Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. திருடப் போனால் திருட்டோடு நிற்க வேண்டும், அங்கு பேஸ்புக் எல்லாம் பயன்படுத்தினால், சிக்கலில் மாட்டவேண்டியதுதான் ! அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் திருடன் ஒருவன் , திருடிய வீட்டில், கணினியை உபயோகித்து, தனது பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்திவிட்டு, பின்னர், ஃபேஸ்புக் கணக்கை ‘லாக் அவுட்’ செய்ய மறந்ததை அடுத்து காவல் துறையிடம் சிக்கியுள்ளான். திருடிய வீட்டின் உரிமையாளரின் கணினியில் தனது ஃபேஸ்புக் கணக்கை திறந்து பார்த்த அந்த நபர் பின் கணக்கை மூட செய்ய மறந்துள்ளான். அந்த திருடிய நபரான நிகோலஸ் விக் என்பவரின் ஃபேஸ்புக் கணக்கில் இருக்கும் ‘ப்ரோஃபைல் பிக்சர்’ அதாவது அவரது புகைப்படத்தை வைத்து அந்த வீட்டின் உரிமையாளர் வீதியில் அந்த நபரை அடையாளம் கண்டுள்ளார். அந்…

    • 8 replies
    • 1.1k views
  2. ஈரோட்டில் இருந்து, சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை, அங்கிருந்த ஆண் யானையிடம் மடியை தேடியது, வனத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் சென்னம்பட்டி காப்புக்காட்டில் இருந்து வழி தவறிய குட்டியானை, ஜரத்தல் என்ற ஏரிக்கரை அருகே பரிதாபமாக நின்றது. ஒன்றரை மாதமேயான குட்டி யானையை, காட்டுக்குள் அனுப்ப வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சி யாவும் தோல்வியில் முடிந்தது. இதனால், மண்டல வன பாதுகாவலர் அருண் உத்தரவின் பேரில், வனத்துறை அலுவலகத்துக்கு கொண்ட வரப்பட்ட குட்டியானைக்கு, ராஜ உபச்சாரம் நடந்தது. வனத்துறை அலுவலர்களிடம் குழந்தை போல பழகிய குட்டியானை, 29ம் தேதி இரவு, 8.30க்கு நீண்ட நேர பாச போராட்டத்துக்கு பின், சென்னை வண்டலூர் உய…

  3. தாய்லாந்தில் இளம் பாப் பாடகி ஒருவருக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட நிலையில், அதனை சரிசெய்ய பார்லரில் மசாஜ் செய்ய சென்றுள்ளார். ஆனால் இந்த மசாஜ் காரணமாகவே சில தினங்களில் அவர் எதிர்பாரா விதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்… மசாஜ் மற்றும் ஸ்கின் கேர் போன்றவற்றிக்கு பெயர் பெற்ற இடம், தாய்லாந்து. பொதுவாகவே மசாஜை சரியான முறையில் செய்யவில்லை என்றால், பல்வேறு பிரச்னைகள் அதனால் ஏற்படும். மூளை காயங்கள், பக்கவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை ‘தவறான மசாஜ்’ உண்டாக்க கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகையில்தான், தாய்லாந்தை சேர்ந்த 20 வயது பாப் பாடகி சாயதா ப்ரோஹோம் என்கிற பிங் சாயதா. இவருக்கு கழுத்து, தோள்பட்டை வழ…

  4. நம்பினால் நம்புங்கள்.. ஜாதகம் பார்த்து வேலைக்கு ஆள் எடுக்கும் ரஷ்யா! மாஸ்கோ: இதை நம்புவது சற்று கடினமாக இருக்கலாம். இந்தக் காலத்தில் போய் இப்படியா என்று கூட சிரிக்கலாம். ஆனால் உண்மை.. ரஷ்யாவில் பெரும்பாலான நிறுவனங்களில் வேலை கேட்டு வருவோரின் ஜாதகத்தைப் பார்த்துத்தான் ஆளே எடுக்கிறார்களாம். வேலை கேட்டு வருவோருக்கும், ஏற்கனவே அங்கு வேலை பார்ப்போருக்கும் இடையே ஒத்துப் போகுமா, ராசிப் பொருத்தம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து பிறகுதான் வேலைக்கு ஆள் எடுக்கிறார்களாம். அதை விட முக்கியமாக சில வகை ராசிக்காரர்களை வேலைக்கே எடுப்பதில்லையாம். ஆதாரங்களுடன்... பொருத்தம் பார்த்து, ஜாதகம் பார்த்து வேலைக்கு ஆள் எடுக்கும் பழக்கம் ரஷ்யாவில் பரவலாக உள்ளதாம். இதை கிறிஸ்டோபர் ப…

  5. 64 வருடங்களுக்கு முன்பு அதாவது 1956 இல் எடுக்கப்பட்ட ஒரு ரெக்கோர்டிங் இது. கடைசி 40 செக்கன்களை நன்றாக கவனியுங்கள்

  6. கம்பன் விழா உரையரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் என மூன்று நிகழ்வுகளாக நடைபெற்ற கம்பன் விழாவில் கம்பன் காப்பியத்தில் தனிப் புலமை பெற்ற இலங்கையின் கம்பவாரிதி ஜெயராஜ் ‘கம்பன் கண்ட மானுடம்’ எனும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். தலைமைப் பண்புகள் சிறு வயதிலிருந்தே வளர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் இராமனின் சிறுவயது நடவடிக்கைகளை கம்பன் விவரிப்பதை எடுத்துக் காட்டினார்.தமிழகத்தின் பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் ‘மும்மடங்கு பொலிந்தன’ எனும் தலைப்பில் இராவணன் பற்றி உரையாற்றினார். இராவணன் மிகச் சிறந்த தலைவன் என்றும் அவன் அடுத்தவன் மனைவி மீது ஆசைப்பட்டதால் வீழ்ந்தான் என்றும் பிறன்மனை நோக்காப் பேராண்மை வேண்டும் என்றும் அவர் பல்வேறு பாடல்களை மேற்கோள் காட்டிக் கூறினார்.…

  7. இந்த பால் வடியும் முகத்தினை பாருங்கள். வயது 29. கீழே உள்ள நபரின் முகத்தினை பாருங்கள் வயது 67. இருவரும் ஒருவரே என்றால் நம்புவீர்களா? அதற்கும் மேலே, இவரால் ஒரு சட்டமும் பாராளுமன்றத்தால் மாற்றி எழுதப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? முதல் படத்தில் இருக்கும் தோற்றம் வயது 29..... மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த இந்த நபர் சீரியல் பாலியல் பலாத்காரி (serial rapiest) என்ற நிலையில், பொறி வைத்து பிடிக்கப்பட்டார். தனது சட்டவாளர்கள் சரியான கேள்விகள் கேட்கவில்லை என்று, தானே, பாதிக்க பட்ட பெண்களை குறுக்கு விசாரணை செய்யப்போகிறேன் என்று, இவர் கேட்ட, எந்த பெண்ணுமே விடையளிக்க முடியாத, ஆபாசமான கேள்விகளால் நீதிமன்றமே ஆடிப்போனது. இவர் மீதான குற்றச்சாட…

    • 0 replies
    • 1.1k views
  8. டாக்டர், இந்த கட்டுவிரியன் என்னைக் கடிச்சுட்டான்... மதுரை: தன்னைக் கடித்த கட்டுவிரியன் பாம்பை மருத்துவமனைக்கு அழைத்து வந்து, மருத்துவர்களை அதிர்ச்சியில் மயக்கமடைய வைத்துள்ளார் மதுரைப் பெண் ஒருவர். மதுரை அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் 45 வயது பாண்டியம்மாள்-க்கு கணவர் இல்லை. வயல் வேலைகள் செய்து வருமானம் ஈட்டி வருகிறார். வழக்கம் போல், நேற்றுக் காலை வயலுக்குச் சென்ற பாண்டியம்மாளை, சுமார் 6 அடி நீள கட்டுவீரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. பாம்பு கடித்த வலியை பொறுத்துக் கொண்டு,அந்தப் பாம்பை எடுத்து சுழற்றி தரையில் அடித்து, அரைகுறை உயிராக்கி உள்ளார் அவர். பின் உடனடியாக அந்தப் பாம்பையும் தூக்கிக் கொண்டு தனக்கு வைத்தியம் பார்ப்பதற்காக மதுரை அரசு பொ…

  9. பதிவு செய்த நாள் : மார்ச் 04,2013,23:08 IST லண்டன்: பிரிட்டனை சேர்ந்த ஒரு பெண், கணவர், காதலர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன், ஒரே வீட்டில் வசித்து வருகிறார். லண்டனில், தனியார் நிறுவனம் ஒன்றில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுபவர், மரியா பட்ஸ்கி, 33. இவருக்கும், பால், 37, என்பவருக்கும் முறைப்படி திருமணமாகி, 9, 7 வயதுகளில் குழந்தைகள் உள்ளன.தற்செயலாக மரியாவை சந்திக்க வந்த பீட்டர், 33, என்பவருக்கும், மரியாவுக்கும், காதல் ஏற்பட்டுவிட்டது. கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு, காதலருடன் ஓராண்டு வாழ்க்கை நடத்திய மரியா, இப்போது, ஒரே வீட்டில் கணவர், காதலர், குழந்தைகளுடன் வாழ்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: கணவர் பாலுக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருந்து வந்த ந…

  10. வேண்டாம் கைகள் . . பெய்ஜிங், ஏப். 4: லாரி ஓட்டுவதற்கு மனத்தில் தைரியம் இருந்தால் போதும், கைகள் தேவையில்லை என்கிறாராம் சீனாவை சேர்ந்த டிரைவர் ஒருவர். அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சீன நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்ததாம். . அதை வழிமறித்த சீன போலீசார் டிரைவரைக் கண்டு திடுக்கிட்டு விட்டார்களாம். இரண்டு கைகளும் இல்லாத ஊனமுற்றவர் ஒருவர் ஸ்டம்புகளின் உதவியுடன் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தாராம். லாரி ஓட்டுவதற்கான உரிமம் கூட அவரிடம் இல்லையாம். சிறுவயதில் விபத்து ஒன்றில் தன் இரு கைகளையும் இழந்துவிட்ட அவர் லாரி ஓட்ட உரிமம் பெற எவ்வளவோ முயன்றும் கிடைக்கவில்லையாம். தன் மீது கருணை காட்டுமாறு ஜங் என்ற அந்த ஓட்டுனர் விடுத்த கோரிக்கையை ஏற்று அவ…

    • 0 replies
    • 1.1k views
  11. 18 வயது இளைஞன் ஒருவன் தனது காதலியின் மார்பகத்தை அறுவைச் சிகிச்சை மூலம் செயற்கையான முறையில் பெரிதாக்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்ளும் முகமாக, பெற்ற தாயை படுகொலை செய்ய கைக்கூலிகளை நியமித்த சம்பவம் அமெரிக்காவிலுள்ள பவுன்டெயின் எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது. நிகிதா லீ யெவ்ஸ் என்ற மேற்படி இளைஞனின் தாயாரான ஹயுன் வெய்ஸ், கடந்த வியாழக்கிழமை இரவு அவரது வீட்டில் வைத்து பந்து விளையாட்டுக்காக பயன்படுத்தப்படும் மட்டையால் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளானார். எனினும் அவர் காயத்துக்குள்ளான நிலையில் அந்நபர்களிடம் தப்பித்து, வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார்.அதனையடுத்து அவர் அயலவர்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன்னுடைய காதலியான சோபியா நிகோல…

  12. வீரகேசரி நாளேடு - தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் அனகொண்டா 23 குட்டிகளை கடந்த வெள்ளிக்கிழமை ஈன்றெடுத்துள்ளது. இதில் மூன்று குட்டிகள் இறந்துள்ளதாக மிருகக்காட்சி சாலை நிருவாகம் தெரிவித்தது. அமேசன் நதியோரங்களில் வாழ்கின்ற மஞ்சள் நிறத்திலான வகையைச் சேர்ந்த அனகொண்டாவே இவ்வாறு 23 குட்டிகளை ஈன்றுள்ளதாகவும் இது சுமார் 25 அடி நீளத்தை கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு மிருகக்காட்சி சாலைகளுடன் மிருகங்களை பரிமாறிக்கொண்டபோதே தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வெளிநாடொன்றிலிருந்து இந்த வகையை சேர்ந்த அனகொண்டா கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த அனகொண்டா ஏனைய அனகொண்டா வகையை போல ஆபத்தானது அல்ல என்றும் மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெ…

    • 1 reply
    • 1.1k views
  13. வல்வை பட்டத்திருவிழாவிற்கு நாமல் ஆதரவு December 28, 2021 யாழ். வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” நடைபெறவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் (Namal Rajapaksa) இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” இனை கோலாகலமாக நடத்துவதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்…

  14. பிபிசியின் Top Gear கிரிஸ்துமஸ் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் பிரபல அறிவிப்பாளர் Jeremy Clarkson இந்தியர்களை புண்படுத்தும் படி கேலி செய்துள்ள விவகாரம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்திய ஏழ்மை பிரதேசங்களில் காணப்படும் சுகாதாரமற்ற நிலை, சுகாதார குறைபாடு, ரயில்களில் காணப்படும் மலசல கூட வசதிகள், ஆடை வகைகள், உணவு முறைகள் என பலவற்றை கேலி செய்யும் வகையில் ஜெரெமி கிளார்க்சன் அறிவிப்பு செய்துள்ளார். இந்தியாவுக்கு செல்ல வேண்டுமாயின் ஜாகுவர் காரிலேயே இணைக்கப்பட்ட டாய்லெட் வசதியுடன் செல்வது நல்லது என உதாரணமும் காண்பித்துள்ளார். கடந்த புதன் கிழமை மாலை ஒளிபரப்பட்ட இந்த Top Gear நிகழ்ச்சி தொடர்பில் 23 முறைப்பாடுகள் பிபிசிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இது பிபிசியின் பேச்சாளர் தெரிவிக…

  15. புதுடெல்லி, இந்தியாவின் 66வது குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிற்கு வழங்கப்பட்ட இரவு உணவு குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ராஷ்டிரபதி பவனில் ஞாயிற்று கிழமை இரவு நடந்த ஜனாதிபதி விருந்தில் 100 பேர் விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 250க்கும் அதிகமானோர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். இந்திய உணவுகள் இதில் இந்தியாவின் சுவை மிக்க கலாட்டி கெபாப், சோபியான்ஸ் மீன் டிக்கா, சிக்கன் மலாய் டிக்கா, வறுத்தெடுத்த பிராக்கலி, பனீர் மலாய் டிக்கா, வெஜ் கபாப், மஸ்டர்டு பிஷ் கறி, மட்டன் ரோகன் ஜோஷ், சிக்கன் கொர்மா, டால் ரெய்சினா, வெஜ் ஹக்கா, கதி பகோரா, சோல், பப்பட், புலாவ், தந்தூரி ரொட்டி மற்றும் நான் ஆகியவை வழங…

  16. [size=4] [/size] [size=4]திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.[/size] [size=4]கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எந்த அக்கறையையும் இதுவரை காட்டாதவர்கள், அக்கறையாக இருப்பதைப் போல வேடம் போடுபவர்கள் எல்லாம் உங்களை குறை கூறுவதிலேயே காலத்தைக் கடத்துகிறார்களே? [/size] [size=4]பதில்: “காய்த்த மரம்தான் கல்லடி படும்” என்பது பழமொழி. இதே போன்றதொரு கேள்விக்கு நேற்றைக்கே பதில் அளித்திருக்கிறேன். இலங்கையில் போர் நடைபெற்ற போது நான் எதுவுமே செய்யவில்லையா?[/size] [size=4]இதோ பட்டியல்![/size] [size=4]14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இரண்டு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்…

    • 9 replies
    • 1.1k views
  17. இந்தியா, தமிழ்நாட்டில் கிராம நன்மைக்காக கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் சிறுமிக்கும் தவளைக்கும் வினோத திருமணம் நடந்தது. பழங்காலத்தில், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகில் உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் காலரா நோய் பரவியபோது தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடத்தியதால் காலரா நோய் குணமடைந்தது என்கிற நம்பிக்கையின் படி, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் தவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமணம் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சி இந்த வருடமும் நேற்று முன்தினம் (16//01/09) மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடந்தது. பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் வசிக்கும் சகோதர உறவினர்கள் கொண்ட குடும்பத்தினர் பெண் வீட்டாராகவும், மாமன்…

    • 5 replies
    • 1.1k views
  18. தமிழ்நாட்டிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள இலங் கைத் தீவில் வாழும் ஈழத் தமிழர்கள் அந்நாட்டு மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். இன்று அங்கு பெரும்பான்மையினராக எண்ணிக்கையில் இருக்கும் சிங்களவர்களோ அங்கு வந்து குடியேறியவர்கள். தமிழ்நாட்டோடு இணைந்திருந்த அந்தப் பூமி இயற்கைச் சீற்றத்தால் தமிழ்நாட்டிலிருந்து துண்டிக்கப்பட்டது என்பது ஆய்வாளர்களின் முடிவு. இப்பொழுது அந்தத் தீவில், அம் மண்ணுக்குரிய மக்களான தமிழர்கள் வாழ்வுரிமைக்காகப் போராடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏடுகளில் படித்த அரச பயங்கரவாதம் என்பது அங்கு நடைமுறையில் கொடிகட்டிப் பறந்துகொண்டு இருக்கிறது. அய்.நா., போன்ற அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளில் பல காலகட்டங்களில் இலங்கை சிங்கள இனவாத அரசைக் கடுமையாகக் கண்…

    • 0 replies
    • 1.1k views
  19. AI உடன் காதலில் விழுந்த சிறுவன் அதனுடன் வாழ உயிர்மாய்ப்பு ! Shana ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்றைய நவீன காலகட்டத்தில் பல நவீன தொழிநுட்ப கண்டுபிடிப்புக்களால் ஆதாயம் உள்ளபோதும், மனித உறவுகளை தூரத்தில் கொண்டு செல்வதுடன், இளையோரின் பல விபரீத முடிவுகளுக்கும் காரணமாகி விடுகின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இணையத்தளங்களுக்கு அடிமையாகி உள்ளனர். சிலவேளைகளில் இந்த மோகத்தால் அவர்கள் விபரீத முடிவுகளுக்கும் சென்று விடுகின்றனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல வரலாற்று புதின தொலைக…

      • Like
    • 1 reply
    • 1.1k views
  20. அண்ட வெளியில் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் நட்சத்திரம்! புதிதாகத் தோன்றிய ஒரு நட்சத்திரத்திலிருந்து (Baby star) மாபெரும் அளவில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. உலகின் மாபெரும் ஆறுகளில் ஒன்றான அமேசான் ஆற்றை இந்த நட்சத்திலிருந்து பீய்ச்சி அடிக்கும் நீர் ஒரு வினாடியில் நிறைத்துவிடும், அந்த அளவுக்கு அதில் நீர் உற்பத்தியாகிக் கொண்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள். பூமியிலிருந்து 750 ஒளி வருடத்துக்கு அப்பால் உள்ளது இந்த நட்சத்திரம். இதன் வயது 100,000 ஆண்டுகள் தான். அதாவது சூரியனை ஒத்துள்ள இந்த நட்சத்திரம் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. இப்போது தான் உருவாகிக் கொண்டுள்ளது. பெர்சூயஸ் நட்சத்தி…

  21. சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் யங் என்பவர் வீதியோரத்தில் நின்று தனது நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். இதன்போது அவருடைய நண்பருடன் அவர் வளர்க்கும் மஸ்டிப் என்ற நாயும் இருந்தது. நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென யங்கின் ஆணுறுப்பை மஸ்டிப் கவ்வி பிடித்து கடித்து துண்டாக்கிவிட்டது. இதனால் யங் வலியால் துடித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் யங்கை வைத்தியசாலையில் சேர்த்தனர். இரத்த வெள்ளத்தில் சுயநினைவு இல்லாமல் இருந்த அவருக்கு சீனாவின் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர்;கள் சுமார் ஆறுமணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் துண்டான ஆணுறுப்பு மீண்டும் ஒட்டவைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யங்வுடன…

    • 10 replies
    • 1.1k views
  22. பார்பீ எதிர்ப்பு 'லாமிலி' பொம்மைகள் அறிமுகம் பார்பீ பொம்மைகளுக்கு எதிரான பொம்மைகள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளன. 1959 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட் பார்பீ பொம்மைகள் உலகின் பல நாடுகளிலும் பிரசித்தமாகவுள்ளது. யுக்ரைனைச் சேர்ந்த வலேரியா லக்கினோவா எனும் யுவதி பார்பீ பொம்மையை போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளதால் உயிருள்ள் பார்பீ என அழைக்கப்படுகிறார். ஆனால், நீண்டகால்களும் மெல்லிய இடையும், பருத்த மார்பகங்களையும் கொண்ட பார்பீ பொம்மைகளுக்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பார்பி பொம்மைகளின் அளவு விகிதாசாரங்கள் சாதாரண யுவதிகளின் தோற்றத்துக்கு முரணானது என அவர்கள் விமர்சிக்கின்றனர். பார்பீ பொம்மைகளை பார்த்து அதேபோன்ற தோற்றத்தை பெறுவதற்கு சிறுமிகள் முற்பட…

  23. உலகின் மகிழ்ச்சி மிகுந்த மக்களில் இந்தியர்கள் முன்னிலை! - பானுமதி அருணாசலம் உலகில் மகிழ்ச்சியாக வாழும் மக்களில், இந்தியர்கள் முன்னிலை வகிப்பதாக கூறுகிறது, ஒரு புதிய ஆய்வு! சந்தோஷமாக வாழும் மக்கள் யார்? என்ற ரீதியில் உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகளில் சர்வே ஒன்றை எடுத்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது, உலக ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ். கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து, உலகின் 24 நாடுகளைச் சேர்ந்த 18,000-க்கும் மேற்பட்டோரிடம் இந்தக் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த சர்வே முடிவின்படி, 10-ல் 8 பேர் தாங்கள் 'மகிழ்ச்சியாக' இருக்கிறோம் என்று பதில் கூறியுள்ளனர். உலக மக்களில் 20% பேர் 'மிக்க மகிழ்ச்சியாக' இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். …

  24. "ஏன் வந்து மோதுனே" நடுரோட்டில் சண்டை.. பின்னாடியே வந்து மோதிய பஸ்.. புதுமாப்பிள்ளை உட்பட 4 பேர் பலி "ஏன் வண்டி மேல நீ மோதுனே.. நான் கிடையாது நீதான் வந்து மோதுனே.. நீ எடு வண்டியை" என்று 2 வாகனங்களில் வந்தவர்களும் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருக்க.. 3-வதாக ஒரு வாகனம் வந்து மோதியதில்.. புதுமாப்பிள்ளை இறந்துவிட்டார். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஐசக் அய்யா.. 54 வயதாகும் இவர் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது 24 வயது மகன் ராஜன் விண்ணரசு.. கல்வி நிறுவனங்களில் தந்தை உதவியாக இருந்து வந்தவர்.கடந்த திங்கட்கிழமை தூத்துக்குடியில் ராஜனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு, 2 கார்களில் சொந்த ஊருக்கு கிளம்பினர். விடிகாலை…

  25. ஈராக்கில நடந்த உண்மையான குண்டு வெடிப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.