செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
திரைப்படங்களில் பார்த்த பின் தான் அமேசான் காடுகளில் மட்டுமே இருக்கும், அனகோண்டா பாம்புகளை பற்றி பலருக்கும் தெரியும். அனகோண்டா பாம்புகளின் உருவத்தை பார்த்து உலகின் மிக நீளமான பாம்பு இது தான் என நினைக்கலாம். ஆனால் நிஜத்தில் Reticulated Python எனப்படும் ராஜமலைப்பாம்பு தான் உலகிலேயே மிகவும் நீளமானது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இந்த வகை ராஜமலைப்பாம்புகள் வசிக்கின்றன. பார்ப்பதற்கு பிரமாண்டமாக உள்ள அனகோண்டா பாம்புகளின் நீளம் 20 அடிக்கு மேல் இருப்பதில்லை. ஆனால் ராஜமலைப்பாம்புகளோ 20 அடிக்கும் மேல் நீளம் கொண்டவை. எடை அதிகபட்சம் 75 கிலோ வரை இருக்கின்றன இந்த ராஜமலைப்பாம்புகள். கருப்பு தோல் மீது மஞ்சள் கலந்த பழுப்பு நிற வட்ட வடிவ புள்ளிகளை கொண்டிருக்கின்றன இவ்…
-
- 2 replies
- 1.2k views
-
-
உலகில் புதுமையான பல கண்டுபிடிப்புகள் உலகையே கைக்குள் அடங்கிவிட்டதாக பலர் பாராட்டி வரும் அதே வேளையில் முறை தவறி பயன்படுத்தப்படும் இந்த கண்டுபிடிப்புகள் ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்பும் உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுதான் வருகின்றது. ஆனால், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத பலர் வரம்பு மீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் பெரும்பாலும் விபரீதத்தில் தான் முடிகின்றன. சீனாவில் சார்ஜ் போட்டு செல்போன் பேசியதால் வெடித்து சிதறியதில் சிறுவனின் தாடை எலும்பு நொறுங்கியது. சீனாவை சேர்ந்த சிறுவன் சங் பாங் (12) சார்ஜ் செய்து கொண்டு இருந்த போது அந்த நேரத்தில் அவனுக்கு செல்போனில் அழைப்பு வந்தது. எனவே, சார்ஜர் ஆப் செய்யாமல் அப்படியே தனது காதில் வைத்து பேசிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத …
-
- 2 replies
- 296 views
-
-
கோயில் விக்கிரகங்களின் வாயில் இருந்து வடியும் நீர் போன்ற திரவம்! – யாழில் சம்பவம் யாழில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெறவுள்ள நிலையில், மூலஸ்தான பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்கள் கருவூலத்திலிருந்து பாலஸ்தாபன மண்டபத்துக்கு எடுத்துவரப்பட்டு பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. இதில் சந்தானகோபாலர், நாகதம்பிரான், வைரவர் போன்ற விக்கிரகங்களி…
-
- 2 replies
- 453 views
-
-
வாஷிங்டன், பிப். 18: சீனாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அமெரிக்க அதிபர் ஒபாமா, திபெத் புத்த துறவி தலாய் லாமாவை சந்தித்துப் பேசினார். அஹிம்சை முறையில் பிரச்னைக்கு தீர்வு காண முயன்று வருவது பாராட்டத்தக்கது என்று தலாய் லாமாவுக்கு ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளர். அமெரிக்கா சென்றுள்ள தலாய் லாமாவை, அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா வாஷிங்டனில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது திபெத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது உள்பட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பின் போது பத்திரிகை புகைப்படக்காரர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. வெள்ளை மாளிகை அதிகாரிகள் பின்னர் புகைப்படத்தை பத்திரிகைகளுக்கு அளித்தனர். சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளிய…
-
- 2 replies
- 617 views
-
-
ஒரு பை வெங்காயத்தின் விலை 150000டொலர்கள் http://newyork.cbslocal.com/2011/10/20/orange-county-farmer-selling-bag-of-onions-for-150k-to-save-farm/ வாங்க விரும்பினால் கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் http://www.ebay.com/itm/Sale-50lb-bag-yellow-cooking-onions-future-family-farm-/330627576148?pt=LH_DefaultDomain_0&hash=item4cfaf07154
-
- 2 replies
- 752 views
-
-
எம்மை பிரிக்க முடியாது. நாம் இருவரும் ஒரே வீட்டில் தான் ஒன்றாக வாழ்வோம்...’’ என கூறியத்துடன் பிள்ளைகள் மற்றும் கணவரிடம் செல்ல மறுத்த இரண்டு பெண்கள் குறித்த செய்தியை கண்டி பொலிஸார் தெரிவித்தனர் இருபத்தி ஒன்பது வயது மற்றும் முப்பத்தைந்து வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்மார்களே இவ்வாறு கதறி அழுது தம்மை பிரிக்க வேண்டாம் என கோரியுள்ளனர். இந்த இரண்டு பெண்களுக்கும் தலா பதினைந்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், கணவர்கள் மற்றும் குழந்தைகள் வந்து பெண்களை ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். அப்போது, வீட்டுக்கு செல்ல மறுத்த இந்த பெண்கள், தனித்தனியாக செல்ல முடியாது என போலீசாரிடம் கதறி …
-
- 2 replies
- 505 views
-
-
யாழ்ப்பாணத்தின், எம்.ஜி.ஆர் காலமானார்! யாழ்.எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இயற்கை எய்தினார். அவரின் இறுதி கிரிகைகள் கோப்பாயிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறவுள்ளது. கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை சேர்ந்த இராசையா சுந்தரலிங்கம் (வயது 79) தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர ரசிகனாவார். அத்துடன் அ.தி.மு.கவின் தீவிர விசுவாசியும் ஆவார். தமிழகம் சென்று எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தும் உள்ளார். எம்.ஜி.ஆர் போன்று கண்ணாடி அணிந்து தோளில் சால்வையுடன் சைக்கிளில் வலம் வரும் இவரை பலரும் யாழ்ப்பாண எம்.ஜி.ஆர் என அழைத்தனர். அதனால் அவரின் இயற்பெயர் பலருக்கு தெரியாது. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக …
-
- 2 replies
- 341 views
-
-
புதுவித திருமணத்தால் பிரபலமான கரடி (படங்கள் இணைப்பு) திருமண பந்தத்தில் இணைவதற்கு பலர் சாகசம் செய்வது வழக்கம். அதில் ஆகாயத்தில் பறந்து திருமணம் செய்வது, கடலுக்கு அடியில் திருமணம் செய்வது என புதுப்புது வழிகளில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உலகம் முழுவதும் தற்போது அதிகரித்து வருகின்றது. அவ்வரிசையில் ரஷியாவின் மாஸ்கோ நகரத்தை சேர்ந்த டெனிஸ், நிலியா ஜோடி வித்தியாசமான முறையில் திருமணம் செய்து இணைந்துள்ளனர். அதன்படி ஸ்டீபன் என்ற கரடியை தங்கள் திருமணத்திற்கு அழைத்து அதன் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். சுற்றிலும் மரங்கள், புல்வெளி, பழங்கள் என இயற்கையான சூழலுக்கு நடுவி…
-
- 2 replies
- 485 views
-
-
http://youtu.be/cO9r4gDbvGc பெண் என்றால் பேயும் இரங்கும்… ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே… இந்திரன் கெட்டதும் பெண்ணாலே சந்திரன் கெட்டதும் பெண்ணாலே இப்படி பெண்களுக்குத்தான் எத்தனை எத்தனை பழமொழிகள் எத்தனை எத்தனை தத்துவங்கள். இங்கே பாருங்கள் நாம் தரும் காணொளியை ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் நிச்சயம் ஒரு பெண் இருப்பாள் என்று கூறுவார்களே அப்படியாயின் இந்த சாதனை மனிதனின் சறுக்குலுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் பாருங்கள்.. எவ்வளவு திறமையா எவ்வளவு சமார்த்தியமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வியப்பில் ஆழ்த்திகொண்டிருந்தவரை திடீரென குறிக்கே வந்த ஒரு பெண்ணை பார்த்ததும் அவன் சிந்தனை சிதறுகின்றது.. சாதனை தவிடு பொடியாகிறது…. இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் …
-
- 2 replies
- 6.1k views
-
-
[size=3]சாவோ பாலோ (பிரேசில்): பிரேசில் நாட்டில் உள்ள ஒரு வகை சிலந்தி கடித்தால் உடலில் செக்ஸ் உணர்வுகள் முறுக்கேறி, உறவுக்குத் தேவையான உந்து சக்தியைத் தருகிறதாம். இதையடுத்து இந்த சிலந்தியின் விஷத்தை இயற்கை வயாகரா என்று நிபுணர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.[/size] [size=3]வீ்ட்டில் எங்காவது சிலந்தி வலையைப் பார்த்தாலே நம்மவர்கள் டென்ஷனாகி விடுவார்கள். ஒட்டடைக் குச்சியை எடுத்து வந்து வலையை துவம்சம் பண்ணி விட்டுத்தான் ஓய்வார்கள். ஆனால் உங்களது பெட்ரூமில் எப்போதும் தங்க வைத்து தாலாட்டும் அளவுக்கு ஒரு வகை சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரணம், அந்த சிலந்தியின் விஷம், ஆண்மைக் குறைபாட்டையும், உறுப்பு எழுச்சிக் குறைபாட்டையும் போக்கும் அபார தன்மையுடன் இருப்பதால்.[/size] [size=3…
-
- 2 replies
- 1.1k views
-
-
“அளவை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அவதி” சிறுவனின் பிறப்புறுப்பில் சிக்கிய யுஎஸ்பி கேபிள்! இங்கிலாந்து நாட்டின் லண்டனை சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டில் தனியாக இருந்த போது தன் பிறப்புறுப்பின் எவ்வளவு நீளம் இருக்கிறது என்பதற்காக உட்புறத்தை பாலியல் ரீதியில் விநோதமான முறையில் அளவிட யூஎஸ்பி கேபிளை எடுத்து தனது அளந்து பார்த்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக ஆண்குறிக்குள் யுஎஸ்பி கேபிள் சிக்கிக்கொண்டது. இதனால், சிறுவனின் சிறுநீரில் ரத்தமும் வரத் தொடங்கியிருக்கிறது. இதனையடுத்து, சிறுவனின் தாயார் மருத்துவரிடம் அழைத்து சென்றிருக்கிறார். அப்போது, மருத்துவமனையில் அறையில் இருந்து சிறுவனின் தயார் வெளியே சென்றதும் நடந்ததை மருத்துவர்களிடம் கூறியிருக்கிறார். ய…
-
- 2 replies
- 742 views
-
-
பிரபல கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, திரையுலகில் பிரபலமாவதற்கு முன், 1940ஆம் ஆண்டுகளில், வெறும் $10 பணத்திற்காக அரைநிர்வான போஸ்களை பிரபல பத்திரிகைக்கு கொடுத்திருக்கின்றார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன. ஒரு மணி நேரத்திற்கு $10 மட்டுமே சம்பளமாக பெற்றுக்கொண்டு, Blue Book Modeling Agency என்ற விளம்பர நிறுவனத்திற்காக அரைநிர்வாண போஸ் உள்பட படுகவர்ச்சிகரமான போஸ்களை கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை Earl Moran என்ற புகைப்படக்கலை நிபுணர் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது லண்டனில் வெளியாகி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னாளில் ஹாலிவுட் திரைப்படங்களில் பிரபலமாகி, மில்லியன் கணக்கில் சம்பளம் பெற்ற மர்லின் மன்றோ, தனது ஆரம்ப காலத்தை வறுமையின் காரணம…
-
- 2 replies
- 1.7k views
-
-
நடை தொடங்கி உடை வரை அத்தனை நேர்த்தி. வைரம் பாய்ந்த வைகோவுக்கு, வயது 68 என்றால் ஆச்சர்யமாகத்தானே இருக்கிறது! அப்படி என்னென்னதான் வைகோவின் ஆரோக்கிய ரகசியங்கள்? காலையில் ஆறு மணிக்கு எழுந்துவிடும் மனிதர், இரவு 11.30 மணிக்குத்தான் மீண்டும் படுக்கைக்குச் செல்வார். நள்ளிரவு தாண்டி உறங்கச் சென்றாலும், அதிகாலை விழிப்பு நேரம் தவறவே தவறாது. காலையில் இட்லி, மதியம் சாதம், அதனுடன் வேகவைத்த காய்கறிகள். கேரட்,பீன்ஸ் போன்ற காய்கறிகளை விரும்பிச் சாப்பிடுவார். இரவில் சப்பாத்தி. பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு முன்பு கிரீன் டீ குடிப்பது வழக்கம். கார் பயணங்களின்போது பிஸ்கெட்களை விரும்பிச் சாப்பிடுவார். பிடித்த பழம் பப்பாளி. வேகவைத்த வேர்க்-கடலை என்றால் கொள்ளை இஷ்டம். காலையில் வாக…
-
- 2 replies
- 2.5k views
-
-
குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுவீடன் மன்னர் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்து சுவீடன் மன்னரான கார்ல் 16 ஆம் கஸ்டப் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பில் சுவீடன் பத்திரிகையான சவென்ஸ்கா டக்பிளேடட் செய்தி வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தி வரும் 69 வயதான மன்னர் கஸ்டப், குளியலின் போது பெருமளவு நீரும் சக்தியும் விரயமாவது தனக்கு பெரிதும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் அனைத்த…
-
- 2 replies
- 421 views
-
-
புதிதாக பிறந்த சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு! ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் புதிதாகப் பிறந்த ஆறு சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பூங்கா நிர்வாகத்தின் கூற்றுப்படி, டோரா மற்றும் லாரா ஆகிய சிங்கங்கள் கடந்த மாதம் தலா மூன்று சிங்கக் குட்டிகளைப் பெற்றெடுத்தன. சிங்கம் டோராவுக்கு 3 பெண் குட்டிகளும், லாராவுக்கு இரண்டு பெண் குட்டிகளும் ஒரு ஆண் குட்டியும் பிறந்தன. ஏறக்குறைய மூன்று மாதங்களே ஆன சிங்கக்குட்டிகள் பெப்ரவரி மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தயாராகி வருகிறது. இந்நிலையில், ரிதியகம சபாரி பூங்கா நிர்வாகம், சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பினை ஏற்படு…
-
-
- 2 replies
- 167 views
-
-
மட்டக்களப்பில் பிரபல பாடசாலை ஒன்றில் - 08ஆம் தர மாணவிக்கு தங்கத்தில் தாலி கட்டிய 09 ஆம் தர மாணவன் Vhg மே 30, 2023 மட்டக்களப்பு பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயியிலும் 10 ஆம் தர மாணவன் ஒருவன் மேலுமொரு பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 09 ஆம் தர மாணவிக்கு தங்கத்தில் தாலி கட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இருவருக்கும் இடையில் சில வருடங்களாக ஏற்பட்ட காதலில் சென்ற வருடம் குறித்த மாணவன் 09 தரத்தில் கல்விகற்கும் போது 08 தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு யாருக்கும் தெரியாமல் தங்கத்தில் தாலி கட்டியுள்ளான். இது யாருக்கும் தெரியாமல் ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் மாணவி சில தினங்ளுக்கு முன்பு பாடசாலையின் மூலம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்…
-
- 2 replies
- 481 views
-
-
அமெரிக்க நாட்டின் டெக்சாசை சேர்ந்தவர் மெல்பா மெபேன் (வயது 90). மெல்பா 16 வயதாக இருந்தபோது தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அந்த நிறுவனத்தின் லிப்ட் ஒபரேட்டர் பணிக்கு சென்றார். அதே நிறுவனத்தில் ஆடை மற்றும் அழகு சாதன பொருட்கள் பிரிவில் 74 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் வேலை செய்தார். இந்த நிலையில் 90 வயதை கடந்த மெல்பா கடந்த 30ஆம் திகதி பணி நிறைவு பெற்றார். நான் வீட்டில் இருந்ததை விட எனது நிறுவனத்தில் தான் அதிக நேரம் செலவழித்தேன். தற்போது வீட்டில் தனியாக இருப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது என்றார். மெல்பா தான் வேலை செய்த அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்ததாக தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். https://thinakkural.lk/article…
-
- 2 replies
- 290 views
- 1 follower
-
-
பேஸ்புக் இயங்கவில்லையா? எம்மை அழைக்காமல் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள் - பிரித்தானிய பொலிஸார் அறிவுரை கடந்த திங்கட்கிழமை இரவு பல மணித்தியாலங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளம் முடங்கியதால் உலகம் முழுவதும் பேஸ்புக் பாவனையாளர்கள் திணறிப் போயினர். அதிதீவிர பேஸ்புக் அபிமானிகள் சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவங்களும் சில நாடுகளில் இடம்பெற்றுள்ளமை வேடிக்கையானது. பிரிட்டனிலும் பலர் இவ்வாறு பொலிருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பல்வேறு பணிகளில் மூழ்கியிருக்கும் தமக்கு பேஸ்புக் இயங்காதுள்ளமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டமை பொலிஸாருக்கு விசனத்தை ஏற்படுத்தியது. …
-
- 2 replies
- 427 views
-
-
ஒரே நாளில் 1, 000 தடவை அழைப்பை ஏற்படுத்திய காதலிக்கு சிறை! பிரித்தானியாவில், முன்னாள் காதலனைத் தொடர்ச்சியாகத் தொல்லை செய்து வந்த பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோபி கால்வில் [Sophie Colwill] என்ற 30 வயதுடைய பெண்ணை டேவிட் பாக்லீரோ [David Pagliero] என்ற நபர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாகக் குறித்த பெண் மன வருத்தத்தில் இருந்துள்ளார். காதலனை இழக்க விரும்பாத அவர், டேவிட்டிற்கு 1,000 முறை தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் டேவிட் அவருடைய அழைப்பைத் தவிர்த்துள்ளார். மேலும் டேவிட்டை கண்காணித்து வந்த அவர், டேவிட்டின் வீட்டிற்குள்ளும் அத்துமீறி நுழைந்துள்ளார். சோபி…
-
-
- 2 replies
- 945 views
-
-
இலங்கையில் ஒரு குப்பைத் தொட்டியின் நடுவில் யானைகளின் ஒரு கூட்டம் சமீபத்தில் உணவுக்காகக் காணப்பட்டது. இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் தர்மப்லான் திலக்சன், தொடர்ச்சியான காட்டுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு திறந்த பகுதி நிலப்பரப்பின் மூலம் பெரிய காட்டு விலங்குகளை பிரிப்பதை ஆவணப்படுத்தும் தொடர்ச்சியான ஸ்னாப்ஷாட்களைக் கைப்பற்றினார். கவர் படங்களுடன் வேலைநிறுத்தம் செய்யும் படங்களை பகிர்ந்த திலக்சன் செய்தி சேவையிடம், யானைகள் "பொதுவாக ஒரு நாளைக்கு 30 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கின்றன, மேலும் ஒரு நாளைக்கு 3,500 புதிய மரங்கள் வரை விதைக்கின்றன" என்றும், யானைகளைப் பொறுத்தவரை, "பல விஷயங்கள் மாறிவிட்டன, அவை மாற்றப்பட்டுள்ளன நடத்தை எங்கள் நிலப்பரப்பை மாற்றும். " நிலப…
-
- 2 replies
- 451 views
- 1 follower
-
-
மனைவி திட்டுனா அதுக்காக இப்படியா செய்வீங்க அன்பு?? சத்தியமங்கலம்: சில மனைவிகளிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் கணவன்களை பார்த்தால் பாவமாத்தான் இருக்கு.போன வாரம் ஒருத்தர், என் பொண்டாட்டிகிட்ட என்னால அடி வாங்க முடியல, ரொம்ப வலிக்குது, அவ கிட்ட அடி வாங்கி சாகறதை விட நான் செத்தே போய்டறேன் என்று போலீசாரிடம் அழுதபடியே சொல்லிவிட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் இருந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி போலீசார் மீட்டு வந்தார்கள்.இப்போது சத்தியமங்கலத்தில் இதேபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது என்னடாவென்றால், இந்த கணவர் தற்கொலையெல்லாம் செய்ய போகவில்லை. அதற்கும் ஒருபடி மேலே போய்விட்டார். அது என்னன்னுதான் பார்ப்போமா? அ…
-
- 2 replies
- 793 views
-
-
என் பூனை தான் எனக்கு மட்டும் தான்... மறுபிறவி எடுத்த பூனைக்காக கோர்ட்டில் சண்டை. புளோரிடா: அமெரிக்காவில் விபத்து ஒன்றில் சிக்கி மறுபிறவி எடுத்த பூனை ஒன்றிற்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் தம்பா பே என்ற இடத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் பூனை ஒன்று கார் விபத்தில் சிக்கியது. படுகாயம் அடைந்து மயங்கிய அந்த பூனையை, இறந்துவிட்டதாகக் கருதிய அதன் உரிமையாளர் அதனை புதைத்துவிட்டார். ஆனால், 5 நாட்கள் கழித்து அதிசயமாக அந்த பூனைக்கு உயிர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை புதைகுழியில் இருந்து மீட்ட தொண்டு நிறுவனம், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தது. தீவிர சிகிச்சைக்குப் பின் பூரண குணம் அடைந்தது பூனை. இந்தத் தக…
-
- 2 replies
- 565 views
-
-
-
- 2 replies
- 821 views
-
-
மாதுளம்பழத்தை வெட்டி எடுப்பது எப்படி? 5118748fdf258f71758ac060c8c48568
-
- 2 replies
- 511 views
-
-
முதியோருக்கான அதிசிறந்த நாடு என்பதற்கான உலக சுட்டியில் இலங்கை 36 வது இடத்தையும் சுவீடன் முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. இந்த சுட்டியில் ஆப்கானிஸ்தான் அதிதாழ் நிலையை பெற்றுள்ளது. சுவீடனை தொடர்ந்து நோர்வே, ஜேர்மனி நெதர்லாந்து மற்றும் கனடா என்பன இடம்பிடித்துள்ளன. உலக முதியோர் கவனிப்பு சுட்டியானது இந்த ஆய்வை மேற்கொண்டது. இதன்போது முதியோரின் சமூக பொருளாதார நலன்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன. உலகின் அதியுயர் செல்வந்த நாடான அமெரிக்கா எட்டாம் இடத்தில்தான் உள்ளது. ஐக்கிய இராச்சியம் முதல் பத்துக்குள் வரமுடியவில்லை. இலங்கை 36ஆம் இடத்தையும் பாளஸ்தீன் 89ஆம் இடத்தையும் பெற்றுள்ளன. பொலிவியா மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகள் அவற்றின் பொருளாதாரத்தோடு ஒப்பிடுகையில் உயர் இடத்த…
-
- 2 replies
- 439 views
-