Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் யாழில் சேரன் படை துண்டுப்பிரசுரம் வினியோகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jaffna.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அப்பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும்,

எவராவது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்ற பட்சத்தில் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று மிரட்டுகின்ற துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள் பலவற்றிலும் நேற்று ஒட்டப்பட்டு இருக்கின்றன.

சேரன் படை என்கிற குழுவே இத்துண்டுப் பிரசுர அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் கலாசார விழுமியங்களை பின்பற்றி நடக்க வேண்டும், பெண்கள் பாரம்பரிய உடைகளையே அணிய வேண்டும் என்பதோடு உடலை வெளியில் காட்டுகின்றபடியான உடுப்புக்களை அணிகின்றமை கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

http://www.eeladhesa...lle-nachrichten

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் எப்படி உடை அணியவேண்டும் என்பதுபோன்ற உத்தரவுகளை வளங்கும் தலிபான் பாணி கலாச்சாரப் பொலிஸ்காரர்கள் உலகில் எந்தப் பகுதியிலும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அவர்கள் தங்கள் மக்களுக்கே தொல்லைஒயாகவே மாறி இருக்கிறார்கள்.

ஆண்களதும் பெண்களதும் நிலைபாடு எடுக்காத மக்களுக்கே உத்தரவிடுகிற எந்த அமைப்பையும் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். சேரன் படையினர் முதலில தமிழ் பெண்களுக்கு ஏற்கனவே இருக்கிற விடுதலையையும் தடுக்கிற அடாவடித் தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சேரன் படைவீரர்களே முதலில் ஈழத்தில் உள்ள தமிழ் பெண்ணியவாதிகளிடம் இருந்து /முன்னணிப் பெண்கள் ஆர்வலர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் சந்தேகங்களை அவர்களுடன் விவாதியுங்கள். மக்களிடம் கற்றுக்கொள்ளாமல் மக்களுக்கு வழிகாட்டமுயலவேண்டாம்.

Edited by poet

இன்னொரு செய்தியில் சோழர் படை என்ற பெயரில் இந்த துண்டுப் பிரசுரம் வெளியானதாக வாசித்த நினைவு. டக்கி அண்ணை நல்லாத் தான் அரசியல் செய்கின்றார் என்று புரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எட்டிரண்டு முழத்துணி தன்னையே கட்டுகின்ற நம் கன்னியர் அஃதினை

விட்டுக் கட்டைக் கவுணை அணிந்திடல் வீட்டிலேயொரு சிக்கனச் செய்கையாம்

முட்டுக்காலதன் மேற் தெரிந்தாற் குடி மூழகிப்போவதோர் நாளிலும் இல்லையாம்

கெட்ட நோக்கில் எதனையும் பார்க்கிற கேடர்க்கே இது கேவலமாகுமாம்

www.thamilarivu.com /.co.uk

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

மனிதவுரிமை பிரேரணை நிறைவேற்றப்பட்டால் படைக்குறைப்புச் செய்ய வேண்டியேற்படுமென்பதற்காக அதனைத் தவிர்க்க இப்படியான துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு பிரேரணையில் மாற்றங்களைக் கொண்டுவரலாமென எண்ணுகிறார்களோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதுபோலவும் இருக்கலாம் கரு. சிலசமயம் சேதி உண்மையாகவும் இருக்கலாம்

சுமந்திரனுக்கும் போதை ஏறிவிட்டது. சறியோ தவறோ புலிகளை பெருன்பான்மையான தமிழ்மக்கள் ஆதரித்தார்கள் என்பது உண்மை.

எப்படி புலிகள் தாங்கள் தான் தமிழ்மக்களின் ஏக பிரதிநிதி என்று கூறுவது தவறோ அதே போல் புலிகள் ஏகபிரதிநிதி இல்லை என்று கூறுவதும் தவறு.....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சமுதாயத்தின் சீர்கேடுகளை தட்டிக்கேட்பதாயின் அந்தமக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத தன்னை யாரென்று வெளிப்படுத்தாத எந்தத் தனிமனிதனுக்கோ அல்லது அமைப்பிற்கோ அருகதையில்லை. இதுபோன்ற வேலையைச் செய்வதற்கு சேரன் படை முதலில் இருட்டிலிருந்து வெளியே வரவேண்டும். மக்களின் அன்பையும் ஆதரவையும் பெறவேண்டும். அல்லாவிடில் சேரன்படைக்கு மக்களிடமிருந்து மரண தண்டனைதான் கிடைக்கும்.

சேரன்படை கலாசார சீரழிவுகளை வரிசைப்படுத்துவதுடன் நின்றுவிடாமல் அரசியல்வாதி சுமந்திரனின் பெயரைக் குறிப்பிடுவதால் அரசிலிலும் அது மூக்கை நுழைத்திருக்கிறது. உண்மையில் இதைத்தான் சொல்லவென்று புறப்பட்ட சேரன்படை தனக்குத் தானே வெள்ளையடித்துக்கொள்வதற்காக வேண்டுமென்றே சமுதாயத்தின் கலாசார மற்றும் வாழ்வியல் சீரழிவுகளை வரிசைப்படுத்தி அதை திருத்தப் புறப்படும் தன்னை ஒரு நல்லபிள்ளையாக மக்கள் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

மக்களை முதன்மைப்படுத்தாமல் எவரும் எந்தக் காரியத்தையும் வெற்றிகரமாக முடித்ததில்லை. மக்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரத்தை சேரன்படைக்கு கொடுத்தது யார்? அப்படியான அதிகாரத்தை நீங்களே எடுத்துக்கொண்டிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றம்.

ஒரு சமுதாயத்தின் சீர்கேடுகளை தட்டிக்கேட்பதாயின் அந்தமக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத தன்னை யாரென்று வெளிப்படுத்தாத எந்தத் தனிமனிதனுக்கோ அல்லது அமைப்பிற்கோ அருகதையில்லை. இதுபோன்ற வேலையைச் செய்வதற்கு சேரன் படை முதலில் இருட்டிலிருந்து வெளியே வரவேண்டும். மக்களின் அன்பையும் ஆதரவையும் பெறவேண்டும். அல்லாவிடில் சேரன்படைக்கு மக்களிடமிருந்து மரண தண்டனைதான் கிடைக்கும்.

இதே கருத்தை முன்பு எள்ளாலன் படை செய்த போது நீங்கள் கூறியிருந்தால் மனுஷன். :lol::D:icon_idea: பயப்பிடாதைங்கோ இப்பவும் நீங்கள் சாதாரன மனிசர் தான். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் கலாசார விழுமியங்களை பின்பற்றி நடக்க வேண்டும், பெண்கள் பாரம்பரிய உடைகளையே அணிய வேண்டும் என்பதோடு உடலை வெளியில் காட்டுகின்றபடியான உடுப்புக்களை அணிகின்றமை கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

http://www.eeladhesa...lle-nachrichten

யாழ்ப்பாணத்தில் ஆண்கள் மிகவும் ஆபாசமான பாரம்பரிய ஆடை அணிவதனால் பிற நாட்டவர்கள் யாழ்ப்பாண தமிழர்களையும் அவர்தம் கலாச்சாரத்தையும் இழிவாக பார்க்கிறார்கள். குறிப்பாக ஆண்கள் மேல்சட்டை அணியாமல் அம்மணமாக கோவிலுக்கு போகிறார்கள். வீதிகளிலும் அவ்வாறாக நடமாடுகிறார்கள். இந்த கலாச்சார சீர்கேடு பற்றி நடவடிக்கை எடுக்க ஒரு படை ஆரம்பிப்பதானால் என்ன பெயர் வைக்கலாம் என்று யாழ் கள அங்கத்தவர்கள் ஆலோசனை வழங்க முன்வரமாட்டார்களா?

1974-Abraham_family2-Jaffna.jpg

எமது இன்றைய பாட்டிமாரின் அன்றைய ஆபாசம் 70களில்.

temple_car_festivel.jpg

என்றைன்றைக்குமான எமது ஆண்களின் அரைநிர்வாண ஆபாசம்

இந்த கலாச்சார சீர்கேடு பற்றி எமது பெண்ணியல்வாதிகள் வாய்திறப்பதில்லை. எமது அரைநிர்வாண ஆண்களை பெண்கள் பார்த்து பார்த்து இரசிப்பதற்கான சந்தர்ப்பத்தை இழந்துவிட விரும்பாதது அதற்கு காரணமாக இருந்தால் யாழ்ப்பாண ஆண்களும் தமக்கும் இவ்வாறான சமசந்தர்ப்பத்தை கோரி போராட்டம் நடத்த முன்வர வேண்டும். அதற்கு ஒரு படை ஆரம்பித்தால் என்ன பெயர் பொருத்தமாக இருக்கும்?

Edited by Jude

யாழ்ப்பாணத்தில் ஆண்கள் மிகவும் ஆபாசமான பாரம்பரிய ஆடை அணிவதனால் பிற நாட்டவர்கள் யாழ்ப்பாண தமிழர்களையும் அவர்தம் கலாச்சாரத்தையும் இழிவாக பார்க்கிறார்கள். குறிப்பாக ஆண்கள் மேல்சட்டை அணியாமல் அம்மணமாக கோவிலுக்கு போகிறார்கள். வீதிகளிலும் அவ்வாறாக நடமாடுகிறார்கள். இந்த கலாச்சார சீர்கேடு பற்றி நடவடிக்கை எடுக்க ஒரு படை ஆரம்பிப்பதானால் என்ன பெயர் வைக்கலாம் என்று யாழ் கள அங்கத்தவர்கள் ஆலோசனை வழங்க முன்வரமாட்டார்களா?

இந்த கலாச்சார சீர்கேடு பற்றி எமது பெண்ணியல்வாதிகள் வாய்திறப்பதில்லை. எமது அரைநிர்வாண ஆண்களை பெண்கள் பார்த்து பார்த்து இரசிப்பதற்கான சந்தர்ப்பத்தை இழந்துவிட விரும்பாதது அதற்கு காரணமாக இருந்தால் யாழ்ப்பாண ஆண்களும் தமக்கும் இவ்வாறான சமசந்தர்ப்பத்தை கோரி போராட்டம் நடத்த முன்வர வேண்டும். அதற்கு ஒரு படை ஆரம்பித்தால் என்ன பெயர் பொருத்தமாக இருக்கும்?

எல்லாத்துக்கும் பொதுவா சேர்த்து " வருத்தப் படாத வாலிபர் சங்கம் " என்று வடிவேலுவிற சங்கப் பெயரை கொப்பியடிக்கலாம்.

தனித்தனியே சங்கம் அமைப்பதைப் பற்றி இப்பொது அலட்டிக் கொள்ள வேண்டாம்.

கொஞ்ச காலத்தில எல்லாரும் பிரிஞ்சு போய் ஆளுகொரு சக்கமைப்பார்கள். தமிழன் இல்ல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்கள் எப்படி உடை அணியவேண்டும் என்பதுபோன்ற உத்தரவுகளை வளங்கும் தலிபான் பாணி கலாச்சாரப் பொலிஸ்காரர்கள் உலகில் எந்தப் பகுதியிலும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அவர்கள் தங்கள் மக்களுக்கே தொல்லைஒயாகவே மாறி இருக்கிறார்கள்.

ஆண்களதும் பெண்களதும் நிலைபாடு எடுக்காத மக்களுக்கே உத்தரவிடுகிற எந்த அமைப்பையும் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். சேரன் படையினர் முதலில தமிழ் பெண்களுக்கு ஏற்கனவே இருக்கிற விடுதலையையும் தடுக்கிற அடாவடித் தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சேரன் படைவீரர்களே முதலில் ஈழத்தில் உள்ள தமிழ் பெண்ணியவாதிகளிடம் இருந்து /முன்னணிப் பெண்கள் ஆர்வலர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் சந்தேகங்களை அவர்களுடன் விவாதியுங்கள். மக்களிடம் கற்றுக்கொள்ளாமல் மக்களுக்கு வழிகாட்டமுயலவேண்டாம்.

சில நூறு வருடங்களுக்கு முன் எம் பெண்கள் மார்பை மறைப்பதில்லை. 

கோவில்களில் அரைகுறை உடை சிற்பங்களை தானே வழிபடுகிறோம். 

சுகாசினி வடிவான ஆண்கள் நடிக்கவேண்டும் என்றால் துடிப்போம் ஆனால் எம்மை பெற்ற பெண் இனத்திற்கு எப்படி உடை அணியவேண்டும் என்று எட்லெக்சர் எடுப்போம்.

இமெல்டா, சாரத்தை மடித்து கட்டி பின் சைக்கிள் ஓடுவதை தடா செய்யவேண்டும்.  மற்றும் ஆண்கள் வெறும் மார்பை (பேத்தையை) காட்டிக்கொண்டு கோவிலுக்குள் வருவதை தடை செய்யவேண்டும்.  கமக்கட்டு நாத்தத்தை பெண்கள் தாங்க முடியாது. இது சுகாதார பிரச்சினை வேறு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதவுரிமை பிரேரணை நிறைவேற்றப்பட்டால் படைக்குறைப்புச் செய்ய வேண்டியேற்படுமென்பதற்காக அதனைத் தவிர்க்க இப்படியான துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு பிரேரணையில் மாற்றங்களைக் கொண்டுவரலாமென எண்ணுகிறார்களோ தெரியவில்லை

நல்ல கருத்து சகோதரம்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.