Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு காதல் கதை

Featured Replies

அவள் என் பார்வையில் பட்டிருக்ககூடாது.

ச்சே. ஏன் அவள் என் பார்வையில் விழுந்தாள் என்பது இன்றுமட்டும் புதிராகவே உள்ளது.

அவளை காண்பதற்கு முன்னர் அவளை விட அழகான எத்தனையோ பெண்களை கண்டிருக்கிறேன். ஏன் கதைத்தும் இருக்கிறேன். இருந்தாலும் அவள் என்னை என்னவோ செய்தாள். திரும்ப திரும்ப பார்க்க வைத்தாள்.

காயத்திரி.. பெயரை போலவே அழகானவள். வட்ட முகம் எடுப்பான உயரம். சுடிதாரில் மிக அழகாக தெரிந்தாள்.

முதல் சந்திப்பே பல்கலைகல்லூரியில், எனக்கு கனிஷ்ட மாணவியாக... பகிடிவதையில், கம்பன் சொன்ன ராவணன் நிராயுதபாணியாக நின்றதை போல, எனக்கு முன்னால் நிலத்தை பெருவிரலால் கீறியபடி, தமிழ் பெண்களுக்கே உரித்தான நாணத்துடன்...

நான் பாதி குடித்துவிட்டு கொடுத்த அந்த தேநீரை பருகவேண்டும் இது தான் நான் அவளுக்கு இட்ட முதலாவது கட்டளை.

என் கையிலருந்த கோப்பையை வாங்கி பல பேர் முன்னிலையில் என்னை கண்களால் பார்த்தபடியே ஒன்று விடாமல் குடித்த போதே நான் உணர்ந்திருக்க வேண்டும் அவளுக்குள்ளும் நான் இருக்கிறேன் என்று..

என்னை பற்றி உனக்கு தோணுவதை எழுதி கொண்டு வா என்று பணித்தபோது ஒரு தாள் நிறைய என் பெயரை மட்டும் எழுதி கொண்டுவரும்போதாவது நான் தெரிந்திருக்க வேண்டும் அவள் என்னை மனசினுள் வைத்திருக்கிறாள் என்று..

ஒவ்வொரு நாள் பகிடிவதையிலும் அவளின் அம்மா கொடுத்துவிடும் உணவுப்பெட்டியை நான் தான் வாங்கி சாப்பிடுவேன் என்று தெரிந்தும் தினம் தினம் சுவையாக சாப்பாடு கொண்டுவரும்போதே நான் விளங்கி கொண்டிருக்கவேண்டும் அவள் என்னை நேசிக்கிறாள் என்று..

தலைநகரில் தெருவிலே நடந்த அமைச்சரை பழிவாங்கிய தாக்குதலை தொடர்ந்த தேடுதலில் கைதாகி சிறையிலிருந்த என்னை, தனது புருஷன் என்று என் பெயரை அவள் கையில் கண்ணாடியால் எழுதிய தடத்தை அந்த காவல்துறை அதிகாரிக்கு காட்டி சிறையில் என்னை சந்தித்த போதே எனக்கு புரிந்திருக்க வேண்டும் அவள் எனக்காக என்னவும் செய்வாள் என்று..

விடுதலையாகி எவ்வளவோ சொன்னேன், அவளுக்கு புரியவில்லையா..அல்லது புரிந்தும் புரியாத மாதிரி நடித்தாளா தெரியவில்லை.

முடிவாக அவளிடம் உறுதியாக சாத்தியம் இல்லை என்று சொல்ல அன்று அவளை வர சொல்லி இருந்தேன் வழக்கமான சந்திக்கும் இடத்திற்கு.

எனக்கு வைத்த குறியில் அவள் இன்று அந்த பொல்கொட வாவியில் எங்கோ ஒரு ஆழத்தில் கல்லோடு கட்டபட்டு உறங்குகிறாள்.

காயத்திரி... இன்று நான் சொல்கிறேன் நானும் உன்னை காதலிக்கிறேன் .

உனக்கு கேட்கிறதா ...?

Edited by அபிராம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனையோ நிஐங்கள்.

நன்றி அபிராம்

கன நாளைக்குப்பின்...

தொடருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராட்டுதலுக்கு உரியது

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கின்றது...முடிவு கொஞ்சம் சப்பென்று முடித்த மாதிரி எனக்குப் படுகிறது[நான் ஒன்றும் பெரிய கதாசிரியர் இல்லை]...இயக்கத்தில் இல்லாதவர்களும் நாட்டிற்காக தங்கள் உயிரை பலி கொடுத்திருக்கிறார்கள்...காயத்திரிக்கு என்ன நடந்தது என்று விரும்பினால் விரிவாக எழுதுங்கள்...தொடர்ந்தும் உங்கள் நடந்ததைக் கோர்த்து கதையாக தாருங்கள்...நன்றி

கதை நன்றாக இருக்கின்றது...முடிவு கொஞ்சம் சப்பென்று முடித்த மாதிரி எனக்குப் படுகிறது[நான் ஒன்றும் பெரிய கதாசிரியர் இல்லை]...இயக்கத்தில் இல்லாதவர்களும் நாட்டிற்காக தங்கள் உயிரை பலி கொடுத்திருக்கிறார்கள்...காயத்திரிக்கு என்ன நடந்தது என்று விரும்பினால் விரிவாக எழுதுங்கள்...தொடர்ந்தும் உங்கள் நடந்ததைக் கோர்த்து கதையாக தாருங்கள்...நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அழகு!!! அபிராம்!!! அழகு!!!

தொடர்ந்து எழுதுங்கள்!>>>>

  • தொடங்கியவர்

கருத்துக்களை பதிந்த விசுகு (குகதாசன்), புதியவன், ரதி மற்றும் புங்கையூரன் உங்களுக்கு என் நன்றிகள்.

விசுகு !

சில வேளைகளில் சுய பொருளாதாரத்துக்காக மன அழுத்தங்களுடன் கூடிய வேலைகளையே செய்ய வேண்டி இருப்பதால், மனசும் நேரமும் எழுத இடம் கொடுப்பதில்லை. நேரம் இருக்கும் போதெலாம் நிச்சமாக எழுதுவேன்.

ரதி!

சில சந்தர்ப்பங்களில் வாழ்க்கை, கனவுகள் கூட சப் என்று தான் முடிவதுண்டு. இந்த இடத்தில் கதையை சப்பென்று முடிப்பதை தவிர வேறு வழிகள் எனக்கு இருக்கவில்லை.

நீங்கள் கூறியது போலவே காலங்கள் தான், சில கதைகளுக்கும் கனவுகளுக்கும் விரிவாக்கம் தர வழிசமைக்கும்.

கதை மிக நன்றாக இருக்கிறது. காதலின் ஆழத்தை, உண்மை நேசத்தை சுருக்கமாக அதே நேரம் மிக அழகாகக் கூறியிருக்கிறீர்கள். சோகம் சுமந்த நிகழ்வு மனதை தைத்துவிட்டது. பாராட்டுக்கள்......

Edited by நியானி

  • தொடங்கியவர்

கதை மிக நன்றாக இருக்கிறது. காதலின் ஆழத்தை, உண்மை நேசத்தை சுருக்கமாக அதே நேரம் மிக அழகாகக் கூறியிருக்கிறீர்கள். சோகம் சுமந்த நிகழ்வு மனதை தைத்துவிட்டது. பாராட்டுக்கள்......

நன்றி கல்கி உங்கள் தொடர்ச்சியான ஊக்கம் நிறைந்த கருத்துகளுக்கு. உண்மையான நேசத்துக்கும், மண் மீதான பாசத்துக்கும் என்றைக்குமே அழிவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மனதைக் கவலை கொள்ள வைக்கும் கதை

தொடருங்கள் அபிராம்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மனதைக் கவலை கொள்ள வைக்கும் கதை

தொடருங்கள் அபிராம்

நன்றி வாத்தியார் உங்கள் கருத்து பகிர்வுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.