கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
இருள் கலந்த சாலையில் ஒரு சிறு வளைவில் எனக்கான மரணம் இன்று காத்திருந்தது ஒரு கணப் பொழுதில் தீர்மானம் மாற்றி இன்னொரு நாளை குறித்து விட்டு திரும்பிச் சென்றது பனியில் பெய்த மழையில் வீதியின் ஓரத்தில் மரணம் காத்திருந்ததையும் என்னை பார்த்து புன்னகைத்ததையும் பின் மனம் மாறி திரும்பிச் சென்றதையும் நானும் பார்த்திருந்தேன் தூரத்தில் ஒலி எழுப்பும் வாகனம் ஒன்றில் அது ஏறி சென்றதையும் ஏறிச் செல்ல முன் தலை திருப்பி மீண்டும் என்னை பார்த்ததையும் நான் கண்டிருந்தேன் எல்லாக் காலங்களிலும் ஏதோ ஒரு புள்ளியில் நானும் அதுவும் அடிக்கடி சந்திக்க முயல்வதும் பின் சந்திக்காது பிரிவதும் அதன் பின் இன்னொரு சந்திப்பிற்காக காத்திருப…
-
- 14 replies
- 7k views
-
-
குளிர்..... ----------------------- கதவுகளின் இடுக்குகளினூடாக கசிந்து வருகின்றது துருவங்களில் பயணித்த குளிரின் சாரல் கிளைகளினூடே தாவி ஏறுகின்ற குளிர் இலைகளின் விளிம்பில் உதிர்ந்து என் அறையெங்கும் வியாபிக்கின்றது வெளியே பூனை ஒன்று குளிரின் அரவம் கேட்டு தன் மீசைகளை ஒடுக்கி கதவுகளினூடே உள் நுழைகின்றது குளிர் எப்போதுமே இளமை காலம் ஒன்றில் கடந்து போன திருவெம்பாவை பாடல்களையும் வைரவர் கோவிலின் அதிகாலைப் பூசைகளையும் அந்தோணியார் கோவிலின் மார்கழி மாத இயேசு பிறப்பையும் நினைவுபடுத்திக் கொள்கின்றது இடையிடையே மார்கழி மழையில் நனைந்த நந்தியாவட்டை பூவின் வாசத்தையும் பவள …
-
- 14 replies
- 2.1k views
-
-
ஓட்டுப் போட்ட உரிமையில் கேட்டால் என்ன தப்போ..! (05.08.2020) தேர்தல் திருவிழா முடிந்து தேசம் அமைதியாகிறது உங்கள் கட்சி “தேர்களை” ஊர் ஊராய் கொண்டு சென்று வெண்றும், தோற்றும் விழா முடிவாயிற்று. ஒன்றாக நிற்க்காமைல் ஒவ்வொன்றாய் நின்றாலும் வெண்றவர்கள் நீங்கள் நாங்கள்… வேறு வேறு தமிழர் இல்லை தனிப்பட்ட குரோதங்கள் தலை தூக்கி ஆடாமல்-புல் பனிகாய பகலவனின் கதிர் போலே நீங்கள்-நெல் மணியாக அனைவருக்கும் நிதம் சோறு படைப் பீர். உள்ளக் குமுறலினால் உடைபட்டுப் போனாலும் மக்களை.. அள்ளக் குறையாத அன்போடு பாருங்கள். தெள்ளத் தெளிவாக-எம் …
-
- 14 replies
- 2.5k views
-
-
இனிய தீபாவளி ------------------------ ஒரு ஆட்டை எப்படிக் கொல்வதென்று நாங்கள் கதைத்தோம் அதன் மூக்கையும் வாயையும் இறுக்கி மூடி பிடித்தல் ஒரு வழி தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு கழுத்தில் கீறுதல் இன்னொரு வழி தலையில் ஒரேயடியாக போடுதலும் ஒரு வழியே இப்படி சில வழிகள் இருக்கின்றன என்றனர் எப்படிக் கொன்றாலும் எட்டியும் பார்க்க மாட்டோம் என்றனர் பலரும் நானும் ஒழித்திருந்து மிளகாயும் வெங்காயமும் அரிந்தோம் ஒரு ஊர்ச் சந்தையில் இந்த வாரம் விற்ற ஆடுகளின் தொகை ஆறு கோடி ரூபா ஒரே மழை என்று அங்கே வியாபாரம் மந்தம் என்றார்கள் இப்படி இன்னும் நூறு சந்தைகளாவது இருக்கும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் இறந்த உயிர்கள் எப்படி இறந்தாலும் நேரே வைகுண்டம் போகுமாம் நரகாசுரன் கூட அப்ப…
-
-
- 14 replies
- 529 views
- 2 followers
-
-
எழுதியவை எல்லாம் கவிதையா? என எண்ணிய வேளையில் என்னிடம் பேசியது என் எழுதுகோல் உள்ளத்தில் உறையும் உணர்வை ஊற்றாய் உரைப்பது கவிதையா? நெஞ்சத்தில் நெருடும் நினைவுகளை நிரல்படக் கோர்ப்பது கவிதையா? வலிகளுக்கு அருமருந்தாய் மனதை வருடுவது கவிதையா? வரலாற்றின் பழம்பெரும் உண்மையை அழியாமல் வடிவமைப்பது கவிதையா? இயற்கையின் கொடையை இனிமையாய் இயம்புவது கவிதையா? காதலின் கவிரசத்தைக் காய்ச்சி பருகுவது கவிதையா? எது கவிதை? என்னுள் ஆயிரம் கேள்விகள் உதயம் கவிதை ஆயிரம் எழுதுபவர் பலராம் கவிதையாய் வாழ்பவர் வெகுசிலராம் விதையை விதைத்திடும் கவிதை விடைபெறா உலகின் நடைப்பாதை எது கவிதை? எழுதும…
-
- 14 replies
- 1.7k views
-
-
அப்படியே நினைத்து பார்க்கவே .... பயமாக இருக்கிறது நம் காதலை .....!!! ஓடாமல் இருக்கும் மணிக்கூட்டில் நான் ... நிமிட முள்ளாய் ... இருந்தென்ன பயன் ....? அணைத்தேன் துன்பம் ... அழைத்தேன் இன்பம் நீ அருகில் இருப்பதை ... விட தூர இரு .....!!! ^ கவிப்புயல் இனியவன் முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை
-
- 14 replies
- 1.7k views
-
-
யார் கடவுள்..! *************** நீ இருப்பாயென்று நானும் பிறக்கவில்லை யான் இருப்பேனென்று நீயும் பிறக்கவில்லை தாயிருந்தாள் பலருக்கு அவள் கூட இல்லை சிலருக்கு.. உலகில் பிறக்கும் உயிருக்குள் அவன் ஒழிந்திருப்பான் என்பதே உண்மை. அவன் மதத்துக்குள் அடங்காத மாபெரும் வெளி நீர்,காற்று,தீ,நிலம் ஆகாயம் அனைத்தும் அவன் மூச்சில்தான் ஆடுகிறது அண்டமே அவனெனும் போது முண்டமாய்-நாம் மதச்சண்டையிட்டு மடிகிறோம். நோய் வந்து அழிக்கும்போது அந்த நுன்னுயிரை ... அழிக்க யாரால் முடிகிறது அன்று படித்தது இன்று புதியது எனும…
-
- 13 replies
- 2k views
-
-
மாதங்களில் நான் மார்கழி. வீதியெங்கும் மாவிலைத் தோரணங்கள் வாசலெல்லாம் வண்ணக் கோலங்கள் பூசணிப் பூக்கள் மத்தியிலே சாணியில் பிள்ளையார் பூவினிலே மெல்லிய பனியுடன் மழைக்காலம் வகை வகையாய் பறவைகள் இசைக்கோலம் நிரை நிரையாய் எறும்புகள் ஊர்வலம் அவசர கதியில் மாந்தர் நகர்வலம் கோடை முடிந்தால் வந்திடும் மார்கழி வாடைக்காற்றும் வந்து வாட்டிடும் பீடை மாதமென்பார் பேதையர் சாடையினால் தை பிறக்கட்டுமென்பர் சோதிடர் பெருவிழாக்கள் குறைந்தாலும் திருவிழாக்கள் களை கட்டும் ஓதுவார் இறைபுகழ் ஓதிச் செல்ல சாதுக்கள் பஜனையில் கூடிச்செல்வர் அடிகளின் திருவெம்பாவை திக்கெட…
-
-
- 13 replies
- 1.5k views
-
-
அன்னைக்கு ஒரு தினம் தன்னை ஈய்ந்தவளுக்கு தரணியில் உயர்ந்தவளுக்கு ஈடு இணை இல்லா இல்லத்து அரசிக்கு அவளை வாழ்த்த ஒரு தினம்.அன்னையர் தினமாம் இல்லை அன்னையை மறந்தவருக்கான தினம் பரபரப்பான உலகில் அவளை வாழ்த்த ஒரு தினம். இரத்தத்தை பாலாக்கி , நோய் கண்டால் கண்விழித்து தன் பசி மறந்து என் பசி போக்கியவள் தாயாய் தாரமாய் சகோதாரியாய் அன்போடு அறுசுவையும் தந்திடுவாள். குடும்ப நிர்வாகி, அன்பால் அதிகாரம் செய்தவள் இன்பத்திலும் துன்பத்திலும் தோழி,அன்னையாய் நல் ஆசானாய் அகரம் கற்றுத் தந்தவள் ஈன்ற பொழுதிலும் தன் மகவைச் சான்றோன் எனக் கேட்டு மகிழ்ந்தவள். தந்தைக்கு தோளோடு துணை நின்றவள் ஈடு இணை இல்லாதவள் தெய்வமாய் நின்றவள். அழகானவள் ,அன…
-
- 13 replies
- 728 views
- 1 follower
-
-
தேவையானவை --------------------------- அலைபேசியில் அபாயச்சங்கு முழங்கியது நெருப்பு உங்கள் அருகில் உடனடியாக கிளம்பவும் அவசியமாக தேவையானவற்றை அளவாக எடுக்கவும் என்று அலைபேசி மின்னியது எவை தேவை என்று முகட்டைப் பார்த்தேன் முதலில் தேவை ஒரு காற்சட்டை' வீட்டிலிருந்து வேலை என்பதால் இடுப்பில் இருந்தது வெறும் சாரம் மட்டுமே அடுத்தது தேவை மட்டைகள் காசு மட்டை கடன் மட்டை அடையாள மட்டை என்று ஒரு கொத்து மட்டைகள் இருக்கின்றன் இங்கு எல்லோரிடமும் எதற்கும் கடவுச்சீட்டையும் எடுப்போம் ஓடிப் போக மெக்சிக்கோ வந்து நான் உள்ளே போய் விட்டால் திரும்பி வர அது வேண்டுமே அலைபேசியும் அ…
-
-
- 13 replies
- 902 views
-
-
உயிரில் கலந்த உறவே.....! முழங்கால் மடித்து இருந்து முழங்கையை முன் நீட்டி முழுசாய் பறித்த ரோசாவைத் தர முத்தமொன்று தந்திடுவாள் மறு கரத்திலோர் பரிசும் பார்த்து கட்டியணைத்திடுவாள் கண்மணியும் சேர்ந்து நடக்கையில் விலகி நடந்தவள் விரலோடு விரல் பின்ன உடையோடு உரசுகின்றாள் முடியை கோதிவிட்டு முன்வந்து முறுவலிப்பாள் கண்ணால் பலகதை சொல்லி பல்லால் இதழ் கடித்திடுவாள் அஞ்சும் மலர் அருகிருக்க நெஞ்ச மலர் மலர்ந்திருக்கும் கெஞ்சும் விரல் கொஞ்சம் தயங்க முந்தும் முகம் முத்தாடும் தேனின்றி குவளைமலர் பூத்திருக்க தேனுடன் வந்த வண்டு சுத்திப் பறக்கும் தேன் இல் மலரில் மகரந்தம் சுவைத்…
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஒரு செய்தியைக் கூட விட்டுச் செல்லாமலும்ஓர் வார்த்தையைக் கூடச் சொல்லாமலும்அன்று நீ காணாமற் போனாய்..சித்தம் கலங்கிப்போய் உன் தந்தையும்சாவீடு போல உன் வீடும் சிதறிப்போய்க் கிடந்ததுநீ இறந்திருக்கலாமெனபலர் தமக்குள் பேசிக்கொண்டார்கள்காலமும் ஓடிப்போயிற்றுவழமை போலவே தியாகங்களும்நினைவுகளும் எமக்குள்மங்கிப்போயின..சுரணை அற்ற வாழ்வுக்காகதொலை தேசத்திற்கு நான்வந்திருந்தபோதுபனிப் பொழிவினிடையேஉன்னைப் போலவே ஒருவனைப் பார்த்தேன்..!அது நிச்சயமாக நீதான்அதே கூர் மூக்கு,தெத்திப்பல்ஆயின்..நீ இறக்கவில்லை..!ஆனால் இறந்திருந்தாய்நிற்க முடியாமலும் இருக்க முடியாமலும்காலைச் சவட்டியபடி,கல்லூரிக் காலங்களில்எப்படி எல்லாம் கலகலப்பாய்இருந்தாய்..! இப்போதோபேச்சுக் கொடுத்தாலும்பெரும் மெளனம் காக்கின்றாய்..முட்கம…
-
- 13 replies
- 2.7k views
-
-
உருவப்படுமா? --------------------- எங்கும் ஒருவித மயான அமைதி காடைத்தனத்தின் உச்சத்தைக் கடந்த பொழுதில் நிலமெங்கும் மனிதமலைகளாய் உடலங்கள் குருதியும் சகதியுமாய்... எனக்கு உயிர் இருந்தது அதுவே எனக்குப் போதுமானது கடற்காற்று ஊவென்று வீசியது உடம்பெங்கும் சில்லிட்டுக் குளிர்ந்தது ஆடையற்று அம்மணமாகக் கிடக்கும் உணர்வு நானும் செத்திருக்கக் கூடாதா மனம் சொல்லிற்று குப்புறக் கிடந்த என்னால் அசையக்கூட முடியவில்லை பிணங்களில் இருந்துவரும் வாடை வாடைக்காற்று வீசிய கடலோரம் பிணவாடை உலுப்பியது சட்டென அம்மாவின் குரல் என் காதில் ஒலித்தது டேய் அரைநாண் கயிறைக் கட்டடா அவிழ்ந்தால் நீ அம்மணக்கட்டையடா ஒட்டுத் துணிகூட இல்லாதபோதிலும் அரைநாண் கயிறிருந்த…
-
- 13 replies
- 976 views
-
-
படிக்க தவறிய புத்தகம் தந்தை படிக்க விரும்பும் புத்தகம் அன்னை படித்தும் பிடித்து போகும் புத்தகம் மழலை தொலைக்க கூடாத புத்தகம் வாழ்க்கை மரணத்தை விட கொடியது போலி வார்த்தைகளுக்கு அடிமையாக இருந்தோம் என்பது . பணம் தான் உலகம் என்று நினைக்கும் சிலரிடம் சொல்லுங்கள்.பணம் பூமியை தவிர வேறெங்கு ம் செல்லுபடியாகாது என்று .... அன்று அடிப்படை வசதி கூட இல்லத்திருந்தோம். ஆனால் மகிழ்ச்சிஇருந்தது .இன்று எல்லாம் இருக்கிறது ஆனால் ... எதோ ஒரு மனக் கவலையுடன் தான் நகர்கிறது ஒவ்வொரு நாளும். உதவி செய்வதில் தவறில்லை,உனக்கென்று கொஞ்சம் வைத்துக் கொள் நாளை உனக்கொரு தேவையென்றால் உதவி பெற்ற்வர் எட்டிக் கூடப் பார்க்க மாடடார். இன்று இருக…
-
- 13 replies
- 1.4k views
- 1 follower
-
-
நிலம் எமக்கோ குந்தி இருக்க ஒரு முழ நிலம் கூட இல்லை எமக்கு முன்னும் பின்னும் அருகிலும் பக்கத்திலும் புத்தரின் வேர்கள் முளைத்து விட்டன இப்போது எல்லாம் சப்பாத்து கால்களின் சத்தங்கள் தான் நிலம் முழுக்க நிரம்பிக் கிடக்கின்றன உதைபடும் நிலங்கள் மௌனமாக அழுதுகொண்டு இருப்பதை யார் தான் அறிவர் .
-
- 13 replies
- 1.6k views
-
-
எல்லா இரவுகளையும் போல சில இரவுகள் இருப்பதில்லை வானில் அலையும் ஒற்றைக் குருவியின் துயர் அப்பிய குரலை போல சில இரவுகள் காரணமின்றி துயரால் நிரம்புகின்றன எங்கோ அறுந்து போன ஒரு இழை ஞாபகத்தில் வந்திருக்கலாம் என்றோ காணாமல் போன நண்பனின் குரல் மீண்டும் கேட்டு இருக்கலாம் அல்லது எப்போதோ எவருமற்று தனித்து விடப்பட்டதின் துயரம் தீண்டி இருக்கலாம் புரண்டு படுக்கையில் நிரடிப் போகும் ஒரு நொடி நினைவுத் துளியால் சில இரவுகள் காரணமின்றி துயரத்தில் மூழ்கி விடுகின்றன ரயில் பயணங்களில் இரா வேளையில் குளிர் காற்றிடை பாடும் விழியற்ற பாடகனின் குரலில் வழியும் வேதனையைப் போல இருக்கின்றன இந்த இரவுகள் பின்னிரவொன்றில் விளக்கற்ற வீதி ஒன்றில் விற்று முடிந்து செ…
-
- 12 replies
- 3.5k views
-
-
"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள் !" "மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் ? மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ உன்பார்வை ?" "மகரிகை தொங்கும் வீட்டு முன்றலில் மகத்துவம் பொருந்திய அழகு உடல் மகிழ்ச்சி பொங்கி துள்ளி குதிக்குதே மலர் விழியால் ஜாடை காட்டுதே !" "மறைப்பு கொடுத்த தாவணி விலக மகிழ்வு தரும் வனப்பு மயக்க மவுனமாய் திகைத்து நானும் நிற்க மங்கையும் நோக்கினாள் கண்களும் பேசின !" "மருண்டு விழித்து நாணி குனிய மஞ்சள் பொட்டும் வெள்ளி சலங்கையும் மஞ்சர மாலையும் ஒல்லி இடையும…
-
-
- 12 replies
- 720 views
- 1 follower
-
-
TRIBUTE TO KALAIGNARகலைஞர் அஞ்சலி- வ.ஐ.ச.ஜெயபாலன்.எங்கள் போர்கால நெருடல்களை மறந்து. காலமெல்லாம் ஈழத் தமிழருக்கு அரணாய் அவர் நின்றதை நினைந்து அஞ்சலிக்கிறேன், கலைஞரின் புகழ்பூத்த காலத்து இயல் இசை நாடக செம்மொழியாய் தமிழ்கூறும் நல்லுலகமெல்லாம் தமிழ் வளர தமிழகத்தில் அரசு இயற்றிய ஆற்றலை வியந்து கலங்குகிறேன்.குமரியில் காலமெல்லாம் தமிழகத்தை தின்ற கடற்கோளும் தலைபணிய வள்ளுவனை எல்லைக் காவலாய் வைத்த மாண்புகளைப் போற்றி மனது நெகிழ்கிறதேஉன்னை வழியனுப்ப வந்து நீலமலையெங்கும் தேன்சிந்தி அழுகின்ற குறிஞ்சிமலர்களுடன் கண்சிந்தும் கவிஞன் நான். ஏற்கனவே உலகத் தமிழர் மனங்களிலே புதைதுவிட்டான். இனி அவனை எங்கே இடுவதென ஏங்குவதேன்? செம்மொழிப் பூங்கா அவனது நினைவிடமாய் என்றும் இருக்குமே. அண்ணா நூலகத்தைவி…
-
- 12 replies
- 2.2k views
-
-
ஊதாரி ஊடகங்கள் ************************ எங்கு பார்த்தாலும் வலையொளித்தளங்கள் எதையெடுத்தாலும் எம்நாட்டுச் செய்திகள். உழைப்புக்காக ஊடக தர்மத்தை-சிலர் விலைக்கு விற்கும் வேடதாரிகள். தலைப்பில் மட்டும் உழைப்பை தேடுவார்-உள்ளே தரமில்லா செய்தியால் மடையராக்குவார் ஒருவரை உயர்வாய் ஓங்கியே கத்துவார் ஒருசில நாட்களில் ஏறியும் மிதிப்பார். செய்திகள் பற்றி கவலையே இல்லை சேரும் பணம்தான் அவர்களின் எல்லை ஆளுக்கொரு கமறா கிடைத்தால் அனைவரும் ஊடக அறிஞராய் நினைப்பார். ஏழை மக்களின் படங்களைக் காட்டி எல்லோர் மனதிலும் நெருடலை மூட்டி புலம்பெயர் பணத்தை தன்வசப்படுத்தும்-சில போக்கிரியர்களும் இணையத்தில்…
-
-
- 12 replies
- 915 views
-
-
மறைந்த ஈழத்துப் பெருங்கவிஞர் மகாகவியவர்கள் நானறிந்தவரை குறும்பாக்களை தமிழில் முதன்முதல் அறிமுகம் செய்தவர். அவரைப்பின்பற்றிப் பலரும் பின்னர் குறும்பாக்களையெழுதத் தொடங்கினார்கள். குறும்பா என்பது குறுகியா பாவாகவும் அதேவேளை குறும்பு கலந்ததாகவும் இருந்தாலேயே குறும்பா இலக்கணத்துக்கு உட்படும். எமது ஈழக்கவிஞர் மகாகவியைப் பின்பற்றி நானெழுதிய தற்போதைய யுகே காலநிலைக்கேற்ற குறும்பாவை இங்கு தருகிறேன். நண்பர்களும் இதை முயற்சித்துப்பார்க்கலாம். நாற்படையுங் கொண்டுயர்ந்த நாடு -யுகே நாணா நவமாதர் வீடு காற்தொடையின் கவடுவரை காரிகையர் கவுணுயரும் காலமிங்கு சம்மர் கடுஞ் சூடு
-
- 12 replies
- 1.7k views
- 1 follower
-
-
எப்போது வினாத் தொடுப்பீர்! ---------------------------------------------- எரிகின்ற காசாவிலிருந்து என்னதான் கிடைக்கும் எலும்புகளும் கிடைக்காது ஏனென்றால் பார்வைக்குக் சிறுமீன்போல் திமிங்கலமாய் நெளிகின்ற இஸ்ரவேலே விழுங்கிவிடும் அப்போ எதற்காக இந்தப் போருக்குள் மேற்கு மேய்கிறது அரபுலகை வெட்டுகின்ற தங்கக் கத்தியாக இஸ்ரவேல் இருக்கிறது அதனால் இருக்குமோ! எவளவு மக்கள் எவளவு பலஸ்தீனர் எவளவு சிறுவர்கள் எவளவு குழந்தைகள் எவளவு மழலைகள் அழிந்தொழிந்து போனாலும் அதைப்பற்றிக் கவலையேது! எமக்குத் தேவை எமது தேவைகள் நிறைவேற எந்தடையும் இல்லாத உலக வெளிதேவை ஊடறுப்போர் யாரெனினும் நாளையது இஸ்ரவேலேயானாலும் பாலஸ்தீனத்தை வைத்தே படை நடா…
-
- 12 replies
- 1.6k views
-
-
என்னை நானே வாசிக்கிறேன் என்ற தலைப்பின் கீழ் சின்னச்சின்னதாய் கவிதையில் படையல். இங்கே போர்முகம் இருக்காது...காதல் , நட்பு , சோகம், சுகம், தவிப்பு, அணைப்பு ,அழுகை , கனவு என்று பலதும் பத்துமாக அநுபவமும் இருக்கு அதி உச்ச கற்பனையும் மிதக்கும். வாசியுங்கள் சேர்ந்து அழுங்கள், சிரியுங்கள், என்னைப்போல தவியுங்கள் , காதல் கொண்டு கிறங்குங்கள், நட்பால் அணையுங்கள், சோகத்தில் சுகம் காணுங்கள். கவிதைகளை வாசித்து நீங்கள் குழம்பினால் நான் பொறுப்பில்லை.?
-
- 12 replies
- 4.1k views
-
-
துடிப்பில்லாத இதயமும் சில எலும்புத்துண்டுகளும் துடிப்பில்லாத இதயமும் சில எலும்புத்துண்டுகளும் போர்த்தியிருக்க ஒரு துண்டுத் தோலும் போதும் என்கிறதுமனம் உணர்வெல்லாம் விற்று வெறுமை வாங்கி சாம்பல் வெளியொன்றில்-அது புரண்டிடத் துடிக்கிறது விழி திறந்த வேளைகளில் வெறுமைகள் தேடி பிரபஞ்சம் எல்லாம் அலைந்து - அது சலித்துக் கொள்கிறது போதும்...போதும் என்று ஆர்ப்பரித்து புழுதி புரண்டழுகிறது வர்ணமெல்லாம் சேறுபூசி தூரவெறிந்த தூரிகைகளை தேடியெடுத்து கோபத்தோடு எரிக்கிறது குருடனனான உனக்கு வர்ணம் ஒரு கேடாவென்று- எள்ளி நகையாடி கெக்காளமிட்டுதச் சிரிக்கிறது இந்…
-
- 12 replies
- 3.6k views
-
-
பனியும் மழையும் இல்லா குளிர் கால இரவொன்றை கடும் காற்று நிரப்பிச் செல்கின்றது ... காற்றின் முனைகளில் பெரும் வாள்கள் முளைத்து தொங்குகின்றன எதிர்படும் எல்லாக் கனவுகளையும் வெட்டிச் சாய்கின்றன திசைகள் இல்லா பெரும் வெளி ஒன்றில் சூறைக் காற்று சன்னதம் கொண்டு ஆடுகின்றது புல்வெளிகளும் நீரோடைகளும் பற்றி எரிகின்றன தீ சூழும் உலகொன்றில் பெரும் காடுகள் உதிர்கின்றன காலக் கிழவன் அரட்டுகின்றான் ஆலகால பைரவன் வெறி கொண்டு ஆடுகின்றான் சுடலைமாடன் ஊழித் தாண்டவத்தின் இறுதி நடனத்தை ஆரம்பிக்கின்றான் அறம் பொய்த்த உலகில் அழிவுகள் ஒரு பெரும் யானையை போல் நடந…
-
- 11 replies
- 2.4k views
-
-
வருடச் செய்முறை ------------------------------ முப்பது கிலோ கோழி இருபது கிலோ மீன் பதினைந்து கிலோ ஆடு இவற்றை கழுவி துண்டு துண்டாக்கி கறியாக்கவும் ஒரு பகுதியை பொரிக்கவும் 50 கிலோ அரிசி இதை சோறாக்கவும் பத்து கிலோ பருப்பு போதும் இதைவிடக் குறைய கத்தரிக்காய் வாழைக்காய் பயற்றங்காய் போன்றன இவற்றில் பொரித்த குழம்பு பொரிக்காத குழம்பு பால்கறி இப்படி எல்லாம் வைக்கவும் தேவையான அளவு பாகற்காய் பொரிக்கவும் மிளகாய் பொரிக்கவும் வடகம் பொரிக்கவும் வாழைக்காய் பொரிக்கவும் அப்பளம் பொரிக்கவும் ஊறுகாய் வாங்கவும் தயிர் வாங்கவும் நல்ல நாட்களில் வடை சுடவும் பாயாசம் வைக…
-
-
- 11 replies
- 612 views
-