Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நண்பனா பகைவனா

Featured Replies

நண்பனா பகைவனா

பரனும் சுபனும் ஆருயிர் நண்பர்கள். நண்பர்கள் என்றால் ஒன்றாகப்படித்து ஒன்றாக குறும்புகள் செய்து ஒன்றாக வாழ்ந்த இவர்கள். ஒரே நாட்டில் பிறந்து ஒரே தாய்மொழியை கொண்டு ஒரே தாயக பிரச்சனையால் ஒரே நாட்டில் இரண்டு காலகட்டத்தில் ஏதிலிகளாக குடிபெயர்ந்தவர்கள். அவர்களின் அதிஸ்டம் அவர்கள் ஒரே ஊரான டொராண்டோவிலேயே வாழும் சந்தர்ப்பமும் கிடைத்தது. நட்பு மேலும் வளர்ந்து கிளைவிட்டது.

ஆளுக்கு ஒருவர் நாளாந்தம் கதைப்பது, உதவுவது,.. வார இறுதிகளில் ஒன்று சேர்வது என நட்பு தொடர்ந்தது. நட்புக்கு, இடையில் வந்த மதுப்பழக்கமும் ..., உரமூட்டியது. வாக்குவாதங்கள் நடந்தாலும் தண்ணி ...... நட்பு வென்றது.

காலம் உருண்டது. இருவரும் ஒருவருட காலத்திற்குள் மணவாழ்க்கைக்குள் புகுந்தனர். அவர்கள் துணையும் இவர்களுடன் ஒருவருட காலத்துக்குள் இணைந்துகொள்ள நாலு வருடங்கள் சடுதியாக கடந்தன. இயந்திர வாழ்க்கைக்குள் காலமும் ஓட நண்பர்கள் தந்தையும் ஆனார்கள். அதனால் அவர்களுக்கு கனடா நாட்டின் பரந்த நோயான 'ஸ்ரசும்' பிடித்து துன்புறுத்தத்தொடங்கிவிட்டது. வழமையான நேரப்பிரச்சனை, காசுப்பிரச்சனை இவர்கள் குடும்பத்தையும் ஆட்டியது. ஆனால், நட்பை அது கிட்டவும் நெருங்கவில்லை.

எனவே வார இறுதிநாட்கள் இல்லை நீண்ட விடுமுறை நாட்களில் நடக்கும் 'பார்ட்டிகள்' 'ஸ்ட்ரசை' குறைக்கும் இல்லை தற்காலிகமாக மறக்க வைக்கும் மருந்தாக விருந்தாக அமைந்தது. அன்றும் பரனின் வீட்டில் அவனின் மகளின் முதலாவது பிறந்தநாள் 'பார்ட்டி'. வழமைபோல பெண்கள், பிள்ளைகள் மேலே இருக்க ஆண்கள் நிலக்கீழ் அறையில் இடம்பிடித்தனர். 'சிங்கிள் மோல்ட்' 'விஸ்கிகள்' விறைப்பேற்றின. 'கேக்' வெட்டும் நேரம் வந்தது அரைவாசி ஆண்களுக்கு தெரியாது, வழமையான அரசியல் விவாதம் சூடு பிடித்திருந்தது, விஸ்கி 'கிக்' தந்தது. குடும்ப படம் எடுக்கும் நேரம் வந்ததும் கால்வாசி பேருக்கும் தெரியாது. சுபனோ தனியாகவே ஒரு போத்தலை வழமைபோல காலி செய்தவண்ணம் இருந்தான். பல ஆண்களுக்கு ஊரின் அதிசிறந்த உணவக உணவை உருசி பார்க்கும் நிலைமை இருக்கவில்லை, தொட்டுக்கொண்டதே உணவானது. ஒருவர், புதியவர், சத்தியும் எடுத்தார், அடுத்த 'பார்டி' அவர் வீட்டில்தான் என ஏகமனதாக முடிவானது.

'இஞ்சை டேய், உன்னுடைய மனுசி வீட்டை போக வரட்டாம்' என்ற வேண்டுகோள் பலதடைவைகள் ஒலித்தாலும் விறைத்த மூளையில் அது பட்டுத்தெறித்தது. இருந்தும் முதலாவது நட்பு உறவு ஒருமணி பத்து நிமிடத்திற்கு வெளிக்கிட்டார். எல்லோரும் போய் முடிய நேரம் மூன்றாகிவிட்டது, இறுதியாக மிஞ்சியது சுபன் குடும்பம். பரனோ, 'மச்சான் இண்டைக்கு இஞ்ச படுத்துப்போடா' என்றான். சுபனோ. 'டேய் மச்சி மனுசியிடம் போனமுறை இங்கே இரவு தங்கியதற்கு செமையாக வேண்டினன். கிட்டத்தானே, நாங்கள் போய்விடுவம்', என்றான். மெல்ல மெல்ல தள்ளாடிய சுபன் தனது மனைவியின் முகத்தை பார்க்காமலே பரனின் குடும்பத்திற்கு 'பாய்' என்று கூறியவாறு வாகனத்தை நோக்கி நடந்தான். ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்த சுபன் வாகனத்தை இயக்க, குடும்பமும் அமர்ந்துகொண்டது. வாகன கண்ணாடியை இறக்கி கையை அசைத்தான் சுபன். பரனோ ஓடிவந்தான். வந்தவன், 'மச்சான், ஓடுவியே? இல்லை மனுசிட்டே குடன் வாகனத்தை' என்றான். 'ஐ. ஆம். ஓ.கே.' என்றான் சுபன். 'டேய் கவனம், போயிட்டு அடியன்' என்றான் பரன்.

கனேடிய சட்டத்தை இருவரும் அறிந்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் பரனின் வீட்டில் மது கொடுக்கப்பட்டதால் சட்டப்படி பரனுக்கும் பொறுப்பு இருந்தது. அவனுக்கும் அது தெரிந்து இருந்தது. இருந்தும் மௌனமாக நின்றிருந்தான் பரன்.

ஐந்து மணிக்கு நித்திரை கொள்ளப்போன பரனின் வீட்டுக்கதவு ஆறுமணிக்கு பலமாக தட்டப்பட்டது. வீட்டின் வெளிக்கதவை கதவை திறந்த மனைவி பின்னர் பரனை எழுப்ப, பரன் கையில் விலங்கை மாட்டி கூட்டிச்சென்றனர் காவல்துறையினர். தீவிர பரிசோதனைப்பிரிவில் கையில் ஆறுமாத குழந்தையுடன் 'கோமா'வில் உள்ள கணவனின் உயிருக்காக கடவுளை வேண்டி அழுதவண்ணம் இருந்தாள் சுபனின் துணை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா சட்டத்தை யார் கணக்கெடுக்கிறாங்க... அப்பிடி எடுத்த 2 மணிக்கு பிறகு போத்தல திறந்திருக்க மாட்டாங்களே.....................................

நண்பனா.... எதிரியா? என்ற கேள்விக்கே இடமில்லை... எப்போதும் நண்பர்கள் தான்.... ஆனால் கதையாக .இருந்தாலும் நிஜமாக இருந்தாலும் பார்ட்டி வைக்கிறாக்கள் கவனிக்க...

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா,அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம் இப்படி பலரது வாழ்வை பாழாக்கியிருக்கிறது. இதில் சுயகட்டுப்பாடு முக்கியம். ஆனால் பலர் இதில் அக்கறை கொள்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அகூதாவின் கதைப் ப கிர்வுக்கு என் பாராட்டுக்கள். அது தான் மனைவி மாரைஊக்கபடுத்துகிறார்கள் .கார் ஒட்டுவதற்கு. ..... அதுவே அவர்களுக்கு வாய்ப்பாகவும் போகிறது........சுய கட்டுபாடு இல்லாத வரை திருத்தத் முடியாது . .

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நட‌ந்த சம்பவமா அகூதா?...பாராட்டுக்கள்,தொட‌ர்ந்து எழுதுங்கள்.

.

நான் இங்கு யூனியில் படிக்கும் காலத்தில் 5 பேர் ஒரு வீட்டில் இருந்தோம். எல்லாருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது. ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு பார்டி ஆரம்பமாகும். விடியக்காலம 2 மணிக்கு முடியும். நான் குடிப்பதில்லை( சத்தியம்).

இந்தக் குடி காரணமாக எங்களை விட 10, 15 வயதுக்கு அதிகமானவர்களின் நட்பும் ஏற்பட்டது. இவர்களும் வந்து குடிப்பார்கள். இதில் ஒருவர் மிகவும் நல்லவர். கிறீஸ்தவர். ஆனால், பெருங்குடி மகன். இரண்டு கண்களும் எப்பவும் சிவந்தே காணப்படும். நான் குடிப்பதில்லையாகையால் சில வேலைகளைச் செய்ய வேண்டும். உதாரணமாக இவர்களைக் காரில் கொண்டுபோய் ஏற்றுவது.. இல்லாவிட்டால் முன் வாசல் படியில் விழுந்து விடுவார்கள்.

இன்னுமொருவர் கிழமைச் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வந்து குடிப்பார். அடுத்த நாள் எங்களிடமே கடன் கேட்பார்.

இப்படிக் குடிப்பவர்களின் குடும்பங்களில் நிறையப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

குடியில்லாவிட்டால் குடும்ப வாழ்க்கை நல்லாயிருக்கும் என் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அகோதா சமூக குறைபாடுகளை வெளியில் கொண்டு வருகிறீர்கள். தொடரட்டும் உங்கள் பணி மற்றும் பாணி.

அகூதா, நல்ல விழிப்புணர்வு வரவைக்கக் கூடிய கதை. ஆனால் இதை இங்கே படிப்பவர்கள் இப்படியாக நடந்துகொள்பவர்களாக இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

மனைவியிடம் வாகனத்தை ஓட்டக் கொடுத்திருக்கலாம். மனைவியும் அதை ஏன் கேட்கவில்லை.

நாம் மற்றைய இனத்திடம் இருந்து சில பழக்கங்களை பழக வேண்டும். ஒரு குழந்தையின் முதலாம் பிறந்த நாள் விழாவில் இந்த குடியும் கூத்தும் அவசியமா? மேலும் எம் பார்டிகளில் ஏன் ஆண்களும் பெண்களும் தனித் தனியாக அமர்கிறார்கள். அதுவும் ஒரேயடியாக அளவு கணக்கில்லாமல் குடிக்க வழி செய்யும்.

குடிப்பது தப்பில்லை. அதை அளவாக, சோஷல் நோக்கோடு குடித்தால் யாருக்கும் துன்பமில்லை.

  • தொடங்கியவர்

அகூதா, நல்ல விழிப்புணர்வு வரவைக்கக் கூடிய கதை. ஆனால் இதை இங்கே படிப்பவர்கள் இப்படியாக நடந்துகொள்பவர்களாக இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

மனைவியிடம் வாகனத்தை ஓட்டக் கொடுத்திருக்கலாம். மனைவியும் அதை ஏன் கேட்கவில்லை.

நாம் மற்றைய இனத்திடம் இருந்து சில பழக்கங்களை பழக வேண்டும். ஒரு குழந்தையின் முதலாம் பிறந்த நாள் விழாவில் இந்த குடியும் கூத்தும் அவசியமா? மேலும் எம் பார்டிகளில் ஏன் ஆண்களும் பெண்களும் தனித் தனியாக அமர்கிறார்கள். அதுவும் ஒரேயடியாக அளவு கணக்கில்லாமல் குடிக்க வழி செய்யும்.

குடிப்பது தப்பில்லை. அதை அளவாக, சோஷல் நோக்கோடு குடித்தால் யாருக்கும் துன்பமில்லை.

இந்தகளம் உட்பட நடக்கும் 'பார்ட்டிகளிலும்' நாம் அழிவதுடன் அடுத்த தலைமுறைக்கும் பிழையான வழிநடத்தலை தெரிந்தே செய்கிறோம். குறிப்பாக சிறுவர்கள் முன் மது அளவுக்கு அதிகமாக அருந்துவதும் பின்னர் அவர்களை தடுப்பதும் ( அதுவே அவர்கள் களவாக அதை நாட வழி வகுக்கின்றது).

நாட்டிற்கு புதிதாக வந்த சுபனின் பாரியாருக்கு வாகனம் ஓட்ட தெரியாது :D

ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்த சுபன் வாகனத்தை இயக்க, குடும்பமும் அமர்ந்துகொண்டது. வாகன கண்ணாடியை இறக்கி கையை அசைத்தான் சுபன். பரனோ ஓடிவந்தான். வந்தவன், 'மச்சான், ஓடுவியே? இல்லை மனுசிட்டே குடன் வாகனத்தை' என்றான். 'ஐ. ஆம். ஓ.கே.' என்றான் சுபன். 'டேய் கவனம், போயிட்டு அடியன்' என்றான் பரன்.

நாட்டிற்கு புதிதாக வந்த சுபனின் பாரியாருக்கு வாகனம் ஓட்ட தெரியாது :D

இது சுபனின் நண்பனுக்குத் தெரியாதா?

கனேடிய சட்டம் பிடித்திருக்கிறது. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.