Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சமூகம் செய்வித்த திருமணம்

Featured Replies

போரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சமூகம் செய்வித்த திருமணம்

இலங்கையில் அரச படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதி யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் முதன் முறையாக போர்ச் சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறுவர் இல்லம் ஒன்றில் வளர்ந்து வந்த இளம் பெண் ஒருவருக்கு சமூகத்தினர் ஒன்றிணைந்து திருமணம் செய்து வைத்திருக்கின்றனர்.

இந்தத் திருமண வைபவம் வவுனியாவில் நடைபெற்றிருக்கின்றது.

இலங்கையில் இடம்பெற்ற மோசமான யுத்தத்தினால் இடப்பெயர்வு மட்டுமல்லாமல், உயிர் உடைமைகளுக்கும் பேரழிவு ஏற்பட்டிருந்தது.

மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாயினர். பல குடும்பங்கள் பிரிந்து போயின. ஆயிரக்கணக்கான சிறுவர்கள் ஆதரவற்றவர்களாயினர்.

இந்தச் சிறுவர் சிறுமியர் அரச நிறுவனங்களிலும், சிறுவர் இல்லங்களிலும் தஞ்சமடைய நேரிட்டது. யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களாகப் போகின்றது. எனினும் ஆதரவற்ற சிறுவர்கள் இன்னும் சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றார்கள்.

பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைப்பதற்கும், பிரிந்து போன சிறுவர்களை குடும்பச் சூழலில் இணைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. இருப்பினும் சிறுவர் இல்லங்களில் சிறுமிகள் வளர்ந்து பெரியவர்களானதும், அவர்களது எதிர்காலம் என்ன என்பது குறித்து பல கேள்விகள் எழுந்திருக்கின்றன.

இத்தகைய நிலைமையிலேயே ஆதரவற்ற ஒரு பெண்ணுக்கு சமூகம் ஒன்றிணைந்து இந்தத் திருமணத்தை நடத்தியிருக்கின்றது.

120212162942_vavuniya_wedding_304x171_bbc_nocredit.jpg

இப்படியான நிகழ்வுகள் வெற்றியளிக்குமா எனக் கேள்விகள்

"ஆதரவற்றவர்களுக்கு வெளிநாட்டிலுள்ளவர்கள் ஆதரவளிக்க வேண்டும்"

இல்லங்களில் வளரும் குழந்தைகள் மற்றும் வளர்ந்தவர்களின் நலன்களில் அரசாங்கம் அக்கறை கொண்டு செயற்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இருப்பினும் சிறுவர் இல்லங்களை நம்பி, வளர்ந்து ஆளாகியிருப்பவர்களது வாழ்க்கையின் அடுத்த கட்டம் என்ன, அடுத்து என்ன செய்வது என்பது சமூகத்தின் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்திருக்கின்றது. இது விடயத்தில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் பங்களிப்பும் அவசியம் எனவும் கருத்துக்கள் வந்துள்ளன.

வவுனியாவில் நடைபெற்றுள்ள இந்தத் திருமண வைபமானது இந்த வகையில் சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியானதாகவும், மனிதாபிமானத்துடன் இளைஞர்களைச் செயற்படுவதற்குத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கின்றது என்றும் பல்தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

http://www.bbc.co.uk...alwedding.shtml

Edited by akootha

வாழ்த்துக்கள் மண மக்களுக்கு.

என்னவோ B.B.C. யின் வாழ்க்கையும் "கோழி திண்ட கள்ளனார் கூட நின்று உலவுகிறார்" என்று போகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் மண மக்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

போரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சமூகம் செய்வித்த திருமணம்

இப்படியான நிகழ்வுகள் வெற்றியளிக்குமா எனக் கேள்விகள்</span></span></span>

"ஆதரவற்றவர்களுக்கு வெளிநாட்டிலுள்ளவர்கள் ஆதரவளிக்க வேண்டும்"

இல்லங்களில் வளரும் குழந்தைகள் மற்றும் வளர்ந்தவர்களின் நலன்களில் அரசாங்கம் அக்கறை கொண்டு செயற்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இருப்பினும் சிறுவர் இல்லங்களை நம்பி, வளர்ந்து ஆளாகியிருப்பவர்களது வாழ்க்கையின் அடுத்த கட்டம் என்ன, அடுத்து என்ன செய்வது என்பது சமூகத்தின் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்திருக்கின்றது. இது விடயத்தில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் பங்களிப்பும் அவசியம் எனவும் கருத்துக்கள் வந்துள்ளன.

வவுனியாவில் நடைபெற்றுள்ள இந்தத் திருமண வைபமானது இந்த வகையில் சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியானதாகவும், மனிதாபிமானத்துடன் இளைஞர்களைச் செயற்படுவதற்குத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கின்றது என்றும் பல்தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

http://www.bbc.co.uk...alwedding.shtml

http://www.yarl.com/forum3/index.php?showtopic=97321

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை உச்சமடையும் காலம்வரைக்கும் இருந்தபோது தமிழர்விரோததேசமாம் இந்தியாவின் உளவுத்துறையின் காலடிகளை எசமானர்களாகக் கட்டிப்பிடித்திருந்த பிபிசி தமிழ் சேவைக்கு இப்படியான நல்லவிடையங்களைச் செய்தியாக வெளியிடவே அருகதையில்லை. வன்னியில் முள்ளிவாய்கால் அவலம்வரைக்கும் தமிழீழப்போராட்டத்துடன் பயனித்த மக்கள் தற்போதும் நடைபிணங்களாகவே வாழ்வதை நான் என்னிரு கண்களாலும் பார்த்தவன். மாறாக அவர்கள் பட்ட துன்பத்தில் ஒருசதவீதமேனும் அனுபவியாதவர்கள் சிலரிப்போது இலவசங்களுக்கும் தொண்டு நிறுவனங்களது உதவிகளுக்கும் அலைவதையும் நான் கண்ணால் கண்டேன். யாழ்ப்பாணம் இப்போது எண்பத்தைய்து விழுக்காடு சோம்பேறிக்கூட்டங்கள் நிறைந்த ஒரு பூமியாக மாறிவிட்டது. இசோம்பேறித்தனம் எனும் பெருவியாதி யாழ்நகரை அண்டியபகுதகளை ஆக்கிரமித்து தற்போது கிராமங்களையும் கபளீகரம் பண்ணுமளவிற்கு உயிர்கொல்லி நோயாக மாற்றம் கண்டுள்ளது.அன்றேல் நமல் றாஜபக்க்சவிற்கு கைலாகு கொடுக்க முந்திக்கொள்ளும் பாடசாலை மாணவிகளையும் வன்னிமண்ணின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் நீச்சல்தடாகம் கட்ட அனுமதித்த கனவான்களையும் எம்மால் காணொளியில் கண்டுகொள்ள முடியுமா?

எனினும் சமூகம்பற்றிய அக்கறையுடன் இதுபோல் நல்லோர் இருப்பதும் நாம் செய்த முன் ஜென்மபலணோ! (அப்படியொன்றிருந்தால்) மணவாழ்வில் இணைந்த இருபாலருக்கும் இல்லறம் சிறக்க இயற்கையைவேண்டி வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சிறந்த நடவடிக்கை...ஆனால் இதற்க்கும் சாதி மதம் சாதகம் பார்த்தார்களோ தெரியவில்லை...சமூகம் மாறவேண்டும்..மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படவேண்டும்...பிற்போக்குத்தனங்களை உடைத்துக்கொண்டு எம்மினம் வெளியே வரவேண்டும்...காலங்கள் எல்லாவற்றையும் மாற்றிவிடும்...இது அதற்கான நல்ல அறிகுறிபோல இருக்கிறது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.