Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இன்று 05.05.2009. 24 ஆண்டுகளுக்கு முன்பு 05.05.1975 என்ற நாள் உலகத்தமிழர்களால் மறக்க முடியாத நாள்களில் ஒன்று.

  2. யாழ் நூலக எரிப்பு Published On Thursday, பெப்ரவரி 07, 2013 By admin. Under: ஈழப் படுகொலைகள். சிங்களப் பயங்கர வாதிகளால் எம் அறிவுச் சொத்து அழிக்கப்பட்டு முப்பதிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது. 1981ம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதி இரவு ஒன்பது மணியளவில் தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப் பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப் பட்டது. 97, 000க்கும் மேற்பட்ட நூல்களும் கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியை தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர். யார் பயங்கரவாதிகள் உலகமே? தமிழீழ…

    • 4 replies
    • 797 views
  3. நீ ஏனைய மரங்களைவிடகம்பீரமாகவும், உயரமாகவும், உறுதியாகவும், மனிதரைவிட நீண்ட ஆயுளுடனும் இருந்தாலும் கீழான 'புல்' இனத்தை சேர்ந்தவன் என்று ஒதுக்கப்பட வேண்டியவன்? நம்மவர்கள் காலங்காலமாக கள்ளு அடித்து கெட்டுப்போனதற்கு காரணமாக இருந்தமையால் நமது குடியைக் கெடுத்த உன்னை தேசிய மரமாக ஏற்றுக்கொள்ள முடியாது? நீ சகல வளங்களையும் எமக்கு தருகின்ற கற்பகதருவாக இருந்தாலும்.. உன்னை சங்ககாலத்தில் நம் புலவர்கள் தலையில் வைத்து கொண்டாடவில்லை. இதனால் உன்னை தேசிய அளவுக்கு உயர்த்திவைத்துப் பார்க்கும் தகுதி உனக்கு இல்லை? 1960 களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 இலட்சம் பனைகள் வரை இருந்ததாக கூறப்படுகின்றது. தகவல் மூலம்: விக்கிபீடியா

  4. [பேராசிரியர் முனைவர். மு. வாசுகி, துணைத் தலைவர், தத்துவத்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.] தமிழ்நாட்டில் தற்பொழுது பின்பற்றப்படும் இந்து, கிறித்துவம், இஸ்லாம், பவுத்தம், சமணம் ஆகிய அனைத்து சமயங்களும் தமிழ்நாட்டில் தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்டவை அல்ல. அனைத்தும் பிறதேசங்களிலிருந்து வந்தவையே. அப்படியென்றால் இங்கு ஒரு வினா எழுகின்றது. “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி” என்று வரலாற்றில் பதியப்பெற்ற தமிழ் மக்களை ஒருங்கிணைக்க நல்வழிப்படுத்த இங்கு ஒரு சமயம் இயல்பாகத் தோன்றவில்லையா? தமிழ் இனத்திற்கென்று தமிழில் ஒரு சமயநூல் இல்லாமல் போய்விட்டதா? சமயம் என்பது ஆங்காங்கே அந்தந்த பிரதேசங்களில் மக்களை ஒருங்கிணைக்கவும் நல்வழிப்படுத்தவும் தோன்றிய ஒரு சம…

    • 2 replies
    • 2.7k views
  5. ஈழத்துக் கடலோரக்கிராமத்துப் பேச்சு வழக்கு அடை - கரைவலை வள்ளம் மண் புட்டிக்கு இழுக்கப்படும் பொழுது வள்ளத்தின் அடியில் உள்ள எரா இலகுவாகச் சறுக்கி வழுக்கிக் கொண்டு வருவதற்காக வைக்கப்படும். ஓர் ஒழுங்கு முறையில் அடுக்கப்பட்ட மரக்குற்றிகள் அடை எனப்படும். அறும்புக்காலம் - கடலில் மீன் பிடிபடுதல் மிக மிகக் குறைவாக உள்ள காலம் அம்பறக்கூடு - பனம் மட்டையை வளைத்து, குறுக்காகக் கம்புகள் கட்டி, கிடுகினால் வேயப்பட்ட சிறுதுண்டுக் கூரை அத்தாங்கு - "பை" போன்ற அமைப்புள்ள நூல் வலையின் வாய்ப்பகுதியில், காட்டுத்தடியை வட்டமாக வளைத்துக் கட்டுவர். இதனால் ஆழங்குறைந்த நீர் நிலைகளில், நிலத்தில் வாரி இறால் பிடிப்பர். சில இடங்களில் அவ்வளையம் இரும்பினாலும் செய்யப்படும் ஆனைச்ச…

  6. முள்ளிவாய்க்காலுக்குப்பின்னால்......... வீட்டில் மனைவியால் மக்களால் உறவுகளால் வைக்கப்படும் கேள்வி தலைவர் இருக்கிறாரா? இல்லையா? உண்மையைச்சொல்லுங்கள் இன்றும் கோடி பெறும் கேள்வியிது யாருக்கும் விடை தெரியாத போது சாதாரணமான என்னால் எப்படி??? ஆனாலும் அவர்களுடன் இருந்தமையால் என்னை நோக்கி இக்கேள்வி வருவது அவர்களுக்கு வேறு வழிகளில் அதை தெரிந்து கொள்ளமுடியவில்லை எனலாம்... சாதாரண மக்களிலிருந்து புலிகளின் பெரிய தலைகள் கூட இந்தக்கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறார்கள் மக்களிடத்தில் இருக்கிறார் இல்லை.......... என்று சொல்வோர் உட்பட. இதிலிருந்து அவர்கள் எவருக்கும் உண்மை தெரியவில்லை என்று புரிந்து கொள்ளலாம். இருக்கிறார் என்போர் அவர் ஒழிந்திருக…

  7. தைப்பொங்கல் திருநாளே தமிழரின் புத்தாண்டாகும் - தமிழீழ விடுதலைப் புலிகள் - நன்றி தமிழீழ ஆவணக்காப்பகம் மிகவும் பழங்குடிகளான தமிழர் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர்.மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்திலே உற்பத்தியான தமிழினம் பலவித இயற்கை சமூகக் காரணங்களினால் இடம் பெயர்ந்து காடும் காடு சார்ந்த பகுதியாகிய முல்லை நிலத்திற்குச் சென்றது. பின்னர் அங்கிருந்து வயலும் வயல் சூழ்ந்த பகுதியாகிய மருத நிலத்தை அடைந்தது.இறுதியாகிய கடலும் கடல் சார்ந்த இடமாகிய நெய்தல் நிலத்தை சேர்ந்தது. குறிஞ்சியும் முல்லையும் ,வெப்பமிகுதியினால் தன் நிலை பாலை எனவொரு வடிவம் பெற்றன. எனவே, தமிழர் நில இயல்புகளைக் கூறுமிடத்துப்…

  8. தீபாவளி கொண்டாடுவது தமிழர்களது தன்மானத்துக்கு இழுக்கு! -நக்கீரன் 'தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே படுக்கிறார்கள், ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உலர்ந்த தமிழன் மருந்துக்கும் அகப்பட மாட்டான்' என்று மகாகவி பாரதியார் மனம் நொந்தும் வெந்தும் சொன்னது இற்றைவரை சரியாக இருக்கிறது.இன்று உலகம் 21 ஆம் நூற்றாண்டில் நடை போடுகிறது. இருந்தும் உலர்ந்த தமிழனை மருந்துக்கும் பார்க்க முடியாமல் இருக்கிறது. 'சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என பாரதி கண்ட கனவை அமெரிக்கர்கள் 1969 இல் நனவாக்கினார்கள். இன்று செவ்வாய் மண்டலத்தையும் சனி மண்டலத்தையும் அமெரிக்க விண்கலங்கள் ஆய்ந்து கொண்டிருக்கின்றன! ஆனால் தமிழனோ அதே சந்திரன், சனி, செவ்வாய் கோள்களை கோயில்…

    • 34 replies
    • 10.7k views
  9. [size=5]புலம் பெயர்ந்த தமிழ் பெற்றோர்கள் பலர் தமது குழந்தைகளுக்குத் தமிழ் பெயர் வைக்காமல் என்னென்னவோ பெயர்கள் எல்லாம் வைக்கின்றார்கள். ம்.......... அவர்களுக்கு சிறிது இந்த இணைப்புகள் உதவும் என நினைக்கின்றேன்!!![/size] http://www.shaivam.org/snmstham.htm http://linoj.do.am/index/0-83 http://suunapaana.bl...og-post_26.html http://namvaergall.b...og-post_24.html

  10. தமிழ் உணவுகள்: சங்க கால இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகள் என்னென்ன? #தமிழர்_பெருமை ஜெயகுமார் சுதந்திரபாண்டியன் பிபிசி தமிழ் Getty Images (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிட்டு வருகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் மூன்றாவது கட்டுரை.) "உணவு" என்பதற்கு தமிழில் ஒரு மிகச் சிறந்த வரையறை கொடுத்திருக்கிறார்கள். உணவு என்றால் என்ன என நீங்கள் தேடினால், உலகில் ஒவ்வொரு அறிவியலும் அதை ஒவ்வொ…

  11. சிதம்பரம் நடராஜர் கோயிலில் மழைநீர் வெளியேற்றும் நிலவறைக் கால்வாய் - சோழர்கால அசத்தல் தொழில்நுட்பம்! கால்வாய் ஓர் இடத்தில் அகலமாக, பின்னர் குறுகலாக என மாறி, மாறி, வளைவுகளுடன் பாம்பு போல் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற்ற இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர். சுமார் 50 ஏக்கர் பரப்பில் பரந்து விளங்கும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலிலிருந்து உபரிநீரை வெளியேற்ற முன்கூட்டியே திட்டமிட்டு பூமிக்கடியில் சுரங்க நீர்வடிகால்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. மழைக் காலங்களில் வரும் அதிகப்படியான உபரி நீரினை வெளியேற்றுவதற்காக கிபி 10-13 நூற்றாண்டில் பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1,250 …

  12. ஆப்பிரிக்க சந்தைகளில் விற்கப் பட்ட ஐரோப்பிய அடிமைகள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, ஐரோப்பிய அடிமை வியாபாரிகளால் கறுப்பின அடிமைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வரலாறு எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஒரு காலத்தில் ஐரோப்பிய வெள்ளையர்கள், ஆப்பிரிக்க நகரங்களில் அடிமைகளாக விற்பனை செய்யப் பட்டனர் என்பது யாருக்காவது தெரியுமா? இன்று வரையில் எந்தவொரு வரலாற்று ஆசிரியரும் எழுதியிராத, அல்லது எழுதத் துணியாத தகவல்கள் இவை. உலகில் நீண்ட காலமாக கட்டிக் காக்கப் படும், "மிகப் பெரிய இரகசியம்" இதுவாகத் தான் இருக்கும். ஒரு காலத்தில், ஆப்பிரிக்காவில் அடிமைகளாக இருந்த வெள்ளையர்கள், பிற்காலத்தில் விடுதலையாகி தமது தாய்நாட்டுக்கு திரும்பி வந்து வாழ்ந்த போதிலும், தமது கடந்த க…

  13. கீழடியை ஒத்த வடிகாலமைப்பு ஆதிச்ச நல்லூரிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கீழடியில் கண்டு பிடிக்கப்பட்டது போல வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் வடிகால் குழாய் போன்ற அமைப்பு ஆதிச்ச நல்லூரிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்ச நல்லூரில் அகழாய்வுப் பணிகள் கடந்த மே 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. தமிழக தொல்லியல்துறையின் அகழாய்வு கள இயக்குநர் பாஸ்கர், தொல்லியல்துறை அலுவலர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் ஆய்வு மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆதிச்ச நல்லூரில் 72 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வாழ்விடங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தொ…

  14. தமிழரை இகழ்ந்தவரை பழிதீர்த்த சேரன் | வீரத்தமிழர்கள்

  15. விடுதலை புலிகள் இயக்கத்தில் பங்காற்றிய அனுபவம் உள்ள பதிவர் திரு. சாத்திரி அவர்களுடன் ஒரு பேட்டி காண வேண்டும் என்று நெடுநாளைய ஆவல் எனக்கு இருந்தது. தமிழ் சசியின் பேட்டியுடன் ஒரு போராளியின் பேட்டியையும் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். போராட்ட கால அனுபவங்களை விசாரித்து விரிவாக பேசியிருக்க முடியும். ஒரு தீர்வை நோக்கி ஈழச்சிக்கல் நகர வேண்டிய சூழலில் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழம் தொடர்பாக அறிந்திருக்க வேண்டியவற்றை கேள்விகளாக கேட்டு பதில் பெறுவதே தற்போதைக்குத் தகும். அரசியல் தீர்வை அடைந்த பிறகு மீண்டும் ஒருமுறை போராளிகளை சந்தித்து வீர காவியங்களை சிலாகிப்போம். பணிகளுக்கு மத்தியில் எனது வலைப்பூவிற்காக அவர் நேர்முகம் தர ஒப்புக்கொண்டமைக்கும், நேரம் ஒதுக்கியமைக்கும…

    • 31 replies
    • 5.8k views
  16. திராவிடம்` என்றால் என்ன? :வி.இ.குகநாதன் ` ‘திராவிடம்` என்ற சொல் குறிப்பது என்ன? இது பற்றிய பல்வேறு தவறான விளக்கங்கள் மக்களிடையே பரவிக் கொண்டிருக்கும் காலமிது. `திராவிடம்` என்பது ஒரு சமற்கிரதச் சொல், `திராவிடம்` என்பது தெலுங்கர்களைக் குறிப்பது, `திராவிடம்` என்பது தென்னிந்தியாவில் வாழும் பார்ப்பனர்களைக் குறிப்பது என்பன போன்ற பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. இச் சூழ்நிலையில் உண்மையில் `திராவிடம்` என்பது என்ன? அச்சொல் வரலாற்றுரீதியாக எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது எனப் பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும். `திராவிடம்` என்பது …

  17. தமிழா உன்னைப்போல் ஒருவன் இல்லை !!! நீதான் டா உலகின் செல்லப் பிள்ளை !!! தமிழன் சொத்து பறை தெரியும் அது எத்தனை வகை தெரியுமா ? Join us - https://www.facebook.com/ThanmanamKalaikalam இதோ 32 வகைப் பறையின் பெயர்கள் நெஞ்சை நிமிர்த்தி பகிர்ந்துகொள் " டேய் நாங்க தமிழர்கள் டா !!!" அரிப்பறை - அரித்தெழும் ஓசையையுடைய பறை. அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே (சீவக சிந்தாமணி. 2688). ஆறெறிப் பறை - வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை. ஆறெறிபறையுஞ் சூறைச் சின்னமும் (சிலப்பதிகாரம். 12, 40). உவகைப்பறை - மகிழ்ச்சியைக்குறிக்கும் பறை. (திவாகர நிகண்டு) சாப்பறை - சாவில் அடிக்கப்படும் பறை. (திவாகர நிகண்டு) சாக்காட்டுப் பறை - இறுதிச் சடங்கின் போது இசைக்கும் ப…

    • 5 replies
    • 2.5k views
  18. கந்த முருகேசனாரும் ஆறுமுகநாவலரும் - இளங்கோ (இலண்டன்) இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டியிருந்தது. பிறப்பினால் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் சாதி என்பது மிகக் கேவலமான ஒன்று. ஆனால் ஈழத்தமிழர்களின் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான விடுதலைப் போர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சிங்கள அரசு தமிழர்களை ஈவிரக்கம் அற்று படுகொலை செய்துவரும் இன்றய கண்ணீர் யுகத்தில் சாதியத்திற்கு எதிரான இந்தப் பதிவு தேவையா என்பதே எனது யோசனையின் காரணம். ஒரு காலத்தில் ஈழத்தில் மிகக் கொடுமையான சாதிய அடக்குமுறை இருந்தது. இலங்கை பொதுவுடைமைக் கட்சிகள் அதற்கு எதிராகப் போராடியிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் கொடுமையை த…

  19. பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர். மனிதர்கள் அடிப்படையில் தம் விருப்பு வெறுப்புகளில், கருத்துக்களில் வித்தியாசப்பட்டவர்கள். அவர்களின் சிந்தனைகளை, நம்பிக்கைகளை, வாழ்க்கை முறையை ஒரே கொட்டடிக்குள் அடைக்க நினைப்பது மிகக் கொடிய வன்முறை. உலகம் தோன்றிய காலத்திலிருந்து நம்பிக்கைகள், சிந்தனைகள், மதிப்பீடுகள் என்பவை காலப்போக்கில் மாறிக்கொன்டும் மறு உருவாக்கத்திற்கு ஆளாகியும் இருக்கின்றன. அடக்கு முறைகள் எவ்வளவு இருந்தாலும் மனிதனின் அடிப்படைச் சிந்தனைகளை அவற்றால் முற்றிலும் முடக்க முடிந்ததில்லை. சமூகம் ஒரு மேம்படுத்துதளை நோக்கி ப…

  20. ஈழத்தமிழரின் தாயக நிலப்பரப்பான வடக்குகிழக்கில் முதலில் அமைக்கப்பட்ட நூலகம் என்ற பெருமை திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலகத்திற்கே சாரும். 177 வருடப் பழைம கொண்ட திருகோணமலைப் பொது நூலகம் மிகவும் பிரசித்தி பெற்ற யாழ் நூலகத்தை விட 100 ஆண்டுகள் பழமையானது. திருகோணமலையின் பெருமைகளில் மிகமுக்கியமானது இது. அறிவை யாழப்பாணத்துக்கு மட்டும் சொந்தமாக்குபவர்களில் காதுகளில் ஓங்கி கத்த வேண்டிய உண்மையிது. திருகோணமலைப் புறக்கோட்டை நூலகம் ( Trincomalee pettah library)என அழைக்கப்பட்ட இந்நூலகம் 1835ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1946ம் ஆண்டு திருகோணமலை நகராட்சி மன்றத்தால் பொறுப்பேற்கப்பட்டது. இது பற்றி தகவல் திருகோணமலை நகராட்சி மன்ற பொன்விழா மலரில் படங்களுடன் உள்ளது. இது பற்றிய மேலதிக தகவல்…

  21. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிங்கப்பூருடன் தமிழகத்தின் வணிக, அரசியல் தொடர்பு – ஆராய்ச்சியில் தகவல் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் டாக்டர் இயன் சின்கிளேர் பல்வேறு நாடுகளின் வரலாறு, கல்வெட்டுகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார். சிங்கப்பூரில் கடந்த 7ஆம் திகதி சிங்கப்பூர்-இந்தியா பாரம்பரிய மையத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் இயன் சின்கிளேர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். அப்போது சிங்கப்பூருக்கும், தமிழகத்தை ஆண்ட சோழ வம்சத்துக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்த வர்த்தக, அரசியல் தொடர்பு குறித்து அவர் கருத்தரங்கில் விளக்கியுள்ளார். இதுகுறித்து இயன் சின்கிளேர் கூறுகையில், “சிங்கப்பூரில் கிடைத்த பழமையான கல் குறித்து எனக்குத் தகவல் கிட…

  22. வாழ்க்கைச் சுருக்கம் இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார். வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். திறமையான எழுத்தாளர், ஆற்றல் மிக்க பேச்சாளர், தன்னலமில்லா தொழிற்சங்கத் தலைவர், துணிவுடைய சுதந்திரப் போராட்ட வீரர். வ.உ.சி. யின் தியாக வாழ்க்கை ஒர் உன்னத வரலாறானது. அவரது வாழ்க்கை, இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்காக தியாகங்கள், போராட்டங்கள், அனுபவித்த துயரங்கள் இவற்றால் நிறைந்தது. வ.உ.சி. யின் அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.