Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நட்சத்திரங்கள் என் சொந்தம்

Featured Replies

சினேகிதி பழையதை மீள ஞாபகப்படுத்தும் பதிவு. நல்லா எழுதுறீங்க. தொடருங்க.

  • Replies 55
  • Views 7.1k
  • Created
  • Last Reply

ம்ம் ... எங்களுக்கும் பழைய நினைவுகளை நினைவு படுத்திவிட்டீங்கள்..

  • தொடங்கியவர்

நன்றி குளம்...நன்றி பவான்.உங்களையெல்லாம் ஞாபகங்களை மீட்டிப்பார்க்க வைத்ததில் சந்தோசம்:lol:

ஊருக்குப்போகும்போது... மால் என்று சொல்வார்களே... தோட்டத்துக்கு நடுவில காவலுக்கு இருப்பவர்கள் பாவிக்கிற திறந்த குடிசை. அங்கை போய் ஓருநாள் முழுக்க நட்சத்திரங்களோடை கதைக்க வேணும்...ம்..அந்த நாள் எப்ப வருமோ?

சினேகிதி அக்கா,

வித்தியாசமாக எழுதிருக்குறீங்க .. கதை நன்றாக இருக்கு .. நட்சத்திரங்கள் கூட கதைக்க ஆசை படுறீங்க எனக்கும் விருப்பம் தான் ஆனா அது திருப்பி கதைக்குமா... :wink: முதல் பார்த்தன் வாசிக்க நேரம் கிடைக்கல ...இப்பத்தான் ஆறுதலா வாசிச்சு முடித்தன் .... நல்லா எழுதுறீங்க அக்கா... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..... :P

ஆரம்பம் முதல் முடிவு வரை இதை வாசிக்கும்போது ஏற்படும் ஆர்வம் மாறாமலிருப்பதுதான் முக்கியமாக இந்த ஆக்கத்தினுடைய வெற்றி. ஆகவே சிநேகிதியால் மேலும் பலதை இந்த முறையிலேயே 'கதைக்க' முடியும். ஆகவே தொடர்ந்து கதைக்க வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

நன்றி அனிதா...நட்சத்திரங்களோடு கதைச்சுப்பார்த்திட்டு சொல்லுங்கோ அது திரும்பக்கதைச்சதா என்று..:lol:

சோழியன் அண்ணா தொடர்ந்து கதைக்கிறன்:lol:

ரெண்டு வருசத்துக்கு முதல் ஒருநாள் எனக்கும் நட்சத்திரங்களோட கதைச்சுக் கொண்டும் நிலவைப் பார்த்துக் கொண்டும் படுக்க ஆசை வந்திச்சு. நான் இருந்த ஊரில மின்சாரம் இல்ல. பேய் இருட்டு. இடைக்கிடை மின்மினி பூச்சி பறக்கும். அது பெரிய புதினம். ஊர் சுத்திப் போட்டு வீட்டை வர நடுச்சாமமா போட்டுது. இண்டைக்கு வெளியில படுப்பம் எண்டு வாங்கை (கட்டிலும் இருக்கு ஆனா உள்ளுக்கு) து}க்கிக் கொண்டு வந்து மாமரத்துக்கு கீழ போட்டுட்டு நுளம்பு திரி ஒண்ட கொழுத்தி வாங்குக்கு கீழ வைச்சிட்டு படுத்தன். மாமர இலைகளின்ட நீக்கலுக்கால நிலா தெரிஞ்சுது. நிலவோட என்ன கதை எண்டு போட்டு நட்சத்திரத்தை பார்த்தன். வானம் நல்ல வெளிச்சமா இருந்திச்சு அவ்வளவு நட்சத்திரம். எனக்கு நட்சத்திரம் பார்த்த சந்தோசத்த விட குயீனும், கிங்கும் வந்து எண்ட வாங்குக்கு கீழ ஆளுக்கொரு கிடங்கு கிண்டிப் போட்டு சுருண்டு கொண்டு படுத்தினம். அதுகள பாக்கத்தான் நல்ல சந்தோசமா இருந்திச்சு.

நட்சத்திரங்களுடன் இன்னொரு நாள்.

நடுக்கடல்.

நடுச்சாமம்.

என்ஜின் பழுதா போன மீன்பிடி படகு.

தாலாட்டும் அலை.

சோ எண்டு ஒரே மழை பெய்யல . .

அதனால கிளியர் ஸ்கை

பழுதா போன படகை திருத்திற யோசனை இல்லாம

படுத்து கிடந்து வெள்ளி பார்த்தன்

வாழ்க்கையை அனுபவித்த நாட்கள் அவை.

அப்பாடா நானும் வெள்ளி பார்த்தது எண்டது நிரூபிச்சாச்சு.

குயீன், கிங் மற்றும் மாமரம் பார்க்க விரும்புறவை இங்கே கிளிக்கவும்.

http://www.saniyan.com/saniyan/yarl/DSCN2313.jpg

  • தொடங்கியவர்

ஊரில வெள்ளிபார்த்த குணம்தான் போற போற இடங்களிலயும் வெள்ளி பார்க்கச் சொல்லுது...

பழைய ஞாபகங்களை அசைபோட வைத்த ஒரு கதை. நன்றாக இருக்கிறது.

ம்........... தர்சனும் தன்னுடைய வாழ்த்தை சொல்லிவிட சொல்கிறார். கதையை அவர் நாளைக்கு படிக்கிறாராம்.

  • தொடங்கியவர்

நன்றி சாம்ஸன். கதையைப் படிக்காம என்னத்துக்கு வாழ்த்துச் சொல்றாராம் தர்சன்?

  • தொடங்கியவர்

வெள்ளி பார்த்த இன்னொராளின்ர கதை படிக்க விரும்பவர்களுக்காக.....http://kanitham.blogspot.com/2005/07/blog-post.html

கதையைப் படிக்காம என்னத்துக்கு வாழ்த்துச் சொல்றாராம் தர்சன்?

அதை அவன்கிட்டதான் நீங்கள் கேட்கவேண்டும். :lol:

  • தொடங்கியவர்

அதை அவன்கிட்டதான் நீங்கள் கேட்கவேண்டும். :lol:

:roll:

இன்றுதான் படித்தேன் கதை நல்லாயிருக்கு. எனக்கும் பெருங்கரடி ,வடதுருவம் எல்லாம் ஞாபகத்தில் வந்தது.இருந்தும் என்னபிரயோசனம் ம்கூம்... பார்க்க முடியவில்லையே? :lol::lol::lol:

ம்ம் நட்சத்திரத்தோடை கதைச்சு முடிஞ்சா சிநேகிதி? அடுத்தா என்னத்தோடை கதைக்க போறீங்கள். நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்/

  • தொடங்கியவர்

தலைவன் தவழ்ந்த ஊரில இருந்துகொண்டு பார்க்கமுடியவில்லையென்று சொல்றீங்களே சங்கீத்???

  • தொடங்கியவர்

ரசியக்கா அடுத்து செடி கொடிகளோட கதைக்கப்போறன்.

ரசியக்கா அடுத்து செடி கொடிகளோட கதைக்கப்போறன்.

செடி கொடிகளோடு கதைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள். சீக்கிரம் கதைச்சிட்டு எங்களுக்கும் சொல்லுங்கோ

சிநேகிதி இன்று தான் உங்கள் கதை படித்தேன். அழகாக பழைய ஞாபங்களை எல்லாம் வரவழைத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

பழைய ஞாபங்கள் எல்லாம் வருகின்றன.

நாமும் அப்பாவுடன் முற்றத்தில் இருந்து வானத்தை பார்த்து கதைப்போம்.

அப்பா அங்கை பார் அது இது என்று சொல்ல சும்மா சும்மா ஒம் ஒம் என்று சொல்லுவோம்.

ஆமாம் வெள்ளி ஒன்றை உதிர்ந்து விழுவதை கண்டால் உடனே பால் உள்ள மரங்களை நினைக்க வேண்டும் என்று சொல்வார்கள். உங்களுக்கு அப்படி எதாவது அனுபவம் உண்டா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிநேகிதி இன்று தான் உங்கள் கதை படித்தேன். அழகாக பழைய ஞாபங்களை எல்லாம் வரவழைத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

பழைய ஞாபங்கள் எல்லாம் வருகின்றன.

நாமும் அப்பாவுடன் முற்றத்தில் இருந்து வானத்தை பார்த்து கதைப்போம்.

அப்பா அங்கை பார் அது இது என்று சொல்ல சும்மா சும்மா ஒம் ஒம் என்று சொல்லுவோம்.

ஆமாம் வெள்ளி ஒன்றை உதிர்ந்து விழுவதை கண்டால் உடனே பால் உள்ள மரங்களை நினைக்க வேண்டும் என்று சொல்வார்கள். உங்களுக்கு அப்படி எதாவது அனுபவம் உண்டா?

ஆமாம் ரமா

அப்போது "பாலுள்ள மரத்திலே பட்டு விழு" என்று சொல்லவேண்டும் என்று அம்மா அன்று சொல்லித்தந்தது இன்று உங்கள் வரிகளைப் பார்த்ததும்தான் நினைவுக்கு வந்தது. ஏனென்று தெரியாமல் அப்படிப் பலமுறை சொல்லியிருக்கின்றேன்.

அதிகாலையில் எழுந்து விடிவெள்ளியைப் பார்ப்பதும் ஆனந்தத்தை தரும்.

இனிக்கும் நினைவலைகளைத் தட்டியெழுப்பிய அனைவருக்கும் என் நன்றிகள்

  • தொடங்கியவர்

றமாக்கா நான் வெள்ளி விழுந்ததைப் பார்த்ததில்லை....ஆனால் பால்மரத்தின்ர பெயர் சொல்வதென்பது கேள்விப்பட்டிருக்கிறேன்.ஏன் அப்படிச் சொல்லிவைத்தார்கள் என்று யாருக்கும் தெரியுமா?

இன்னுமொன்று சொல்வார்களே...வாழைமரத்தில வெள்ளி விழுவதைப்பற்றி :lol:

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

நட்சத்திரத்துடன் இலங்கை,இந்திய இராணுவ காலங்களில் நடந்தவற்றையும் அழகாக எழுதி இருக்கிறீர்கள் சினேகிதி. வாசிக்கும் போது எனக்கும் பழைய யாபகங்கள் வந்து போகிறது. ஈழத்தில் வாழ்ந்த காலங்கள் எவ்வளவு பசுமையானது. ம் இனி எப்ப வருமோ?

  • தொடங்கியவர்

ஆகா கந்தப்பு உங்களை நான் தாத்தா என்று சொன்னதில என்ன பிழை?? என்ர தாத்தா பார்க்கிற வேலையைத்தான் நீங்களும் பார்கக்கிறீங்கள்.

இப்ப இதை இன்னொருக்கா வாசிச்ச உடன கை துறு துறு என்று வேற ஒரு நினைவைப் பற்றி எழுதச் சொல்லுது பட் நேரம் காணா. தூசு தட்டினதுக்கு நன்றி :-))))

ஒருநாளைக்கு நாங்களெல்லாம் திரும்பப் போய் நட்சத்திரங்களோட கதைப்பம் என்று நம்புவம்.

ஆ.. திரும்பப் போயோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.