Jump to content

விடைபெறக் காத்திருக்கிறேன்!


Recommended Posts

ஜெயதூபி

நீங்கள் உன்மையில் உங்களின் 24மணி நேர வாழ்க்கையை உண்டியலுக்காக செலவழிப்பதால் இதைப்பற்றி அறிய உங்களுக்கு வாய்ப்பில்லைதான்..... ஆனால் இவர் நிச்சயம் அந்த பட்டத்தை அடையும் தன்மை உடையவர்

Link to comment
Share on other sites

  • Replies 173
  • Created
  • Last Reply

ஜஉழனநஸஇவர் உண்மையில் அட்லீஸ்ட் ஒரு நாட்டுப்பற்றாளராகவாவது கௌரவிக்கபட வேண்டியவர்.......... அப்படி செய்யாதது தவறு....வருந்துகிறேன்

வானம்பாடி உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது நாட்டுபற்றாளராக அவரை கௌரவிக்க அவர் தனது நாட்டிற்கும் அதன் மக்களிற்கும் ஏதாவது செய்திருந்தால் கட்டாயம் கௌரவிக்கபடவேண்டியவரே அப்படி ஏதாவது அவர் செய்திருந்தால் அதனை எங்களுக்கும் தெரியபடுத்துங்களேன்

Link to comment
Share on other sites

அவர் அனுபவியா துன்பம் எங்கள் வேலுப்பிள்ளை பிரபாகரன் அனுபவித்தவரோ

Link to comment
Share on other sites

ஒ மயிலிட்டி புஸ்பராசாவையும் வல்வெட்டி துறை பிரபாகனையும் அவர்களது வரலாற்றையும் நன்கு அறிந்தவர்களிற்கு யார் என்ன துன்பம் அனுபவித்தவை என்று நன்றாக விழங்கும் அதை விடத்து புஸ்பராசா எழுதின பாதி புகள் பாடும் பாதி புளுகு பாடும் புத்தகத்தை படிச்சிட்டு கருத்து எழுதினால் இப்பிடித்தான் மாணவர் பேரவையில் அவரின் பங்கு அவர் தன்மக்களிறகாக என்ன செய்தார் என்று அவரை நன்கு அறிந்வர்கள் அவரது ஊர்காரர் மற்றும் இன்று இங்கிலாந்தில் இருக்கும் அந்த மாணவர் பேரவையின் தலைவர் ஆகியொருக்கு நன்றாக தெரியும் அது இருக்கட்டும் புஸ்பராசாவை பற்றி தானே கதைக்கிறம் பிறகேன் பிரபாகரன் இதுக்கை வாறார் திருவாளர் வானம்பாடி அவர்களே உமக்கு பிரபாகரனிலை தனிப்பட்ட கோபம் எண்டால் அதை தனிய ஒரு தளத்தை திறந்து பக்கம் பக்கமாய் உமக்கு தெரிந்ததை தாராளமாய் எழுதலாமே ஏன் எப்ப பாத்தாலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதக்கையும் புலியளையும் பிரபாகரனையும் இடையிலை புகுத்திறனீர் எண்டு ஒருக்கா சொல்லும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் கூட வெலிகடைக் கொலைகளில் இருந்து தப்பியவர். அவரையும் நாம் நாட்டுப்பற்றாளர் என்று கெளரவிக்கலாமே.

ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற புஸ்பராஜாவின் புத்தகத்தை நானும் வாசித்தேன். அவர் சிறையில் வேதனைகளை அனுபவித்தார் என்று அறியமுடிந்தது. அவரைவிட மிகவும் கொடுமையான சித்திரவதைகளையும், துன்பங்களையும் அனுபவித்த பலர் மண்ணோடு மண்ணாக மாண்டுபோனார்கள்;சிலர் தற்போதும் வாழுகின்றார்கள். அவர்களையும் நாம் நினைவுகோர வேண்டும்.

ஒருவர் தனது கொள்கையிலிருந்து எப்போது வழுவி, கொண்ட கொள்கைக்கு எதிராக செயற்படுகின்றாரோ, அப்போதே அவர் தனது முந்தைய சிறப்புத் தகுதிகளை இழந்து சாதாரணமானவராகின்றார், அல்லது துரோகியாகின்றார். எமது போராட்டத்தில் பல உதாரணங்கள் உள்ளன என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியத்தைப் படிக்கும்போது வந்த கேள்விகள்.

1. மக்களின் செயற்பாடுகள் புஸ்பராஜா எதிர்பார்த்ததைவிட

மிகவும் தீவிரமாக இருந்தன. மாணவர் அமைப்பினர், மக்களின் விருப்பம் என்னவென்பதை அறிந்து மக்களை அரசியல் மயப்படுத்த முடியாமல் இருந்தனர். போராட்டத்தை முன்நகர்த்த மக்கள் தயாராக இருந்தும், இவர்களால் சரியான தலைமையை, வழிநடத்தலைக் கொடுக்கமுடியவில்லை. மாறாக தங்களுக்குள் மோதிச் (கொள்கை மோதலும், பதவி ஆசையும்தான் அப்போதைய பிரச்சினைகள்) சிதந்து கொண்டிருந்தனர். இதை புஸ்பராஜா ஒப்புக்கொண்டமாதிரித் தெரியவில்லை.

2. சிறையிலிருந்து வெளிவந்த 80களின் ஆரம்பப் பகுதிகளில் போராட்டம் முனைப்புடன் வேகமாக வளர்ந்தது. ஆனால் இவரால் அந்தக் காலத்தில் காத்திரமான எந்தப் பங்களிப்பும் செய்யமுடியவில்லை. போராட்டத்தை விட்டுவிட்டு பிரான்ஸுக்கு ஏன் புலம்பெயர் என்ற காரணத்தை சொல்லவேயில்லை. ஏதோ நாட்டைவிட்டுப் போகவேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக மட்டும்தான் கூறுகின்றார்.

3. ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர்கள் நாபா, பெருமாள் போன்றோர் இந்திய இராணும்வக் காலத்தில் மக்கள்விரோத நடவடிக்கைளில் ஈடுபட்டபோது, இவரால் அவர்களின் கொள்கைகளை செயற்பாடுகளை மாற்றமுடியவில்லை. மாறாக அசோக் ஹொட்டலில் தங்கி, ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் குண்டர்கள் புடைசூழ நகர்வலம் வந்தார் என்றே எழுதுகின்றார். குறைந்தபட்சம் ஈ.பி.ஆர்.எல்.வுடனான தொடர்புகளை அந்த நேரத்தில் கைவிட்டிருக்கலாம்.

வாசித்து முடித்தபோது, இவர் போன்றவர்கள் நமது தலைவர்களாக வராமல்விட்டது நாம் செய்த புண்ணியம் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் கிருபன்

தமிழன் எதை இழந்தாலும் உறுதிப்பிடிப்புள்ள தேசியத் தலைவரையும் போராளிகளையும் பெற்றது பெறும்பேறாகவே நான் கருதுகின்றேன்!! அனைவரும் நீடித்த ஆயுளுடன் வாழ வாழ்த்துகின்றேன்!!

Link to comment
Share on other sites

"அட்லீஸ்ட் ஒரு நாட்டுப்பற்றாளராகவாவது" என்று நீங்கள் கூறுவதன் மூலம் நாட்டுப்பற்றாளர்கள் நாட்டிற்கு ஒன்றும் செய்யாமல் சும்மா அவர்களின் பெயர்களை அலங்கரிப்பதற்காக கொடுக்கப்படுவதென்று நீங்கள் கருதுவது தெளிவாகத் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் கூட வெலிகடைக் கொலைகளில் இருந்து தப்பியவர். அவரையும் நாம் நாட்டுப்பற்றாளர் என்று கெளரவிக்கலாமே.

.

டக்ளஸினைக் கட்டாயம் நாட்டுப்பற்றாளனாகக் கெளரவிக்கவேண்டும். (சிங்கள சிறிலங்கா நாட்டுப்பற்றாளனாக).

Link to comment
Share on other sites

வழிகள் வேறாக இருப்பினும் லட்சியம் உங்கள் லட்சியமாகவே புஷ்பராஜாவுக்கும் இருந்திருக்கிறது.... எனவே என் பார்வையில் அவர் நாட்டுப் பற்றாளர் தான்...

இந்திய சுதந்திர போரிலும் காந்தி மற்றும் நேதாஜி இருவரின் வழி வேறாக இருந்தது... ஆனால் லட்சியம் ஒன்று தான்....

Link to comment
Share on other sites

வழிகள் வேறாக இருப்பினும் லட்சியம் உங்கள் லட்சியமாகவே புஷ்பராஜாவுக்கும் இருந்திருக்கிறது.... எனவே என் பார்வையில் அவர் நாட்டுப் பற்றாளர் தான்...

luckyluc

லக்கிலுக் ஒன்றை இங்கு நன்றாக விளங்கி கொள்ளுங்கள் இங்கு தமிழீழம் என்பது புஸ்பராசாவின் இறுதிகாலத்தில் அவரது வாயிலிரந்து வெளிவந்த வெறும் வார்த்தைகள்தான் இலட்சிமல்ல ஒருவரது இரட்சியத்திற்கும் வெறும் வார்த்தைகளிற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றது.அதைவிட் நீங்கள் சொன்னது போல காந்தியின் பாதையும் நேதாஜியின் பாதைகளும் வேறானவைதான் இங்கு புஸ்பராசாவை யாருடன் ஒப்பிடுகிறிர்கள் காந்தியுடனா ?? அல்லது நேதாஜியுடனா??தமிழீழம் என்பதை அவர் இலட்சியமாக ஏன் ஒரு விருப்பமாக கொண்டிருந்தால் கூட இங்கு பிரான்சில் அவர் சபாலிங்கம் மற்றும் உமாகாந்தன் கோவை நந்தன் கலைசெல்வன் போன்றோருடன் சேர்ந்து தமிழீழ போராட்டத்திற்கும் தமிழுpழ மக்களிற்கும் எதிராக செயல்களை செய்து கொண்டு தங்கள் வயிறு வளர்த்திருக்க மாட்டார்கள். இறுதியில் தனது நாட்கள் நெருங்கிவிட்டது என்று அறிந்ததும் புலிகள் ஈழம் பெற்றுதருவார்கள் என்று அறிக்கை விட்டால் உடனே அவர்கள் செய்த எல்லா வரலாற்று துரோகங்களும் மறந்துவிட முடியுமா? சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழிகள் வேறாக இருப்பினும் லட்சியம் உங்கள் லட்சியமாகவே புஷ்பராஜாவுக்கும் இருந்திருக்கிறது.... எனவே என் பார்வையில் அவர் நாட்டுப் பற்றாளர் தான்...

இந்திய சுதந்திர போரிலும் காந்தி மற்றும் நேதாஜி இருவரின் வழி வேறாக இருந்தது... ஆனால் லட்சியம் ஒன்று தான்....

அடுத்தவர் வந்திட்டாரு கொஞ்ச காலம் அமத்தி வாசிச்சவரு இப்ப வந்திருக்கிறாரு

ஏன்பா இதுக்க இப்ப உங்க இந்தியப் பிரச்சினைய கொண்டுவாறீங்க.

உங்க பார்வைல யார்யாரு நாட்டுப்பற்றாளரா இருந்தா நமக்கென்ன உங்க பார்வை என்ன எண்டததான் நாலு சனத்துக்கும் தெரியுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழிகள் வேறாக இருப்பினும் லட்சியம் உங்கள் லட்சியமாகவே புஷ்பராஜாவுக்கும் இருந்திருக்கிறது.... எனவே என் பார்வையில் அவர் நாட்டுப் பற்றாளர் தான்...

இந்திய சுதந்திர போரிலும் காந்தி மற்றும் நேதாஜி இருவரின் வழி வேறாக இருந்தது... ஆனால் லட்சியம் ஒன்று தான்....

லக்கிலுக்கு, பிரித்தானியா அரசுக்கு ஆதரவாக இந்தியாப்போராட்டத்தினைக் கொச்சைப்படுத்தினவர்களினை உதாரணங்களாக நீங்கள் காட்டியிருக்கலாம். அவர்களுக்கும் காந்திக்கும்,பகவத்சிங்குக்க

Link to comment
Share on other sites

அண்ணன் அஜீவன் அவர்களின் கருத்துகளை பார்த்து தான் நான் என் கருத்தை வைத்தேன்.... என் கருத்துகளை வாசிக்க விருப்பமில்லை என்றால் கூறுங்கள்.... உங்கள் நாட்டைப் பற்றிய விவாதங்களில் நான் பங்கேற்க மாட்டேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு விசயத்த சொல்லுறதெண்டா அதக் கொஞ்மாகிலும் தெரிஞ்சக்கணும். அப்புறம் அதப்பற்றி சொல்லாம்.இதுக்குள்ள நாம யாரும் வந்து ஏதாவது சொல்லுறமா நமக்கு தெரியல எண்டிட்டு பேசாம இருக்கல :wink: :twisted:

Link to comment
Share on other sites

லக்கி உங்களை யாரும் எழுத வேண்டாம் எண்டு சொல்லவில்லையே :roll:

தெரியாத விடயம் எண்டா தெரிந்தவர்கள் சொல்வதை முதலில கேட்டுவிட்டு பிறகு எழுதலாமே இலங்கையில் பிறந்த எனக்கே புஸ்பராசா பற்றி எதுவும் தெரியேல்லை எண்டுதானே தெரிந்தவர்கள் சொல்லட்டும் என்று பாத்திருக்கிறம் உங்களுக்கு புஸ்பராசா பற்றி எதுவும் தெரியுமா :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன சில மனிதருக்கு சுடலஞானத்தின் போது தான் ஈழ ஞானம் பிறக்கிறது.

Link to comment
Share on other sites

நிதி

நான் ஒன்றும் தெரியாமல் எதுவும் சொல்லவில்லையே.... அஜீவன் அவர்களின் கருத்துகளை படித்து முடித்து விட்டு எனக்கு தோன்றியதை சொன்னேன்... அது தவறாக இருந்தால் நாகரிகமாக சொல்லலாம் இல்லையா?

Link to comment
Share on other sites

இல்லை லக்கி நீங்கள் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன் மட்டும் விட்டிருக்கலாம் ஆனால் அவரை நாட்டுப் பற்றாளர் எண்டு எப்படி சொல்லுறீங்க அதுதான் எனக்கும் விளங்கவில்லை

Link to comment
Share on other sites

சிவக்கொளுந்து மலையாளத்தில் உரையாற்றுவதை விட்டு விட்டு தமிழில் உரையாற்றவும்....

சிவக்கெளுந்து ஐயா ஈழத்தமிழ் பேச்சு வழக்கில கதைக்கிறது உங்களுக்கு மலையாளத்தில பறையிற மாதிரி இருக்காக்கும் :P

Link to comment
Share on other sites

1974-1980 ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் சிறைக்கூடங்களான யாழ் சிறைச்சாலை, கொழும்பு வெலிக்கடை ஆகியவற்றிலும் மற்றும் பனாகொடை ராணுவத் தடுப்பு முகாமிலும் பல வருடங்கள் சிறைவைக்கப்பட்டிருந்தார் இடது சாரிக் கருத்துக்களில் மிக்க ஈடுபாடும் அக்கறையும்கொண்ட இவர் பிரான்ஸ் நாட்டில் அரசியல் அந்தஸ்துப்பெற்று அகதியாக வாழ்ந்த போதும் இலக்கிய செயற்பாடுகளோடு இறுதி வாழ்க்கை வரை தன்னை ஈடுபடுத்தி வாழ்ந்தார்

அஜீவன் அண்ணா அஞ்சல் செய்தது இது.... இதை படிக்கும் யாரும் திரு. புஸ்பராஜ் அவர்கள் நாட்டுப்பற்றாளராகத் தான் விளங்கினார் என்று எண்ணுவார்கள்....

அவர் நாட்டுப் பற்றற்றவர் என்பதற்கு தகுந்த ஆதாரங்களைத் தந்தால் அதையும் நான் நம்பத் தயார்.....

Link to comment
Share on other sites

நீங்க சொன்ன காலத்தில நிறைய தமிழ் இளைஞர்கள் சிறையில இருந்தவை ஆனால் வெளில வந்தாப்பிறகு என்ன செய்தவர்கள் என்பதுதான்முக்கியம் நீங்க சொன்ன காலத்தில டக்கிளஸ் தேவானந்தா கூட சிறையில இருந்தவர் அப்ப அவரும் நாட்டுப்பற்றாளரா லக்கி

Link to comment
Share on other sites

எனக்கு சற்றும் சம்பந்தமில்லா வாதம் இது.... இருந்தாலும் ஒரு கருத்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்....

ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்களை தவிர மற்றவர் எல்லாம் துரோகிகள் எனும் எண்ணம் உங்களிடையே இருக்கிறது.... ஒரு பார்வையாளனாக என்னால் இதை நன்கு உணர முடிகிறது....

Link to comment
Share on other sites

எனக்கு சற்றும் சம்பந்தமில்லா வாதம் இது.... இருந்தாலும் ஒரு கருத்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்....

ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்களை தவிர மற்றவர் எல்லாம் துரோகிகள் எனும் எண்ணம் உங்களிடையே இருக்கிறது.... ஒரு பார்வையாளனாக என்னால் இதை நன்கு உணர முடிகிறது....

காரணம் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் லக்கி ஆனால் அனுபவித்த எங்களுக்கு விளங்குவது கூடவாக இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் தானே

ஏனென்றால் புஸ்பராசா போன்றவர்களால் எமது குடும்பம் மட்டுமல்ல ஈழத்திலுள்ளஅனைவருமே பாதிக்கப் பட்டவர்கள் தான் தங்கட சுய லாபத்துக்காக எமது தேசத்தை மாற்றானிடம் அடவு வைப்பர்கள் மீது எவருக்குமே கோபம்வருவதுஇயற்கை தானே :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.