சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
எமக்கென ஒரு நாடு இருந்தது .. ..! அங்கு தமிழ் மட்டும்தான் வாழ்ந்தது.. .! மதம் என்பதை யாருமே கொண்டாடியதோ .. வெறுத்தத்தோ .. போற்றியதோ இல்லை .. ..! அவரவருக்கு வேண்டிய சமயச் சொற்பொலிவுகள் அந்தந்த இடங்களில் நடந்தது .. பிரிவினைவாதம் மதவாதம் இங்கு இருக்கவில்லை .. ..! பிராமணர்களும் இருந்தார்கள் .. அவர்கள் தங்கள் வேலையைப் பார்த்தார்கள் .. ! மொத்தத்தில் எல்லோருமே தமிழர்களாக மட்டுமே வாழ்ந்தார்கள் .. ..! அந்த நாட்டையும் ஒரு பெருமை மிகு தமிழ் மன்னன் ஆண்டான் .. .! சேர ,சோழ, பாண்டிய ஆட்சி எல்லாளன் தொடக்கம் பண்டாவன்னியன்வரை அத்தனை வீரத்தையும் ஒருவனாய் சுமந்து நின்றார் ....! சுபாஸ் சந்திரபோஸ் தொடக்கம்…
-
- 3 replies
- 1.1k views
-
-
வெளிநாடுகளில எப்பிடி தேவையான பழங்களை ஒரு பெரிய பண்ணைக்கு போய் புடுங்குவாங்களோ அதே மாதிரி நானும் யாழ்ப்பாணத்தில இருக்க ஒரு திராட்சை தொட்டத்துக்கு போய் அங்க என்க வீட்டுக்கு தேவையான பழங்களை புடுங்கினம், அங்க என்ன நடந்த எண்டு பாப்பம் வாங்க.
-
- 5 replies
- 870 views
-
-
யாழ்ப்பாணத்தில எப்பயுமே கடல் உணவு எண்டா மீன், இறால், கணவாய், நண்டு தான் கிடைக்கும், எங்கயாச்சும் தேடி போன, மட்டி, சங்கும் எடுக்கலாம் , இத எல்லாம் விட கொஞ்சம் வித்தியாசமா, ஒரு Exotic கடல் உணவு எண்டு பாத்தா இந்த Oyster ஆஹ சொல்ல ஏலும் ஆனா யாழ்ப்பாணத்தில எடுக்க ஏலாம இருந்த, அதுவும் இதுவரைக்கும் english படங்களையும் TV Series களிலையும் மட்டும் கேட்டு ஒருதரமாவது சாப்பிடு பாக்கணும் எண்டு பெரிய ஆசை இருந்தது. கொழும்பில இது விக்கிறாங்க எண்டு சொன்னதும் ஒருக்கா டேஸ்ட் பண்ணி பாத்த காணொளி இது. பாருங்கோ. இதுக்கு முதல் நீங்க சாப்பிட்ட அனுபவம் இருந்தா சொல்லுங்கோ
-
- 3 replies
- 1.2k views
-
-
சுயம் இழந்த சரிதம்… “ இதோ என்னை ஒரு குப்பைக்காரன் தூக்கி தன் குப்பை அள்ளும் வண்டிலுக்குள் எறிகிறான் , குப்பை வண்டிலுக்குள் துர்நாத்தம் சகிக்க முடியவில்லை , சென்ற வருடம் வரை என்னை பாவித்துவிட்டு இப்பொழுது நரை கூன் விழுந்த கிழடுகளைப் தள்ளிவைத்தது போல் என்னையும் ஒதுக்கி விட்டார்கள். என் உடம்பெல்லாம் ஓட்டை விழுந்து ரெண்டு கம்பியும் உடைந்து விட்டது , வாங்கிய புதிதில் படுக்கும் போதும் தன்னுடனே வைத்திருந்த சின்னவள் கூட இப்பொழுது என்னால் பயனில்லை எண்டு தூக்கிப் போட்டு விட்டாள் ….. “ எண்டு குடையின் சுயசரிதைக்கு எடுத்த marks என்னையும் O/L தமிழ் results ஐயும் காப்பாத்திச்சுது. படிக்கேக்க பிடிக்காத பத்தில குடையும் ஒண்டு, ஆனாலும் அது என்னைக் கைவிடேல்லை. “ கொண்டு போன கு…
-
- 0 replies
- 769 views
-
-
👉 https://www.facebook.com/643055850/videos/1127278607894807 👈 1975 களில்... நமது ஊர், இப்படித்தான் இருந்தது. 50 வருடத்தில்... எத்தனை மாற்றம். மாற்றம் முக்கியம் என்றாலும்... மக்களின் பழக்க வழக்கங்கள் கூட மாறி விட்டது. வாழ் வெட்டு, போதைப் பழக்கம் போன்றவற்றை நினைக்க... இன்னும் சில வருடங்களில்... என்ன நிகழப் போகின்றதோ, என்ற பயமும் தொற்றிக் கொள்கின்றது.
-
- 1 reply
- 611 views
-
-
ட்விட்டர் முதலீட்டாளர்கள் டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க் மீது வழக்கு: காரணம் என்ன? அனபெல் லியாங் வணிக செய்தியாளர் 27 மே 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES ஈலோன் மஸ்க் மீதும் ட்விட்டர் நிறுவனத்தின் மீது ட்விட்டர் முதலீட்டாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஈலோன் மஸ்க்கின் திட்டத்தை கையாண்டது தொடர்பாக இந்த வழக்கை முதலீட்டாளர்கள் தொடர்ந்துள்ளனர். முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஈலோன் மஸ்க் தெரிவித்திருந்தார். கலிஃபோர்னியா பெருநிறுவன விதிகளை ஈலோன் மஸ்க் பலவழிகளில் …
-
- 1 reply
- 659 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா தமிழர்களை கடத்தி முதலைக்கு இரையாக்கினார் என்ற குற்றச்சாட்டு உண்டு. கோத்தபாயாவின் உத்தரவுப்படி தமிழர்களை கடத்திய உண்மையை வெளி உலகிற்கு கூறியவரையே இப்போது கடத்தி விட்டார்கள். தமிழருக்கு எப்போது எப்படி நீதி கிடைக்கும்? தோழர் பாலன்
-
- 2 replies
- 661 views
-
-
அனுராதபுரம் புனித நகரில் கவனிப்பாரற்று அவல நிலையில் கிடக்கும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளி அம்மன் கோயிலும், அங்கு கண்டெடுக்கப்பட்ட அழகிய அம்மன் சிலையும். அனுராதபுரம் புனித நகரில் கவனிப்பாரற்று அவல நிலையில் கிடக்கும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளி அம்மன் கோயிலும், அங்கு கண்டெடுக்கப்பட்ட அழகிய அம்மன் சிலையும். ஒரு தடவை அனுராதபும் புனித நகரத்திற்குச் சென்றபோது மிகவும் மோசமான, அவல நிலையில் கவனிப்பாரற்றுக் கிடந்த பண்டைய காளி கோயிலின் இடிபாடுகளைக் கண்டேன். இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். அனுராதபுரம் புராதன நகரின் மத்தியில், தூபராம தாதுகோபத்திலிருந்து அபயகிரி தாதுகோபத்…
-
- 3 replies
- 515 views
-
-
கான காலமா மாட்டு வண்டி சவாரிய நேர பாக்கணும் எண்டு ஒரு ஆசை, அப்பிடி நான் பார்த்து, கேட்டு அனுபவித்த விடயங்களை ஒரு காணொளியாவும் ஆக்கி இருக்கன், பாருங்க பாத்து உங்க கருத்துக்களையும் சொல்லுங்கோ
-
- 3 replies
- 1.6k views
-
-
இன்றைய தலைமுறையினரின் போக்கு அதிகம் அச்சம் தருகிறது ..... *பிடித்த ஒரே பொருள் செல்ஃபோன்* *படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.* *கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...* *யாருக்குமே மரியாதை தரக்கூடாது..* *தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை...* *எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்..* *காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...* *சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்..* *பெண்கள் மீது மரியாதையே இல்லை..* *ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி...* *வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை..* *ஒரு பாங்க் படிவ…
-
- 0 replies
- 705 views
-
-
Sangarasigamany Bhahi sSdpreootn8r0tiM818i36tef A:mu07d yhgei0 17laas1093a9iY8a7au · …
-
- 0 replies
- 532 views
-
-
👉 https://www.facebook.com/100065609049057/videos/612353310393761 👈 பெண்ணின்... காதுக்குள், புகுந்த பாம்பு 🐍. திக்... திக்... நிமிடங்கள். 😎
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்த மஹாராணிக்கு தான் இரங்கல் பதிவு போட்டுட்டு இருந்தாங்க நம்ம ஊரு முற்போக்கு முட்டாள்கள். அந்த மஹாராணி ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் காட்சி. https://www.facebook.com/100061259164419/videos/477172774046268
-
- 0 replies
- 920 views
-
-
-
- 1 reply
- 626 views
- 1 follower
-
-
யாழ் போதனா வைத்தியசாலை (பெரியாஸ்பத்திரி) Jaffna Teaching Hospital எப்போது உருவானது? அதன் வரலாறு என்ன? முதலாவது யாழ் அரசாங்க அதிபர் (1829 –1867). அக்காலத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு அளப்பரிய சேவை செய்துள்ள அதிகாரிகளில் அக்லண்ட் டைக்... முதன்மையானவர். தற்போது பழைய பூங்கா என அழைக்கப்படும் அரச அதிபர், ஆளுநர் இல்லம் மற்றும் அயலில் உள்ள அலுவலகங்களில் உள்ள மரங்கள் யாவும் இவரால் நாட்டப்பட்டவையே. டைக்.. இங்குள்ள மரங்களில் உள்ள பூக்களின் நறுமணத்தை சுவாசித்தும், பழமரங்களின் கனிகளை... சுவைத்தும் வந்தார். பொதுக்களும் அனுமதி பெற்று இப் பூங்காவைப் பார்வையிட்டும் பூங்காவிலுள்ள கனிகளைப் புசித்தும் வந்தனர். …
-
- 7 replies
- 1.3k views
-
-
ஆதிமனிதன் வரலாறு: 31,000 ஆண்டுக்கு முன்பே... உறுப்பு நீக்க அறுவைச் சிகிச்சை செய்த, குகை மனிதன். அறுவை சிகிச்சை மூலம் உடல் உறுப்பு துண்டிக்கப்பட்டதற்கான வரலாற்றிலேயே மிகவும் பழமையான ஆதாரங்களை இந்தோனேசிய குகையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த இளைஞரின் உடலில் அறுவை சிகிச்சை மூலம் கால் துண்டிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையின் தோற்றம் ஏற்கெனவே கருதியிருந்ததைவிட 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நமக்கு தெரிவிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிக்கலான அறுவை சிகி…
-
- 0 replies
- 395 views
-
-
தலை கால் தெரியாம….. “ என்ன மாதிரி ? நாளைக்கு காலமை போவம் , நாலரைக்கு வந்தால் ஐஞ்சு மணிப்பூசை முடிய உருளச் சரியா இருக்கும் “ எண்ட முன்மொழிவு வழி மொழியாமலே ஏற்றுக்கொள்ளப்பட எல்லாரும் வெளிக்கிட்டம். நாலரை நல்லூர் மணி அடிக்க முதலே என்னை எழுப்ப வந்த குரலுக்கு வந்திட்டேன் எண்டு சொன்னபடி வெளிக்கிட்டன் . யாழப்பாணத்தில மட்டும் பாவிக்கிற சொல் இது, வந்திட்டேன் எண்டிறது என்ன tense எண்டு அறிய தனிப் பட்டிமன்றம் வைக்கோணும் சுகி சிவம் எங்கயோ சொன்னதாக ஞாபகம் . ஆடி அமாவாசை முடிய வீட்டை மச்சச்சட்டி கவிக்க நாங்களும் நல்லூர்த்திருவிழா பிரதட்டைக்கெண்டு ஆய்த்தப்படுத்துவம். வெழுத்த ரெண்டு பழைய வேட்டி,சால்வை, சணல்க்கயிறு, இதுக்கெண்டு கொஞ்சம் பழைய underwear, இதுகள் தான் தேவை. அவனவன் எ…
-
- 2 replies
- 983 views
-
-
கூடு விட்டு கூடு பூந்து… கிளீல பறந்து வந்த அருணகிரிநாதர் அதை நல்லூருக்கு மேல முகிலில center stand ஐப் போட்டு நிப்பாட்டீட்டு நேரத்தைப் பாத்தார் , மணிக்கூடு வேலை செய்யேல்லை. திடீரெண்டு நல்லூர் மணி கேக்க , “ ஐஞ்சு மணி ஆச்சிது, இப்ப சாமி உள் வீதி சுத்நும் “ எண்டு நெச்சபடி சுருதிப் பெட்டியோட கொஞ்சம் மெல்ல மெல்ல இறங்கி வந்தார். “ என்னப்பா நேரம் போட்டுது யாகம் பாக்க வேளைக்குப் போனாத்தான் இடம் கிடைக்கும்” எண்டு மனிசி அந்தரப் படுத்தேக்க நாலரை இருக்கும் . மற்றும் படி கேட்டாலும் கவனிக்காம இருக்கிற மனிசி கேக்க முதலே சிவப்புச் சால்வையை நீட்ட வெளிக்கிட்டுப் போனன். செட்டித் தெரு தடையில வாகனத்தை நிப்பாட்டீட்டு ஶ்ரீ முருகன் தண்ணீர்ப பந்தலால உள்ள ஓடிப் போக கையில சப்பாத்தோட நிண்ட…
-
- 0 replies
- 834 views
-
-
புலம்பெயர் அமைப்புகள் – தனி நபர்கள் சிலர் மீதான தடை நீக்கம்! ஒரு குழல் துப்பாக்கியுடன் நாடாளுமன்றில் நுழைந்து பல்குழல் துப்பாக்கியாக வெடித்துக்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதில் இருந்து, அவர் எப்படி தனது அரசியல் நகர்வுகளை மேற்கொள்வார் என என்பதிவுகள், சுட்டிக்காட்டியிருந்தன. அவர் ஜனாதிபதியாவதை சட்ட ரீதியாக சவாலுக்கு உட்படுத்த முடியாது எனவும், அவரை வீட்டுக்கு அனுப்பும் கிளர்ச்சியும் சாத்தியமா என்பது சந்தேகமே எனவும் குறிப்பிட்டிருந்தேன். அவற்றை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனது கருத்துகள…
-
- 0 replies
- 504 views
-
-
காதல் திருவிழா சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க , “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா. கலியாணம் எண்டு பேசத் தொடங்கின உடனயே பேசிறதை குறைச்ச தம்பி , நான் எப்ப அம்மாவைக் கேட்டனான் எண்டு யோசிக்க , “ அதுக்கென்ன வெள்ளிக்கிழமை நல்லூரில காலமை பூசையில பாப்பம் ‘ எண்டு முடிவாகிச்சுது. ரெண்டு பெண்டாண்டிக் காரரா இருந்தாலும் நல்லூரான் நல்லது செய்வான் எண்டு பெண்பார்க்கும் படலம் பொதுவா இங்க தான் நடக்கும் . அப்ப கொழும்பில Majestic City மாதிரி யாழ்ப்பாணத்தில எல்லாப் பெடியளுக்கும் லேசியா பெட்டைகளை பாக்கிறதெண்டால் நல்லூர் தான். கொடியேத்தத்தில பாத்து மஞ்சத்தோட கேட்டு திருக்கலியாணத்தில ஒப்பேத்தின கதைகள் சில…
-
- 1 reply
- 657 views
-
-
ஆள் கடத்தல்களுக்கு பின் உள்ள... ஈ.பி.டி.பி. யின், கரங்கள். வடக்கு கிழக்கு மாகாணங்களில் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோருக்கு நீதியை பெற்று கொடுப்பதாக ஜனாதிபதி திரு ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து இருக்கின்றார் சாட்சி 1 திருமதி முத்துலிங்கம் கொலஸரிக்கா என்பவர் அளித்த வாக்குமூலத்தில் "எனது மகன் முத்துலிங்கம் மலரவன் அவர்களை 2007ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் திகதி இரவு 10.30 மணி அளவில் ஈச்சமோட்டை பகுதியில் உள்ள எனது வீட்டுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த சிவில் உடை தரித்த ஏழு பேர் வலுக்காட்டாயமாக அச்சுறுத்தி இழுத்துச்சென்றனர். அவர்களில் மூன்று பேரை அடுத்த நாள் காலை ஈ.பி.டி.பி அலுவலகத்தில் கண்டேன்" என சொல்லியிருந்தார் சாட்சி 2 …
-
- 1 reply
- 932 views
-
-
போராட்ட (அரகல) குழுவினர் நடத்திய கலந்துரையாடலில் கலந்து உரையாற்றிய போது... அரசியல் கைதிகள் விடுதலை என்ற கோஷத்தில் தமிழ் கைதிகளுக்கு முதலிடம் இருக்க வேண்டும் – காலிமுக போராட்டக்காரர்கள் கூட்டத்தில் மனோ கணேசன் காலிமுக போராட்டக்காரர்கள் என்ற முறையில் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். ஆட்கடத்தல், முறைதவறிய கைது, அவசரகால சட்டம், பயங்கரவாத தடை சட்டம், அரசியல் கைதிகள் விடுதலை, மனித உரிமை பேணல், மக்களுக்கு நிவாரணம் ஆகியவற்றை நாம் ஏற்கிறோம். இவை எங்களதும் நீண்டகால கோரிக்கைகள்தான். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல…
-
- 2 replies
- 537 views
-
-
தற்போது அறிமுகம் செய்யபட்டு உள்ள fuel pass system பற்றிய முக்கியமாக உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டியவை தற்போது அறிமுகம் செய்யபட்டு உள்ள fuel pass system பற்றிய முக்கியமாக உங்களுக்கு தெரிந்து இருக்க முக்கியமான விடயங்களை இதில் குறிப்பிட்டுள்ளேன். உங்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை எனின் இன்னும் ஒருவரின் ஸ்மார்ட்போனில் உங்கள் பதிவை மேற்கொள்ளுங்கள். அந்த QR code ஐ டவுன்லோட் செய்து தாளில் print எடுக்கவும்..அதனை பாஸ் ஆக பயன்படுத்த முடியும்.. 1. அனைத்து தனிப்பட்ட வாகனங்களுக்கும் ஒவ்வொரு கிழமையும் உறுதிப்படுத்தப்பட்ட பெட்ரோல் அளவு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.. 2. இந்த நடைமுறை Ceypetco மற்றும் IOC ஆகிய எல்லா பெட்ரோல் நிலையங்களிலும் ச…
-
- 0 replies
- 694 views
-
-
வாய்மொழிக் கதைகள் வாய்மொழிக் கதைகள் நீக்கமற நிறைந்திருந்த காலமென்பது உண்டு. சற்றேறக்குறைய 1990கள் வரையிலும் அவை இருந்தன. காரைவாசல், கோவில் மேடைகள், மரத்தடிகள், குளத்தேரிகள், கிணத்துமேடுகள் முதலான இடங்களிலும், ஆடு மாடு மேய்க்கும் போதான தரிசு நிலங்களிலும் வாய்மொழிக்கதைகள் புழங்குவதும் உயிர்ப்பதுமாக இருந்தன. வயது ஐம்பதைக் கடந்தோர் தன் அனுபவங்களைச் சாதனைகளாக வெளிப்படுத்துவதாகவும் அவை இருந்தன. இளையோருக்கு அவை சுவாரசியம் ஊட்டக் கூடியதாகவும் கேளிக்கையாகவும் இருக்கும். வின் - வின் என்பதான அடிப்படையில் இருதரப்புக்குமே இலாபம். நிறையப் பேருக்குத் தாம் பேச வேண்டும். மற்றவர் கேட்க வேண்டுமென்கின்ற ஆவல் உண்டு. அது மனித இயல்பு. அவ்வாறான வேட்கையைத் தணிப்ப…
-
- 0 replies
- 976 views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதிகள்... ஆப்ரகாம் லிங்கன், ஜான் கென்னடி வாழ்வில், நிகழ்ந்த ஒற்றுமை. 1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி. 2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது. 4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள். 5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் …
-
- 0 replies
- 603 views
-