Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. கடலோரம் தென்னம் தோப்பு கரை மீது இரண்டு கிளிகள் கடல் அலையில் சுரம் எடுத்து கனவுகளை பாடுது காற்றினிலே தொட்டில் கட்டி கிளி இரண்டும் ஆடுது தென்றலிலே முகம் நனைத்து தேன்நிலவை தேடுது விழி ஓரம் கவி எழுதி வரம் ஒன்று கேக்குது வாழ்வு தனை வரையுது வசந்தத்தை பாடுது அலை வந்து சுரம் பாட அவள் மடி மீது தலை வைத்து மனதோடு பல ராகம் கிளி இரண்டும் சுக ராகம் அந்தி வானம் சிந்தி விட்ட அழகான மழை துளியில் கிளி இரண்டும் நனையுது கீதங்கள் கேக்குது ஏழு சுரத்தில் கவிதை எழுதி இதயம் இரண்டும் பேசுது எல்லை இல்லா வானத்தருகே ஏதோ கீதம் பாடுது . கிளி இரண்டும் இசை பாட கிண்கிணியின் ராகத்திலே கடல் அலையும் ஆடுது காதல் ம…

    • 2 replies
    • 1.9k views
  2. Started by karunya_02_09,

    கடவுள் நடுச்சபை தன்னிலே உடுக்கை இழந்தவள் - இருகை எடுத்தே அழைத்தாலன்றி இடுக்கண் களையேன் - என்று வேடிக்கை பார்த்திருந்த நீரெல்லாம் என்ன கடவுள்...! கர்ணனின் கொடையையே அவன் வினையாக்கி அவன் வரங்களையே சாபமாக்கி. சூழ்ச்சியால் உயிர்பறித்த நீரெல்லாம் என்ன கடவுள்...! துரோணரை வீழ்த்திடப் பொய்யுரைக்க செய்தீர் ஆயுதம் ஏந்திடாவிடினும் ஒரு பக்கச் சார்புடையீர் இப்படி உம் குற்றப்பட்டியல் கூடிக்கொண்டே போகிறதே நீரெல்லாம் என்ன கடவுள்...! அட..... நான் …

  3. கடவுள் ஒரு கைப்பிள்ள! முன்பொரு நாளில்... கடவுளை மனிதன் படைத்தான்... அன்றிலிருந்து கடவுள் மனிதனைப் படைக்கத் தொடங்கினார்... தாயுமானார், தந்தையுமானார்... பின்னொரு நாளில்... "மகனே நந்தனா, உள்ளே வா" சொல்லத் தயங்கினார்... பதிலுக்கு "சற்றே தள்ளி இரும் பிள்ளாய்" திருவாய் மலர்ந்தார்... நிற்க... "எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்" "பஞ்ச்" அடிப்பதில் வல்லவர்... தன் பெயராலே ஓர் அதர்மம் தடுப்பதற்கோ அஞ்சினார்... இன்றொரு நாளில்... கடவுளுக்கு மனிதன் தேவையோ இல்லையோ தப்ப முடியாது... மனிதனுக்கு "கடவுள்த்தேவை" மிக அதிகம்... ஏனென்றால் கடவுள் ஒரு கைப்பிள்ள... - பராபரன்

  4. கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள் ------------------------------------------------------------------- மேய்ந்து கொண்டும் சாணம் இட்டும் புரண்டு விட்டு சரிந்து தூங்கி எழும்பிக் கொண்டிருக்கும் ஆநிரைகளைப் பார்க்க கடவுள்கள் சில நாட்களில் வருகின்றார்கள் அன்று கடவுளே நேரே வருகின்றார் என்று குட்டிகளுடனும் கருக்களுடனும் ஆடாமல் அசையாமல் கடவுள் வரும் வழியில் ஆநிரைகள் அப்படியே நிற்கின்றன நாள் முழுதும் காவலர்களுடன் வரும் கடவுள்கள் கையை அசைப்பார்கள் எழுதி வைத்து வாசிப்பார்கள் இனி எங்களின் ராஜ்ஜியம் என்பார்கள் மற்றயவை பொய்க் கடவுள்கள் என்றும் சொல்கின்றார்கள் கடவுள்களின் முன்னேயே ஏதோ நடந்து ஆநிரைகள் சில குட்டிகள் சில கருக்களில் சில எரிந்து நசிந்து மூச்சடக்கி என்று இறந்து போகின்றன அ…

  5. என் அன்புள்ள ரசிகனுக்கு இலக்கியக் கவிப்பேரரசு எழுதும் கடிதக் கவிதை 📝📝📝 ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள் என்னை ஊனமாக்கி மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறியச் செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....! # என்இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்குத் தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில் வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும்..... இதயத்துக்குப் புரியும் …

  6. “கடிதங்களின்” கவலை..! எங்களை இப்போது எவருக்கும் தெரிவதில்லை தொழில் நுட்பமென்னும் தூரதேசம் பேச, எழுத.. பல நுட்பம் வந்ததனால் எங்களை இப்போது எவருக்கும் தெரிவதில்லை. அந்தக்காலத்தின்-நாம் அன்பின் பாலங்கள்.. பிரிந்து வாழ்ந்தாலும் பிரியமுடன் வாழ்ந்தாலும் எங்களைத்தான் எதிர் பார்த்தே ஏக்கமுடன் இருப்பார்கள். ஊர் விட்டுத் தள்ளிப்போன உறவுகளின் உணர்வுகளை வேர் இருக்குமிடம்பார்த்து விருப்போடு நாம் வருவோம். அந்தகிராமத்தின் அதிகாரிகளை தெரியாது ஆனால்.. குஞ்சு குருமான்கள்,இளம் குடலை, பெரியோர்கள் எல்லோர்க்கும் தெரிந்த முகம் எமை காவும் தபால் காரர் …

  7. கட்டுமரம் மூழ்காது.......! ஆழ்கடல்மேல் அலையில் அசைந்தாடுகின்றது கட்டுமரமொன்று அதிலிருந்து வலையெறிகின்றார் மீன்பிடிக்கும் மீனவர் இருவர் அமைதியை அகற்றியே இடிபோலொரு முழக்கம் அடுத்து ஆர்பரித்துக்கொண்டு வந்ததோர் அலை ஆகாயம் தொட்டு அந்தோ பரிதாபம் அந்தமரம் அவர்களையும் புரட்டிவிட்டு அங்கேயே மூழ்கியது அடுத்து வந்த அலைகளும் மறைய அமைதியானது கடல் மீண்டும் அதில் மிதந்தது அந்த மரம் அதை பற்றியபடி மீனவர்கள் முகம் மட்டும் தெரிய முழுஉடலும் கடலுக்குள் அண்ணாந்து வானம் பார்த்த முதியவன் முக்குகன் பகன்றான் கருமுகிலைக் காணவில்லை மழைக்கறிகுறி ஏதும் இங்கில்லை அ…

  8. செந்தமிழ் சொல்லெடுத்து சிலேடைகள் தான் புகுத்தி திரைதனில் தவிழ்ந்தவன் தரணியில் தமிழ் கவிஞன் என்பதனால் ஈழத்தில் தமிழன் நிலை கண்டு கண்ணீரால் கவிதை எழுதி கலங்கி நின்றது போதும் உறவுகளுக்காய் அவன் வருந்தியது மெய்யென்றாகாதோ..?! களத்தில் அவன் கட்டுமரத்திலும் ஏறலாம் அண்ணா கழகத்திலும் குந்தலாம்... கவிஞன் அவனுக்கும் வாழ்வும் வயிறும் இருக்குத்தானே..?! நிச்சயம் அது துரோகமில்லை கவிஞன்.. மொழியாய்.. மொழிக்காய்.. வாழ்பவன். ஆட்சிக்கட்டில் அவனுக்கு சாமரம் வீச கவர் கன்னியருமில்லை கறுப்பின் கவர்ச்சில் மொய்க்க சிம் மையீக்களும் இல்லை அருட்டிவிட்டால் அழும் அந்த மீரூ பொம்மைகள…

  9. ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன்....! ஆய்வு கூடத்து உதவியாளர் என்று நினைவு...! அவ்வப்போது ரியூசனும் குடுப்பார்..! என்ன பாடம் என்றில்லை.., எல்லாப் பாடத்திலும்...ஆள் ஒரு புலி..! ஒரு நாள் கேட்டார்...! உனக்கு உரிமை இருக்கா எண்டு...? என்னடா இது புது வில்லண்டம்? வில்லங்கத்தை அவர் அப்படித் தான் சொல்லுவார்..! அப்போது புரியவேயில்லை...! ஆறாம் வகுப்பு முடிஞ்சு ..., அட்வான்சு லெவல் வந்த போது.., எல்லாமே புரிஞ்சது...! நடு ஆற்றில் தத்தளித்தவனுக்கு.... ஒரு மரக்கட்டை கிடைச்சது...மாதிரி....! கிழக்கு வானம் கொஞ்சம் கொஞ்சம் வெளிச்சது மாதிரி...! மப்பும் மந்தாரமும்...கொஞ்சம் அகல்வது போல…

    • 3 replies
    • 1.5k views
  10. நீ சென்ற ஒரு நொடியில் பிறந்து விடுகிறது உனக்கு புது பெயர் ஒரு மணி நேரத்தில் தூக்கி எறியப்படுகிறது உடைமைகள் வாங்கியப் பதக்கங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறது அலமாரியில் உயரிய சான்றிதழ்கள் எடைக்குப் போடப்படுகிறது எட்டு மணி நேரத்தில் ஆயுள் காப்பீடு ஆராயப்படுகிறது உட்பெட்டியில் அசையும் சொத்தின் அட்டவணை அமைதியாய் தயாரிக்கப்படுகிறது அசையா சொத்துக்கள் பிரிக்கப்படுகிறது அன்றிரவே அலைபேசியில் பங்குச்சந்தையில் பரிசீலக்கப்படுகிறது பங்கின் பரிவர்த்தனை நள்ளிரவில் நீ சென்ற அன்றே முடிந்து விடுகிறது உன் நினைவுகள் செல்லாகாசாய்....

  11. Started by Kaviarasu,

    பார்வை கடலில் நீந்திய நாட்கள் நினைவாய் உடன் இருக்க. வற்றிய ஓடையில் நினைவின் துணையுடன் நீர் பயணம்.

    • 3 replies
    • 1.9k views
  12. தடம்புரண்டோடும் மனித வாழ்வில் தடம்புரளா வண்டி போல் அவன் தடம்பற்றி ஓடும் வண்டி ஒன்றில் தபுதாரனற்ற ஒருத்தன் தவிப்பில் அவள் தவிர்க்க முடியாது தவித்த அவன் விழிகள் தத்தை அவள் தகிக்கும் வதனம் காண...... தண்ணீர் போல் கண்ணீர் தத்தளிக்கும் துளிகள் தரவரிசையாய் சரிகின்றன. தவிக்கிறது அவன் மனசு தரமறியாது தவிர்க்கிறது வார்த்தை உதிர்க்க.. தவிர்த்த விழிகள் தகர்ந்து போகின்றன தகரடப்பா போல் போனுக்கு தத்தை அவள் கண்ணீர் கோலம் தரவாகிறது தகவலாய் மறுமுனை தாவ தத்தையும் தேடுறாள் பட்சாதாபம்...! தகர்கிறது தண்ணீராய் ஓடிய அவள் கன்ன அருவியில் தகரும் அவள் வதனப் பூச்சொடு …

  13. Sri Lanka has withdrawn from a UN resolution that would allow war crimes allegedly committed during the country's civil war to be investigated. கண்ணை மூடி பால் குடித்த பூனை அத்தனை பொய்களையும் ஐ நா மனித உரிமை மன்றில் பேசிய அமைச்சரின் உரை பூனை கண்ணை மூடியபடி பால் குடிப்பது போல் இருந்தது அழகான ராஜதந்திர வார்த்தைகளும் அபிவிருத்தி என்றும் அரசியல் சாணக்கியத்தில் ஒளித்து இருந்தபடி இனவாதி பேராசிரியர் பீரிஸ் எழுதிக் கொடுத்ததை பெருமையாக வந்து வாசித்துப்போனார் அமைச்சர் அறம் அன்பு அடுத்தவர் துன்பம் எதையுமே அறியாதவர் இறுதியில் அந்த புத்தனின் தத்துவத்தை சாட்சிக்கு அழைத்து அந்த புத்தரையும் ஐ நா சபையையும் அவமதித்தது போல்…

  14. கனவாய் வந்தாய் காவியமே எங்கு இருந்தாய் எங்கு இருந்தாய் எந்தன் கவியே எங்கு இருந்தாய் கண்ணில் உனை நான் கட்டிவைத்தேன் என் காதல் கவியே எங்கு இருந்தாய் என்னில் உனக்காய் உயிர் வடித்தேன் என் இதயம் முழுக்க உனை வரைந்தேன் உன்னில் பின்னால் நிழல் போலே உன்னோடு இருந்தேன் உன் உயிர் போலே காலை வந்த மழை துளிபோல் கவித்துளி போலே உனை வரைந்தேன் மாலை வந்த மதி போலே காலைக் கனவில் உனை கண்டேன் அழகே தமிழே என் கவியே என் அருகில் பூவாய் பூத்தவளே புலரும் பொழுதில் எனை எழுப்பி கனவாய் வந்தாய் காவியமே .

    • 2 replies
    • 1.4k views
  15. எல்லைகள் தாண்டி கருந்தேகம் ஒன்று கரங்கள் அறுந்து கால்கள் ஒடிந்து தழும்புகள் நிறைந்து கனவில் வந்து கதை பேசிச் சென்றது. வடக்கே என் வீட்டுக் கோடியில் ஆக்கிரமிப்பு எதிரியோடு தான் இட்ட சண்டையில் கரம் ஒன்று அறுந்தது.. கிழக்கே என் சொந்தங்களின் வளவில் தான் இட்ட சண்டையில் கால் ஒன்று ஒடிந்தது.. கந்தகத் துகள் துப்பி உடல்கருகிக் கரும்புலியானதன் அடையாளம் கருந்தேகம் என்று சொன்னது.. முள்ளிவாய்க்கால் தனில் உயிர் சுவாசம் தேடிய இறுதி மூச்சு வேளையில் வெள்ளைப் பொஸ்பரசில் உலக வல்லரசுகள் ஒன்றாய் வீசிய குண்டுகளில் அவன் முகமே தழும்புகளால் ந…

    • 2 replies
    • 1.5k views
  16. Started by தமிழ்நிலா,

    கனவெனப்படுவது நினைவும் நிஜமும் கூட்டி மகிழ்தலும் கொடுந்துயர் உழத்தலும் ஆழ் மனத்தாழ்ந்த உள்ளுணர்வெழுந்து மீள் நினைவாற்றலை உயிர்ப்பிக்கும் நிகழ்வது!!! ஆற்றிய நிகழ்ச்சியை முற்றும் மறந்துளம் சுற்றியதொன்றின் பான்மையை நிகழ்வுகளால் அழகுறக்காட்டி அணைக்கும் மகிழ்வைப் பழகுநற் கூட்டும் பான்மையுடையது எண்ணமே மலர்ந்தோட உயிர்ப்புற்று வருதலால் வண்ணமாக எழுந்துயிர் பெறும் நிகழ்வது!!! உணர்வினில் உயிரினில் உடலினில் நரம்பினில் புணர்ந்த நிகழ்வுகள் எண்ணரும் வகையால் ஒழுகு மெய்யுணர்வின் ஊற்றொடு கலந்து ஆழ்ந்த நினைவினை முகிழ்த்தும்... இற்றைக்கியலும்.... இயம்பும்..... நிகழ்வது!!! -…

  17. கனவு பலிக்குமா? ********************** கந்தையா அண்ணரும் காசிம் நானாவும் றம்பண்டா மல்லியும் ஒரு குடும்பமாய் திரிந்த காலம் அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. புத்த பெருமானுக்கும் நபிகள் நாயகத்துக்கும் ஜேசு பிரானுக்கும் சித்தர் சிவனுக்கும்-மதம் பிடித்ததாய்.. அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. கண்டியில பெரகராவும் திருக்கேதீச்சரத்தில சிவராத்திரியும் கொச்சிக்கடையில பாலன் பிறப்பும் மட்டக்களபில நோன்புப் பெருநாளும் அன்பாக நடந்ததே தவிர அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. ஒவ்வொரு இடத்தி…

  18. கனவில் கருங்கூந்தல் கலைய கண்ணிமைகள் காவியம் புனைய கைவிரல்கள் கவி பாட வெண்கழுத்து வெட்கத்தில் சிவக்க செவ்விதழ்கள் சுவை சொட்ட வியர்வையில் துவண்ட உன் எழிலுக்கு துகில் கலைக்க வந்த என் கைகள் காற்றில் கலந்தது! விலகும் உன் பெண்ணியம் கண்டு.

  19. கரும்புலி மறவர்கள் கரும்புலி மறவரே கரும்புலி மறவரே எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிந்தீரே எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிகையிலே வெந்தழிந்தாலும் வீழ்விலை என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைத்தீரே நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைக்கையிலே பெருக்குண்ட துயரெலாம் தூசுகள் என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவினீரே தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவுகையிலே ஏய்ந்த துன்பமும் இன்பமே என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே இழந்த தமிழீழம் ஈட்ட முனைந்தீரே இழந்த தமிழீழம் ஈட்ட முனைகையிலே உழந்த நெஞ்சிலும் உவகையே என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே என்மொழி என்னினம் என்நிலம் என வாழ்ந்தீரே என் மொழி என்ன…

  20. கரைச்சல் வேண்டும் ---------------------------------- கடவுளே வருடம் வந்து விட்டதே என்று காணி நிலம் கேட்பார்கள் சொத்து சுகம் கேட்பார்கள் நீங்கள் கொடுக்க வேண்டும் என்றில்லை ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கரைச்சலாவது கட்டாயம் கொடுக்கவும் ஒன்றுக்கு மேல் கொடுத்தால் இன்னும் நல்லது பெரிதாக தேவையில்லை சிறியவையாகவே போதும் பச்சை தண்ணீர் குடித்தால் மூக்கு ஓடுவது போல முருங்கைக்காய் சாப்பிட்டால் தோலில் அரிப்பு வருவது போல இனிப்பு சாப்பிட்டால் நெஞ்சு எரிவது உறைப்பு சாப்பிட்டால் வயிறு எரிவது நடந்தால் பாதம் நோவது இருந்தால் பிஷ்டம் நோவது படுத்தால் கழுத்து சுளுக்கு…

  21. Started by தமிழ்நிலா,

    மௌனம் எனும் அறைக்குள் விருப்பு வெறுப்பு எனும் இரண்டு பேரை அடைத்து கர்வம் எனும் பூட்டினால் பூட்டப்பட்டிருக்கின்றது விருப்பும் வெறுப்பும் யார் பெரியவர் எனும் விவாதத்தை தொடங்கி வாக்குவாதமாக்கிக் கொண்டிருந்தனர் மௌனம் எனும் அறைக்குள் பேரிரைச்சல் கேட்கத் தொடங்குகின்றது தனிமை என்னும் நெருப்பு கர்வம் எனும் பூட்டின் சாவியை உருக்கிக் கொண்டு இருக்கின்றது தனிமை எனும் நெருப்பினால் கர்வம் எனும் பூட்டின் சாவி உருகி காணாமல் போனால் ஓர்நாள் மௌனம் எனும் அறை திறக்கப்பட முடியாமல் விருப்பு வெறுப்பு எனும் இருவரின் வாக்குவாதத்தால் கர்வம் எனும் பூட்டு வெடித்துச் சிதறும் விருப்போ வெறுப்போ பெரியவர் வெளியேறுவார்!😆 -தமிழ்நிலா.

  22. BLACK JULY 1983. கறுப்பு ஜூலை 1983 BLACK JULY 1983. கறுப்பு ஜூலை 1983 . 1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். ஜெயபாலன் உய…

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.