாக அமைந்தது ....

அம்மா .... ஏன் வெளிநாடுகளில் இருப்பவர்கள் மட்டும் சந்தோஷமாகவோ இருக்கினம் சில வேளையில் ஒரு சிலர் சந்தோஷமாக இருந்தாலும் மண் மீது பற்றுக்கொண்ட தமிழன் யாரும் சந்தோஷமாக இருக்கமாட்டார்கள் ஏன்னென்றால் அது எப்படியோ அந்நிய மண் அந்நியமொழி அதை எப்படி அவர்கள் ஏற்பார்கள் ?

ம் ..... அது சரி எனக்கு சரியான களைப்பாக இருக்குது ஒரு இழனி வாங்கித்தாம்மா .....

இதில இருங்கோ வாங்கி வாறன்,

elanir1.jpg

அண்ணா ஒரு இழனி வெடடித்தாங்கோ ......

இந்தாங்கோ அம்மா ...... குடியுங்கோ .....

(இனியாவின் கைத்தொலை பேசி அடிக்கின்றது ......)

ஹலோ .....ஹலோ,

நான் புகழின் பெரிய அக்கா கதைக்கின்றேன் .... ஒரு சின்ன பிரச்சனை ......

என்ன ... பிரச்சனையோ? (ஏக்கத்துடன்) என்ன மச்சாள் என்ன நடந்தது ......?

அது ..... அது (தயக்கத்துடன்௦) புகழையும் உங்கட அண்ணா தினாவையும் கடத்தி வைத்து இருக்கிறாங்களாம் ......

கடத்தி வைத்திருக்கிராங்க்களோ .......? ஐயோ ...... ஐயோ ....கடவிளே!

இனியாவின் தவிப்பு தொடரும் ..........

Edited by தமிழரசு

"அம்மா .... ஏன் வெளிநாடுகளில் இருப்பவர்கள் மட்டும் சந்தோஷமாகவோ இருக்கினம் சில வேளையில் ஒரு சிலர் சந்தோஷமாக இருந்தாலும் மண் மீது பற்றுக்கொண்ட தமிழன் யாரும் சந்தோஷமாக இருக்கமாட்டார்கள் ஏன்னென்றால் அது எப்படியோ அந்நிய மண் அந்நியமொழி அதை எப்படி அவர்கள் ஏற்பார்கள் ?"

உண்மையான கூற்று. ஆனாலும் வாழ்கின்றோமே. நம்மினத்திற்கு இது ஒரு தண்டனை தான்.

இனியாவின் தவிப்பு எம்மையும் தொற்றிக்கொண்டு விட்டது. தொடருங்கள் .... பாராட்டுக்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி ..காட்சியும் கானமும் போல இருக்கிறது. நேரில் பார்ப்பது போல .ஓர் வகை எதிர்பாப்புடன் இடையில் நிறுத்துகிறீர்கள் .. காத்திருக்கிறோம். மீண்டும் படிக்க

முன்வைத்த காலைப் பின்வைக்காதீர்கள் தமிழரசு !!!!! தொடருங்கள் தவிப்பை :):):) .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு தொடருங்கள்

உங்கள் தொடருக்கு நன்றிகள்

தமிழரசு! உங்கள் கதையை மேன்மேலும் மெருகேற்றி வருகின்றீர்கள்!

பாராட்டுக்கள்! :)

எழுத்துப் பிழைகளைத் தவிர்த்து மீண்டும் மீண்டும் ஒரே காட்சிக்குள் கதையின் போக்கினைக் கொண்டுவராமல் வித்தியாசமாக புரட்சிகரமாக கதை நகர்வினைக் கொண்டுசெல்லுங்கள் தமிழரசு! அது இன்னும் வரவேற்பைப் பெறும். ஆனால் தங்களின் நகர்விலும் ஒரு சுவாரசியம் தெரிகின்றது!

எம் மாவீரக் குழந்தைகளின் தொட்டில்களையும் சீராட்டிய தங்களின் வரிகளுக்கு என் மனதார்ந்த நன்றிகள்!

தொடருங்கள் !

தொடர்ந்து வாசித்து வருகின்றேன்! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்

இனி தொடர்ந்து வாசிப்பேன்.

நன்றி விசுகு

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.