Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் போராட்டம் சரியானதே! தமிழீழம் மலர வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம்!-கருணாநிதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் போராட்டம் சரியானதே! தமிழீழம் மலர வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம்!-கருணாநிதி!

resize_20120323070055.jpg

தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் போராட்டம் சரியானதே. தமிழர்களுக்கென்று இலங்கையில் ஒரு தாயகம் வேண்டும். தமிழ் ஈழம் மலர வேண்டும். அதுதான் எனது வாழ்நாள் லட்சியம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து கருத்து தெரிவித்த கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் யோசித்து, முடிந்தால் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளுடைய துணையோடு இப்போது எப்படி இந்தத் தீர்மானத்தில் இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று குரல் கொடுத்தோமோ அதைப் போல ஒருமித்த குரலைக் கொடுத்து ஆவன செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனால் இலங்கை இதுவரை தமிழர்களுக்குப் புரிந்த கொடுமைகளுக்கு பரிகாரம் தேடுகின்ற நெருக்கடி ஏற்படும்.

ஏனென்றால் சிசுக்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள் என்று ஆயிரக்கணக்கான தமிழ்த் தாய்மார்களும், தமிழர்களும் சித்திரவதைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

சவக்குழிக்களுக்குச் சென்றிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படவும், உலக நாடுகள் முன்னால் தலை குனிந்து நின்று காரண காரிய விளக்கங்கள் சொல்லவும் இலங்கை அரசு கடமைப்பட்டிருக்கிறது.

இப்போது தான் பெரும்பாலான நாடுகளுடைய தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த நாடுகள் தான் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

பிரபாகரன் போராட்டம் சரியானதே.. ஆனால் சகோதர சண்டைதான் ஈழம் அமைவதைக் கெடுத்தது

தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் போராட்டம் சரியானதே. ஆனால் சகோதரச் சண்டைதான் தமிழ் ஈழம் அமைவதைக் கெடுத்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்வி, தமிழ் ஈழம் பற்றியதுதான். அதற்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:

ஈழத்தில் நடந்த சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என் கருத்து என்றார் கருணாநிதி.

அப்போது, புலிகள் நடத்திய சகோதர யுத்தம் தவறானது என்று சொல்கிறீர்கள். தந்தை செல்வா போன்றோர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் தமிழர்கள் மீது அத்துமீறல்கள் நடந்தன. அதனால்தான் நாங்கள் போராடத் தொடங்கினோம்' என்று பிரபாகரன் சொல்லியிருந்தாரே?அது தவறா? என்று ஒரு நிருபர் கேட்டார்.

உடனே பதிலளித்த கருணாநிதி: "பிரபாகரன் போராட்டத்தைக் குறை கூறும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. அவர் முன்னெடுத்த போராட்டம் சரியானதே. அதை திமுகவும் ஆதரிக்காமலில்லை. புலிகள் நடத்திய சகோதர யுத்தம் என்று நான் சொன்னது அவர்களைப் பற்றி மட்டுமே அல்ல.

ஆனால் பிரபாகரனும் முகுந்தனும், பத்நாபாவும், ஸ்ரீசபாரத்தினமும் மோதிக் கொண்டு அதில் இரத்த ஆறு ஓடியதைத்தான் நான் மிகுந்த வேதனையோடு அப்போதும் தடுத்தேன். இப்போதும் அந்த நிலை வரக்கூடாது" என்று வேண்டுகிறேன் என்றார் கருணாநிதி.

http://www.thedipaar.com/news/news.php?id=43182

மாபாவி சாகானோ ஒரு மாரி மழை பெய்யாதோ?

... இன்னும் ஒருதரம் ஈழம் அமைவதற்கு, தமிழக கருணா, தனது இரு மனைவியர் புடைசூழ ஒரு மணி நேரமோ அல்லது இரு மணி நேரமோ உண்ணாவிரதம் இருப்பது நல்லது ..

http://www.youtube.com/watch?v=GyaWOX2D6aw

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழவனுக்கு அறளை பெயர்ந்திட்டுப்போல.....................

  • கருத்துக்கள உறவுகள்

மாபாவி சாகானோ ஒரு மாரி மழை பெய்யாதோ?

:lol::icon_idea: :icon_idea:

மாபாவி சாகானோ ஒரு மாரி மழை பெய்யாதோ?

:rolleyes: :rolleyes: :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் இப்படி சொன்னால் அடுத்து சொல்லும் வசனம் சகோதரப்படுகொலை ......... இதற்கு இதைப்பற்றி பேசாது இருப்பதே சிறந்தது

கேட்டுகேட்டு புளிச்சுபோட்டுது, இந்தாளை யார் கேட்டார்கள்? வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

அல்லது நீங்கள் எப்படி மூன்று மனைவிமாருடனும் மகிழ்வாக வாழ்ந்தீர்கள் என்பதுபற்றி கட்டுரை எழுதலாம். :lol::icon_mrgreen:

527595_391661570862974_183718718323928_1464382_843369782_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்
:):D

புலிகள் இல்லாவிட்டாலும் அவர்கள் கொலையாளிகள் என்று சொல்ல ஆட்களை வெளியில தேடத் தேவை இல்லை.

Posted Yesterday, 10:45 PM

:D:lol::icon_idea:527595_391661570862974_183718718323928_1464382_843369782_n.jpg

ஈழத்திற்காக முயற்சி செய்யுங்கள். ஒறு சிறு சிலையாவது அங்கே வைக்கப்படும்.

மன்மோகன் சிங்கின் அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க.உறுப்பினர்கள் பதவிகளை துறப்போம் என கூறியமை அமெரிக்காவின் தீர்மானத்திற்கு அது ஆதரவாக வாக்களித்தமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அந்த வகையில் இந்த தி.மு.க. முடிவுக்கு காரணமாக இருந்த தமிழக உறவுகளுக்கு நன்றிகள்.

இந்த விடயத்தைப்போல் தமிழக கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டால் நிச்சயம் எமக்கு ஓர் விடிவு கிடைக்கும்..............மீண்டும் ஒன்றிணைந்து ஓர் அணியில் நிற்பார்களா....................

இந்த விடயத்தைப்போல் தமிழக கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டால் நிச்சயம் எமக்கு ஓர் விடிவு கிடைக்கும்..............மீண்டும் ஒன்றிணைந்து ஓர் அணியில் நிற்பார்களா....................

ஓரணியில் நிற்கவேண்டும் என்ன செய்வது, குடும்ப அரசியலும் ஊழலில் ஈடுபட்ட அரசியலாளர்களும் தம்மைத் தாம் காப்பதற்காக எமது இனத்தின் ஆறாத ரணங்களை தமக்குள் பேரம் பேசிக்கொள்கிறார்கள்.

எப்படியாயினும் ஒரே கருத்தை அனைவரும் பிரதிபலித்தாலே ஈழத்தமிழருக்கான வழி திறந்துவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.