Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சென்னையில் இவ்வருடம் மாத்திரம் மனைவிமார்களின் துன்புறுத்தல்கள், கொடுமைகள் தொடர்பாக சுமார் 5000 ஆண்கள் முறைப்பாடு செய்துள்ளதாக ஆண்களை பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச ஆண்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சென்னையிலிருந்துதான் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. இவற்றில் 400 முறைப்பாடுகளில் விவாகரத்துக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. மும்பையில் இவ்வருடம் சுமார் 2000 ஆண்கள் தமது மனைவியின் துன்புறுத்தல் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர். ஈகோ மோதல்கள் முதல் பாலியல் சித்திரவதை வரை பல்வேறு வகையானவையாக இம்முறைப்பாடுகள் உள்ளன. சென்னையில் சுமார் 500 ஆண்கள் மனைவி த…

    • 7 replies
    • 1.1k views
  2. பெர்லின்: உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளின்போது உலகம் முழுவதும் பெரும் பிரபலமான ஆக்டோபஸ் பால் மரணமடைந்து விட்டது. இதை ஜெர்மனியில் பால் வைக்கப்பட்டிருந்த அக்வாரியத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது மிகவும் புகழ் பெற்றது பால். காரணம், முக்கியப் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அது சரியாக அடையாளம் காட்டியதால். ஆக்டோபஸ் பால் மொத்தம் எட்டு போட்டிகளின் வெற்றிகளை அடையாளம் காட்டியது பால். அதில் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வெல்லும் என்பதும் அடக்கம். இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அதேபோல அரை இறுதிப் போட்டியில் ஜெர்மனி தோற்கும் என்றும் அடையாளம் காட்டியத…

    • 7 replies
    • 929 views
  3. இலங்கை ராஜபக்ச பேரினவாத அரசு தமிழ்ப் பேசும் மக்களுக்கு என்ன சேவைகளைச் செய்துவருகிறது? இன அழிப்பு, இனச் சுத்திகரிப்பு, இராணுவமயமாக்கல், சிங்கள மயமாக்கல், பெளத்த மதத் திணிப்பு, படுகொலைகள், பாலியல் வன்முறைகள் என்பன இங்கு சில. இந்த நிலையில் கே.பி யும் அரசுடன் இணைந்து சேவையாற்றுவதாக இலங்கை அரசு தெரிவிக்கிறது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போது கே.பியிடம் இருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் தொடர்ந்தும் இருந்து வருகிறது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஈழம் என்பது கனவு என அவர் புலம்பெயர் தமிழர்களுக்கு சில காலங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தன் மூலம் இது …

  4. [size=2] [size=4]உலகில் அதிகம் சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடுகள் தொடர்பாக கருத்துக்கணிப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடான மால்டா இப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அங்கு 71.9 வீதமானவர்கள் சோம்பேறிகளாக உள்ளனர். சுவாஸிலாந்து (69 வீதம்) இரண்டாமிடத்தை வகிக்கிறது. சவூதி அரேபியா இப்பட்டியலில் (68.8 வீதம்) மூன்றாமிடத்தை வகிக்கிறது. ஒரு வாரத்தில் 2.5 மணித்தியாலங்கள் குறிப்பிடத்தக்க உடலுழைப்பில் ஈடுபடாதவர்கள் சோம்பேறிகளாக, செயலற்றவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 122 நாடுகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இருந்து பிரிட்டன் 8 ஆவது இடத்தில் காணப்படுகின்றது. அங்கு சோம்பேறிகளின் சதவீதம் 63.3 ஆகும். இதேவேளை சோம்பேறிகள் குறைந்த நாடாக கிரீஸ் காணப்பட…

  5. . ஆணுறை அணியாத காரணத்தால்தான் விக்கிலீக்ஸ் அதிபர் பாலியல் வல்லுறவு வழக்கில் கைதாம்! லண்டன்: விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸ்ஸஞ்சே பாலியல் வல்லுறவு வழக்கில் கைதாகியுள்ளது குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இரு பெண்களுடன் மனமொத்த உறவில் ஈடுபட்டிருந்தபோதிலும், அவர் ஆணுறை அணியாமல் உறவு கொண்டதால்தான் பாலியல் வல்லுறவு வழக்கை சுமத்தி அவரை உள்ளே தள்ளியுள்ளனர். அஸ்ஸஞ்சே மீது ஸ்வீடன் நாட்டில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இரண்டு பாலியல் பலாத்காரம், ஒரு சட்டவிரோத உறவு, ஒரு பாலியல் வல்லுறவு வழக்கு அவை. இந்த வழக்குகளில் அஸ்ஸஞ்சேவுக்கு கைது வாரண்ட்டும் ஸ்வீடனில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து லண்டன் சென்ற அஸ்ஸஞ்சே போலீ…

    • 7 replies
    • 2.3k views
  6. மலேசியாவில் காலனால் கவரப்பட்ட சாரங்கன் வீரகேசரி நாளேடு 12/5/2008 11:02:09 PM - எந்தவொரு பெற்றோருமே தமது பிள்ளைச் செல்வங்களை எப்பாடுபட்டாவது நன்கு வளர்த்து கல்விச் செல்வத்தை வழங்கி சமுதாயத்தில் நற்பிரஜைகளாக ஆளாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருப்பர். சில பிள்ளைகள் தமது பெற்றோரது விருப்பை நிறைவேற்றுவதுமுண்டு. மாறாக சிலர் புறம்போக்கான முறையில் செயற்படுவதுமுண்டு. இவ்வாறு சமூகத்தில் சிறந்த கல்விப் பிரஜைகளாக திகழ வேண்டும் என்ற இலட்சியத்தில் எம்மில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வியை பல்கலைக்கழக மட்டத்தில் பயின்று சிறப்புற்ற உதாரணங்கள் பலவுண்டு. அந்த வகையில் கல்வித் துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சிய வெறியில் தனது பெற்றோரின் பூரண ஒத்துழைப்புடன் கடந்த 2…

  7. ஜேர்மனியில் சாலைகளை சுத்தம் செய்பவர்களுக்கு பீர் வழங்க அறக்கட்டளை நிறுவனம் ஒன்று தீர்மானம் செய்துள்ளது. ஜேர்மனியில் எசன்(Essen) என்ற அறக்கட்டளை நிறுவனத்தால் (Pick up Initiative) என்ற பெயருடன் சாலைகளை சுத்தம் செய்யும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு பீர் மட்டுமின்றி, உணவுடன் மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட உள்ளது. இந்த பணியில் முன்று முதல் ஆறு மணி நேரம் வேலை செய்வதற்கு வேலை இல்லாதவர்களும், ஆதரவற்றவர்களும் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது. மேலும் இதில் ஈடுபடுபவர்களுக்கு பீர் மட்டுமின்றி, கை செலவிற்காக ஒரு மணி நேரத்திற்கு 1.25 யூரோ கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அறக்கட்டளை நிறுவனம் கூறுகையில், இவ்வாறு பீர் கொடுத்தால் இ…

  8. கைகள் இழந்த மாணவன் வாயினால் பொதுத்தேர்வு எழுதி கலக்கினார் :கிராபிக் டிசைனராக விருப்பம் சென்னை :இரு கைகள் மற்றும் ஒரு காலையும் இழந்த மாணவர் ஜனார்த்தனன், தன்னம்பிக்கையோடு படித்து பேனாவை வாயில் பிடித்து 10ம் வகுப்பு மெட்ரிக் தேர்வை, நேற்று இயல்பாக எழுதினார். எதிர்காலத்தில் தலைச்சிறந்த கிராபிக் டிசைனராக வருவேன் என்றும் கூறினார். சென்னை திருவொற்றியூர் ரெடிமர் மெட்ரிக் பள்ளியின் 10ம் வகுப்பு மாணவன் ஜனார்த்தனன். இவர் எட்டு வயதில் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். இரும்புக் கம்பியை வைத்து சுழற்றி விளையாடியபோது உயர்மட்ட மின்கேபிளில் பட்டதால் விபத்து ஏற்பட்டது. இதில் ஜனார்த்தனின் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டன, ஒரு காலையும் இழந்தார்.பின்னர், தன்னம்பிக்கை…

    • 7 replies
    • 1.8k views
  9. [size=3][size=4][/size][/size] [size=3][size=4]இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தியா வந்திருந்தபோது புத்தரின் சமாதியில் உள்ள அவரது சிதைந்த எலும்புகளை எங்கள் நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இந்தியாவில் தோன்றிய புத்த மதம் சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் தேசிய மதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், மியான்மர் நாடுகளிலும் புத்தமதம் பரவியுள்ளது.[/size][/size] [size=3][size=4]பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் ஒரு பகுதியில் ஷாக்கிப் மன்னர் பரம்பரை ஆட்சி செய்தது. அந்த பரம்பரையின் வழித்தோன்றல் கவுதம புத்தர். இவரது இயற…

  10. " இயேசு கிறிஸ்துவுக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் " - பரபரப்பைக் கிளப்புகிறார் பாஸ்டர் புதன், 03 நவம்பர் 2010 01:04 சமீபத்தில் தான் கலந்து கொண்ட பிரசங்கமொன்றில் இயேசு கிறிஸ்துவுக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் இருந்தது எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பாஸ்டர். கேப் டவுனில் நடந்த பிரச்சாரத்தில் அச்சம் ஏதுமின்றி சோலா ஸ்கோசனா என்ற பாஸ்டர் இவ்வாறு பகிரங்கமாக தெரிவித்திருப்பது நாடு முழுவதும் காட்டுத் தீ போல் பரவ ஆரம்பித்துள்ளது. பலரும் தெய்வமாக வழிபடும் இயேசு கிறிஸ்துவை பாஸ்டர் எய்ட்ஸ் உள்ளவர் எனக் கூறியுள்ளதால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயமும் சம்பந்தப்பட்ட பாஸ்டரின் மீது மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனர். கூடிய விரைவில் பாஸ்டர் மீது ஒழுங்கு…

  11. எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் பதவியேற்பு! கொழும்பு மகசின் சிறைச்சாலையில் பதற்றம்! [ வியாழக்கிழமை, 03 செப்ரெம்பர் 2015, 06:09.35 PM GMT ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இன்று எதிர்கட்சி தலைவராக தெரிவாகியதன் பின்னர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் செல் நம்பர் J பிரிவில் அடைக்கப்பட்ட கணிசமான தமிழ் அரசியல் கைதிகள் சித்திரவதைக்குட்பட்டுள்ளனர். அப் பகுதிக்கு இன்று மாலை 4:00 மணியளவில் குறித்த J பிரிவுக்கு சென்ற சிறைக் காவலர்கள் எதிர்க் கட்சி தலைவராக உங்கள் தலைவரா தெரிவாகியுள்ளார் எனக் கேட்டு தாக்கியதோடு, இது எங்களுடைய நாடு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது எனக் கேள்விகளைக் கேட்டவாறே அரசியல் கைதிகளை நிர்வாணப்படுத்தியதுடன் அடைமழைக்குள் அவர்களை தள்…

  12. கைவிசேடம் கொடுக்க மறுத்த வெளிநாட்டவர் மீது தாக்குதல் April 16, 2022 தனக்கு கைவிசேடம் தர மறுத்தவரை நபர் ஒருவர் இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார். மட்டுவில் பகுதியில் புத்தாண்டான கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் புத்தாண்டை முன்னிட்டு உறவினர் சிலருக்கு கைவிசேடம் வழங்கியுள்ளார். இதை கேள்வியுற்று மதுபோதையில் சென்றவர் தனக்கும் கைவிசேடம் தருமாறு தருமாறு கோரினார். இதன்போது கைவிசேடம் கொடுத்தவர் நாளை காலை வருமாறு கோரினார். இதன்போது மதுபோதையில் இருந்தவர் அவர் மீது இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். தாக்குதலால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனு…

  13. [size=5]2 மகள்கள் இருக்கிறார்கள் கௌரவமாக நடந்துகொள் என கூறிய கணவன் கொலை: மனைவி கைது [/size] [size=4]நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சந்திரா காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). டைல்ஸ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அஜந்தா (35). மல்டி லெவல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் குன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். மகள்களின் படிப்புக்காகவே ரமேஷ் குன்னூருக்கு குடிபெயர்ந்தார். முன்னதாக மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்தார்.[/size] [size=4]அப்போது அஜந்தாவுக்கும் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை அருகேயுள்ள ஆலாங்கொம்பு பகுதியை சேர்ந்த முத்துசாமி (34) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. முத்துசாமியும்…

  14. ஓடும் பஸ்சில் பாட்டு பாடி தொல்லை கொடுக்கும் நபர்களை கட்டுப்படுத்த கனடாவில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு பஸ்சில் பயணம் செய்பவர்கள் பாட்டு பாடினால் 5 ஆயிரம் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று கனடாவில் உள்ள வின்னிபெக் நகர நிர்வாகம் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கனடா நகரங்களில் சிறிய இசைக்குழுவினர் அடிக்கடி பொது இடங்களில் பாடியபடி பயணம் செய்வது வழக்கம். தற்போது இந்த உத்தரவின் மூலம் அதற்கு முட்டு கட்டை விழுந்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நகர வாசி ஒருவர் கூறுகையில்: நான் தினமும் வேலைக்கு பஸ்சில்தான் பயணம் செய்வேன். அப்போது டிரைவர் விசிலடித்தபடியோ, பாட்டு பாடியபடியோ உற்சாகமாக பேருந்தை ஓட்டி செல்வார். இதனை ப…

  15. 33 அடி நீளமான அனகொண்டா பிரேஸிலில் பிடிக்கப்பட்டது; உடலின் அகலம் 3 அடி, எடை 63 தொன் பாரிய அன­கொண்டா பாம்­பொன்று பிரே­ஸிலில் பிடிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் நீளம் 33 அடி­க­ளாகும். பிரே­ஸிலின் வட பிர­ாந்தி­யத்­திலுள்ள பாரா மாநி­லத்தில் அணைக்­கட்டு நிர்­மாண நட­வ­டிக்­கை­யின்­போது இந்த அன­கொண்டா கண்­டு பி­டிக்­கப்­பட்­டது. அணைக்­கட்டை நிர்­மா­ணிப்­ப­தற்­காக குகை­யொன்றை நிர்­மாண ஊழி­யர்கள் வெடி­வைத்து தகர்த்த போது இப்­ பாம்பு வெளி­வந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இந்த அன­கொண்டா 63 தொன் எடையைக் கொண்­டி­ருந்­தது. அதன் உடல் விட்டம் சுமார் 3 அடி­க­ளாகும். உலகில் இது­வரை பிடிக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய பாம்­பு­களில் …

    • 7 replies
    • 498 views
  16. Started by nunavilan,

    விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பூக்கடை வைத்து நடத்தி வரும் துரைப்பாண்டி, அங்குள்ளவர்களுக்கு ஆச்சர்ய மனிதர். தினம் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டு செல்லும் போது மறக்காமல் கடைக்கு வெளியே 4 மாலைகளை கட்டி தொங்க விட்டுச் செல்கிறார். மறு நாள் காலை கடையை திறக்க வரும்போது கட்டி தொங்கப்படவிட்ட மாலையில் சில காணாமல் போயிருந்ததை கண் டால் நிம்மதி பெருமூச்சு விட்டு பிறகு வழக்கம் போல் பூ வியாபாரத்தை ஆரம்பித்து விடுகிறார். இது கடந்த 15 வருடங்களாக நடந்து வரும் சங்கதி. இரவு நேரங்களில் அப்பகுதிகளில் ஏதேனும் மரணங்கள் நிகழ்ந்தால், அந்நேரத்தில் இறந்தவர் உடலுக்கு மரியாதை செலுத்த மாலைகள் கிடைப்பது பெரும் சிரமம். மாலைகளுக்காக இறந்தவரின் உறவினர்கள் நடு இரவில் அலைந்து திரிவதை தவிர…

  17. ஆஸ்திரியாவில் பெற்ற பெண்ணையே சிதைத்த கொடூரன் கைது ஆஸ்திரியாவில் தனது பெண்ணையே சுமார் இருபது ஆண்டுகளுக்கு நிலவறையில் பூட்டி வைத்து பாலியல் சித்ரவதை செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எழுபத்தி மூன்று வயதான அந்நபர் தனது பெண் மூலமாக மேலும் ஆறு பெண்களை பெற்றுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாற்பது வயதுகளில் இருக்கும் அப்பெண், தனது தந்தை கடந்த 1984 ம் ஆண்டு தன்னை நிலவறைக்குள் வரவழைத்து தனக்கு போதை வஸ்துகளை கொடுத்து தன்னை அப்போது இருந்து அடைத்து வைத்து இருப்பதாக கூறியுள்ளார். இந்த பெண்ணோடு சேர்த்து ஒரு சில குழந்தைகளும் நிலவறையிலேயே அடைத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.…

  18. பேய் விரட்டி 10 பேர் தனிமை-அம்பாறையில் சம்பவம் By Shana தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, வீடொன்றில் `பேய் விரட்டும்` சடங்குகளை செய்த சாமியார் உள்ளிட்ட 10 பேர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை - மாயாதுன்ன பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டதிலேயே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களுக்கு பொலிஸார் பிணை வழங்கியுள்ளதோடு, சாமியார் உள்ளிட்ட 10 பேரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.14 நாள்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர், இவர்கள் அனைவருக்கு எதிராகவும் அம்பாறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்ப…

  19. உட­லு­றவு கொள்­ளா­மை­யினா­லேயே மயில் ­தே­சியப் பறவை : நீதிபதி புதிய விளக்கம் இந்­தி­யாவின் தேசியப் பற­வை­யாக மயில் இருப்­ப­தற்கு காரணம் அது பிரம்­மச்­ச­ரி­யத்தைக் கடைப்­பி­டிக்­கி­றது. ஆண் மயில் பெண் மயி­லுடன் உட­லு­றவு கொள்­வ­தில்லை.அத­னா­லேயே மயில் இந்­தி­யாவின் தேசியப் பற­வை­யாக அறி­விக்­கப்­பட்­டது என ஒரு விநோத விளக்­கத்தை ராஜஸ்தான் உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி மகேஷ் சந்­திர ஷர்மா அளித்­துள்­ளமை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆசி­யாவின் மிகச்­சி­றந்த பசு பரா­ம­ரி ப்பு மையமான 'ஹிங்­கோ­னியா' ராஜஸ்­தானில் உள்­ளது. கடந்த ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து மே மாதம் வரை 8122 பசுக்கள் உடல்­ந­லக்­கு­றைவு மற்றும் காயங்­களால் இந்த மையத்தில் உயி­ரி­ழ…

  20. பிரான்ஸ் நாட்டில், 114 வயதான மூதாட்டி மரணமடைந்தார். பிரான்ஸ் நாட்டின் நான்டெஸ் மாகாணத்தின் பான்ட்சாட்டியு என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் மேரி தெரஸ் பார்டெட். 114 வயதான இவர் கடந்த 2ம்தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். உலகின் ஆறாவது மிக வயதான பெண்ணான இவர் நேற்று காலமானார். உலகில், 110 வயதுக்கு அதிகமாக வாழ்ந்தவர்கள் பற்றிய, 70 பேரின் தகவல்கள் மட்டுமே, ஜி.ஆர்.ஜி., எனப்படும் முதியோர் ஆய்வு மைய பதிவேட்டில் குறிக்கப்பட்டுள்ளன. இதில் மேரி தெரசின் பெயரும் இடம் பெற்றுள்ளது. http://www.seithy.co...&language=tamil

  21. சென்னை :""நடிகை ரஞ்சிதா நல்ல பக்தை; அவர் பிடதி ஆசிரமத்திற்கு வந்தால் அனுமதிப்போம்,'' என்று அகில இந்திய தியான முகாம்களின் மகா ஆச்சாரியார் நித்யஞானானந்தா கூறினார். தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடத்தப்பட்ட நிருபர்கள் சந்திப்பில் நித்யஞானானந்தா கூறியதாவது: கடந்த நான்கு மாதங்களாக பலரால் பல வகைகளில் எங்கள் நித்யானந்த தியான பீடமும், நித்யானந்தாவும் உண்மைக்குப் புறம்பான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர். நேற்று தனியார் "டிவி'யில் பக்தர்கள் புண்படும் படியாக எங்கள் குருநாதரை போலிச் சாமியார் என்று வர்ணித்து செய்தி வெளியிடப்பட்டது. இது எங்களது ஆன்மிக உணர்வை நேரடியாக புண்படுத்தியது. பெங்களூரில் நடிகை மாளவிகா அவரது கணவர் அவிநாஷுடன் கலந்து கொண்ட கு…

  22. யாழில் தங்க நகை அணியாத பெண் மீது தாக்குதல்! தங்க நகை அணியாததால் பெண்ணொருவரை கொள்ளையர்கள் தாக்கிவிட்டுச் செற்ற சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியிலேயே நேற்று(19) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று ”தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த பெண்ணை கொள்ளையர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் வீதியில் யாரும் அற்றவேளை குறித்த பெண்ணை வழிமறித்த கொள்ளையர்கள் அவர் தங்க நகைகள் எதுவும் அணிந்திருக்காததால் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் ப…

  23. நல்லூரில்... போலி நாணயத்தாள்களுடன், ஒருவர் கைது! வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் உள்ள கடைகளில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களினை வழங்கி பொருள்கள் வாங்கிய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடம் 3 கடைகளில் வழங்கிய 3 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களும் கைப்பற்றப் பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா இடம்பெற்று வருகிறது. ஆலய திருவிழாவின் முதல் மூன்று நாள்களில் மூன்று வெவ்வேறு கடைகளுக்குச் சென்ற ஒருவர், போலி ஆயிரம் ரூபாய் நாணயத் தாள்களை வழங்கி கச்சான், பழங்களை 200 ரூபாய்க்குள் வாங்கி மிகுதி பணத்தை பெற்றுச் சென்றுள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.