Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமை மீறலுக்கெதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் – இந்திய அமைச்சர்

Featured Replies

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படும் பிரேரணையை அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவும் ஆதரிக்கும் என நம்புவதாக இந்திய மத்திய பாராளுமன்ற விவகார இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஐநா சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்க இருக்கும் மனித உரிமை மீறல்களுக்கெதிரான பிரேரணையை இந்தியா ஆதரிக்குமா என உள்ளுர் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நாராயணசாமி இதனைத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்களுக்கெதிரான தீர்மானத்தை தனிப்பட்டரீதியில் தான் ஆதரிப்பதாகவும் பிரதமரிடமும் இவ்விடயத்தை வலியுறுத்துவேன் எனவும் பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.pooraayam.com/mukiaya/2685-2012-03-03-09-55-16.html

இந்தியா அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்தால் ....

இந்தியா தனது கொள்கையில் மாற்றத்தை எடுக்க சிங்கள-சீன உறவு நிர்பந்தித்து விட்டதே காரணம் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப் படுகொலையில் இலங்கையின் கூட்டாளி என நிரூபித்துவிட்டது இந்தியா! - சீமான்

03-seeman55-300.jpg

சென்னை: முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழினப் படுகொலையில் இலங்கையின் கூட்டாளி என்பதை மீண்டும் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது, என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஏற்க முடியாது என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியாவின் பிரதிநிதி பேசியிருப்பது இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணையில் இருந்து காப்பாற்றும் திட்டமிட்ட முயற்சியாகும். இந்திய அரசின் இப்படிப்பட்ட நியாயமற்ற நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தின் 19வது மாநாட்டில், அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழினத்திற்கு நியாயம் கிடைக்க போர்க்குற்ற விசாரணைத் தீர்மானம் கொண்டு வரவுள்ளன.

அப்படி ஒரு தீர்மானம் வந்தால் அதனை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமை மாமன்றத்திற்கான இந்தியப் பிரதிநிதி, இந்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கி வாசித்த அறிக்கையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த ஒரு நாட்டையும் குறிவைத்து தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது என்றும், அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றுவது பயன் தரத்தக்க பேச்சுவார்த்தைக்கும் இணக்கமான அணுகுமுறைகளுக்கும் எதிரானதாக அமைந்துவிடும் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமினறி, உலக அளவில் மனித உரிமை சூழல் குறித்து வரும் அக்டோபரில் ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் நடைபெறவுள்ள பொதுவான விவாதத்தில் இலங்கையைப் பற்றியும் விவாதிக்கலாம் என்று இந்தியப் பிரதிநிதி கூறியுள்ளார்.

இந்திய அரசின் இந்த நிலைப்பாடு, போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசை உட்படுத்தக்கூடிய தீர்மானம் நிறைவேற்றுதலுக்கு எதிரானதாகும். இலங்கை தொடர்பான விடயம் அங்கே மனித உரிமை சூழல் எப்படியிருக்கிறது என்பதல்ல. மாறாக, அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது பற்றி விசாரிக்க வழிவகுக்கும் போர்க் குற்ற விசாரணையாகும்.

இதனை பொதுவான மனித உரிமை சூழலாக விவாதிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதிநிதி கூறுவது, இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பை மறைக்கும் முயற்சியாகும்.

2009ஆம் ஆண்டில் நடந்த ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் இலங்கைக்கு எதிராக வந்த தீர்மானத்தை எப்படி எதிர்த்து அந்நாட்டைக் காப்பாற்றியதோ அதேபோல் இப்போதும் இந்திய அரசு இலங்கையைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதையே அதன் பிரதிநிதி வாசித்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

இந்திய அரசின் இந்த நிலைப்பாடு, இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையில் அதன் கையும் தமிழன் இரத்தத்தால் நனைந்துள்ளது என்பதையும், தனது குற்றச்செயலை மறைக்கவே, வெளிப்படையான குற்றவாளியான இலங்கை அரசை அது காக்க முயற்சிக்கிறது என்பதையும் தெளிவாகிவிட்டது.

தமிழினத்தின் அழிப்பை திட்டமிட்டு நிறைவேற்றிய இலங்கை அரசுக்கு ஆயுதம், ஆலோசனை, ராடார், பயிற்சி என்று எல்லா விதத்திலும் இந்திய அரசு உதவியுள்ளது என்கிற குற்றச்சாற்று, அதன் இந்த நிலைப்பாட்டின் மூலம் மேலும் உறுதியாகியுள்ளது.

ஆனால், 2009ஆம் ஆண்டில் நடந்ததுபோல், இலங்கை அரசு இம்முறை தப்பித்துவிட முடியாது. ஐ.நா.மனித உரிமை மாமன்றத்தின் மற்ற உறுப்பு நாடுகள் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தும் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து நிறைவேற்றும் என்று தமிழர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்," என்று சீமான் கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி என்று தலை ஆட்டிவிட்டு சரிப்பதில் ஈரானிய குடும்ப அரசியல்வாதிகளை அடிக்கமுடியாது. 

உங்களை நம்புறோம் ஆனால் நம்பமாட்டோம்!

இந்த முறை இந்தியாவின் UNHRC அறிக்கை மிகவும். தளர்வானது. அதாவது இந்தியா இலங்கையின் பக்கமோ, சீன -ரஸ்சியா பக்கமோ, அமெரிக்காவின் பக்கமோ இல்லாமல் ஒரு அறிக்கையாக இருக்கிறது.

இந்த முறை இல்லாவிட்டாலும் இன்னொருதடவை இலங்கைக்கு எதிராக வாக்களிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக பேசிவரும் இந்த மாதிரி ரெட்டை நாக்கு நாராயாண சாமிக்கும் அவர் சார்ந்த கோங்கிரஸ் கட்சிக்கும் ஆதரவளிக்கும் பாண்டிசேரி ஸ்டேட்டை தமிழக மக்கள் புறக்கணிக்கவேண்டும்..

அவையாவன்..

bus.jpg

PY ரிஜெஸ்டெசன் வண்டிகளை தவிர்க்கவேண்டும் . அங்கிட்டு வாங்கி இங்குட்டு பிரியாக சுத்துவதை தடைசெய்யவேண்டும்..

சரக்கு அங்கு கம்மியாக கிடைக்குது என்று ஈசல் மாதிரி அங்க போய் குடித்துவிட்டு கும்மாளம் அடிக்க கூடாது..

மத்திய அரசின் நேரடி கட்டுபாட்டின் கீழ் இருப்பதால் சம்பளம் அதிகம் என்றாலும் அந்த ஸ்டேட்டு வேலைகளை புறக்கணிக்க வேண்டும்.. அங்க ஏதாவது டூப்ளிகேட் ரேசன் கார்டுக்க அலையகூடாது...

பெங்களூருக்கு செஞ்சி மற்றும் விழுப்புரம் .. கடலூர்.. திருவண்னாமலை .. வழி இயக்கும்(ptdc) சொகுசு பேருந்துகளை கூலி வேலை செய்பவர்கள் முதல் கணிபொறியாளர்கள் வரை தவிர்க்க வேண்டும்

எவனும் கைகால் வலி மருந்துக்கு கூட JIPMER Hospital செல்லகூடாது

2009 இல் மேற்குலகை ஏமாற்றி தமிழினப் படுகொலைகளுக்கு துணைபோன இந்தியக் காட்டுமிராண்டிகளை மேற்குலகம் இந்தமுறையும் நம்பி ஏமாறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்தியாவிற்கு தான் மேற்குலக நாடுகளால் மூக்குடைபடும் அச்சம் தோன்றியிருக்கிறது.

தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக பேசிவரும் இந்த மாதிரி ரெட்டை நாக்கு நாராயாண சாமிக்கும் அவர் சார்ந்த கோங்கிரஸ் கட்சிக்கும் ஆதரவளிக்கும் பாண்டிசேரி ஸ்டேட்டை தமிழக மக்கள் புறக்கணிக்கவேண்டும்..

அவையாவன்..

bus.jpg

PY ரிஜெஸ்டெசன் வண்டிகளை தவிர்க்கவேண்டும் . அங்கிட்டு வாங்கி இங்குட்டு பிரியாக சுத்துவதை தடைசெய்யவேண்டும்..

சரக்கு அங்கு கம்மியாக கிடைக்குது என்று ஈசல் மாதிரி அங்க போய் குடித்துவிட்டு கும்மாளம் அடிக்க கூடாது..

மத்திய அரசின் நேரடி கட்டுபாட்டின் கீழ் இருப்பதால் சம்பளம் அதிகம் என்றாலும் அந்த ஸ்டேட்டு வேலைகளை புறக்கணிக்க வேண்டும்.. அங்க ஏதாவது டூப்ளிகேட் ரேசன் கார்டுக்க அலையகூடாது...

பெங்களூருக்கு செஞ்சி மற்றும் விழுப்புரம் .. கடலூர்.. திருவண்னாமலை .. வழி இயக்கும்(ptdc) சொகுசு பேருந்துகளை கூலி வேலை செய்பவர்கள் முதல் கணிபொறியாளர்கள் வரை தவிர்க்க வேண்டும்

எவனும் கைகால் வலி மருந்துக்கு கூட JIPMER Hospital செல்லகூடாது

நாராயாண சாமி'ய‌ எல்லாம் ஒர் மனிதன மதிது, இவனுகக பாண்டிசேரி ஸ்டேட்டை புறக்கணிக்கவேண்டு'ம. அவன் அந்த அளவுக்கு வொர்த் இல்லை பாஸ்..

நாராயாண சாமி'ய‌ எல்லாம் ஒர் மனிதன மதிது, இவனுகக பாண்டிசேரி ஸ்டேட்டை புறக்கணிக்கவேண்டு'ம. அவன் அந்த அளவுக்கு வொர்த் இல்லை பாஸ்..

முதலில் ஹிந்தி வெறியர்கள் உள்ள வட இந்தியக் காட்டுமிராண்டிகள் உள்ள, மலையாள ஓநாய்கள் உள்ள மாநிலங்களைப் புறக்கணியுங்கள்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட பாண்டிச்சேரி சகோதரர்களுக்கு உதவிப் பழகுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.